Monday, October 1, 2018

இரவு யாசகனின் மோதிர விரல்
--------------------------------------------------
எனது அட்சயபாத்திரத்தில்
அன்னமிடுபவர்களின்
மோதிரங்கள் எனக்குப் பிடிக்கும்..
பொற்கொல்லனின்
சின்ன உளியின் சப்தங்களை
பொன் உருகி
கெட்டியாகும் நிமிடங்களை
கண்ணுள் கொணர்ந்து
திளைப்பேன்..
சில விரல்களின்
உலோகங்கள்
நெகிழிச் சுழுவுகள்
ஓலை மோதிரங்கள்
மிட்டாய் மோதிர
குழந்தை விரல்கள் கூட
மிக மிக எனக்குப் பிடித்திருந்திருக்கிறது..
என்
அன்ன பாத்திரத்தில்
தற்செயலாக
விழுந்த அந்த மோதிரம்
என் பிச்சைக்குத்
தடையாகிப் போனது..
இப்போதெல்லாம்
இரவு யாசகம்
மோதிர வெளிச்சத்தில்
இளைத்துப்போக..
இரவுப் பசிதாங்காமல்
மோதிரத்தின்
உரிமை விரலிடம்
விரைந்து சென்றேன்...
பெற்றுக்கொண்ட அன்னை
இதை அடகில் இட்டால் தான்
இன்று அன்னம்
எங்களுக்கு என்றாள்...
தவறாமல்
இரவு யாசகம் வரவும் கட்டளையிட்டாள்..

என் அட்சைய
பாத்திரங்களெங்கும்
பொற்கொல்லனின்
உளிச் சப்தம்
ஏனோ தாளம் தப்பி
கேட்டுக் கொண்டேயிருக்கிறது..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...