இன்றைய தமிழ் இலக்கியத்தின் செலுத்துவாரற்ற பயணம் செல்லும் திசையெல்லாம் கிடைக்கும் உபயோகித்து தூக்கியெறியும் உடையொன்றை வாங்கி அணிந்து கொள்கிறது...புதுப்பொலிவுடன் ஈர்க்கும் அது அடுத்த உடைகிடைக்கும் வரை அழுக்காகி கசங்கி இலக்கிய பிம்பத்தின் மரியாதையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறது...ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தமிழிலக்கியம் இதுவரை பெற்றது ஒரே ஒரு ஞானபீடம்தான்..[சரி..இரண்டு என்றே வைத்துக்கொள்வோம்]இந்திய மொழியிலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் முதல் இலக்கியப் பிரதி கிடைத்தாகச் சொல்லிக்கொள்ளும் ஒடிய [odia]..இலக்கியம் இதுவரை நான்கு ஞானபீடங்களைப் பெற்றுவிட்டது..
பாண்டா எனும் ஆதிகுடிமக்களைப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் ஒரியாவில்..அவர்களைப்பற்றி எழுதி உலகின் கவனத்தைக் கவர்ந்தவர் . 2011 ல் ஞானபீடப் பரிசு பெற்ற ஒடிய எழுத்தாளுமை...வைணவ குலத்தைச் சேர்ந்த பிரதீபா ரே...அவர்கள்...நிறைய நாவல்கள் ...சிறுகதைகள் ..கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அவரின் கவிதைகள் அவ்வளவாகப் பேசப்படவில்லை..
ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட ஒடிய கவிதாயினி நிர்மலா தேவி என்றுதான் ஒடிய இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது...பதின்மூன்று குழந்தைகளைப் பெற்று ஆங்கிலேயர் காலத்திய அரசு நிர்வாக மேலதிகாரியாக பணியாற்றிய நிர்மலா தேவி..தன் கவிதைகளை தன் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் விளக்கி காட்டி அவர்களின் முயற்சியால் அவைகள் அச்சிலேற்றப்பட்டு அவருக்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது...இலக்கிய உலகின் ஒரு நம்பமுடியாத அதிசயமாகத்தான் இருக்கிறது..அந்த இறவாக் கவிதாயினியின் பெயர்த்தியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட ஒடிய கவிதாயினி நிர்மலா தேவி என்றுதான் ஒடிய இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது...பதின்மூன்று குழந்தைகளைப் பெற்று ஆங்கிலேயர் காலத்திய அரசு நிர்வாக மேலதிகாரியாக பணியாற்றிய நிர்மலா தேவி..தன் கவிதைகளை தன் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் விளக்கி காட்டி அவர்களின் முயற்சியால் அவைகள் அச்சிலேற்றப்பட்டு அவருக்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது...இலக்கிய உலகின் ஒரு நம்பமுடியாத அதிசயமாகத்தான் இருக்கிறது..அந்த இறவாக் கவிதாயினியின் பெயர்த்தியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
எதுவுமற்ற ஒரு உருவம்
என் முன்னே
தினமும் தோன்றுகிறது...
என் முன்னே
தினமும் தோன்றுகிறது...
அவ்வுருவம்
அசைகிறது ..பாடுகிறது..சிரிக்கிறது..அழுகிறது...
அசைகிறது ..பாடுகிறது..சிரிக்கிறது..அழுகிறது...
அதற்கு நிறமில்லை..
அதற்கு உணர்வில்லை
அதற்கு உயிருமில்லை...
அதற்கு உணர்வில்லை
அதற்கு உயிருமில்லை...
எனினும்..
நான் சிரித்தால்
அது கோபப்படுகிறது..
நான் பேசினால்
அது மெளனமாகிவிடுகிறது..
எனக்கு வண்ணம் ஓளிர்ந்தால்
அது தன் நிறமிழந்து விடுகிறது..
அது கோபப்படுகிறது..
நான் பேசினால்
அது மெளனமாகிவிடுகிறது..
எனக்கு வண்ணம் ஓளிர்ந்தால்
அது தன் நிறமிழந்து விடுகிறது..
நான் நடந்தால்
அது அமர்ந்து கொள்கிறது..
நான் எழுந்தால்
அது ஓடிவிடுகிறது..
அது அமர்ந்து கொள்கிறது..
நான் எழுந்தால்
அது ஓடிவிடுகிறது..
கண்டிப்பாக
இந்த இலையுதிர்காலத்திற்கு முன்
நான் அதை
உங்களுக்கு
அடையாளம் காட்டிவிடுகிறேன்...
ராகவபிரியன்
இந்த இலையுதிர்காலத்திற்கு முன்
நான் அதை
உங்களுக்கு
அடையாளம் காட்டிவிடுகிறேன்...
ராகவபிரியன்

No comments:
Post a Comment