உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்
அவர் அர்ஜெண்டைனாவின் இருபதாம் நூற்றாண்டு அவண்ட் கெரேட் அதாவது முன்னோடிக் கவிகளில் ஒருவர். அறுபத்து ஏழு வயது வரை இந்தப் பெயர் கண்ணில் படாதது இனிப்புக் கடையில் திருனெல்வேலி அல்வா பொட்டலம் கண்ணில் பட்டாலும் மைசூர்பா வாங்குவது போன்று பார்வைச் சுவரின் அப்பால் கிடந்தது நெருடல் தந்தது..
அவரின் சர்ரியலிச முன்னோடி இயக்கம் பாப்லா நெரூடா போன்றோரை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை என லத்தீன் அமெரிக்க இலக்கிய வரலாறு பேசுவதைப் படித்ததும் வெட்க மாஸ்க்கை கண் வரை சிறிது மேலேற்ற வேண்டியதானது. கிராண்டொ மார்ட்டின் பியாரோ எனும் இலக்கிய விமர்சன இயக்கம் ஒன்றையும் அவர் நிறுவி இலக்கியத்திற்கான அழிக்கவியலா பங்களிப்பைச் செய்திருக்கிறார். கவனிக்கப்படாத கற்கோட்டைகள் காலத்தை வென்று வாழ்ந்தால் அது அதன் பின்னான தலைமுறைப் பார்வையாளர்களை ஈர்த்து கவனிக்க வைக்குமென்பது நிஜம் தானே.
அவரின் ஒரு ஸ்பானிய மொழிக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதை என்னளவில் தமிழில் தருகிறேன்.. இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ மொழிபெயர்ப்போ இல்லை...
பூக்கள் நிரம்பி வழியும்
அணைக் கதவங்களை
சட் டெனத்
திறந்து விடாதீர்கள்..
அவ்விடம்
குளித்துக் கொண்டிருக்கும்
பெண்கள் கொஞ்சமும்
உடுத்தியிருக்கவில்லை...
அணைக்கரையில் அவர்கள்
நடந்து வருகையில்
எதற்காகவும்
பின் தொடராதீர்கள்..
பூக்கள் நிரம்பியிருக்கும்
அவர்களின் உடையிலிருக்கும்
பட்டாம் பூச்சிகள் பறந்து
சென்றுவிடும்..
அவர்கள் உள்ளாடைகள் அணிந்திருக்கவில்லை..
உங்களுக்கான கூடுதல் தகவல்..
அந்தி மயங்கும் பொழுதில்
அருகிருக்கும் விடுதியின்
மாடக் கம்பிகளின் மேல்
குனிந்து பேசும்
அவர்களின் மார்புப் பூக்கள்
விகசித்துப் பூத்திருக்கும்..
அண்ணாந்து பார்த்தால்
உங்கள் கைகளில் அவை
உதிர்ந்து விழவும் வாய்ப்பிருக்கிறது..
மார்புப் பூக்கள் ஆககனத்தவை...
உங்கள் கைகளில் விழுந்தால்
வார்தைகளையும் பார்வையையும்
உள்ளிழுத்துக் கொண்டு
வேறெதையாவது
பரவசப்பட்டு வெளியேற்றிவிடுவீர்கள்..
பரவசம் தவிர்த்தல் பிரம்ம முரண்
அதனால் தான்...
பெண்களையும் பூக்களையும்
தேக்கித்தான் வைத்தாக வேண்டும்..
பிரித்துப் பார்ப்பது பாவச்செயல்தானோ...?
சொல்லுங்கள்...
ராகவபிரியன்
No comments:
Post a Comment