நீண்ட இலக்கிய இடைவெளிக்கு முன் இறுதியாக 1992 ல் பாபு. எஸ். ராஜகோபாலன் என்ற பெயரில் எனது கவிதை ஒன்று ஜனரஞ்சக இதழொன்றில் வெளியானது. பிறகான வாழ்வின் ஓய்வற்ற தொடர் சூறாவளி எழுத்துலகில் இருந்தும் இலக்கிய உலகில் இருந்தும் சற்றி தள்ளி ஆனால் ஒட்டியே அமைந்த இன்னொரு பாதையில் பயணிக்க வைத்து விட்டது. வாழ்வையே சூறாடி நிர்மூலம் ஆக்கிக்கொண்டிருந்த இரக்கமற்ற அப்புயல் வலுவிழந்தாலும் இன்னமும் முற்றிலும் அகன்று கரை கடந்துவிடவில்லை. ஆனாலும் 2014 முதல் மீண்டும் எழுத்துலகப் பாதையில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை முக நூலும் ஒரு சில இணைய இதழ்களும் சிற்றிதழ்களும் மாத வார இதழ்களும் வழங்கத் தொடங்கின.
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Thursday, September 11, 2025
1992லிருந்து 2014 வரையிலான இடைப்பட்ட இடைவெளியில் நடந்த சில நிகழ்வுகள் இவனால் கவனிக்கப்படவில்லை. இவனின் தவறுதான் அது. அதனால் ஒரு சில பதிவுகள் தவறாகவும் தேவையற்றும் எனது முக நூல் சுவரில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டியதாகிப் போனது. அவைகளை இனம் கண்டு உண்மை தெரிந்து அல்லது கண்டு கொண்டு..ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்கிவிட்டேன்.
இலக்கியம் தனிப்பட்ட வாழ்வின் வெளிவராத பக்கங்களைப் பற்றிக் கவலை கொண்டேதே இல்லை. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வியலின் அறம் சார் வாழ்வு முறை இறவா இலக்கிய பங்களிப்பிற்கு மிகவும் இன்றியமையாதது.
இருப்பினும் தனிப்பட்ட வாழ்வியிலின் இருண்ட பக்கங்கள் பொதுவெளியில் வருகையில் ஒரு சில விவரமறியாமல் பதியப்படும் இலக்கியம் தொடர்பான பதிவுகள் தவறான புரிதலை வாசகர்களிடம் கொண்டு சேர்த்துவிடுவதை தவிர்த்தல் கடினெனமென உணர்ந்திருக்கிறேன்.
அதனால் தான் நேற்றைய எனது பதிவை நீக்கிவிட்டேன்.
நன்றி
ராகவபிரியன்
Subscribe to:
Post Comments (Atom)
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....
No comments:
Post a Comment