உன் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளின் கடல் நடுவே உருக் கொள்கிறது ஒரு புயல்..
அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே..
உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய்
வழியெங்கும் அமைத்த நீ
துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்..
புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது..
மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும்
அதன் முகூர்த்தப் பந்தல்காலென
உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்..
புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான
வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது..
உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை
வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்..
அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள்
மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும்
உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது..
காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி
ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்..
மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி
உன்னை எச்சரிக்கிறது..
திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல்
அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக
தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறது..
உனக்கான கூலியாய் காலிக் கோப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்..
கொல்கத்தா மாநாட்டிற்கு பாரதியின் பயணத்தின்
பட்டினி வயிற்றின் உக்கிரமாய் புயல் தாண்டவமாட..
உன் முண்டாசை இறுக்கிக் கட்டுகிறாய்..
மழித்தெறிந்த உன் மீசைமுடிகளை புயல் தொடாமல் கடப்பது அதிசயமில்லை..
உனக்குப் புயல் தோல்வியைத் தந்துவிட்டு அமைதியாய் இருக்கிறது...
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் தோல்வியைத் தான்
இப்போது...
ஒரு புயலென நீ தாண்டவேண்டியிருக்கிறது...
ராகவபிரியன்
அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே..
உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய்
வழியெங்கும் அமைத்த நீ
துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்..
புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது..
மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும்
அதன் முகூர்த்தப் பந்தல்காலென
உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்..
புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான
வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது..
உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை
வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்..
அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள்
மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும்
உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது..
காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி
ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்..
மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி
உன்னை எச்சரிக்கிறது..
திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல்
அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக
தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறது..
உனக்கான கூலியாய் காலிக் கோப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்..
கொல்கத்தா மாநாட்டிற்கு பாரதியின் பயணத்தின்
பட்டினி வயிற்றின் உக்கிரமாய் புயல் தாண்டவமாட..
உன் முண்டாசை இறுக்கிக் கட்டுகிறாய்..
மழித்தெறிந்த உன் மீசைமுடிகளை புயல் தொடாமல் கடப்பது அதிசயமில்லை..
உனக்குப் புயல் தோல்வியைத் தந்துவிட்டு அமைதியாய் இருக்கிறது...
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் தோல்வியைத் தான்
இப்போது...
ஒரு புயலென நீ தாண்டவேண்டியிருக்கிறது...
ராகவபிரியன்

No comments:
Post a Comment