தமிழிலக்கிய ஆப்பரேசன் செந்தூரம்...2
பாரதி புதுவையில் கனகலிங்கத்திற்கு பூணுல் அணிவித்ததால் அவர் இடதுசாரி எனவும் இன்றைய அதீஸ்ட்களின் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடிக்க பாரதியை மேற்கோள் காட்டும் இலக்கிய வன்மத்தை
இப்போது பூர்ண சந்திர தீபக்கனலாக கக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
இந்த கடவுள் மறுப்பு அரசாங்கத்திற்கு ஜால்ரா தட்டும் இடதுசாரி அதீஸ்ட் இலக்கிய கர்த்தாக்கள் உலக மஹாகவியின் ஆன்மீக தேசீய சிந்தனைகளை சுருக்கி சுருக்குப்பைக்குள் வைத்து இடுப்பில் செருக்கிகொண்டு விட்டதாக எழுதுவதால் பாரதியின் முண்டாசின் வண்ணம் ஒரு போதும் மங்கிவிடாது..
உங்கள் பொய் இலக்கிய குப்பைகளோடு இந்த இந்து எதிர்ப்பு அரசும் நாளை பரம்குன்றத்தின் தீபத் தூணில் எரியும் அக்னியில் நெய்யாக வார்க்கப்படப்போவது நிஜம்..
பாரதியே சொல்கிறார்...அடியார் பலரிங்குளரே
அவரை [ இந்த பெரியாரிஸ்ட் ஆட்சியின் பிடியிலிருந்து 2026லாவது] விடுவித்தருள்வாய்...என...
அப்போது இந்தப் பாட்டை நாட்டைக் குறிஞ்சியில் தமிழ் நாடே பாடப்போவது நிஜம்..
ராகவபிரியன்
ஒரு சோற்று இலக்கியப் பருக்கையை உங்கள் விரல்களில் வைக்கிறேன்.. பதம் பார்த்துவிட்டேன்.. உங்கள் விரல்களில் சுட்டுக்கொள்ளாதீர்கள்..
கீழே இருக்கும் செய்தி வேர்ட் ப்ரெஸ். காம் இல் இருக்கிறது..
ஆசிரியர் : பாரதியார்
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில், வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார், பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில் இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப் போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப் பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும் தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை வரச்செய்து நேரில் கண்ட துதி
முருகா முருகா!
ராகம்-நாட்டைக்குறிஞ்சி
தாளம்-ஆதி
Click the link to listen to “முருகா முருகா” sung by Smt. Sudha Ragunathan.
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1.
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2.
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3.
சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4.
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5.
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
No comments:
Post a Comment