Wednesday, November 12, 2025

 



பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம். தொலைக்காட்சியின் படக்காட்சிகள் உடல் வாதையையும் மீறிய மனவாதையின் காய்ச்சலை சுரமாணியின் பாதரச எல்லைகளையும் தாண்டி உடைத்துத் தெறிக்கச் செய்து விட்டது. தடுமாறி திக்கற்று தவித்த அறச்சீற்றம் கொட்டிய வார்த்தைச் சிதறல்களை இங்கே உங்களுக்காக பின் நவீன பாணியில் ...

தில்லி செங்கோட்டையில்
சிகப்பு வண்ணத்தை
மனித உடல்சிதறற்களின்
பிய்ந்து பீறிட்ட குருதியில்
பூசியிருக்கிறான் ஒரு கயவன்...
இதயமில்லாதவனின்
இறுதியாத்திரைக்கு
மகிழுந்துவை அவனின் மதம் கொடுத்தனுப்பியிருப்பதுதான்
கொடுமை..
அவன் ஓட்டி வந்த மகிழுந்துவில்
அவன் சுமந்து வந்திருந்த மதமும்
தீரா மானுட வெறுப்பும்
அவன் கொளுத்திய வெடியில்
வெடித்துச் சிதறாமல்
இருந்ததுதான் வியப்பு.
அக்கொடியவனால்
அப்பாவி உயிர்களும்
அவர்களின் கனவுகளும்
ஏன் ஒரு குழந்தையின்
பால் போத்தலும் கூட
வெடித்துத் தூள் தூளாகி
குதுப்மினாரின் உச்சியில்
குவிக்கப்பட்டிருப்பதால்
இன்று
அது தலைகுனிந்து நிற்கிறது..
இந்தியா
ஒரு போதும்
இதையொத்த வன்முறைக்கு
மண்டியிட்டதில்லை என்பதை
அவனை ஏவிய
கயவர்களின் கல்லறையில்
இப்போதே
எழுதி ஆகவேண்டும்...
அதுவரை
வன்முறைக்கு
பலியான ஒவ்வொரு இந்தியனின்
பச்சை ரத்தமும் அதன்
வண்ணமிழக்கப் போவதில்லை..
ஜெய் ஹிந்த்
ராகவபிரியன்


Venkatachalam Sesha Giri
காங்கிரஸ் கட்சியில் தொடங்கி முழு இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. தெற்கில் பெரிய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை, ஏனெனில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து திராவிடக் கட்சிகளும், வி.சி.கே.வும் வடக்கு மற்றும் பிற நாடுகளில் தாக்குதல்களைத் திட்டமிட பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றன.
The entire I.N.D.I .Group starting from Congress party are in support of terrorists. No major attack takes place in the south because Dravidian parties along with congress,communists as well VCK help terrorists in planning attacks in North and other countries
  • பதில்
  • மறைத்திடுக
Venkatachalam Sesha Giri
பயங்கரவாதத்திற்கு காரணமான குற்றவாளிகள்:
1. கேரள முதல்வர் பினராயில் விஜயன் (மலப்புரத்தில் ஒரு மினி பாகிஸ்தானை உருவாக்கினார்)
2. தமிழக முதல்வர் ஸ்டாலின் (பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட, NIA விசாரணைக்கு அனுமதிக்கவில்லை)
3. மேற்கு வங்க முதல்வர் மம்தா (வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அனுமதித்தல்)
4. தெலுங்கானா முதல்வர் ஆர். ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அகிலேஷ், சமாஜ்வாதி தலைவர், அனைவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், ஆதரவு அளித்ததற்காகவும். இந்தியாவில் பயங்கரவாதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும்?
  • பதில்
  • மறைத்திடுக
Venkatachalam Sesha Giri
இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக உள்துறை அமைச்சரைப் பாராட்ட வேண்டும். உள்ளூர் போலீசாருடன் இணைந்து ATS ஏற்கனவே நகரத்தில் பல தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது, இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படvilai
  • பதில்
  • மறைத்திடுக

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...