வாழ்வு என்பது பிறத்தலும் குழந்தைமையும் உழைப்பும் இன்ப துன்பங்களும் மூப்பும் இறத்தலும் எனும் நம் நம்பிக்கைகளை தகர்த்து அது முடிவற்ற போராட்டம்..ஒருவேளை முடிவின் விளிம்பில் வெற்றி என்பது நிச்சயமில்லை எனும் போதில் செல்லும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் தோட்டாக்களும் பிணங்களும் இடிபாடுகளும் இழப்புகளும் போராட்டப்பாதையை எழுத்தை நோக்கி ஒரு ஆறுதலுக்காகவாவது ஒருவரை திருப்ப முடியும்..எழுத்தின் மூலமும் போராட முடியும்...எழுத்து கண்டிப்பாக எழுந்து நிற்கச்செய்யும்..அப்படிப்பட்ட கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு கொடுஞ்சூழலில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாதிகளால் தனது தாயும் ஆறு சகோதரர்களும் தன் கண்முன்னால் கொல்லப்பட்டும்..தான் பாலியல் அடிமையாக கொடூரமான வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டும் அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டு தைரியமாக தப்பி வந்து லண்டனில் ஒரு மனித உரிமைப் போராளியும் தோழியுமான சட்டப்பணிகளைத் தொழிலாகக் கொண்ட அமோல் கொலோனியிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுகிறாள் நாடியா மூரட்...2018 ன் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிஜமான புரட்சிப்பெண்...
அவரின் கடைசீப் பெண்குழந்தை[THE LAST GIRL] என்ற புத்தகம் படிப்பவர் கண்களில் கண்ணீரை வற்றிவிடச் செய்யும் என்பது திண்ணம்..அந்தப் புத்தகத்திற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசுகூடக் கொடுக்கலாம்...அந்த புத்தகத்தின் வரிகளெங்கும் தேங்கிக்கிடக்கும் மனித குலம் இந்த நூற்றாண்டில் சந்தித்த ஒப்பீடற்ற அழிக்கமுடியா கொடுமைகளை ...ஆகப்பெரிய அணையால் கூட தேக்க முடியாத அலைகளற்ற கண்ணீரை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..
அன்புள்ள அம்மா..
உன் பையனை
என் அண்ணன்களைக் கடத்தியவனின்
மகிழுந்துக் கண்ணாடியை
உடைத்துவிட்டேன்..
உன் பையனை
என் அண்ணன்களைக் கடத்தியவனின்
மகிழுந்துக் கண்ணாடியை
உடைத்துவிட்டேன்..
என் புறங்கையின்
ரத்தத் துளிகளை
நீ முத்தமிட்டாய்..
ரத்தத் துளிகளை
நீ முத்தமிட்டாய்..
நம் வயல்களின்
வெளிர் சிவப்பு வெங்காய விளைச்சலை
நம் ஆடுகளை
கோழிகளை
என்னையும்
கொள்ளையடித்தவனின்
ஆண்மையில்
ஒரு உதை உதைத்துவிட்டேன்..
வெளிர் சிவப்பு வெங்காய விளைச்சலை
நம் ஆடுகளை
கோழிகளை
என்னையும்
கொள்ளையடித்தவனின்
ஆண்மையில்
ஒரு உதை உதைத்துவிட்டேன்..
அவன் இறந்துவிடவில்லை..
அன்புள்ள அம்மா..
என்னை விலைபேசிவிற்ற போதும்
வலுக்கட்டாயமாக
புணர்ந்த போதும்
நானும் இறந்துவிடவில்லை..
என்னை விலைபேசிவிற்ற போதும்
வலுக்கட்டாயமாக
புணர்ந்த போதும்
நானும் இறந்துவிடவில்லை..
நமது இனம்
பல்லாயிர வருடப் பாரம்பரியமிக்க இனம்
அதை
கடவுள் நம்பிக்கையற்ற இனமென்றும்
நம் இனப் பெண்கள்
வன்புணர்வு செய்யப்படவேண்டுமென்றும்
ஆண்கள் கொல்லப்படவேண்டுமென்றும்
அல்லது
நாம் மதம் மாறவேண்டுமென்றும்
அவர்கள்
துண்டுச் சீட்டை வீசிய
அன்று தான்
நான் இறந்துபோனேன்..
பல்லாயிர வருடப் பாரம்பரியமிக்க இனம்
அதை
கடவுள் நம்பிக்கையற்ற இனமென்றும்
நம் இனப் பெண்கள்
வன்புணர்வு செய்யப்படவேண்டுமென்றும்
ஆண்கள் கொல்லப்படவேண்டுமென்றும்
அல்லது
நாம் மதம் மாறவேண்டுமென்றும்
அவர்கள்
துண்டுச் சீட்டை வீசிய
அன்று தான்
நான் இறந்துபோனேன்..
அம்மா..
நம் அண்ணன்களுடனும்
என்னுடனும்
நீ எப்போதும் இருக்கிறாய்..
எப்போது வேண்டுமானாலும்
நான் உன்னிடத்தில்
கொண்டுவிடப்படலாம்..
நம் அண்ணன்களுடனும்
என்னுடனும்
நீ எப்போதும் இருக்கிறாய்..
எப்போது வேண்டுமானாலும்
நான் உன்னிடத்தில்
கொண்டுவிடப்படலாம்..
என் புறங்கையின்
ரத்தத்துளிகள்
இன்னும் காயவில்லை..
உன் முத்தமும்தான்..
ரத்தத்துளிகள்
இன்னும் காயவில்லை..
உன் முத்தமும்தான்..
அதற்குள்
நான் தீவிரவாதத்தை
முட்டாள் தனத்தை
மனிதமற்ற செயல்களை
அவைகளின் தலைகளை
முகமூடி அணியாமல்
கூரிய போராட்டக் கத்தியால்
சங்குக் கழுத்தில்
சின்னக் கோடுகளாய்
துளிர்க்கும் பச்சை ரத்தம் காயும் முன்
எடுத்துவருவேன்..
நான் தீவிரவாதத்தை
முட்டாள் தனத்தை
மனிதமற்ற செயல்களை
அவைகளின் தலைகளை
முகமூடி அணியாமல்
கூரிய போராட்டக் கத்தியால்
சங்குக் கழுத்தில்
சின்னக் கோடுகளாய்
துளிர்க்கும் பச்சை ரத்தம் காயும் முன்
எடுத்துவருவேன்..
அன்புள்ள அம்மா..
அதுவரை
இந்தக் கடிதத்தை
படித்துக்கொண்டிரு...
என் கைபேசித் திரையில்
கடவுளாக
உன் படத்தைத் தான்
வைத்திருக்கிறேன்..
நீ அதில்
புன்னகையுடனிருக்கிறாய்...
நானும் தான்...
அதுவரை
இந்தக் கடிதத்தை
படித்துக்கொண்டிரு...
என் கைபேசித் திரையில்
கடவுளாக
உன் படத்தைத் தான்
வைத்திருக்கிறேன்..
நீ அதில்
புன்னகையுடனிருக்கிறாய்...
நானும் தான்...
போராட்டமென்பது
இனியென் உணவு அம்மா...
கவலைப்படாதே...
நான் அனாதையல்ல..
போராளியும்
மனிதம் காக்கும் தன்னார்வ
தொண்டாற்றுபவளும் கூட..
அதையும் விட
நான் ஒரு எழுத்தாளுமை...
அம்மா....
ராகவபிரியன்
இனியென் உணவு அம்மா...
கவலைப்படாதே...
நான் அனாதையல்ல..
போராளியும்
மனிதம் காக்கும் தன்னார்வ
தொண்டாற்றுபவளும் கூட..
அதையும் விட
நான் ஒரு எழுத்தாளுமை...
அம்மா....
ராகவபிரியன்

No comments:
Post a Comment