தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Friday, July 23, 2021
Saturday, July 10, 2021
வேகமெனும் பூச்சி
Wednesday, July 7, 2021
காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்-
குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி
நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது-
துணி துவைக்கும் சப்தங்களை
சதா எழுப்பும் சங்கீதா...
மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்...
கொரோணாவின்
அலைகளில் அவள் மரணம்
என் சப்தங்களை
துவைத்தெடுக்கிறது....
சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல...
நதி விரைந்து கொண்டேயிருக்கிறது...
சந்தியா வந்தனம் செய்யும்
சடகோபனின்
அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன...
விண்ணை நோக்கி
துளித்துளியாய் புறப்பட்டு
என் கண்ணின் வழியே
பெருமழையாய் நதியில் இறங்குகிறது...
மழை ஆற்றில் விழும் சப்தம்
கோவிந்தம் தர்பயாமி....
என ஒரு துவக்காய்
என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது...
காலைக் கவ்விய அந்த சடகோபமீனின்
உடலெங்கும்
நாமங்கள் வழுக்கு கின்றன...
கொரோணாவின் இரண்டாம் அலையின்
நுரை ஆற்றுப் படிகளில்
அப்பிக்கிடக்கிறது....
கால நதியின் சுழித்தோடும்
மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும்
மேற்பரப்பிலிருந்து
திடீரென ஒரு மீன்
துள்ளி வெளிவந்து கரைந்து நீந்தத்தொடங்க....
படியில் கிடத்திய துண்டை
மீண்டும் தோளில் போர்த்தி
குளிக்காமல் திரும்புகிறேன்...
அணிச்சையாய் துண்டிலிருந்து
ஒரு குழந்தையின் கை
என் கன்னங்களைத் துடைக்கத் தொடங்குகிறது....
ஆறு அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.....
ராகவபிரியன்
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...

