மனிதன் மன அதிர்வுகளின் பால் கால் பதித்து தள்ளாடியபடி சில செயல்களைச் செய்கிறான்...அவனைப் பொறுத்தவரை அதிர்வுகளின் பிரக்ஞ்சையும் தாக்கமும் அதன் விளைவுகளும் அவனை பாதிக்கும் வரை.. அவன் அறிவிலியாகவே இருக்கிறான்..மனிதனின் முதன்மையான இயல்பு அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான்..சில ஒவ்வாத ஒப்பீடுகளால் அவன் தன்னை உயர்ந்தவனாகவும் பலமுள்ளவனாகவும் தான் வெறுப்பவன் தன் முன்னே மண்டியிட்டுக் கதறுவதாகவும் கற்பனை செய்தபடியிருக்கிறான்..கற்பனையை நிஜமாக்கும் பொழுதின் கடினங்களில் மனிதம் இறந்து போவதைக் காணலாம்...தனி மனிதன் தன் ஆச்சார்யனை அருகிலிருந்தும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான்..அந்தத் தவிப்பின் அதிர்வுகளால் தள்ளாடியபடி அந்த ஆச்சார்யனை அடியாள் வைத்து அடிக்கவும் தயங்காத இயல்பை ..அந்த ஆச்சார்யனின் தவப்பொருட்களை திருட்டுத்தனமாக அடைய நினைக்கும் ஒவ்வாத தீய மனப்பாங்கின் அசுர இயல்பை பிறிதொரு நாளில் உணர்வதை ஞானமெனக் காண்கிறான்..அவன் அதை அடைவதற்குண்டான நெடிய பயணத்தில் சில நேரங்களில் தன்னையே தொலைத்ததை அறியாமல் பிணமாய் கனத்துப்போகிறான்..அப்படியான ஒரு மனிதனை அரங்கன் ஆட்கொண்டு மனிதனாக்குவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் ஆச்சார்யன் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருக்கோவிலூர் வருகிறார்..
அங்கே ஒரு கீற்றுக்குடிசையின் மழையிரவில் ஒருவரையொருவர் உணராமல் நெருக்கியபடியிருக்கும் முதலாம் ஆழ்வார்களை தன் ஞானத்தால் நெருங்குகிறார்..தென்பெண்ணையின் சீரிய பாசனத்தால் விளைந்த கோட்டைமருதூர் கரும்பொன்றை ஆலையிலிட கிடைக்கும் அமுதமென அரங்கனைப் போற்றிப்பாடத் தொடங்குகிறார்கள் மூன்று ஆழ்வார்களும்..அந்தாதி வெண்பாக்களின் அபூர்வ ஒளியில் அரங்கன் தன் பை நாகப் பாயிலிருந்து எழுகிறான்..திரிவிக்ரமனாய் தன் வலது காலை மேலே தூக்க மிருகண்டு முனிவர் சங்கு சக்கரங்களை கைமாற்றிக் காட்டச் சொல்கிறார்..அத்தனைக் காட்சிகளையும் நமது ஆச்சாரியனுக்கு அரங்கன் நிகழ்த்திக் காட்ட 28 பாடல்களை ஸ்ரீ தேஹலீச ஸ்துதி.என்ற தொகுப்பில் அதியற்புதமாக இயற்றிக்காட்டி வாழ்வின் அர்த்தங்களை நமக்கு உணர்த்துகிறார் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகச் சுவாமிகள்...அதிலிருந்து ஒரு கவிதையை உங்களுக்காக இங்கே தருகிறேன்..
காஸார பூர்வ கவி முக்க்யவிமர்த்த ஜந்மா..
பண்ணா தடேக்ஷு ஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே..
த்வத்பாத பத்ம மதுநித்வத் நந்ய போக்யே..
நூகம் ஸ்மாஸ்ரயதி நூத நசர்க்கராத்வம்...
[ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்}
பண்ணா தடேக்ஷு ஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே..
த்வத்பாத பத்ம மதுநித்வத் நந்ய போக்யே..
நூகம் ஸ்மாஸ்ரயதி நூத நசர்க்கராத்வம்...
[ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்}
திருக்கோவிலூர் அருகே உள்ள பெண்ணையாற்றின் நீரால் நிரம்பி வழியும் கோட்டை மருதூர் ஏரிப்பாசனத்தில் விளைந்த தரமான கரும்பை சாறாக்கிப் பருகக் கிடைக்கும் அமுதம் ..பகவத் நெருக்கத்தால் நெகிழ்ந்து அமுதத் தமிழ்பாடல்களைத் தந்த முதலாமாழ்வார்களை லெளசீல்யம் எனும் உயர்ந்த குண நலங்கள் கொண்டவர்களாக மாற்றும் சக்தியுடையது.. அதுபோல ஆணவத்தால் தனது அடியாட்களை ஆச்சார்யர்களை நோக்கி மீசையை முறுக்கச் செய்யும் ஒப்பீடுகளையுடைய அதிர்வுகளின் பிடியில் ஆடிக்கொண்டிருக்கும் தகுதியற்றவனை மனிதனாக்கும் கருப்பஞ்சாறு உனது திருவடிகள்..அதை அனுபவிப்பர்வர்களுக்கே மனிதமே உயர்ந்தது என்ற ஞானம் கிடைக்கும்..அவ்வாறான ஞானமுடையவர்கள் ஆச்சார்யனின் செய்கைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து திருந்துகிறார்கள்..அப்பொழுதின் இனிமையில்தான் கருப்பஞ்சாறு சர்க்கரையாக மாறி இன்னும் இனிக்கத்தொடங்குகிறது..திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்
ராகவபிரியன்

No comments:
Post a Comment