வில்லியம் எஸ் பாரோஸ் எனும் புகழ் பெற்ற இலக்கிய மேதை தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தவர் என்பதால் இலக்கிய வரலாற்றில் தனதான இடத்தை இழந்து நிற்கிறார். முதல் மனைவி இவரை விவாகரத்து செய்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
இவர் பதினெட்டு நாவல்கள் ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார்.
வாழ்வியலின் இந்திய கலாச்சார அறம் அமெரிக்கக் கலாச்சார வாழ்வியல் அறத்தின் நேரெதிர் முனை. இருந்தாலும் சக உயிரொன்றை கொலை செய்வதோ அல்லது தற்கொலைக்குத் தூண்டுவதோ உலகலாவிய மானுட அறம் மீறிய செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.
இவர் தனது இரண்டாவது மனைவி ஜோவான் வால்மரைக் கொலைசெய்து விடுகிறார். விசாரணையின் போது தான் மிதமிஞ்சிய போதையில் இருந்ததாகவும் துப்பாக்கியால் வில்லியம் டெல் ஸ்டெண்ட் எனும் பயிற்சி செய்கையில் துப்பாக்கி தவறி மேசையில் விழுந்து தானாகவே டிரிகர் உந்தப்பட்டு குண்டு பாய்ந்து வால்மர் இறந்துவிட்டதாகச் சொல்லி தப்பிக்கும் முயற்சி செய்திருக்கிறார். இருந்தாலும் இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வில்லியம் டெல் ஸ்டண்ட் என்பது இம்சை அரசன் படத்தில் வடிவேலு அம்பு விடும் பயிற்சி மேற்கொள்வார். அதாவது ஒரு மனிதனின் தலையில் பெரிய பொருள் முதல் ஆகச் சிறிய பொருள் வரை வைத்து அம்பெய்து குறிபார்த்து எய்யும் கலையில் நிபுணத்துவம் பெறும் செயல். அது போன்ற ஒரு செயலை தான் வால்மரிடம் செய்து காட்டியதாகவும் ஆனால் துப்பாக்கி கைதவறி மேசையில் விழுந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
அவரின் நேக்கட் லன்ஞ் எனும் நாவல் புகழ் பெற்ற ஒன்று. இருந்தாலும் உலக கிளாஸிக் வரிசையில் தன் இடத்தைத் தக்க வைக்கவியலாமல் கால ஓட்டத்தின் வேகத்தில் கிழிந்து கிடக்கிறது.
அந்த நாவலின் ஒரு சில வரிகளை உங்களுக்காக கீழே தருகிறேன்..
“The junk merchant doesn't sell his product to the consumer; he sells the consumer to his product. He does not improve and simplify his merchandise. He degrades and simplifies the client.”
― William S. Burroughs, Naked Lunch: The Restored Text
Naked Lunch Quotes Showing 1-30 of 121
“You were not there for the beginning. You will not be there for the end. Your knowledge of what is going on can only be superficial and relative.”
― William S. Burroughs, Naked Lunch: The Restored Text
[ நாவலின் இந்த வரிகள் சாத்தான் வேதம் ஓதுவதாக கிண்டல் செய்யப்பட்டதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.]
இந்தப் பதிவு யாரையும் தொடர்பு படுத்தி எழுதப்படவில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்..
காலத்தை வென்று நிற்கும் இலக்கியப் படைப்புகள் இறவாத் தன்மையைத் தக்க வைக்க வேண்டுமெனில் அதன் படைப்பாளனின் வாழ்வியல் அறமும் தேவைப்படுகிறதென்பதை வரலாறு சொல்கிறது..
வேறொன்றும் இல்லை.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
நன்றி
ராகவபிரியன்
வில்லியம் பாரோஸூம் அவரால் கொலைசெய்யப்பட்ட அவரின் மனைவி வால்மரும் மற்றும் அவர்களின் சின்னஞ்சிறிய சிசு பில் ஜூனியரும்..[ படம் இணையத்திலிருந்து சுட்டது]
No comments:
Post a Comment