Saturday, December 22, 2018

புராணங்களைச் சுற்றிவளைத்து மேற்கோள் காட்டி நண்பர்களை திணறவைக்காமல் நேரிடையாகவே வணக்கம் சொல்லிவிடுகிறேன்...அனைத்து நண்பர்களுக்கும் திருவாதிரை திருநாள் வாழ்த்துகள்...
மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே / திருமந்திரம்
இறைவன் கோவிலிலோ மண்டபத்திலோ போட்டிருக்கும் வேடத்திலோ இல்லை. மாறாக புறவெளியின் பால் கூறுபோட்டு கல் நட்டு தன் பெயர் பதிக்கும் ..இன்னபிற அகவெளியின் மாயைகளுக்குள் அஸ்திவாரம் இடும்.. வேட்கைகளை விட்டவர்களின் உள்ளத்திலே சிவமயமாகிய அரங்கன் காட்சிதருவான் எங்கிறார் திருமூலர்...
தரிசனம் என்பது அகவயமானது..திசைகளோ நிறங்களோ உருவமோ அற்றது..தாமாக நிகழ்வது..வலிந்து நிகழ்த்திக்காட்டப்படுவதல்ல.. திருமந்திரத்தை ஊன்றிக் கற்றவர்கட்கு உருவ வழிபாடு தேவையற்றதென்பது புரியும்..உருவமற்ற இறைவன் சிவமாகவும் அரங்கனாகவும் மனித பக்தி மனம் வேண்டியபடியான வேண்டிய திருக்கோலமாகவும் தென்படலாம்..அவ்வாறான பார்வையில் படும் உருவமற்ற அருவ தரிசனம் ஆனந்த வானில் நிகழும் மத்தாப்பு விளையாட்டை நமக்குக் காட்டக்கூடும்..
திருமூலரே ஆதிமனிதர்..ஆதிகவி..ஆதி தத்துவமேதை..ஆதி தமிழ் எழுத்தாளர்..ஆதி அகச்சோதி..ஆதி அரங்க அவதாரன்...என்றெல்லாம் சொல்லின் மிகையெனக் கொளல் வேண்டாம்..உண்மை..அவரது வரிகளில் அவரே...
“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” /
திருமூலர் தமிழுக்கு நிகராக பின் நவீன எழுத்தாளர்களில் ஒரு சித்தரைச் சொல்லலாம்...அவர் யார் என்று உங்களுக்கே தெரியும்...ஹி.ஹி...திருமூலரே ஒரு சித்தர்தான்..அந்தச் சித்தர் யார் என்று பின் நவீனத்தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்..சரி கொஞ்சம் தீவிரவாதம் கலப்போம்..
சக்தி நிபாதம் என்பது சக்தியின் வீழ்ச்சியைக் குறிக்கும்..ஆணவம் நான்கு நிலைகளை ஆதிதொடங்கி அந்தம் வரை நிலைபெறச்செய்யும்..அவை..மந்தரம்..மந்தம்..தீவிரம்..தீவீர தரம்...ஆணவம் ஒரு அழகான சகியைப்பெற்ற யோகியின் பால் மந்திர சக்தியென பிரவாகித்துச் சலம்பிச் சப்திக்கும்..அப்பிரவாகத்தைக் கட்டுப்படுத்தி அமைதிபெறச் செய்தால் தான் ஆத்ம சுத்தம் சித்திக்கும் என்று அற்புதமாய்ச் சொல்கிறார்..நம் தமிழ்த் தத்துவ மேதை திருமூலப்பாட்டனார்...அவருக்கு பாரத ரத்னா வேண்டாம்..ஒரு டாக்டர் பட்டமாவது கொடுக்கலாம்...
இருட்டறை மூலை இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
மருட்டி அவளை மணம் புரிந்தாளே...[திருமூலர்]
மேற்கண்ட பாடலுக்கு ஊனக் கண்களால் போதிய அறிவாற்றலோ அனுபவ ஆற்றலோ இல்லாமல் பொருள் சொல்வதென்றால்..எதோ ஒரு இருட்டறையில் இருந்த சின்னப்பெண்ணை ஒரு குட்டுக் கிழவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்..அவளும் அந்தக் கிழவனை படுத்தி யெடுக்கும் ஆசையின் பொருட்டு மணம் செய்துகொள்கிறாள்..என்றும் சொல்லலாம்..ஆனால் இதன் தத்துவம் ஆழ்ந்த கல்வி ஞானமும் அனுபவ ஞானமும் உடையவர்களுக்கே விளங்கும்..பெருமாள் கோவிலுக்குக் கூட்டம் வருவதைப் பார்த்து சிவன் கோவில் பூஜையிலிருப்பவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றெண்ணிப் பூரித்துப் போகும் சிற்றறிவர்களுக்கு புல்லின் நுணியில் பூமியுருண்டையைக் காட்டும் பனியாய் உருவமிட்டு வண்ணங்களாய் மாற்றம் காட்டி..சித்துவிளையாடும்.. சிவனையும் அரங்கனையும் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது...பிறகெப்படி திருமூலர் புரியும்...?போகட்டும் விடுங்கள்...
அந்தப் பாடலின் பொருள்..என் அளவில் ..உங்களுக்காகத் தருகிறேன்...ஆணவத்தால் தன் ஞானமிழந்த மனமெனும் மனிதப்பெண் இளமைமாறாதிருக்கிறாள்..அதனால் இருண்டிருக்கிறாள்..அந்த அஞ்ஞானத்தைப் போக்கினால்தான் நித்ய யெளவனமுடைய சிவனைப் பார்க்க முடியும்..அப்படியான அஞ்ஞானமெனும் குருட்டை நீக்கி நிஜ தரிசனம் காணும் ஆற்றல்பெற்றால் மிகவும் போற்றதலுக்குரிய கல்யாண குணங்கள் கொண்ட சிவமயமான அரங்கனை..உலக அரங்கிலெல்லாம் வியாபித்திருக்கும் சிவமென்ற ஞானத்தைக் கைகூடும் பாக்கியம் பெறலாம்..என்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டுமென்று சான்றோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்..ஆணவமே ஞானம்பெறத் தடையாயிருக்கிறதென்று எவ்வளவு அழகான எளிமையான பாடலில் சொல்லிச்சென்றிருக்கிறார் திருமூலர்...எளிமையான கவிதைகளின் பிரம்மா..ராஜன்..திருமூலர் என்றும் சொல்லலாம்...
வணக்கங்களுடன்..உங்கள்..அன்பன்..ராகவபிரியன்

Saturday, December 15, 2018

ragavapriyan rocks..

Ragavapriyan rocking the world literary scene like Gaja..My sincere thanks to Respected Madam Editor...with Namaskars..to all my friends well wishers literary lovers and my followers and readers...the world over...anban..ragavapriyan

Tuesday, November 27, 2018

திருவெள்ளறை திருக்கோவில்

தென்திசை தவிர மூன்று
திசைகளில் கோபுரம்
என்றுதான் எழுந்திடும்
என்பதோர் கேள்வியுண்டு
யாரிடம் திருப்பணியை
எம்பெருமான் ஒப்படைத்து
பாரினை வியக்கவைப்பார்..
புதிர் நிறை திருவரங்கம்....
[ராகவபிரியன்]
என்று எழுதவைத்த எம்பெருமான் திருவரங்கன் கடந்த ஒரு வார காலமாக திருவெள்ளறை வரவேண்டும்..வந்தென்னைச் சேவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே இருக்கும் ஒரு தவிப்பை உணர்ந்த வண்ணமிருந்தேன்..இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி எனது சகதர்மினியுடன் திருவெள்ளறை சென்று புண்டீரீகாஷப் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்...
ஆதி திருவெள்ளறை...அடுத்து திருபைஞ்சீலி..ஜோதி ஆனைக்கா..கிளி காட்டிய திருவரங்கம்...என்ற ஒரு தொன்மையான வட்டார வழக்கு நிலவுகிறது...
சிபிச்சோழன் காலத்தில் வெண்மையான மலைமீது கட்டப்பட்ட பேரதிசயக் கோவில் இது வென்று வரலாறு கூறுகிறது...மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்ட கோவில்... தற்போது அதன் பாதியில் விடுபட்டு சிதைந்திருக்கும் ராஜகோபுரத்திற்கான திருப்பணிகளை கோவையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனியொருவராக முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி...அதிர்வைத் தந்தது...எப்படியும் அரங்கனின் மூன்று மீதமிருக்கும் ராஜகோபுரங்களை யார் மூலமாகவாது திருப்பணியைச் செய்ய வைத்துவிடுவான் ...வானளாவி நிற்கும் திருவரங்கனின் நான்கு கோபுரங்களையும் காண்போம்...நானும் அதைக் கண்டுவிட்டே கண் மூடுவேன் என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த திவ்ய நாட்களில்..நான்காவதாக திருவெள்ளறையின் வானளாவிய கோபுரத்தையும் தரிசிக்கும் பேறு பெற்றுவிடுவேன் என்பதும் இன்று எனக்குப் புரியவைத்த புண்டரீகாஷப் பெருமானின் திருவடிகளே சரணம்...மேலும் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இங்கே மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்...அடியேன் ஆனந்தப் பரவசத்துடன் திருவெள்ளறையரங்கன் முன்னால் ஒரு சில திவ்ய பிரப்ந்தப் பாசுரங்களைப் பாடும் வாய்ப்பளித்து ஆசீர்வதமும் பெற்றேன்...ஒரு கூடுதல் செய்தியாக மணவாள மாமுனிகளுக்கு இங்கே தனிச் சந்நிதி..பக்தகோடிகள் அரங்கனின் கோபுரத் திருப்பணிக்கு அள்ளி அள்ளி வழங்கவேண்டுமென்பது அடியேனின் அன்புத் திருவுள்ளம்....
ராகவபிரியன்

Tuesday, November 20, 2018

நிவாரணம் ஏந்தி
புறப்படுகிறதென் ஊர்தி..
யானை கட்டிப் போரடித்த
எம் தஞ்சைவயல் வெளிகளுக்குள்
நுழைகிறேன்..
கை நிறைய
சிதறிக் கிடக்கும்
தென்னங்குரும்பைகளை
நீட்டும் பிஞ்சுக்கைகளுக்கான
நிவாரணமெதுவென
அறியாது அதிர்கிறேன்..
சாய்ந்து கிடக்கும்
மின் கம்பிகளில்
லாகவகமாக நடனமிட்டு
சரிந்த குடிசையின்
மண்சுவர் மாடத்திலிருந்து
கல்லாங்காய் ஆட்டத்திற்கான
கூழாங்கற்களைச் சேகரிக்கிறாள்..
சின்னத் தமிழச்சி..
அவைகளைக்குட்டையில்
குளிப்பாட்டி
வாரியணைத்து
ஈரப்பாவாடைக்குள் பத்திரப்படுத்தி
பளீரெனச் சிரிக்கிறாள்..
கூழாங்கற்களை
கூட்டாஞ்சோறின்
ஆவியில் அவித்து
காயவைக்கக்கோரும்
அவளின் கைகளில்
அந்தக் கூழாங்கற்களில்
கூட்டஞ்சோற்றின்
வாசம் கொணரும்
உடனடி நிவாரணமறியேன்..
வரப்புச் சண்டையில்
பெரியப்பா மாமரத்தில் வீசியெறிந்த
நடைவண்டியுடனும்
பறவைக்கூடுகளுடனும்
தலையாட்டிப் பேசிக்கொண்டிருந்தவள்..
அம்மாமரம் சாய்ந்து
குட்டைக்குள் மிதக்கவிட்ட
அவளின் மிச்ச நடைகளை
அந்த மிதிவண்டியை
கூடடைய வந்த பறவைகளின்
மீந்த சிறகுகளை
அணிற்கடித்தப் பழங்களை..
எப்படி நிவாரணமாய்
மீட்டுத்தருவதென
தவித்துக்கொண்டிருக்கிறேன்..
ஊர்தியை விட்டிறங்கியவன்
மனமெங்கும்
நிவாரணத் தென்னைகள்
சாய்ந்து கிடக்கின்றன...
ராகவபிரியன்

Saturday, November 10, 2018

கிரக்கி யானை

புறக்கணிப்பின் வலி உணர்ந்தவர்கள் அதன் பாதிப்பால் தங்களையே புறக்கணிப்பிற்குள்ளாக்கிக் கொள்பவர்கள் இலக்கியப் பொறாமையின் பிரதிபலிப்புகளெனின் அதை நிறுவுதல் கடினமல்ல..ஒரு பதிவின் தீவிரத்தையும் தாக்கத்தையும் ஒரு ஆகச் சிறந்த படைப்பின் வீச்சுடனும் விஸ்தீரனத்துடனும் ஒப்பிடுதல் ஒவ்வாமையின் அரிப்பிற்கு உள்ளாக்கி மனச் சொரிதலை உருவாக்கும் வல்லமையுள்ளது..பதிவு என்பது நோக்கங்கள் அற்றது..அதற்கான விருப்பங்களும் கருத்துக்களும் விளம்பர உத்தியின் கூறுகளைச் சுமந்து வலுவிழந்துவிடும்..ஒரு தனித்துவமான படைப்பின் பிறப்பு இலக்கிய விடியலின் வரவை ஒரு சேவலின் அறைகூவலிலோ கிழக்கின் சிவப்பு நிற ஒளி நுழைவின் அதிர்வுகளிலோ ஒரு மனிதப் பிறப்பின் அத்தனை ஆவல்களின் பிம்பமென்றோ எண்ணங்களின் எல்லைகளையும் தாண்டி மாறுதல்களை உருவாக்க வல்லது..அதுபோன்றதொரு படைப்பை முக நூலில் வெறும் பெயரைப் பார்த்துவிட்டு விருப்பக்குறி கூட இடாமல் கடந்து போகும் போது எனக்கு தென் ஆப்பிரிக்கக் கவிஞர் ..அந்த நாட்டின் தேசிய கீதத்தைத் தந்த 58 வயது வரையே வாழ்ந்து தெனாப்பிரிக்க தொன்ம இலக்கியத்தை ஆங்கிலக் கலப்பற்ற ஆதிமொழியில் எழுதி உரை நடையின் வர்ணனைகளை விலக்கி அதன் வீச்சை உலக மொழிகளில் அறிமுகப்படுத்திய ..இந்த நூற்றாண்டின் அதிசய மனித மஹான் நெல்சன் மாண்டேலா சிறை நாட்களில் விரும்பி வாசித்த உத்வேகம் தரும் எழுத்திற்குச் சொந்தக்காரரான அழியாப் புகழ் பெற்ற லெங்கன்வேகன் அவர்களின் எழுத்தாரம்ப நாட்கள் நினைவில் வந்தன..அவர் தன்னை ஒரு ஆப்பிரிக்க யானை என்றே குறிப்பிட்டிருக்கிறார்..அவரின் கதாபாத்திரங்களில் கிரக்கி என்ற ஆப்பிரிக்க யானை தொடர்ந்து இடம் பிடித்து உலகப் புகழ் பெற்றது..அவரை உதாசீனப் படுத்திய புறக்கணித்த நிகழ்வுகள் ஏராளம்..தன் வீட்டின் அருகில் இருந்த ஒரு பாறாங்கல்லில் அவர் தன் பெயரை உளி கொண்டு 1913-14 ல் செதுக்கியிருக்கிறார்..அதன் கீழே கிரக்கி யானையின் பெயரையும் செதுக்கி...புறக்கணிப்பிற்கு உள்ளாகும் எந்த எழுத்தும் புரட்சியை ..வரலாற்றை உருவாக்கும் ..என்பதன் சாட்சியாய்...இருக்க...இன்றும் கூட அந்தக் கல்லை ..அவ்விடத்தை தெனாப்பிரிக்க அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்து...உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் பார்த்த வண்ணம் உள்ளனர்...
அவர் உமர் கய்யாமின் பாடல்களை தெனாப்பிரிக்க மொழியில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்..அவர் மொழிமாற்றிய அவரின் ஒரு கய்யமின் சாயல் கொண்ட கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
படுக்கையறைகளில்
நெளிபவைகள்
மெத்தைவிரிப்புகள் மட்டுமல்ல..
ஒரு சில
சட்டையுரிக்கும்
விஷங்களின் நெளிவுகளும் கூட..
கனவுகளின் கைகள்
வானைத் தொடும் போது
உன் காமக் கோப்பை
காலியாகியிருத்தல் சுகம்..
நெளிவுகளின் தடைகளை
தகர்தெறியும் நீண்ட
போராட்டங்களில்
நிறவெறியின் உக்கிர மதுவை
மீண்டும் நிரப்பிக்கொள்..
உன் உறக்கத் தொடக்கத்தின்
ஒரு மூலையில்
புரட்சிச் சேவல்
கொக்கரிக்கையில்
உனக்கினி இரவுகளேது...?
விஷங்களை விரும்பிச் சுவைக்கும்
உன் உதடுகளின் நிழல்
சிவப்பின் சாயலுடன்
கிழக்கில் உதிக்கும்
கருப்பு நிறச் சூரியக்
கோப்பைக்குள் தளும்பும்..
படுக்கையையுடன்
உன் பயத்தையும் சுருட்டி வை..
புறப்படு..
என் கிரக்கி யானை
கால் தூக்கி
மத்தகத்தில் உன்னையேற்றிக்கொள்ள
காத்திருக்கிறது...
ராகவபிரியன்

Monday, October 29, 2018

சிதறிக்கிடக்கும் தோல்விகள்..ராகவபிரியன்

உன் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளின் கடல் நடுவே உருக் கொள்கிறது ஒரு புயல்..
அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே..
உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய்
வழியெங்கும் அமைத்த நீ
துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்..
புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது..
மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும்
அதன் முகூர்த்தப் பந்தல்காலென
உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்..
புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான
வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது..
உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை
வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்..
அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள்
மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும்
உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது..
காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி
ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்..
மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி
உன்னை எச்சரிக்கிறது..
திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல்
அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக
தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறது..
உனக்கான கூலியாய் காலிக் கோப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்..
கொல்கத்தா மாநாட்டிற்கு பாரதியின் பயணத்தின்
பட்டினி வயிற்றின் உக்கிரமாய் புயல் தாண்டவமாட..
உன் முண்டாசை இறுக்கிக் கட்டுகிறாய்..
மழித்தெறிந்த உன் மீசைமுடிகளை புயல் தொடாமல் கடப்பது அதிசயமில்லை..
உனக்குப் புயல் தோல்வியைத் தந்துவிட்டு அமைதியாய் இருக்கிறது...
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் தோல்வியைத் தான்
இப்போது...
ஒரு புயலென நீ தாண்டவேண்டியிருக்கிறது...
ராகவபிரியன்

Saturday, October 27, 2018

மனிதன் மன அதிர்வுகளின் பால் கால் பதித்து தள்ளாடியபடி சில செயல்களைச் செய்கிறான்...அவனைப் பொறுத்தவரை அதிர்வுகளின் பிரக்ஞ்சையும் தாக்கமும் அதன் விளைவுகளும் அவனை பாதிக்கும் வரை.. அவன் அறிவிலியாகவே இருக்கிறான்..மனிதனின் முதன்மையான இயல்பு அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான்..சில ஒவ்வாத ஒப்பீடுகளால் அவன் தன்னை உயர்ந்தவனாகவும் பலமுள்ளவனாகவும் தான் வெறுப்பவன் தன் முன்னே மண்டியிட்டுக் கதறுவதாகவும் கற்பனை செய்தபடியிருக்கிறான்..கற்பனையை நிஜமாக்கும் பொழுதின் கடினங்களில் மனிதம் இறந்து போவதைக் காணலாம்...தனி மனிதன் தன் ஆச்சார்யனை அருகிலிருந்தும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான்..அந்தத் தவிப்பின் அதிர்வுகளால் தள்ளாடியபடி அந்த ஆச்சார்யனை அடியாள் வைத்து அடிக்கவும் தயங்காத இயல்பை ..அந்த ஆச்சார்யனின் தவப்பொருட்களை திருட்டுத்தனமாக அடைய நினைக்கும் ஒவ்வாத தீய மனப்பாங்கின் அசுர இயல்பை பிறிதொரு நாளில் உணர்வதை ஞானமெனக் காண்கிறான்..அவன் அதை அடைவதற்குண்டான நெடிய பயணத்தில் சில நேரங்களில் தன்னையே தொலைத்ததை அறியாமல் பிணமாய் கனத்துப்போகிறான்..அப்படியான ஒரு மனிதனை அரங்கன் ஆட்கொண்டு மனிதனாக்குவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் ஆச்சார்யன் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருக்கோவிலூர் வருகிறார்..
அங்கே ஒரு கீற்றுக்குடிசையின் மழையிரவில் ஒருவரையொருவர் உணராமல் நெருக்கியபடியிருக்கும் முதலாம் ஆழ்வார்களை தன் ஞானத்தால் நெருங்குகிறார்..தென்பெண்ணையின் சீரிய பாசனத்தால் விளைந்த கோட்டைமருதூர் கரும்பொன்றை ஆலையிலிட கிடைக்கும் அமுதமென அரங்கனைப் போற்றிப்பாடத் தொடங்குகிறார்கள் மூன்று ஆழ்வார்களும்..அந்தாதி வெண்பாக்களின் அபூர்வ ஒளியில் அரங்கன் தன் பை நாகப் பாயிலிருந்து எழுகிறான்..திரிவிக்ரமனாய் தன் வலது காலை மேலே தூக்க மிருகண்டு முனிவர் சங்கு சக்கரங்களை கைமாற்றிக் காட்டச் சொல்கிறார்..அத்தனைக் காட்சிகளையும் நமது ஆச்சாரியனுக்கு அரங்கன் நிகழ்த்திக் காட்ட 28 பாடல்களை ஸ்ரீ தேஹலீச ஸ்துதி.என்ற தொகுப்பில் அதியற்புதமாக இயற்றிக்காட்டி வாழ்வின் அர்த்தங்களை நமக்கு உணர்த்துகிறார் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகச் சுவாமிகள்...அதிலிருந்து ஒரு கவிதையை உங்களுக்காக இங்கே தருகிறேன்..
காஸார பூர்வ கவி முக்க்யவிமர்த்த ஜந்மா..
பண்ணா தடேக்ஷு ஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே..
த்வத்பாத பத்ம மதுநித்வத் நந்ய போக்யே..
நூகம் ஸ்மாஸ்ரயதி நூத நசர்க்கராத்வம்...
[ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்}
திருக்கோவிலூர் அருகே உள்ள பெண்ணையாற்றின் நீரால் நிரம்பி வழியும் கோட்டை மருதூர் ஏரிப்பாசனத்தில் விளைந்த தரமான கரும்பை சாறாக்கிப் பருகக் கிடைக்கும் அமுதம் ..பகவத் நெருக்கத்தால் நெகிழ்ந்து அமுதத் தமிழ்பாடல்களைத் தந்த முதலாமாழ்வார்களை லெளசீல்யம் எனும் உயர்ந்த குண நலங்கள் கொண்டவர்களாக மாற்றும் சக்தியுடையது.. அதுபோல ஆணவத்தால் தனது அடியாட்களை ஆச்சார்யர்களை நோக்கி மீசையை முறுக்கச் செய்யும் ஒப்பீடுகளையுடைய அதிர்வுகளின் பிடியில் ஆடிக்கொண்டிருக்கும் தகுதியற்றவனை மனிதனாக்கும் கருப்பஞ்சாறு உனது திருவடிகள்..அதை அனுபவிப்பர்வர்களுக்கே மனிதமே உயர்ந்தது என்ற ஞானம் கிடைக்கும்..அவ்வாறான ஞானமுடையவர்கள் ஆச்சார்யனின் செய்கைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து திருந்துகிறார்கள்..அப்பொழுதின் இனிமையில்தான் கருப்பஞ்சாறு சர்க்கரையாக மாறி இன்னும் இனிக்கத்தொடங்குகிறது..திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, October 6, 2018

வாழ்வு என்பது பிறத்தலும் குழந்தைமையும் உழைப்பும் இன்ப துன்பங்களும் மூப்பும் இறத்தலும் எனும் நம் நம்பிக்கைகளை தகர்த்து அது முடிவற்ற போராட்டம்..ஒருவேளை முடிவின் விளிம்பில் வெற்றி என்பது நிச்சயமில்லை எனும் போதில் செல்லும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் தோட்டாக்களும் பிணங்களும் இடிபாடுகளும் இழப்புகளும் போராட்டப்பாதையை எழுத்தை நோக்கி ஒரு ஆறுதலுக்காகவாவது ஒருவரை திருப்ப முடியும்..எழுத்தின் மூலமும் போராட முடியும்...எழுத்து கண்டிப்பாக எழுந்து நிற்கச்செய்யும்..அப்படிப்பட்ட கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு கொடுஞ்சூழலில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாதிகளால் தனது தாயும் ஆறு சகோதரர்களும் தன் கண்முன்னால் கொல்லப்பட்டும்..தான் பாலியல் அடிமையாக கொடூரமான வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டும் அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டு தைரியமாக தப்பி வந்து லண்டனில் ஒரு மனித உரிமைப் போராளியும் தோழியுமான சட்டப்பணிகளைத் தொழிலாகக் கொண்ட அமோல் கொலோனியிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுகிறாள் நாடியா மூரட்...2018 ன் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிஜமான புரட்சிப்பெண்...
அவரின் கடைசீப் பெண்குழந்தை[THE LAST GIRL] என்ற புத்தகம் படிப்பவர் கண்களில் கண்ணீரை வற்றிவிடச் செய்யும் என்பது திண்ணம்..அந்தப் புத்தகத்திற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசுகூடக் கொடுக்கலாம்...அந்த புத்தகத்தின் வரிகளெங்கும் தேங்கிக்கிடக்கும் மனித குலம் இந்த நூற்றாண்டில் சந்தித்த ஒப்பீடற்ற அழிக்கமுடியா கொடுமைகளை ...ஆகப்பெரிய அணையால் கூட தேக்க முடியாத அலைகளற்ற கண்ணீரை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..
அன்புள்ள அம்மா..
உன் பையனை
என் அண்ணன்களைக் கடத்தியவனின்
மகிழுந்துக் கண்ணாடியை
உடைத்துவிட்டேன்..
என் புறங்கையின்
ரத்தத் துளிகளை
நீ முத்தமிட்டாய்..
நம் வயல்களின்
வெளிர் சிவப்பு வெங்காய விளைச்சலை
நம் ஆடுகளை
கோழிகளை
என்னையும்
கொள்ளையடித்தவனின்
ஆண்மையில்
ஒரு உதை உதைத்துவிட்டேன்..
அவன் இறந்துவிடவில்லை..
அன்புள்ள அம்மா..
என்னை விலைபேசிவிற்ற போதும்
வலுக்கட்டாயமாக
புணர்ந்த போதும்
நானும் இறந்துவிடவில்லை..
நமது இனம்
பல்லாயிர வருடப் பாரம்பரியமிக்க இனம்
அதை
கடவுள் நம்பிக்கையற்ற இனமென்றும்
நம் இனப் பெண்கள்
வன்புணர்வு செய்யப்படவேண்டுமென்றும்
ஆண்கள் கொல்லப்படவேண்டுமென்றும்
அல்லது
நாம் மதம் மாறவேண்டுமென்றும்
அவர்கள்
துண்டுச் சீட்டை வீசிய
அன்று தான்
நான் இறந்துபோனேன்..
அம்மா..
நம் அண்ணன்களுடனும்
என்னுடனும்
நீ எப்போதும் இருக்கிறாய்..
எப்போது வேண்டுமானாலும்
நான் உன்னிடத்தில்
கொண்டுவிடப்படலாம்..
என் புறங்கையின்
ரத்தத்துளிகள்
இன்னும் காயவில்லை..
உன் முத்தமும்தான்..
அதற்குள்
நான் தீவிரவாதத்தை
முட்டாள் தனத்தை
மனிதமற்ற செயல்களை
அவைகளின் தலைகளை
முகமூடி அணியாமல்
கூரிய போராட்டக் கத்தியால்
சங்குக் கழுத்தில்
சின்னக் கோடுகளாய்
துளிர்க்கும் பச்சை ரத்தம் காயும் முன்
எடுத்துவருவேன்..
அன்புள்ள அம்மா..
அதுவரை
இந்தக் கடிதத்தை
படித்துக்கொண்டிரு...
என் கைபேசித் திரையில்
கடவுளாக
உன் படத்தைத் தான்
வைத்திருக்கிறேன்..
நீ அதில்
புன்னகையுடனிருக்கிறாய்...
நானும் தான்...
போராட்டமென்பது
இனியென் உணவு அம்மா...
கவலைப்படாதே...
நான் அனாதையல்ல..
போராளியும்
மனிதம் காக்கும் தன்னார்வ
தொண்டாற்றுபவளும் கூட..
அதையும் விட
நான் ஒரு எழுத்தாளுமை...
அம்மா....
ராகவபிரியன்

Monday, October 1, 2018

இரவு யாசகனின் மோதிர விரல்
--------------------------------------------------
எனது அட்சயபாத்திரத்தில்
அன்னமிடுபவர்களின்
மோதிரங்கள் எனக்குப் பிடிக்கும்..
பொற்கொல்லனின்
சின்ன உளியின் சப்தங்களை
பொன் உருகி
கெட்டியாகும் நிமிடங்களை
கண்ணுள் கொணர்ந்து
திளைப்பேன்..
சில விரல்களின்
உலோகங்கள்
நெகிழிச் சுழுவுகள்
ஓலை மோதிரங்கள்
மிட்டாய் மோதிர
குழந்தை விரல்கள் கூட
மிக மிக எனக்குப் பிடித்திருந்திருக்கிறது..
என்
அன்ன பாத்திரத்தில்
தற்செயலாக
விழுந்த அந்த மோதிரம்
என் பிச்சைக்குத்
தடையாகிப் போனது..
இப்போதெல்லாம்
இரவு யாசகம்
மோதிர வெளிச்சத்தில்
இளைத்துப்போக..
இரவுப் பசிதாங்காமல்
மோதிரத்தின்
உரிமை விரலிடம்
விரைந்து சென்றேன்...
பெற்றுக்கொண்ட அன்னை
இதை அடகில் இட்டால் தான்
இன்று அன்னம்
எங்களுக்கு என்றாள்...
தவறாமல்
இரவு யாசகம் வரவும் கட்டளையிட்டாள்..

என் அட்சைய
பாத்திரங்களெங்கும்
பொற்கொல்லனின்
உளிச் சப்தம்
ஏனோ தாளம் தப்பி
கேட்டுக் கொண்டேயிருக்கிறது..
ராகவபிரியன்

Thursday, September 27, 2018

சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனது முதல் கவிதையை எழுதிவிடமுடியாது என்றெழுதிய உம்பர்ட் ஈகோ இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார்..வாழ் நாள் முழுதும் இரண்டு இடங்களில் மாறி மாறி வசித்த ஈகோ ஏறக்குறைய எழுபதாயிரம் புத்தகங்களைச் சேமித்திருக்கிறார்...கத்தோலிக்க வழிபாட்டு முறையையும் கடவுளின் இருப்பையும் கடுமையாகச் சாடிய ஈகோ புனைவுலகின் மீதும் தீராத கோபம் கொண்டிருந்தது வரலாறு..எலியட்டிலிருந்து இன்றைய நவீன கவிஞர்களின் கவிதைகளை சதா குறை கூறிக்கொண்டிருந்த ஈகோ எந்தக் கவிதையையும் கவிதையென ஏற்றுக்கொள்ளவில்லை..நீங்கள் ஏன் கவிதையையும் கடவுளையும் நம்ப மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வியெழுப்பியவர்களை ..எல்லாக் கவிஞர்களுமே மோசமான கவிதையைத்தான் எழுதுகிறார்கள்..அதைவிட மோசமானவர்கள் அதை வெளியிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்தச் சர்ச்சும் முன்வரவில்லை...குழந்தை இலக்கியத்தில் ஓரளவு வெற்றிபெற்ற ஈகோ தனது ஈகோவை விட்டுக் கொடுக்கமுடியாத்தால்..ஆகச் சிறந்த நாவலான...ரோஜா என்பது பெயர்...என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பாக கொடையளித்திருந்தும்..எந்த உலகளாவிய பரிசிற்கும் விருதுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது விடுவிக்க முடியாத இலக்கியப் புதிர்..எனில்..அது மிகையில்லை...அவரைப்பற்றிய ஒரு கவிதையை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
அப்பொழுது
குதிரைகளை
கலப்பையில் கட்டியுழுதார்கள்..
இப்போதோ அடிமாடுகளைத்தான்..
வறுமையுச்சப் பொழுதுகளில்
குடிசையின் மீதான
சூரியன் தன் செங்கதிர்களை
மறைத்துக்கொள்கிறான்..
நிலத்தையும் புலத்தையும்
இயற்கையையும்
கடவுள் இல்லையென
மறுத்தவன்
எழுத்தையும் அதன் ஆற்றலையும்
யாரிடமிருந்து பெற்றான்..
குழந்தையை நேசித்தெழுதியவன்
கடவுள் இல்லையென்பதைக்
குழந்தைகளுக்குச் சொல்லட்டும்..
பிறகு ஏன்
தன் இல்லக்கோவிலில்
தன் குழந்தைகளை
அவன்
காலணிகளுடன் அனுமதிப்பதில்லை..
குதிரையும்
உழவும்
இயற்கையும்
அடிமாடுகளும்
கடவுள் இல்லையெனில்
படைப்பவனும்
கடவுள் இல்லையென்கிறேன்..
ஆமென்..
ராகவபிரியன்

Friday, September 21, 2018

இன்றைய தமிழ் இலக்கியத்தின் செலுத்துவாரற்ற பயணம் செல்லும் திசையெல்லாம் கிடைக்கும் உபயோகித்து தூக்கியெறியும் உடையொன்றை வாங்கி அணிந்து கொள்கிறது...புதுப்பொலிவுடன் ஈர்க்கும் அது அடுத்த உடைகிடைக்கும் வரை அழுக்காகி கசங்கி இலக்கிய பிம்பத்தின் மரியாதையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறது...ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தமிழிலக்கியம் இதுவரை பெற்றது ஒரே ஒரு ஞானபீடம்தான்..[சரி..இரண்டு என்றே வைத்துக்கொள்வோம்]இந்திய மொழியிலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் முதல் இலக்கியப் பிரதி கிடைத்தாகச் சொல்லிக்கொள்ளும் ஒடிய [odia]..இலக்கியம் இதுவரை நான்கு ஞானபீடங்களைப் பெற்றுவிட்டது..
பாண்டா எனும் ஆதிகுடிமக்களைப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் ஒரியாவில்..அவர்களைப்பற்றி எழுதி உலகின் கவனத்தைக் கவர்ந்தவர் . 2011 ல் ஞானபீடப் பரிசு பெற்ற ஒடிய எழுத்தாளுமை...வைணவ குலத்தைச் சேர்ந்த பிரதீபா ரே...அவர்கள்...நிறைய நாவல்கள் ...சிறுகதைகள் ..கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அவரின் கவிதைகள் அவ்வளவாகப் பேசப்படவில்லை..
ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட ஒடிய கவிதாயினி நிர்மலா தேவி என்றுதான் ஒடிய இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது...பதின்மூன்று குழந்தைகளைப் பெற்று ஆங்கிலேயர் காலத்திய அரசு நிர்வாக மேலதிகாரியாக பணியாற்றிய நிர்மலா தேவி..தன் கவிதைகளை தன் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் விளக்கி காட்டி அவர்களின் முயற்சியால் அவைகள் அச்சிலேற்றப்பட்டு அவருக்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது...இலக்கிய உலகின் ஒரு நம்பமுடியாத அதிசயமாகத்தான் இருக்கிறது..அந்த இறவாக் கவிதாயினியின் பெயர்த்தியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
எதுவுமற்ற ஒரு உருவம்
என் முன்னே
தினமும் தோன்றுகிறது...
அவ்வுருவம்
அசைகிறது ..பாடுகிறது..சிரிக்கிறது..அழுகிறது...
அதற்கு நிறமில்லை..
அதற்கு உணர்வில்லை
அதற்கு உயிருமில்லை...
எனினும்..
நான் சிரித்தால்
அது கோபப்படுகிறது..
நான் பேசினால்
அது மெளனமாகிவிடுகிறது..
எனக்கு வண்ணம் ஓளிர்ந்தால்
அது தன் நிறமிழந்து விடுகிறது..
நான் நடந்தால்
அது அமர்ந்து கொள்கிறது..
நான் எழுந்தால்
அது ஓடிவிடுகிறது..
கண்டிப்பாக
இந்த இலையுதிர்காலத்திற்கு முன்
நான் அதை
உங்களுக்கு
அடையாளம் காட்டிவிடுகிறேன்...
ராகவபிரியன்

Friday, September 14, 2018

O vinayaka
Thou head was snatched
just for guarding the Nirvana
of your mother
by your own father..
Spiritual powers
were restored to thee
o vinayaka
by reincarnation
with an Elephant's head..
O vinayaka
mere illusions of you
may dispel the fear..
and Thy mere name
may remove the obstacles of life..
Thy ivory gored writings
of Mahabharath
had given the name and fame
to Thee...
as the first ghost writer ever..
The mud made Thou idols
simply remove
the worldly attachments
and when immersed in rivers
canals or tanks
Life's rehearsals too
immersed in Thee..
forthwith o vinayak..
Thou tiny travel animal [Mousihka]
before entering inside an unknown hole
simply deserted Thee O vinayak
and Thou postures
under the peepal tree
is an art of waiting...
or enlightenment..
Thy devotees are
simply going for immersion..
Because of extreme devotion..
But Thy path is obstructed..
Let the devotees
immerse themselves into thee
O vinayak..
Let the obstacles in the path of
immersion or purity be
eliminated ..
O vinayak
after all
our pathways and roads to destination
are
decided by Google maps..

Tuesday, September 11, 2018

The day usually dawn
with hatred..
Ten of my brothers and sisters
had their own wishes..
when an iota of indifference or frustration
fallen on them they usually
tumble on me like mounting of wagons
during an accident of a goods train..
That was the chisel that shaped me.
That was the teacher who taught me..
That was the tailor who dressed me
That was the I still coming out of me..
I was hanging on a thread for a bread
I was walking on a rope for a lesson
I was living on a bush full of thorns
and that was that..
Now people are praising me
focusing the moon light on me..
My brothers and sisters arefighting between them in praise of me..

When i enter into the house
all are standing like the
audience including the judge
who had risen up when accused Mahathma
entered the court room
during freedom struggle..
But i require only love and affection
I require a place on a remote corner
of my house where i could sleep..
I require a dawn without any dust..
and let me brush my teeth with fondness
Before a cup of coffee...
Ragavapriyan Thejeswi

Sunday, September 2, 2018

ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்..
என் கைகளைக் கொஞ்சம் நீட்டி
வானம் தொட்டேன்..
கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய
பயம் நடுக்கம் தந்தது...
இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து
சட்டைக்குள் வைத்துக்கொண்டேன்
ஓர் நாள் போதும்..
அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது...
கிணறுகளை எட்டிப்பார்த்து
வாளியில் நிலாவை அள்ள முடியாது..
அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்..
கருக்கலில் காவிரிக்கரையில்
மலம் கழிக்க வருபவர்கள்
புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை.
நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை
பயமின்றி தோண்டியெடுக்கலாம்..
சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில்
முண்டாசுக்காண துண்டு தேவையில்லை..
ஒரே ஒரு நாள் மட்டும்
அந்தப் பெளர்ணமி என்னோடு
இருந்துவிட்டுப் போகட்டுமே..
அட என்ன இது...
என் சட்டைப் பைக்குள்
யாரோ கையை விடுகிறார்கள்....
நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...?
ராகவபிரியன்

Saturday, September 1, 2018

தொம்பங்கூத்தாடியின்
சின்ன மகள்
கம்பியிலாடும் குழந்தை வித்தகி...
எதிர் ரொட்டிக்கடையின்
அன்ன தாதா
அவளின் பசிக்கு
கைத்தட்டல் மட்டுமே
காசில்லாமல் தருவார்...
அவளின்
சம நிலைக் கம்பில் கவனம்
கம்பியில் கால்களை இறுக்க..
பசி வயிறை இறுக்கிப் பிடிக்கும்..
அப்பாவின் சில்லரைத் தட்டும்
அம்மாவின் மேளத் தட்டும்
அவளின் வயிற்றுக் கம்பியில்
பசியின் நடனத்தை
தாள நயத்துடன்
ஆடச் செய்யும்..
நடன முத்திரையின்
மின்னல் வேகம்
கூடிக் கூட..
ரொட்டிக் கடையின்
வாட்டிய ரொட்டியை
ஈட்டி முனையில்
நர்த்தனக் கொள்ளையாய்
எடுத்துக்கொள்வாள்..
ஓடியேறிக் கம்பியில்
நடக்கும் வித்தகிப் பசிக்கு
வித்தையே உணவு..
திருடி திருடியென
அன்ன தாதா
அறை கூவல்விடுக்க...
குழந்தை உதட்டோர
ரொட்டித்துகள்கள்
திருட்டின் சாட்சியா..?
பசியின் சாட்சியா...?
தரையில் நின்றே
யாரும் சொல்லலாம்..
ராகவபிரியன்

Saturday, August 25, 2018

Mokkumbu Melanai

கடந்த இரண்டு நாட்களாக மனம் அமைதிகொள்ள மறுக்கிறது..பிக்காசோ வரைந்த செவ்வியல் அமைதி ஓவியமொன்றை யாரோ சேதப்படுத்திவிட்டால் வரும் அமைதியின்மையைப் போன்றதது.....வார்த்தைகளில்லை என்னிடம் ...எனினும் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட முக்கொம்புவின் மேலணை இடிந்து கிடக்கையில் அவரின் அணைகட்ட பயன் படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் [இன்னமும் தவ்லேஸ்வரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது]...வேலையாட்கள்..பிரிடிஷ் அரசாங்கத்தின் பாராமுகம்..ஒத்துழைப்பின்மை போன்று ஒரு நெடிய வரலாறு காவிரியின் அலைகளில் ஒரு பிளாஸ்டிக் குடுவையைப்போல் என் மனமெங்கும் அலைகழிக்கப்படுகிறது..எலமனூரிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தான் திருப்பறாய்த்துறை...அங்கிருக்கும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளியில் 1969 ல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...பரிசிலில் காவிரியைக் கடந்து முக்கொம்பு செல்வோம்...அங்கிருந்துதான் கொள்ளிடத்தின் மேல் அப்போது அணைப்பாலம்[ காட்டன் அவர்களால் கட்டப்பட்டது..] இருந்தது...அதன் மேல் எத்தனையோ முறை நடந்திருக்கிறோம்...பழியாய்க்கிடந்திருக்கிறோம்...பாலத்தின் அடியில் மெல்ல கதவுமீறி சில்லென்று விழும் காவிரியில் வெகு நேரம் மகிழ்வின் உச்சங்களில் இருந்திருக்கிறோம்...
சர்.ஆர்தர் காட்டன் 96 வயது வரை வாழ்ந்தவர்...இந்தியர்களின் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்...அதனாலேயே பிரிடிஷ் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானார்..மணல் மீது செங்கற்களை அடுக்கி அணை கட்டுவதென்பது ஒரு பொறியாளரான காட்டன் அவர்களுக்கு வியப்பாய் இருந்தது...கல்லணையை முழுதும் ஆராய்ந்தார்..அதன் வடிவமைப்பையும் நீடித்த செயல் திறனையும் வியந்து பிரிடிஷ் ராணிக்கும் வைஸ்ராய்க்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்..
ஆந்திராவின் பிரகாசம் பேராஜ்..மற்றும் தவ்லேஸ்வரம் பேராஜ் போன்றவை அவரின் இந்தியர்களுக்கான கொடை ..
திருப்பறாய்த்துறையின் அகண்ட காவிரியின் எதிர்கரை குணசீலம்...வேணிற்காலங்களில் பொடிமணல் சூடு தாங்க அங்கங்கே ஊற்றுகள் தோண்டி அதில் துண்டை நணைத்து காலின் அடியில் போட்டுக்கொண்டு சூடு தணியும் வரை நிற்போம்..பிறகு கொதிக்கும் சுடுமணல் ஓட்டம்...அடுத்திருக்கும் ஐயன் வாய்க்காலில் குளித்து குணசீலப்பெருமானை வணங்கி திரும்பி வரும் போது வாத்தலை வழியாக மேலணையில் நடந்து பரிசல் பயணம் செய்ததெல்லாம் என் மன அணையிலிருந்து ஒவ்வொன்றாக உடைந்து விழுந்த படியிருக்கிறது...
சர் ஆர்தர் காட்டன் அவர்கள் மேலணைக்கான பென்சில் ஓவியமொன்றை வரைந்து அது முதலில் தொலைந்துவிட்டதாகவும்..பிறகு வேறொன்றை அவர் தயாரித்ததாகவும் படித்தபோது ...என் கண்ணீர்த் துளியொன்று உடைந்த மதகுவழி எகிறிச் செல்லும் காவிரியில் விழுவதை உங்களால் பார்க்க முடியும்...
ராகவபிரியன்


Wednesday, August 22, 2018

Pseudo secularism

இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகளால் புண்படுவதென்பது இந்து மதத்திற்கு வாடிக்கையான ஒன்றுதான்...அதனால்தான் அது இன்னமும் அசைக்க முடியாமல் கெட்டிப்பட்டுக்கொண்டே இருக்கிறது...வேற்று மதங்களில் இதுபோன்ற சகிப்புத் தன்மையைப் பார்ப்பது கடினம்...இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ஒரு கவிஞரோ எழுத்தாளரோ பிரபலமாக வேண்டுமென்றால் மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தி எழுதினால் பணமும் புகழும் எளிதில் கிடைத்துவிடுகிறது..சாலமன் ருஸ்டியும் தஸ்லிமா நஸ்‌ரீனும்...ஒரு மதத்தை அதன் மூடநம்பிக்கைகளை எழுத்தில் வடித்துவிட்டு பட்ட பாடுகள் நாமறிவோம்...ஆனால் இந்து மதத்தைப்பற்றி அதன் மூட நம்பிக்கைகளைப்பற்றி அதிகமாக கவலைப்படும் எழுத்தாளர்களோ கவிகளோ...அதே நிலைப்பாட்டை மற்ற மதங்களின் மூட நம்பிக்கைக்களில் மீதும் சடங்குகளின் மீதும் எடுக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில் ஒரு கேலியான புன்சிரிப்பை அவர்களின் இதழ்களிலேயே கொணரும் என்பதுதான் நிஜம்..பெண் எனும் படைப்பின் ரகசியங்கள் அந்த பிரம்மனுக்கே புதிராகும்...பெண்ணிய எழுத்தாளர்கள் கூட அவர்களின் உடற்கூறுகளை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் எழுதத் தயங்கும் கருத்தியல்களை இந்துப் பெண் தெய்வங்களின் மேல் திணிப்பதென்பது ஒரு மதத்தின் மேல் நம்பிக்கைவைத்திருப்பவர்களின் மனங்களை காயப்படுத்தும் செயல்தானே தவிர...விளம்பர யுக்திதானே தவிர வேறொன்றுமில்லை எனப் புறந்தள்ளிவிட முடியாது...ஒரு கவி இதே போல் வேறு மதங்களின் பெண்தெய்வங்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டு பிறகு அவருக்கான பின் தொடர்வோர் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டிருக்கவும் முடியாது...அது தான் நிஜம்...ஒரு குறிப்பிட்ட கவி தன் மீதான விமர்சனத்திற்கே சகிப்புத் தன்மை காட்டமுடியாதவர் எப்படி ஒரு மதத்தின் நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் உரிமைகோரமுடியும்..கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவரின் படுக்கையறை ரகசியங்களை எட்டிப்பார்த்து அதை விமர்சிப்பதல்ல...அதற்காக அது போல் ஒரு படைப்பை வைத்து படைப்பாளியை மிரட்டுவதற்கும் யாருக்கும் உரிமையில்லை...போகட்டும்..நமது ராமானுஜர் போல 120 ஆண்டுகள் வாழ்ந்த கபீர் [1398-1518] காசி மா நகரில் ஒரு பிராமணவிதவைத் தாயின் புதல்வனாகப்பிறந்து இஸ்லாமியர்களால் வளர்க்கப்பட்டவர்...இன்னமும் அவருடைய தத்துவங்கள் உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறது...அவரது "நுட்பமாக நெய்யப்பட்ட போர்வை" என்ற கவிதை காலம் கடந்தும் சகிப்புத் தன்மையை மக்களிடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எடுத்துச்சென்று சேவையாற்றி...புகழ்பெற்றிருக்கிறது...அவரின் இன்னொரு இந்தியில் எழுதப்பட்ட ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதையை தமிழில் என்னளவில் தருகிறேன்...
என்னுள் சூரியனும் சந்திரனும்
தினமும் சுற்றுகிறார்கள்..
என்னால் அவர்களை
உங்களுக்குக் காட்ட முடியாது...
உங்களுள்ளும் தான்...
சுற்றுகிறார்கள்..
அவர்களை நான் பார்க்கிறேன்..
காய்ப்பதற்காகப் பூக்கும் செடி
காய்த்த பின்
அந்த அழகிய பூவை
உதிர்க்கும் விலையைத் தருகிறது..
உன் வாழ்வில்
பூரிப்பின் பூ பூக்கும்..
நீ விளைந்தவன் எனில்
அப்பூவை
விலையாகத் தரவேண்டும்..
அனுபவங்களின்
திண்ணைப்பள்ளிக்கூடம்தான் மதம்...
முழுதாகக் கற்றவன்
குருவாகிறான்..
அவனின் மொழி மெளனம்..
அரைகுறையாகக் கற்றவன்
ஆசிரியராகி
தினமும்
எதையாவது யாருக்காகவாவது
போதித்துக்கொண்டேயிருக்கிறான்..
ராகவபிரியன்

Saturday, August 18, 2018

Reader Doctor

வாசக மருத்துவனின்
அனுமதிச் சீட்டுடன் அமர்ந்திருக்கிறேன்..
நீ வருகிறாய்...
உன் நீண்ட கழுத்தின் நீளநீலம் வளைத்து
எதையோ கொத்துகிறாய்..
மேலெழும்பி இடதில் பார்க்கிறாய்..
பிறகு வலது பக்கம்..
கழுத்து வளைத்து மேல் நோக்க
உன் கர்வக் கொண்டை சற்று தாழ்கிறது..
இடதில் ஒரு பலகையில்
வரிசையில் வரவும் என்றிருக்கிறது...
வலதிலோ ஒரு குழந்தைப்படம்
வாய்பொத்தி பேசாதே என்றெழுதிய எழுத்தின் மேல்
நிர்வாணமாய் அமர்ந்திருக்கிறது..
உன் மேல் நோக்கிய பார்வையில்
நான் தெரிந்திருக்கலாம்...
கடைசீயில் சென்றமர உனக்கு மனதில்லை..
நீ உந்தியேறக்கூடிய உயரமான
எழுபத்தைந்தடியை
சிலிர்ப்பிய சிறகடித்து அடைகிறாய்..
உயரமான நிறையவர்கள்
ஏற்கனவே வரிசையில் இருக்கிறார்கள்.
அமைதியின்மையால் உன் தோகையில்
உன் காலே சிக்க..
ஒரு காலால் சிறகு கோதுகிறாய்..
அதை மயிலாட்டம் என்று
மருத்துவப் பதிவேட்டில் எதற்கு
பதிவிடச் சொல்கிறாய்..
உன் பறக்கும் தூரமான முன்னூறு அடிகளை
தத்தித் தத்தி
முன்னூறு தடவை எடுத்து வைக்கிறாய்..
கோபங்களுக்கு ஒருபோதும் முன்னுரிமையில்லை..
அனுமதிச் சீட்டு
தீர்ந்து போனதால்
வாய்விட்டு அகவுகிறாய்...
எனக்கு முன்னான நோயாளியை
நன்கறிந்த மருத்துவன்
முழுவதும் வாசித்துவிட்டே
என்னைத் தொடுவான்...
நேரம் காலம் கடந்தாலும்
முற்றும் வாசித்து முடித்தே கதவு திறப்பான்..
மருத்துவன் என்னையும்
நன்கறிந்தவன்...
இன்றுனக்கு வாய்ப்பில்லை..
அகவலை நிறுத்து..
மருத்துவன் கோபமுற்றால்
உன் கொண்டைகளையும்
தோகைகளையும்
அறுவைச் சிகிச்சையால்
அகற்றிவிடுவான்..
கவச குண்டலங்களை இழந்த
கர்ண மயில்
கர்னக்கொடூரமாயிருக்கும்...
ராகவபிரியன்

Wednesday, August 15, 2018

star and ear studs ...

RAGAVAPRIYAN THEJASWI’s poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
It was the sleep of a little girl
dwelling in the hut upon the banks of Kaveri
salvaged from the sandy muddy earth
In wakeful nights
with her star-friend
upon the sand
and rarely in the river water
She would play, sleeping.
Caution: River Cauvery is
Flooding
Tonight
in the classroom of the nearby government school
She would read lessons with her friend
But
heer sleep
and hut
might be going round and round
in the all too massive current
of the river.
Ammaayee…
While feeding the motherless little girl
and her star-friend
the smell of the wet field
mixed with the Kaveri water
would taste so delicious.
Today’s wage for planting crops
Ammaayee
would receive tomorrow.
For buying star-studs
tonight itself
the child was walking along Sky, the bazaar street
with her dear friend.
He who was fixing the ears with studs
in the thin square-cardboards
to the stars
saying ‘thirty rupees,
The little star wiped the twinkling drops of sweat.
The vendor speaking in Hindi…
will my grandma understand it
blabbered she in her sleep.
For fulfilling the child’s wish
her grandma turned thirty rupees –
all that she had _
into earrings.
With her friend swinging
in her ears
Tea boiled
in Ammaayee’s lament.
For he who spoke in Hindi
the language of hunger appeared to be all too familiar.
Not only for the grandma but also for her grand-daughter he bought Tea
and despite losing twenty rupees
laughed heartily…..
When in the morning everybody
evincing surprise
told Ammaayyee that
Mother Kaveri
paid her obeisance to the little girl’s hut
touching its feet
sulking that none had noticed
her friend
swinging in her ears
the little girl
is sleeping
மணற்தரையினின்று மீண்ட
கரைமீதான குடிசைமகளின்
தூக்கம் அது..
விழித்த இரவுகளில்
நட்சத்திரத் தோழியுடன்
மணலிலும் எப்போதாவது
ஆற்று நீரிலும்
விளையாடுவாள் உறங்கியபடியே..
காவிரியின் வெள்ள எச்சரிக்கை...
இன்றிரவு
அருகிருக்கும் அரசுப்பள்ளியின்
வகுப்பறையில்
தோழியுடன் பாடம்படிக்கலாம்..
ஆனால்
அவளின் உறக்கமும்
குடிசையும்
வெள்ளத்தின் ஆகப்பெரிய
சுழலுக்குள்
சுற்றிக் கொண்டிருக்கக்கூடும்..
அம்மாயி..
அம்மாயில்லாத அவளுக்கும்
நட்சத்திரத் தோழிக்கும்
சோறூட்டிக் கொண்டிருக்கையில்
அவள் கையின்
வயற்சேற்று வாசம்
காவிரியின் நீர்கலந்து
அத்தனை ருசியாயிருக்கும்..
இன்றைய நடவுக்காசு
அம்மாயிக்கு
நாளை கிடைக்கும்..
இன்றிரவே..
நட்சத்திரக் கம்மல்
வாங்க கடைவீதிவானில்
தோழியுடன் நடந்துகொண்டிருந்தாள்
குழந்தை..
கம்மல் அட்டைகளில்
தோடுடைய செவிகளை
நட்சத்திரங்களுக்குப்
பொருத்திக்கொண்டிருந்தவன்
முப்பது உரூபாயெனச் சொல்ல...
சின்ன நட்சத்திரம்
சோபைவியர்வையைத்
துடைத்துக்கொண்டது..
விற்பவன் இந்தியில் பேச..
பாட்டிக்குப் புரியுமா
என உறக்கத்தில் பிதற்றினாள்..
குழந்தையின் ஆசைக்கு
இருந்த முப்பது உரூபாவை
கம்மலாய் மாற்றினாள் பாட்டி..
அவளின் காதுகளில்
தோழி ஊஞ்சலாட..
அம்மாயி புலம்பலில்
தேனீர் கொதித்தது..
இந்தியில் பேசியவனுக்கு
பட்டினி மொழியும்
பரிச்சயம் போலும்...
பாட்டிக்கு மட்டுமல்ல
பேத்திக்கும் தேனீர்வாங்கி
இருபது உரூபா
இழந்தும் சிரித்தான்...
குழந்தையின் குடிசை வாசலை
காவிரி தொட்டுக் கும்பிட்டதாய்
அம்மாயியிடம்
அத்தனை பேரும்
காலையில் ஆச்சரியம் காட்ட...
அவளின் காதில் ஆடிக்கொண்டிருக்கும்
தோழியை
யாரும் கண்டுகொள்ளாத கோபத்தில்
குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறாள்...
ராகவபிரியன்

floating as hippopotamus

RAGAVAPRIYAN THEJASWI’s poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Can’t contain the floods of Vayanaadu
in the dry and parched agricultural fields of ours.
Wandering atop the mountain peaks
as elephants
all over God’s Land
The Rain.
Caught in the elephant-trunks of rain
the areca-trees and all vegetation
go scattering.
The highways paved along its trail
and the hutments
are stamped and crushed
by the battalion of rain-tusker
Unable to preserve the heavy imprints of rain-tusker
We are going to leave it into the sea
To float as hippopotamus
The Kerala elephants
are always giants
Of them while bringing some
with the help of Kumki
Losing them in Kabini or Krishnarajasagar
asking for their little ones
We have been begging our
neighbouring States
for the past several years.
That screams for alms
go on reverberating all over the firmament of Tamil Nadu
as summer-thunder unbearable.
Alas _
A post-modern tusker
losing its way
keeps wandering all over facebook these days.
Don’t take it to be a soon to die cloud
and build modern resorts in its trail .
Ragavapriyan Thejeswi
வய நாட்டின் வெள்ளத்தை
எங்களின் காய்ந்த கடைமடை
வயற்காடுகளில்
கட்டிவைக்க முடியவில்லை..
ஒரு யானையென மலைமுகடுகளில்
அலைந்து திரிகிறது
கடவுளின் சொந்த பூமியெங்கும்
மழை..
மழையின் தும்பிக்கைகளில்
சிக்குண்டு சிதறிப்போகின்றன
பாக்குமரங்களும் பச்சையங்களும்..
அதன் வழித்தடத்தில்
வேயப்பட்ட நெடுஞ்சாலைகளை
கூரை வேய்ந்த குடிசைகளை
மிதித்தே உடைத்தெடுக்கின்றன
யானைமழைக் கூட்டம்..
பாய்ந்து வரும் யானைக்கனஅடிகளைத்
தேக்கி வைக்க முடியாமல்
மழையானையை
கடலுக்குள் நீர்யானையாய்
மிதக்கவிடப்போகிறோம்..
கேரளத்தின் யானைகள்
எப்போதுமே பிரமாண்டங்கள்...
அவற்றில் சிலவற்றை
கும்கி உதவியுடன்
கூட்டிவருகையில்
கபினியிலோ கிருஷ்ணராஜ சாகரிலோ
தொலைத்துவிட்டு..
அதன் குட்டிகளைக்கேட்டு
அண்டை மாநிலத்திடம்
சில ஆண்டுகள்
பிச்சையெடுக்கிறோம்..
அந்தப் பிச்சைப் பிளிறல்கள்
சகிக்க முடியாத
கோடையிடிகளாய்
தமிழக வானமெங்கும்
இடித்துக்கொண்டே இருக்கின்றன...
போகட்டும்
ஒரு பின் நவீன கவிதையானை
தன் வழிதவறி
முக நூலெங்கும் அலைந்துகொண்டிருக்கிறது..
அதை மரிக்கப்போகும்
மேகமென நினைத்து
அதன் வழித்தடத்தில்
நவீன விடுதிகளைக் கட்டிவிடாதீர்கள்..
ராகவபிரியன்

The time and shadow

யாருடைய காலச்சுடுசொல்லும்
மத்தகமேறாதபடி
முறக் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது ஆனை..
பிணைத்தப் பாராட்டின் சங்கிலிகளை
இழுத்திழுத்து அசைத்தபடி
ஓசையெழுப்பி
அலட்சியமாய்
கால்மாற்றி கால் ஊன்றி
பாராட்டடிமையில்லையென
அவ்வப்போது
மண்டியிட்டும்
அற்ப மனிதனைவிட
உயரெமென அசைச்சொல்லில்
ஆடியபடி
நான்கு அடி வெண்பாவாய்
திகைப்பூட்டுகிறது ஆனை..
முகப்பட்டாமோ
முதுகுப்பட்டோ
தானே இறைத்துக்கொண்ட
புழுதி மண்ணோ
அதற்குச் சொந்தமில்லையென்பதை
வாய் திறந்து வாங்கும்
சோற்றுக் கவளங்களுக்காக
குருடர்கள் தடவும்
ஸ்பரிசங்களை பொருட்படுத்தாத
நின்று தூங்கும்
சாகசம் காட்டும் ஆனை..
ஆணைகளுக்குக் கட்டுப்படும் ஆனை
ஆணையிடுவதாயிருந்தால்
முதலையின் வாயில்
கால் மாட்டிக் கதறியிருந்திருக்க
வாய்ப்பேதுமில்லை...
அகப்பட்டுவிட்ட ஆனை
ஒரு சொல்லொணாத்துயரின் காலப்பிம்பம்..
ராகவபிரியன்

Friday, August 10, 2018

i remain

The rain elephant wades through our God's own country..
with its fullest strength breaking all 26 dam's elementary..
The elephant is so angry and waving the trunk in frown.
the disaster is true and the elephant is growing on and on..
what a neo-modernist poet could do except to faint
on seeing the elephant growing as big as a giant
Before he drench his words huts and poetic roads in rain
Taken a selfie and posted it in smile in the facebook..i remain...
Ragavapriyan

Saturday, August 4, 2018

கு[எ]றும்புகள்

எங்கள் கொல்லைப்புறத்தின்
துளசி மண்டிக்கிடந்த
கிணற்றடியைத்தான்
தளமாக்கினோம்...
அது ஈரமாகவே இருக்கும்...
பல்துலக்கிய எச்சில்கள்
குளித்துக் காய்ந்த சோப்பு நுரைகள்..
கொடித் துணிகளின் ஈரச் சொட்டுக்கள்..
சேந்துவாளியின் தாம்புக் கயிறு..
கன்னத்தில் கைவைத்து யோசித்தபடியிருக்கும்
எங்கள் வீட்டுப்பூனை..
மைபூச பயன்பட்ட தூரிகை..
இத்தனையும் இன்று மதியம் காணோம்..
காவிரிக்காண வழிபாட்டில்
அனைவரும் சென்றுவிட...
கொல்லை காய்ந்து கிடந்தது...
நிலவின் தரை காட்டும் புகைப்படமாய்..
நான்கு கட்டெறும்புகள்
ஒன்றன்பின் ஒன்றாய்..
வளைந்தும் கலைந்தும் சேர்ந்தும்
தளம் முழுவதும் அலைந்துகொண்டிருந்தன..
கண்டிப்பாக எதையோ தேடியலைகின்றன...
நொடிப்போதும் தாமதிக்காமல்
நேற்றிரவு நான் எழுதியிருந்த
பின் நவீன கவிதைக் காகிதத்தை
ஓடிச் சென்று
அவைகளின் வழியில் வைத்தேன்..
சட் டென்று திரும்பிய எறும்புகள்
காணாமல் போயிருந்தன...
ராகவபிரியன்

Thursday, August 2, 2018

post modernism..2

பின் நவீனம் என்றொரு
------------------------------------
பைசாசம்..
------------------
எவ்வளவு தான் அறிவார்ந்த பிரபலமான காத்திரமான படைப்பெனினும் அதை பலமுறை படித்தாலோ மீண்டும் மீண்டும் படிக்க நேர்ந்தாலோ ஒருவிதமான அலுப்பை இலக்கிய நுகர்வோர்களால் தவிர்க்கமுடியாது...புதுக் கவிதையிலிருந்து நவீனக் கவிதைக்கு இயற்றமிழ் தாவியபோது எழுந்த அதிர்வின் கணங்கள் இன்னமும் உணரப்படுகின்றன...நவீனம் என்றால் இக்கணமென்றும் சொல்லலாம்...பின் நவீனமெனில் இக்கணத்தின் விளிம்புகளில் அமர்ந்து ஆழமறியா வெளியொன்றில் குதிக்கத் தயாராவதெனவும் கொள்ளலாம்...புதுக் கவிதையிலிருந்து நவீனத்தை வேறுபடுத்தும் காரணிகளின் அடுக்குகளில் அழுக்குகள் தேங்கிக்கிடப்பதால்...புத்தம் புதியதொரு வடிவமைப்பை இயற்றமிழ் அணிய வேண்டிய காலம் இதென அறியக்கூடலாம்...அதன் பொருட்டு ஆழமறியாமல் கண்மூடித்தனமான குதித்தல் பைசாசத்தின் குணமாகும்...காரணிகளின் அழுக்குகளைக் களைய மயிற்பீலிகளைக்கொண்டு வருடிக்கொண்டிருத்தல் நவீனக் கவிதையை வருத்துவதாகவே முடியும்...
இந்த முன்னெடுத்தலின் கிறுக்கல்களில் நுழைந்து வெளிவந்த பைசாசத்தின் தனித்துவ தத்துவ வெளியின் நடனமொன்றை உங்கள் பார்வை மேடைகளில் இப்போது நிகழ்த்தும் இக்கவிதை....
நாற்றங்கால் பத்தைகளை
சேற்றில் சுமந்து
வரப்பு நோக்கி வீசுகிறாய்..
பத்தை விழுந்த இடமெங்கும்
இந்திரனின் வெள்ளையானையின்
மிதவைக்கூழுக்கான
பிளிறல் சப்தம்..
அந்தச் சந்தடியில்
இரு சக்கர வாகனத்தில்
மாட்டியிருந்த
தலைகவசமென
உன் செருக்கு
என் உடையெங்கும்
சேறாய் மாட்டிக்கிடக்கும்..
பிருதிவிராஜன் நீ..
இந்த நாற்றங்காலை
உன் வாழ்வில் நடுவதற்காக
தலைகவசம்
கட்டிக் கிடக்கும்
பின்னிருக்கையில்
அமரச் சொல்கிறாய்..
காயக் கிளர்துனர் வடித்தப் புளிப்பாய்
உன் புரவியின் கால்கள்
காற்றிழக்கையில்
கடத்தல் அரிது...
வாழ்வின் வெளி கடத்தல்
அரிதினும் அரிது...
ராகவபிரியன்

Thursday, July 26, 2018

Neo modernist Tamil poetry

வரலாறுகளை அழகாக கவிதைகளில் செதுக்கிச் சென்றவர்கள்..நம் முன்னோர்கள்...அலெக்சாண்டரின் படையெடுப்பால் பயந்த நம் அரசர்கள் சேமித்தச் செல்வங்களை பெட்டிகளில் அடைத்து ஆறுகளின் நடுவில் அறையமைத்து அதனுள் பாதுகாத்தவர்கள்...அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை அருமையான கலிப்பா வாய் அமைத்துவிட்டு அந்த ஓலைச் சுவடியை அரும்பெரும் செல்வமாய் விட்டுச் சென்ற பூட்டன்....அந்தப் பாடல் இத்தனையாண்டுகள் உயிர்த்திருக்குமென கனவு கூடக் கண்டிருக்கமாட்டான்...புதைக்கப்பட்ட செல்வங்கள் புகழ் அனைத்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்க...கவிதையொன்று காலம் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது...இன்னும் வாழும்...
அது போன்ற நீண்ட மரபுடைய நம் கவிதை இப்போது பின் நவீன யுகம் நோக்கிய உலகளாவிய வீச்சை தமிழ் மண்ணில் பாய்ச்சத் தொடங்கிவிட்டது...அந்தப் பாய்ச்சலின் பாதிப்பால் ஒரு சின்ன பின் நவீன முயற்சி...
வாடுபு வருத்திடும்
பாலை நிலமென புகுந்தோம்..
பாலையின் நெடுந்தொலைவென
அரிதினும் அரிது நம் பிணைப்பு..
மணல் குன்றுகளில்
நம் நினைவுக் காற்று
மோதிச் செதுக்கிய சிற்பங்கள்
துணிக்கடை பொம்மைகளென
உணர்வின்றிச் சிரிக்கும்..
காற்றின் சிறகெங்கும்
மணல் கலந்த நம்மெளனம்
அலறும்..
ஒட்டகக் கூட்டத்தின்
குளம்படிகள்
மணற்கடலில் மிதக்கும்..
அதை நோக்கி நகர்த்தும்
சிற்பங்களை..
நம் நினைவின் ஈச்சமரத்தொலி..
மணற்பொம்மைகளை
ஒடிவையின்றி வண்ணம் தீட்ட..
பேரீட்சையின் கருப்பில்
இனிப்பைத் திணிப்போம்..
அப்பொழுதின் மணற்துகள்
நம் தலையெங்கும்
பாலையென அரிக்கும்..
எண்ணச் செல்வத்தின்
பெட்டிகளை சுமந்து நடக்கையில்
கருட பட்சியென
மேலே பறந்து வரும் நம் இதயம்..
விரல் நுனிகள்
கன்னம் தீண்ட..
மணற்காடெங்கும்
நம் யானைகள் கூடும்..
உன் ஆடூச் சென்னி
அப்படியொரு அழகெனச் சொல்லும்..
மேலணை மூடும் முன்
நம் கலப்பைகளை
நினைவின் எருதில் பிணைத்துக்கொண்டு
மணலெங்கும்
வயலாடப் புறப்படுவோம்..
ராகவபிரியன்

Tuesday, July 24, 2018

வெளிச்சம் மட்டுமே மிச்சம்

எனக்கு ஒரு கார் தயாராக வேண்டும்..
அதில் பூ வேலைப்பாடுகள் செய்திருக்க வேண்டும்..
செயற்கைப் பூக்கள் நிறம் மங்கிப்போகலாம்...
இயற்கைப்பூக்களை மெல்லிய உணர்வுகளால்
ஒரு மயிலிறகு கோர்த்த அரைவட்டமாய்
வண்ணமாய் அலங்கரித்திருக்க வேண்டும்...
எதிரே வாத்தியக் காரர்கள் இலக்கியம் வாசிக்கவேண்டும்..
அந்தச் சப்தத்தில் சர்ப்பங்கள்
பூக்களிலிருந்து வெளிவரவேண்டும்...
யாரோ ஒருவர் எனக்கு ஒரு மலர் கிரீடம் சூட்டுகிறார்...
பதட்டத்துடன் கழற்றினால் அது ஒரு கவிதை...
அருகிலிருந்த பூவேலைப்பாட்டுக் கைவினைஞர்
அதை வாங்கி அணிந்துகொண்டார்...
மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு...
எனக்குச் சூட்டிய மாலைகளின் ரோஜாக்கள்
என் எதிர்க்கவிதைக்காரர்களின்
வாசல்களில் உதிர்ந்தன...
பூ நாகங்கள் என் காரில் என் இருத்தலைச் சுற்றிப் பின்னிக்கொண்டன
இப்போது நான் காரில் ஏறி அமர்ந்தாக வேண்டும்...
யார்யாரோ கைபேசிகளில் என்னைப் படம் பிடிக்க
பின்னால் இருந்த அரைவட்ட மயில்தோகை
வெட்கமுடன் தலைகவிழ்ந்திருந்தது..
என் மீதும் கார்மீதும் வெளிச்சம் பாய்ச்சியபடியிருந்தனர் என் ஆசான் கவிகள்..
அவர்கள் ஏந்தி வரும் விளக்குக் கம்பத்தைச் சுற்றி
மல்லிகைக் கொடி படர்வதும்
பூப்பதுமாய் இருக்க...
நான் அமரமுடியாமல் நெளிந்தேன்...
என்னைப் படம்பிடித்தவர்களின் கைபேசித் திரைகளில்
பாம்புகள் பதிவாகியிருந்தன...
கார் மெல்ல நகர்ந்தது...
உடன் வந்தவர்கள் ஏதேதோ உரைத்தபடி நடக்க...
உரை நடை மெல்ல கவிதைப்பூக்களை
மிதித்தபடியே மிதந்து கொண்டிருந்தது..
வாத்தியக்காரர்களின் இலக்கிய வாசிப்பில்
வெளிச்சம் காட்டிய விளக்குகளில்
தவில் சத்தம் ஒளிர்ந்தபடியே இருந்தது...
எல்லோரும்
காரையும் என்னையும் வேலைப்பாடுகளையும்
விட்டுவிட்டு கலைந்துவிட
தெருவெங்கும் வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது...
ராகவபிரியன்

Thursday, July 12, 2018

பாரதி கவிதா வேள்வி...டிசம்பர் 1982

அது சூலை 1982..சிக்கல்கள் நிறைந்த ஒரு அனாதையான இருபத்து மூன்று வயது வேலையற்ற பட்டதாரி இளைஞனின் பட்டினி இழையை தொட்டுப்பார்க்கும் ஆவல் நிறைந்த காலை..தான் யாரெனும் கேள்வி வலையொன்றை எப்போதோ அவன் தனக்குள்ளும் வெளியுலகிலும் பின்னிக்கொண்டிருந்த விடிந்து வெகு நேரமாகியும் காலைபசியின்னும் தீர்ந்திராத வறுமையின் உக்கிர நிமிடங்களில் மிகவும் அழகான வசீகரமான கையெழுத்தில் ஒரு அஞ்சல் அட்டை..அவனை பாரதி நூற்றாண்டு விழாவில் ..அங்கு கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையேற்கும் கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்துக்கொண்டிருந்தது..அந்த அட்டை அன்று அவனுள் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகள் இன்றும் கூட அவனால் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை..அன்று அவனால் நம்பமுடியாமல் தான் இருந்தது...அந்த வசீகரக் கையெழுத்திற்கு சொந்தக் காரர்..கவிஞர் இளசை அருணா....
ஒன்றிரண்டு படைப்புகள் மட்டுமே சில நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாகியிருந்த அப்பெயரறியாச் சிறுவனின் இலக்கியப் பயணத்தைத் துவக்கப் போகுமிடம் எட்டயபுரத்தின் பாரதி ஓடிவிளையாடிய வீட்டின் வாசல் படிகள் என்றால் அது காலம் நிச்சயத்த கடவு என்பதைத் தவிர வேறென்ன...? அதை நினைத்து நினைத்து இப்போதும் கூட அவனின் இதயக்கூட்டிற்குள் ஒருமுறையாவது முண்டாசொன்றை கட்டிப்பார்த்து பிறகு அவிழ்த்து வைக்கும் காட்சியைக் கண்டு அடிக்கடி ரசித்துக்கொண்டிருக்கிறான்..
அதீத ஆனந்தம் கொண்டு ஆடியும் பாடியும் பள்ளுப் பண்களை பின்னிக்கொண்டும் அந்த அஞ்சல் அட்டையை அவனின் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் நகர்திப்பார்க்கிறான்..நகர்வார்களா...திருவாரூரிலிருந்து எட்டயபுரம் வரைக்கான பயணச்செலவென்பது பத்து நபர்களுடைய அவன் குடும்பத்தின் மூன்று வேளைச் சாப்பாடு...
அம்பி நாகராஜன் மற்றும் அவனுடைய நண்பர்கள் உண்டியல் ஏந்தி ஊர்வலம் வருகிறார்கள்..அதற்குள் இளசை அருணா தளர்வற்ற தொனியில் கவியரங்கில் வேட்டிச் சட்டை மட்டுமே அணிந்து கவிபாடவேண்டுமெனும் ஒலையை அவனுக்கு அனுப்பித் தருகிறார்..அவனிடம் ஒரு கிழிந்த லுங்கியும் ஒரே ஒரு நல்ல சட்டையும் இருக்கிறது...முறையான இலக்கிய அறிவோ போதிய வாசிப்பறிவோ நல்ல கவிதைகளோ இல்லாமல் டிசம்பர் 10ல் தன்னந்தனியனாய் கோவில்பட்டிவரை பயணச்சீட்டு வாங்கி பொதுப்பெட்டியில் பயணிக்கிறான்...நிறுத்தங்கள் தோறும் உரத்துக் கேட்கும் தேனீர் சிற்றுண்டிச் சப்தங்களால் அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கிறான்...
இலக்கியமென்பது நடைமேடைகளில் உறங்குவதும் அதைப் பாடிவைப்பதும் பட்டினியைத் தந்த படைத்தவனை நன்றி கூறி படைப்புகளை ஆக்குவதும் தான் என்பதையறியாமல் கோவில்பட்டி தொடர்வண்டி நிலைய நடைமேடையில் உறங்குகிறான்...
காலையில் அந்தச் சிறுவன் அரை நிர்வானமாய் கூனிக் குருகி ஒருகுழாயடியில் குளிக்கும் போதுதான் அவன் கொண்டுவந்திருந்த மஞ்சள் பை காணாமல் போய்விடுகிறது...இயலாமையும் வெம்மையும் அவனை அரை நிர்வானமாய் விரட்ட நிலைய அதிகாரியிடம் தன் நிலையைச் சொல்கிறான்..இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாரதி..நிலைய அதிகாரியிடம் எப்படிச் சொன்னாரோ...புதிர்கள் புரிந்துகொள்ளவும் புறக்கணித்துவிடவும் முடியாதவை... அந்த நிலையத்தில் தொலைந்த பாரதியின்முண்டாசு வேட்டியொன்றையும் ஒரு புத்தம் புதிய சட்டையையும் பத்து வெள்ளைத் தாள்களையும் புதுப்பேணா ஒன்றையும் ஒரு ஒருரூபாய்த் தாளொன்றையும் தருகிறார்..கடையேழு வள்ளல்களின் புதுப்பிறவியாய் உருவெடுத்து வந்திருந்த அந்த எட்டாவது வள்ளல் நிலைய அதிகாரி...எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் எக்காலத்தும் தன் பெயரைச் சொல்லிவிடக்கூடாதென்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார்..
அந்தச் சிறுவன் எவ்வளவு வற்புறுத்தியும் தேனீர்கூட அருந்த மறுத்து ஒரு இருபது முப்பது வரிகள் எழுதிக் காண்பிக்கிறான்...அவரும் மனம் கனிந்து அவனை வாழ்த்தி ஆசி வழங்கி எட்டயபுரத்திற்கான பாதையையும் பேருந்துத் தடத்தையும் அறிவுறுத்துகிறார்...வறுமையின் பிணக்குகளால் வாழ்வின் கணக்குகள் விடையற்று நிர்கதியாய் இறங்குவது போல் எட்டயபுரத்தில் கால் பதிக்கும் அச்சிறுவன் தன்னை பாரதி ஓடிவந்து ஆலிங்கனம் செய்துகொள்வதாய் கற்பனை செய்கிறான்..கால்களும் மனமும் உடலும் புதுவண்ணம் பெற பாரதியின் வீட்டின் வாசல் படியில் உணர்வுகள் மேலிட வீழ்ந்து வணங்குகிறான்..தள்ளி நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவனைத் தூக்குகிறார்கள்...தம்பி நீங்கள்..என்று கேட்டுவிட்டு...நான் தான் இளசை அருணா என்ற கம்பீரக் குரல்கேட்டு...தேம்பித்தேம்பி அழுதவனுக்கு முதலில் ஒரு கோப்பைத் தேனீரை நீட்டிய கரங்கள் பாரதியின் பால்ய நண்பர் கவியோகி சுத்தானந்த பாரதியினுடையவை...அந்தப் பெரியவரை விழுந்து வணங்குகிறான் மீண்டுமொருமுறை..
வரிசையாய்க் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...அச்சிறுவனை மேடைக்கு அழைக்கிறார்கள்...எல்லோரும் மேடையையே பார்க்கிறார்கள்..
மேடையில் ஒரு ஓவியமாய் வரையப்பட்டிருந்த அந்த மஹாகவி..அன்று அதீத ஆனந்தமாய்க் காணப்பட்டார்...
தொடர்வண்டிச் சித்தன்
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...