RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Thursday, October 30, 2025
Tuesday, October 28, 2025
Monday, October 27, 2025
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 5
Saturday, October 25, 2025
வாசிப்பியல் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. பள்ளிப் புத்தகங்களை வாசித்து மனதில் அடுக்கிக் கொள்வது வாழ்வின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிடுவது வாடிக்கை. இதில் வேடிக்கை என்னவெனில் தேர்வு தவிர வேறொன்றிற்கும் உதவாத சில புழுதி படிந்தஅடுக்குகளை களைவதென்பது அத்தனைச் சுலபமும் அல்ல. வாழ்வியலின் மூச்சற்றுத் தவித்து சுவாசித்தே ஆக வேண்டிய பொழுதுகளில் அவ்வடுக்குகளின் புழுதி சுவாசப்பைக்குள் சென்று சில நேரம் நம் வாழ்வை முடிவுக்கும் கொண்டு வந்துவிடுவது தான் மாபெரும் துயரம். நீட் என்பது எத்துனை மாணவர்களின் இலக்குகளை தகர்த்துவிட்டது. போகட்டும்.
Thursday, October 23, 2025
கவிஞனை காலம் எப்படியாவது காப்பாற்றிவிடும். எப்படி என்று கேட்பவர்களுக்காக இதைச் சொல்லியாக வேண்டும். கவிஞனின் மூச்சு கவிதை. மனிதனின் சுவாசம் காற்று. மனிதனுக்கு மரணம் நிச்சயம். காற்றிற்கு மரணமில்லை. கவிஞன் நிச்சயம் ஒரு நாள் அமரனாகக்கூடும். ஆனால் கவிதைக்கு மரணமில்லை. அப்படியான மரணமில்லா பெருவாழ்வு கொண்ட காலத்தால் அழிக்கவியலா கவிதைகளை தொகுத்து அதன் மேல் எனக்கு எந்தப் புகாருமில்லை என்ற தலைப்பிட்டு சமகால கவியாளுமை அருமை நண்பர் அய்யப்ப மாதவன் இந்த ஏழைக் கவிஞனையும் அவனின் ஒரு கவிதையையாவது மரணமின்றி வாழ்ந்தாக வேண்டுமெனும் நல் உள்ளத்தாலும் காலத்தின் தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அரிய இலக்கிய சேவையென கருதி ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் இந்தத் தகவலை கைபேசியில் அழைத்து கவி அய்யப்ப மாதவன் அவர்கள் சொல்லியபோது அவரது மின்னும் அன்பு மின்னலில் தாக்குண்டு சிறுது நேரம் செயலற்றுப் போனேன். செயலற்றுப் போதல் என்பது மரணத்திற்கான முதற் பாடம் அல்லவா. ஒரு நாள் உங்கள் ராகவபிரியன் மரணித்துக் கிடக்கலாம். ஆனால் அவனின் இத்தொகுப்பில் இடம் பெற்ற ஒரு கவிதையை காலத்தால் அழியாமல் காப்பாற்றிய பெருமையை அன்பு நண்பர் திரு அய்யப்ப மாதவன் அவர்கள் தக்க வைத்துக் கொண்டார். இன்று அந்தப் புத்தகத்தையும் அவரின் நீலப்பெருங்கடல் கவிதைத் தொகுப்பையும் அஞ்சலில் அனுப்பியிருக்கிறார். காஞ்சியின் முதல் அஞ்சல் மானுடனின் சார் போஸ்ட் எனும் குரல் தேனை என் காதுகளில் பாய்ச்சியது. ஓடிச் சென்று நெகிழ்வுடன் பெற்றுக்கொண்டு பிரிக்கிறேன் அந்தப் புத்தகங்களைப் பிரிக்கையில் சுவாசம் நுழைந்த கவிதைகளடங்கிய காகித வாசம் அடங்குவதற்குள் இந்தப் பதிவை இங்கே பதிவேற்றச் சொல்லி அரங்கன் ஆணையிட்டான்.
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற அத்தனை கவிஞர்களுக்கும் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் அய்யப்ப மாதவனுக்கு என் நன்றியும் வணக்கங்களும். அரங்கனுக்கும் வரதனுக்கும் காலத்தால் அழிக்கவியலா கவிதைகளுக்கும் என்றென்றும் நன்றியுடன்...
அன்பன்...உங்கள்
ராகவபிரியன்
Wednesday, October 22, 2025
ஆன்மீகம் மனிதனை
மனம் எனும் அந்தராத்மாவில் அரங்கனை துயில் கொள்ள வைக்கும் கலையை அனுபவம் மூலம் கற்றுத்தருகிறது.
ஆனால் மனிதன் தனது கர்வத்தால் தானே அரங்கன் எனும் கடவுளின் சக்திகள் கொண்டவனாக மனதில்
கர்வம் கொள்கிறான். அதனால் ஆன்மீகக் கலையை அலட்சியம் செய்கிறான். அவனின் செய்கைப்பாடுகள்
உலக நிலையற்ற இன்பகளுடன் ஒட்டியிருக்கும் ஒட்டுப்பண்புகளால் சுயத்தை இழக்கச் செய்வது
சகிக்கவியலாதது. மானுட அகமும் அவனின் புறமும் பள்ளத்தாக்குகளும் அதைச் சுற்றியிருக்கும்
சிகரங்களும் என கட்டி எழுப்பிய சிறைக்குள்ளாகவே
சுற்றி வருவது அவனின் ஆன்மீக அறிதலுக்கான முடக்கப் பாயை விரித்து வைக்கிறது. முதலில்
வேகமாக சுற்றுபவன் களைத்து சுழற்சியின் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு பின்பு முடக்குப்
பாயில் முடங்கிவிடுகிறான்.
ஆத்ம உபனிஷத்தில்
மனிதனின் சுயம் மூன்று நிலைகளாக துண்டாடப்பட்டிருப்பதின் யதார்த்தத்தை உணர வைக்கிறது.
உள் சுயம் என்பதும் வெளி சுயம் என்பதும் இரண்டையும் மீறிய அவனிடத்தே உள்ள உயர்ந்த உயர்வுச்
சுயம் என்பதையும் மானுடன் தன் வாழ்வியல் கூறுகளில் அடையாளம் கண்டு தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள
வேண்டுமெனில் தன் அந்தராத்ம இருளை சுருட்டி ஒரு மூலையில் கிடத்திவிடவேண்டும். உள்சுயம்
தான் எனும் சிந்தையை போர்த்திக்கொண்டிருக்கையில் மனிதன் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
தவறிவிடுகிறான். வெளிசுயம் என்பது மனிதன் தன்னுடைய உடலின் மீதான கர்வத்தின் பசைமத்தின்
பிடியிலிருந்து விடுபடவியலா தன்மையுடன் இருப்பதாகும். தன் உடலின் நிறங்கள் வல்லமை உறுப்பின் ஆற்றல்கள் இயங்குவிசைகள்
உற்பத்தித் திறன் இவைகளுடனான் உறவின் இயக்கத்திலிருந்து பிரித்தெடுக்கவியலா காய்ந்த
பசைமத்தின் பிடியை உரத்துச் சொல்வது தான் வெளிசுயம்.
உள்சுயம் மற்றும்
வெளிசுயம் இவைகளில் இருந்து முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டதுதான் உயர்சுயம். மனம்
அதன் காற்றின் தடத்தில் சிறகு விரித்துப் பறக்கும் பொழுதுகளில் கீழிறங்கி ஒரு கிளையிலோ
மாடத்திலோ சுவரிலோ நீர் நிலையிலோ நிற்க வைப்பதென்பது
கடின வித்தையின் தொய்வற்ற நீள் பயிற்சியின் விளைவாகவே சாத்தியப்படுவது. ஒவ்வொரு மானுட
மனதிற்குள்ளும் ஒரு உயர்ந்து சுயம் இருக்கிறது. அந்த உயர்ந்த சுயம் வானம் பூமி காற்று
நெருப்பு மற்றும் தண்ணிர் இவைகளின் ஆற்றல் நுல்லியத்தின் அளவுகளான நிகிதத்தின் வழியாகக்கூட
கணக்கிடுதல் கடினம் என உணரும் பொழுதில் வெளிபடும் இயங்கியல் அதிசயம்.
ஆத்மா
– ஆத்மா: ந ப்ரகாசதே அக்ர்யயா
ஸுக்ஷ்மயா
புத்த்யா
ஸுக்ஷ்ம தர்சிபி த்ருச்யதே
என ஆத்ம உபனிஷதப்
பாடல் சொல்கிறது. உயர்சுயம் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட மானுடம் நுல்லியத்தின் நிகித அளவுகளையும் மீறிய ஆற்றல் கொண்ட
இயற்கையின் படிமங்கள் தன்னுள்ளேயும் சமன்பாடு கொண்டு இயங்குவதை உணர்த்துவதாக மேலே உள்ள
பாடல் சொல்கிறது.
இதைத்தான் நிகம்மாந்த
மஹாதேசிகர் ஸ்ரீஸ்துதியில் இப்படிப் பேசுகிறார்.
நிஷ்ப்ரத்யூஹ
ப்ரணய
கடிதம் தேவி
நித்யாஙபாயம்
விஷ்ணுஸ் த்வம்
சேத்யநவதி குணம்
த்வந்த்வ மந்யோந்ய
லக்ஷ்யம்
சேஷச் சித்தம்
விமல மநஸாம்
மெளளயச் ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே
விஹரண விதெள
யஸ்ய சய்யா
விசேஷா:
[ ஆச்சார்யன்
நிகம்மாந்த மஹாதேசிகன்]
பெருந்தேவித்
தாயே நீயும் அரங்கனும் ஒரு நாளும் பிரிந்திருப்பதில்லை. அரங்க நாயகியும் வரதனும் தான்.
உங்களிடையே உள்சுயம் வெளிசுயம் என்பதன் பிரிவினைகள் இல்லை. நீங்கள் இருவரும் இணைந்திருக்கையில்
உயர்சுயமே வெளிப்படுவதால் பஞ்ச பூதங்களில் எல்லாம் நீங்களே இருக்கிறீர்கள். அரங்கனாய்
பள்ளி கொண்டும். வரதனாய் நின்றிருந்தும் கேசவனாய் எல்லாவித்திருந்தும் ஆகப்பெரிய பிராட்டிமார்களுடன்
உலகெங்கும் வியாபித்திருக்கிறாய்.
தொடர்ந்த யோகப்
பயிற்சியில் உள்ள யோகிகள் உங்கள் இருவரையும் தனித்தனியாய் ஞானக் கண்களில் கண்டதாக வரலாறில்லை. ச்ரியா பதி எனும் போது பெருந்தேவியின் வடிவில் வரதனையும்
விஷ்ணு பதி எனும் போது அரங்கனின் வடிவில் அரங்கதம்மாவான அரங்க நாயகியையுமே காண்கிறார்கள்.
இயற்கையின்
மாபெரும் சக்தி நிறைந்த பஞ்சபூதங்களிலும் பள்ளிகொண்ட அரங்கன் அனந்தாழ்வான் மீதும் யோகிகளின்
உள்ளங்களிலும் வேதங்களின் தலையாய உபனிடதங்களிலும் பள்ளிகொண்டிருக்கிறான்.
அரங்கனையும்
வரதனையும் பெருந்தேவியையும் அரங்க நாயகியையும் உணரவேண்டுமெனில் உயர்சுயத்தின் வானம்
பாடி தன் சிறகுகளை மடக்கி ஆழ்மனதில் பாடிக்கொண்டிருக்கவேண்டும். அந்த வானம்பாடியின்
இசையில் உள்சுயமும் வெளிசுயமும் கட்டுக்குள் அடங்கி ஆதிசேடனாக முடக்கப் பாயை விரித்து
அதன் மேல் அரங்கனை பள்ளிகொள்ள அனுமதிக்கும். அப்போதில் மானுடம் தன் உயர் ஆற்றலை மானுட
நலனுக்காக செலவிடுதல் சாத்தியப்படும்.
திருவரங்கன்
திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன்
திருவடிகளே சரணம்.
ராகவபிரியன்
Tuesday, October 21, 2025
முதலில் நீங்கள் யாரென்று கேட்பார்கள். அடுத்ததாக உங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்று வினவுவார்கள். பிறகு உங்கள் எழுத்தில் வாசிப்பனுவம் கூட கிட்டவில்லை என்பார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பீர்கள். உங்களுக்கான லைக் விழாமல் இலக்கிய அதிகாரத்தால் அரசியல் செய்வார்கள். நீங்கள் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் எழுத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய தெரிகிறதென்பார்கள். உங்கள் எழுத்து நகல் என்று நகைப்பார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால் உங்களை மீண்டும் யார் என்று கேட்பார்கள். திடீரென நீங்கள் ஏதாவதொரு விருது வாங்கிவிடுவீர்கள். அது உங்கள் எழுத்திற்கு தரப்படவில்லை சிபாரிசால் கிடைத்தது என்பார்கள். அதையும் மீறி நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் நீங்கள் தமிழுக்கு நோபல் கொண்டு வந்து விடுவீர்கள்.
Sunday, October 19, 2025
Saturday, October 18, 2025
Friday, October 17, 2025
நேற்றைய எனது நகைச்சுவைக்கான பதிவை வாசகர்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கவில்லை...ஒரு சிலர் நீங்கள் ஜெயமோகனுக்கும் சீனியர் என்பதற்கான ஆதாரங்களை பதிவேற்றுங்கள்...இல்லையேல் ஞானக் கூத்தன் கவிதையான அம்மாவின் பொய்கள் ல் வரும் இனி பொய்க்கு எங்கே போவேன்....எனச் சொல்லி சமாளித்துவிடுங்கள் என மறைமுகமாக எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார்கள்...
Thursday, October 16, 2025
My Tamil article translated into english by AI
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....