அருகருகே மரபுடைமை எச்சம் என்பதையும் ஆங்கில லெகசி என்பதையும் கிடத்துங்கள். மெல்லிய இழையொன்றால் இரண்டிற்குமான இடைவெளி இழை மின்னல் உங்கள் கண்களை கூசக்காணலாம்.
அது அதுவரையிலான அப்பாவி ஏழை பிராமணன் ஒருவன் திராவிட கொடுங்கோல் மைதானத்தில் தாண்டவியலா உச்சம். எங்கள் மெலிந்த கால்கள் கொண்ட குடும்பத்தின் மரபுடைமை எச்சமாக அவ்வுயரம் இன்னமும் தாண்டவியலா உச்சியிலேயே உட்கார்ந்திருக்கிறது.
நிஜம் என்னவெனில் உங்கள் ரா.பி. க்கு மாநில அரசுக் கல்லூரிகளில் வகுப்பெடுக்கும் வாய்ப்பு இறுதி வரை கடந்த முப்பதாண்டுகள் தாண்டிய போலி திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கொடுக்கப்படவே இல்லை. பொய் வரலாறு புணையப்பட்ட ஏமாற்று சமூக நீதி இடஒதுக்கீட்டு அவலம் ஆங்கிலேயர்களால் ஊன்றப்பட்டது. அதன் மெல்லிய அறுபடப்போகும் ஆணிவேர் செயற்கை திராவிட அமிலம் ஊற்றி வளர்க்கும் போலி சமூகநீதி பார்த்தனீய வீழ்ந்துவிட்ட வெள்ளாமை.
தரம் எனும் நீரூற்றாத எந்தப் பயிரும் செழித்து வளரப்போவதில்லை. திராவிடம் சொல்லும் லெகசி என்பது குடும்ப அதிகாரத்தின் கொடுங்கோன்மை. அந்த லெகசி இம்மண்ணின் மைந்தர்களை இன்னமும் ஆரியன் திராவிடன் இந்து இஸ்லாம் கிருத்துவன் பார்ஸி சீக்கியன் வடக்கன் தெற்கன் சமூக நீதி நீட் ரகசியம் இலவசங்கள் இடஒதுக்கீடு எனும் கூண்டுகளில் அதிகார விலங்குகளின் பசிக்காக மனித இரைகளை வீசும் உத்தியன்றி வேறில்லை.
மரபுடைமை எச்சம் என்பது வழிவழியாக குடும்பத்தின் தனி உறுப்பினரால் நிர்ணயிக்கப்பட்ட எச்சம். அவ்வுறுப்பினர் கடும் உழைப்பின் விளைவாக நேர்மையை மெலிந்த கால்களில் ஜீவசக்தி களிம்பென தடவிக்கொள்வார். அவர் எந்தவித ஊக்கமருந்துமின்றி இலக்கை இலகுவாகத் தாண்டிக் குதித்திப்பார். மெத்தையற்ற தரையில் விழுந்து எலும்புகள் உடைந்தாலும் எழுந்து நடந்து நிமிர்ந்த நன்னடையுடன் சமூக வீதிகளில் கைத்தட்டல்களுடன் பெருமிதம் பொங்க நடந்து செல்வார். அது தான் மரபுடைமை எச்சம்.
இதோ முப்பதைந்தாண்டுகளுக்குப்பின் உங்கள் ரா. பியின் இரண்டாவது மகள் மாநில அரசுக் கல்லூரிகளில் வகுப்பெடுக்க நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்வெனும் இலக்கை வென்றிருக்கிறாள். அவள் தாண்டிய காட்டாறுகளும் கொடும் பாலைகளும் எவர் கண்களும் கண்டிராதவை. அக்கடின உழைப்பின் ஜீவ சக்தி களிம்பு தந்த வலிமையால் தாண்டிய உயரம். ஆதலால் தான் எங்கள் குடும்பத்தின் அரிய மரபுடைமை எச்சம் மீண்டும் அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
அன்பு நண்பர்களே. என் மகள் மேலும் மேலும்மேலதிக உயரங்களை எட்ட வாழ்த்துவீர்களா. நீங்கள் வாழ்த்துவீர்களா..? அவளின் மின்னும் வெற்றித் தங்கத் தொப்பியில் மயிலிறகுளை அடுக்குவீர்களா?
அரங்கன் உங்கள் ரா.பி யின் மகளுக்கு ஆசிகளைத் தர இப்பதிவின் வழி வேண்டுதல்களை பதிவு செய்கிறான். வேறென்ன செய்துவிட முடியும் இந்த ஏழைத் தகப்பனால்.
நன்றியும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
இக்கணத்தின் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்
உங்கள் ராகவபிரியன்
No comments:
Post a Comment