Monday, December 22, 2025

 என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வதானால் அதிகாரபூர்வமாகச் செய்யுங்கள்.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்..
ராகவபிரியனின் படைப்புகளைத் தடை செய்தால் அவருக்கு நாளை நோபல் கிடைக்க வழி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..
மிக்க நன்றியும் அன்பும்..
ராகவபிரியன்..



 தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்...4

தன் வாழ்விடக் காட்டிலிருந்து தப்பிய புலி
நள்ளிரவில் மானுடக் குடியிருப்புகளில்
பசியின் வரலாற்றை உறுமியபடி
இரை தேடி அலைகிறது..
உடும்பின் இடுப்பில் நூலேணியைக் கட்டி
கோட்டை மதிலேறிக் குதிக்க வந்த
வரலாற்றுத் திருடன்
புலிக்குப் பயந்து பம்மத் தொடங்குகிறான்..
இரவின் நிசப்தத்தில் ஒலிக்கும்
விதவிதமான பல்குரல் ஒலிகளுக்குப்
பயப்படாத குடுகுடுப்பைக்காரன்
புலிப்பாதை மசானத்தில்
தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை
தோண்டத் தொடங்குகிறான்..
அவனின் குழிபறிக்கும்
மண்வெட்டிச் சப்தத்தில்
திராவிட வரலாறு ஒலிக்கத் தொடங்க
புலியும் உடும்பும் தலைச்சன் பிள்ளைப் பிணமும்
பயந்து நடுங்கத் தொடங்கின..
அந்த நிசப்த
வரலாற்று அருவப் பொழுதுகளில்
எரிந்த கட்சி எரியாத கட்சி
விரசப்பாட்டின் சிற்றிண்பம் துய்க்க
வாடிக்கையாய்ச் செல்லும்
முண்டாசு சுற்றிய பெருந்தலைகள்
பம்மிப்பம்மி பயமின்றி நடக்கும்
பின் நவீன பிந்தைய காலணி காலங்களில்
தங்கள் மனைவிகளை
ஒருபோதும்
உடன் அழைத்துச் செல்வதில்லை..
போகட்டும்..
மானற்ற காடுகளைத் துறந்த புலி
சேவல் கிடைத்தாலும் சமாதானமாகிவிடுவதை
மூடிய மின்சுற்று படக்கருவிகள்
இப்போது
பத்திரமாய் படம்பிடித்துக் காட்டுகின்றன..
கோட்டை மீதேறிக் குதித்த
வரலாற்றுத் திருடன்
பசிதாங்காமல்
குளிர் காய மூட்டிய தீயில்
உடும்பு மாமிசத்தை உருட்டிக்கொண்டே
தேசியத் தணலில் சூடில்லை என
புலம்பித் தீர்க்கிறான்..
நடுநிசியில் வீட்டு வாசலில் நின்ற
குடுகுடுப்பைக் காரன்
குறிசொல்வதை ஒளிந்திருந்து
கேட்டவனுக்கு பாஷை புரியவில்லை..
அந்தக் குடுகுடுப்பையன்
பேசுவது சம்ஸ்கிருதமென்று
அணைத்துக்கொண்டிருந்த
அன்றைய வைப்பாட்டியிடம்
அசடொழுகும் வீரமுடன் சொன்னவன்..
வாசலில் நிழலாடிய
முண்டாசு பிம்பத்தைக் கண்டு
துண்டைக் காணோம்
துணியைக் காணோமென
அம்மணமாய் ஓடத்துவங்குகிறான்..
ராகவபிரியன்



Saturday, December 20, 2025

 தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்..3.

பாரதி தனது ஐந்து வயதிற்குள்ளாகவே தனது தாயை இழக்கிறான். அவன் மீது தாயன்பு காட்டும் அத்துனை பொருட்களிடமும் அதாவது மானுடம் இயற்கை பறப்பன ஊர்வன அனைத்திலும் தன் தாயைப் பார்க்கிறான்..
இங்கே ஈடிபஸ் காம்ளெக்ஸ் என எதிர்வினையாற்றுபவர்கள் பாரதி சிறுவயதில் பிராமணரல்லாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார் அதுவும் எட்டு அல்லது ஒன்பது வயதில் என பதிவு செய்கிறார்கள்.. இது மிகவும் கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான உள்நோக்கம் கொண்ட பிராமண வெறுப்பை விதைக்கும் பதிவு..
பாரதியின் சுயசரிதையில் பாரதி இப்படிச் சொல்கிறார்..
ஆங்கோர் கன்னியை பத்துபிராயத்தில்
ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினேன்..
பாரதி வணங்கியது சிறுவயதிலிருந்தே தன் தாயாக பாவித்த அந்த ஆதிபராசக்தியைத் தான் என்பதை கவிஞர் மீரா தொகுத்த பாரதீயம் என்ற கட்டுரை தொகுப்பில் திரு டாக்டர். சி. கனகசபாபதியின் கட்டுரையில் காண இயலும்..
பாரதியின் சமகால சினிமா படத்திலும் இதுபோன்ற பிராமண வெறுப்பு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது..அதற்கு பாரதியின் வேறு தலைப்பிலுள்ள பாடலுக்கு இளையராஜா இசைவேறு அமைத்திருக்கிறார்.. இது இன்றைய அதீஸ்ட் இடதுசாரி பிராமண வெறுப்பு இலக்கிய கர்த்தாக்களின் துணையோடு நடந்தேறியிருக்கிறது..
மேலைத்தேய இலக்கியத்தின் ஜூலியோ கொர்தாஸரின் ஒரு கதை நினைவிற்கு வருகிறது...அவர் பிரான்சில் ஒரு மிருககாட்சி சாலைக்குச் செல்கிறார்..அங்கே நிறைய கொடிய மிருகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..
நம் தமிழ் நாட்டில் சமகாலத்து இளைஞர்கள் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் காட்சிப்படுத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கு போவது போல் தான். கொர்தாஸர் சிங்கம் புலி மற்றும் இதர மிருகங்களைப் பார்த்துவிட்டு மெல்ல ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து பின் கடந்து சென்றுவிடுகிறார்..
தமிழகத்தின் அரசியல் கூட்டத்திற்கு வரும் வெகுஜனங்களுக்கு ஆயிரம் உரூபாயும் குவார்ட்டரும் மற்றும் ஒரு ஊறுகாய் பொட்டலுமும் கொடுக்கப்படுவதாக அறிய இயலும்..அப்படி அழைத்து வரும் வாக்காள பெருமக்கள்..சிலர்...கூட்டம் முடியும் வரை அருகிருக்கும் புதர் மறைவில் ஒருவித பயத்துடன் தாகம் தீர்த்தபடி கலந்து கொண்டுவிட்டு செல்வார்கள்..
அதுபோல நம் தமிழக சாதாரண வெகுமக்கள் போல அரசியலியக்கப் பார்வையுடன் கொர்தாஸர் நகர்ந்து செல்ல மாட்டார்.. அவர் எப்படி செல்வாரென்றால்...முடிந்தால் ஒரு வாழைத்தாரோ இளனீர் கொத்தோ தள்ளாடாமல் இருந்தால் ஈச்சம் கொத்தோகூட எடுத்துக்கொண்டு செல்லும் நம் இன்றைய தலைமுறையின் வெகுமக்கள் வாழ்வியலுக்கேற்ப.. தன் இதயம் முழுவதும் தான் கண்ட அம்மிருக இயல்புகளை உள்வாங்கியபடி எங்காவது தனக்கான அன்பு கிடைக்கிறதாவென தேடியபடியே செல்வார் கொர்தாஸர்..
மெல்ல நகர்ந்து ஆகப்பெரிய கண்ணாடித் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்வாழ் சிறைபட்ட உயிரினங்களை காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் நிற்கிறார்...அந்த கண்ணாடிச் சிறைக்குள்ளே ஒரு அச்சலோற்றல் மீன் அதாவது மீனின் முட்டைப்புழு ஒன்று நீந்திக்கொண்டு அவரை நோக்கி வருகிறது..
கொர்தாஸர் கண்ணாடியின் வெளிப்பக்கம் அச்சிறும் அக்குழந்தை மீனுக்கு முத்தமிடுகிறார்...அந்த சின்ஞ்சிறிய அச்சலோற்றலும் தன் சிறுவாய் தொட்டு அப்பக்கமிருந்து முத்தமிடுகிறது..அன்பின் காந்தம் அவரை தினமும் அவ்விடம் இழுத்து வருகிறது.. அந்த மீனின் அன்பு தினம் தினம் கொர்தாஸரி அந்த கண்ணாடித் தொட்டியை முத்தமிடச் செய்துவிடுகிறது..
பாரதி அவரின் அப்பாவின் அடக்குமுறைக்கும் வெறுப்பிற்கும் ஆளாகி தாயன்பற்ற நிலையில் தன் சிறுவயதில் தனிமைப்படுத்தப்படுகிறார்..அவர் தான் காணும் பெண்களையெல்லாம் பராசக்தியாக நினைத்துப் பாடிச்சென்ற குழந்தைக் கவிப்பிதாமகன்...அப்படியான அழிக்கவியலா இலக்கிய ஜீவித வரலாற்றுக்குச் சொந்தக்காரன் நம் மஹாகவி..
பிராமண சாதியை கலப்புத் திருமணம் செய்தால் ஒழித்துவிடலாம் என கனவுகண்டு சமகால இளைஞர்களை தவறாக வழி நடத்தும் நம்தமிழ் அதீஸ்ட்களின் மதமாற்ற சாதிமாற்ற உத்திக்கு உலக மஹாகவி பாரதியின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் குற்ற எழுத்து இலக்கிய குப்பைகளை கொட்டிவிட்டுப் போகிறார்கள் சிலர்.. இதுபோன்ற சிறுமதியாளர்களை ஒருபோதும் வரலாறு மன்னிக்காது..
போகட்டும்..
பாரதிக்கு மட்டுமல்ல மாபெரும் மேலைத்தேய இலக்கிய கர்த்தர்..கொர்தாஸருக்கும் இதே கதிதான் இலக்கிய வரலாற்றில் நடந்தேறியிருக்கிறது... கொர்தாஸர் உடல் நிலை சரியில்லாத அவரின் கடைசீ காலத்தில் அவருக்கு மாற்று இரத்தம் செலுத்தப்படுகிறது..அந்தக் குருதியில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்திருக்கின்றன. அவர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என அவரின் ஒழுக்கத்தைச் சந்தேகித்து சிதைத்த இலக்கியச் செய்திகள் இன்னமும் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
பாரதி அரங்கனை [ கண்ணனைத்தான்] காதலித்தான்..தன் மனைவி செல்லம்மாளைத் தவிர அவன் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் என்பதை செல்லம்மாவே பதிவு செய்திருக்கிறார்..பாரதி பராசக்தியை தன்னை வளர்த்த அன்னையாகவே பாவித்தான்..பாரதி வேறுசாதிப் பெண்ணை எட்டுவயதில் காதலித்தான் என துர் நோக்கத்துடன் எழுதுபவர்களுக்கும் கோவில் பொம்மைகளின் நிர்வாணத்தை கூர்ந்து நோக்கி சுகம் கண்டு கொண்டே ஆன்மீகம் ஆபாசம் நிறைந்ததென எழுதுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
பாரதியை மட்டுமல்ல இலக்கியத்தையும் அதன் மூலம் வெகுமக்களின் வாழ்க்கையை எழுதுவதற்கும்..இன்றைய திருட்டு அரசியலையும் அதனால் பாதிக்கப்பட்டு பதிவுசெய்யப்படும் இலக்கியத்தை...? எழுதுவதற்கும் குறைந்த பட்சம் ஆறு இல்லை ஓராயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன..
ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கு வருவோரின் ஒவ்வொருவரின் தலைக்கும் ஆயிரம் தரும்..இன்னொன்று ஐநூறு..இன்னொன்று இருநூறு.. இதையெல்லாம் எதிர்பார்த்து அச்சலோற்றல் முத்தம் தரும் வசீகர சினிமா நடிக கட்சிக்காக கண்ணாடித் தொட்டியின் வெளிப்புற பறக்கும் முத்தம் பெறுவதற்காக உயர்விளக்கு கோபுர கம்பத்தில் ஏறி நின்று கூச்சலிட்டால் பாரதி இடதுசாரியாகிவிடமாட்டார்... அதீஸ்ட் இலக்கியத்திற்குள் அவரை அடைக்க முற்படுவோருக்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.. உங்களால் எந்த சாரிக்குள்ளும் பாரதியின் முண்டாசின் நுனியைக்கூட திணிக்க இயலாது...
ராகவபிரியன்..



Friday, December 19, 2025

 தமிழிலக்கிய ஆப்பரேசன் செந்தூரம்...2

பாரதியின் பாட்டிற்கு முருகனே நேரில் வந்ததாக தமிழ்த் தென்றல் திரு.வி.க வே சொல்லியிருக்கிறார்...
பாரதி புதுவையில் கனகலிங்கத்திற்கு பூணுல் அணிவித்ததால் அவர் இடதுசாரி எனவும் இன்றைய அதீஸ்ட்களின் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடிக்க பாரதியை மேற்கோள் காட்டும் இலக்கிய வன்மத்தை
இப்போது பூர்ண சந்திர தீபக்கனலாக கக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
இந்த கடவுள் மறுப்பு அரசாங்கத்திற்கு ஜால்ரா தட்டும் இடதுசாரி அதீஸ்ட் இலக்கிய கர்த்தாக்கள் உலக மஹாகவியின் ஆன்மீக தேசீய சிந்தனைகளை சுருக்கி சுருக்குப்பைக்குள் வைத்து இடுப்பில் செருக்கிகொண்டு விட்டதாக எழுதுவதால் பாரதியின் முண்டாசின் வண்ணம் ஒரு போதும் மங்கிவிடாது..
உங்கள் பொய் இலக்கிய குப்பைகளோடு இந்த இந்து எதிர்ப்பு அரசும் நாளை பரம்குன்றத்தின் தீபத் தூணில் எரியும் அக்னியில் நெய்யாக வார்க்கப்படப்போவது நிஜம்..
பாரதியே சொல்கிறார்...அடியார் பலரிங்குளரே
அவரை [ இந்த பெரியாரிஸ்ட் ஆட்சியின் பிடியிலிருந்து 2026லாவது] விடுவித்தருள்வாய்...என...
அப்போது இந்தப் பாட்டை நாட்டைக் குறிஞ்சியில் தமிழ் நாடே பாடப்போவது நிஜம்..
ராகவபிரியன்
ஒரு சோற்று இலக்கியப் பருக்கையை உங்கள் விரல்களில் வைக்கிறேன்.. பதம் பார்த்துவிட்டேன்.. உங்கள் விரல்களில் சுட்டுக்கொள்ளாதீர்கள்..
கீழே இருக்கும் செய்தி வேர்ட் ப்ரெஸ். காம் இல் இருக்கிறது..
ஆசிரியர் : பாரதியார்
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில், வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார், பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில் இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப் போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப் பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும் தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை வரச்செய்து நேரில் கண்ட துதி
முருகா முருகா!
ராகம்-நாட்டைக்குறிஞ்சி
தாளம்-ஆதி
Click the link to listen to “முருகா முருகா” sung by Smt. Sudha Ragunathan.
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1.
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2.
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3.
சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4.
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5.
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6.
குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)



 இன்றைய விஜய்யின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. அது மட்டுமல்ல ஐஆர்எஸ் படித்தும் அதிகாரப் பசி போதாமையால் நடிகர் கூட்டத்தைக் கண்டு மேலதிக அதிகாரம் தின்ன நினைத்து சேர்ந்திருக்கும் திரு அருள்ராஜ் அவர்களின் உரை மிக மிக அபத்தமாக இருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு வரை அதாவது பாண்டி கூட்டம் வரை விஜயின் பேச்சிலும் அவரைத் தவறாக வழி நடத்தும் நிர்வாகிகளின் பேச்சிலும் இவ்வளவு ஆணவம் தெறிக்கவில்லை...இப்போது மட்டும் ஏன் எனப் புரியவில்லை..
செங்கோட்டையன் அரசியல் பழிவாங்க சேராத இடம் சேர்ந்திருக்கிறாரோ எனும் சந்தேகம் ஊர்ஜிதமாவது போல் புரிந்துகொள்ள முடிகிறது..செங்கோல் என்பது நீதி வழுவாத ஆட்சியின் அடையாளம் எனும் குறியிடு இப்போது உங்களுக்கு நாங்கள் நிரந்தர அடிமைகள் எனக் காட்டும் அடையாளமாகி நீண்ட காலங்கள் ஆகிவிட்டன..
எம்ஜியாரும் விஜயகாந்தும் அரசியலுக்கு வருவதற்கு முன்னும் கூட அவர்களைத் தேடி வந்தவர்கள் அத்துனை பேருக்கும்உணவளித்தவர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல்..ஆனால் விஜய்யைக் காணக் கூடும் கூட்டம் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்காமல் சுருண்டு விழுவதை எங்கு போய் சொல்வது..
சினிமா வருமாணம் ஆண்டிற்கு 500 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார் விஜய்.. யாரோ அரசியலுக்கு வந்தால் ஆண்டிற்கு 500000 கோடி வருமாணம் வருமெனச் சொல்லி தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்...
விஜய்யைக் காண அவர் வீட்டின் முன் கூடியிருக்கும் கூட்டத்திற்கு ஒரு வேளை உணவு கூட வேண்டாம் ஒரு தம்டீ கேண் வைக்க வேண்டாம் ஒரு மினரல் தண்ணிர் டேங்காவது வைத்திருக்கிறாரா...? அரசியலுக்கு வந்த பிறகாவது..
கடும் பஞ்சத்தில் மதுரை மக்களுக்கு தன் சொத்துக்களை விற்று 13 மாதங்கள் உணவளித்து ஆங்கில ஆட்சியையே மிரளவைத்த குஞ்சரத்தம்மாள் இவர்களின் கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாதது விஜய்க்குத் தெரியவில்லை...போலும்...அல்லது அவரை வழி நடத்துவோருக்காவது தெரியுமா எனவும் புரியவில்லை...
விஜய்க்கு நல்ல வழிகாட்டிகளே கிடைக்கவில்லை என்பது நாஞ்சில் சம்பத் சேர்ந்த போதே தமிழக மக்களுக்குப் புரிந்துவிட்டது. விஜய்க்கு மட்டும் இன்னமும் புரியவே இல்லை என்பது பாண்டியில் ரேஷன் கடைகள் இல்லை எனும் அவரின் கூற்றில் உலகத் தமிழ் மக்களுக்குப் புரிந்துவிட்டது..
2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக மற்றும் பாண்டிச்சேரி மக்கள் அவருக்கு ஒரு சரியான வழியை காட்டுவார்கள்..என்பது மட்டும் நிதர்சனமாகப் புரிகிறது..
ராகவபிரியன்



 இது பாரதி நூற்றாண்டு விழாவில் டிச1982 ல் உங்கள் ராகவபிரியன்...பாரதியின் நண்பர் கவியோகி சுத்தானந்த பாரதியின் முன் தன் கவிதையை படித்துக்காட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம்..கீழே அமர்ந்திருப்பவர்..ஒருங்கிணைப்பாளர் இளசை அருணா அவர்கள்..



 சில காட்டுப்பூனைகள் கண்களை மூடிக்கொண்டதும் உலகம் இருளில் மூழ்கிவிடுவதாக கற்பித்துக்கொல்லும் போதில் சில வெளிச்சங்களை எலிகளின் மீது பாய்ச்ச வேண்டியிருக்கிறது...எழுபதுகளின் இறுதியில் என்பதுகளின் தொடக்கத்தில் நானும் கட்டுமானத் தொழில் இதழின் இன்றைய ஆசிரியர் சிந்து பாஸ்கரும்[விஜய பாஸ்கர்] மறைந்த மரியாதைக்குரிய சரவணத்தமிழன் அவர்களின் ஆசியோடு நடத்திக்கொண்டிருந்த கையெழுத்துப்பத்திரிகை உதயம்..அதன் பின் அட்டை...சிந்து பாஸ்கரின் அன்றைய ஓவியம் எனது கவிதைக்கு...இப்போது பூனைகளின் கண்திறப்பதற்காக....அப்போதைய பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அனுப்பிய சிறுகதையைப்பற்றிய செய்தியில் உதயத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனது தலையங்கத்தில்...அன்பன்..ராகவபிரியன்



Wednesday, December 17, 2025

 தமிழிலக்கிய ஆப்பரேஷன் செந்தூரம்..1

------------------------------------------------------
தமிழின் சமகால புகழ்பெற்ற பின் நவீன இடதுசாரி இலக்கிய எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார்..
இந்த எளியவனுக்கு[ உங்கள் ராகவபிரியனுக்கு] இலக்கியமும் தெரியாது அரசியலும் தெரியாது என்று போகிற போக்கில் புழுதிவாரித் தூற்றிவிட்டுப் போகிறார்..
காடு வாவா என அழைக்கும் இவனின் காலமிது. எழுத்திலிருந்து விலகியிருந்த காலங்களின் பிரளயத்தீயின் வெப்பம் உணர்ந்தவன். அது மானுட சிதையின் சில மணி நேரத்தில் ஆறிவிடக்கூடிய பொய்யுடல் தின்னும் வெப்பத்தைவிட அளவு நீர்த்துவிடாத நீறு பூக்காத சூடுடையதென்பதை அனுபவத்தில் உணர்ந்தவன்..
இந்த எளியவனுக்கு எழுத்துலகில் எவருடனும் போட்டியில்லை. எவர்மீதும் இவனுக்கு எழுத்துப்பொறாமையோ புகழின் பொறாமையோ இல்லை. இவனுக்கு எந்த விருதோ பரிசோ ஏன் எழுத்தின் மீதான வருமானமோ தேவையே இல்லை... இவன் அதற்காக எழுதுபவனும் அல்ல..
போகட்டும்..இலக்கியம் பற்றிய நுனிப்புல் மேய்ச்சலைக் கொஞ்சம் அசையிடுவோம்..
பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக ஆன்சியன் ரிஜிம் ஆதரவாளர்கள் அன்றைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி சிம்மாசனத்தின் வலப்புறம் அமர்கிறார்கள்.. எங்கே..பிரஞ்ச்சின் பாராளுமன்றத்தில். எதிர்ப்பாளர்கள் இடது புறம் அமர்கிறார்கள். இது நடந்த ஆண்டு 1789..
அப்படித்தான் வலதுசாரி எனும் பெயரும் இடதுசாரி எனும் பெயரும் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் எழுதப்பட்டது..
அதற்கு முந்தைய உலகளாவிய இலக்கியங்கள் அனைத்தும் வலதுசாரி இலக்கியமென கூசாமல் தமிழ் இலக்கிய உலகம் புறந்தள்ளி குப்பையில் கொட்டிவிட்டது. இதைச் செய்தவர்கள் யார்..? தங்களை இடதுசாரி இலக்கிய அறிவுஜீவி அடையாள அட்டைகளை தாங்களே தயாரித்து அணிந்துகொண்டிருப்பவர்கள்தான்.
வலதுசாரி இலக்கிய அடையாளமாக தேசபக்தி எனும் கருத்தாக்கம் இப்போது பரவலாக புகுத்தப்படுகிறது. இந்திய தமிழ் இலக்கிய அறிவு போதாமையால் தேசபக்தியைப் பற்றிய எழுத்துக்கள் வலதுசாரி இலக்கிய அடையாளங்களானது ஆறுதலற்ற இலக்கியத் துயரம் தானே.. இதையும் மீறி தனி நபர் சுதந்திரம் சந்தைச் சுதந்திரம் எனும் கருத்தியல் திணிப்புகள் கூட இடதுசாரி தமிழ் இலக்கியத்திற்குள் எப்படிப் புகுந்ததென எவராலும் பதிவு செய்ய இயலவில்லை. தனி நபர் சுதந்திரமும் சந்தைச் சுதந்திரமும் வலதுசாரி வகைமையென்பது கூட அறியாதவர்கள் இந்த எளியவனை இலக்கிய அறிவற்றவன் என்றும் வெகுமக்களின் வாழ்க்கை முறை அறியாதவனென்றும் புழுதி பூசிய சொல்வீசி புளங்காகிதம் அடைகிறார்கள்.. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..
தமிழிலக்கிய இடதுசாரிகள் காட்டும் எழுத்துப்பிம்பச் சோற்றுப் பானையிலிருந்து ஒரு பருக்கைப் பதம் பார்க்க இப்போது உங்கள் விரல் நுனியில் வைக்கிறேன்..
ருஷ்ய கம்யூனிச இடது சாரி இலக்கியத்தைப் பற்றியும் தாஸ்தாவஸ்கி தர்ஜினேவ் மற்றும் டால்டாய் இவர்களைப் பற்றியும் நிறைய கட்டுக்கதைகளை தமிழ் இடதுசாரி அடையாள அட்டையுடன் நடமாடும் எழுத்தாளர்கள்.. கொட்டிப் பரப்பியிருக்கிறார்கள்.. இன்னமும் கொடிபிடித்து கூச்சலிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..பாவம் பரமபதத்திலிருக்கும் பிதாவும் மெதினாவரை ஓடிய வர்க்கத்தவர்களும் அவர்களை மன்னிக்கட்டும்..
இவான் சொனிஸோவிச்இன் ஒருநாள் வாழ்வு எனும் புத்தகத்தை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை.. என்பது இவர்களின் எழுத்திலிருந்தே புரிந்து கொள்வது சுலபம். அந்தப் புத்தகம் இப்போது அமேசானில் கூட மின்னணு நகல் வடிவில் கிடைக்கிறது...
நகல் எனும் வார்த்தை மேலைத்தேய இலக்கியங்களில் பகடிக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை..
இவான்சொனிஸோவிச் எனும் ஏழை தொழிலாளி எப்படி கம்யூனிச கொடுங்கோண்மையால் ஒவ்வொரு நாளையும் கழித்தார் என உலகிற்கு உரத்துச் சொல்கிறது அந்த உலக மஹா இலக்கியம். நம் திஜாரா வின் அம்மா வந்தாளைவிடவும் இன்னமும் நீண்ட நாட்கள் உலக இலக்கிய அரங்கில் அதன் ஆயுளை நீட்டித்துக்கொண்டுதான் இருக்கப்போகிறது. அது உலக கிளாசிக் தர வரிசையில் முதன்மையாக வைக்கப்படவேண்டிய அபூர்வ ஆக்கம். அந்தப் புத்தகத்தை எழுதிய அலெக்சாண்டர் சோலினியன் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டது ருஷ்ய இடது சாரி இலக்கியங்களால் இன்றும் புகழுப்படும் ருஷ்ய ஸ்டாலின் ஆட்சியில் தான்.
இன்றைய தமிழக ஸ்டாலின் ஆட்சியிலும் அரசாங்க ஊழியர்களும் ஏன் சுகாதாரத்துறையின் சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளிகளும் பெண்களும் சின்னஞ்சிறுமியர் உட்பட பெரும்பான்மை மக்களில் பலரும் அடக்குமுறைக்கு ஆளாவதை எழுத்தில் கொண்டு வருபவர்களை கூசாமல் வலதுசாரி எனச் சொல்லும் பொய் எழுத்துக்கள் தமிழ் இடதுசாரி இலக்கியமாகிப்போனது காலத்தின் துடைத்தெறிய வேண்டிய கறை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் சமகால இலக்கிய வாசகர்களிடம் இல்லை..
அலெக்சாண்டர் சோலினியன் 1970 ல் நோபல் பரிசு பெற்றவர். கூடுதல் தகவல்..
இந்திய இடதுசாரி இலக்கியம் தமிழ் பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் திராவிட கலாச்சாரமெனும் சொல்லாடல் புரட்டுப் புகுத்தலைச் செய்துகொண்டிருக்கிறது. தங்களுக்கு இணையானவர் இல்லையெனும் ஆணவமும் அதிகார துணையிருக்கும் துணிவும் இதன் காரணிகள். ஆகையினால் இவர்களை யார் இலக்கியம் பற்றிய கேள்வி எழுப்பப்போகிறார்கள்..?
தமிழ் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவர்களை இந்துத்துவா எனவும் வலதுசாரி எனவும் சங்கி எனவும் பகடி செய்வது இடதுசாரி இலக்கிய பின்நவீன போக்கின் புதுமையென பொய்சொல்லி இளைய தமிழ் இலக்கிய வாசகர்களை தவறாக வழி நடத்தும் இவர்கள் எந்த இலக்கியப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதே புதிராக இருக்கிறது..
சிறுபான்மை வாக்கு வங்கிக்காக மீண்டும் மன்னராட்சி முறையை புகுத்தும் திருட்டு திராவிட அரசியல் வெகுமக்களின் வாழ்வை வளமாக்கியிருக்கிறதா என இவர்களை யாரும் கேட்டுவிடக்கூடாதென்பதால் அட்டைக் கேடயம் ஏந்தி வாள் சுழற்றுகிறார்கள்..
பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையைப் பேசும் இலக்கியங்கள் எந்த வகைமையில் வந்தால் என்ன..மக்களின் வாழ்க்கையை அவர்களின் ஏழ்மையை அவர்களின் வியர்வையை டாஸ்மாக் மூலம் பிடுங்கித் தின்பனை, உன் தாத்தாவால் நாங்கள் தீண்டாமை அனுபவித்தோம் எனச் சொல்லி ஐந்தாம் தலைமுறை முற்படுத்தப்பட்ட ஏழைகளை இடஒதுக்கீடென ஏமாற்றுவதை.. அந்த அதிகார அக்கிரம சுரண்டல் சந்தையை இன்றைய அத்தகைய நிலைமையை எழுதுபவன் வெகுமக்கள் வாழ்க்கையைப் பற்றித்தானே எழுதுகிறான்.. இது எழுத்தில்லையா..இது இலக்கியம் இல்லையா.. கூச்சமின்றி ஆண்பெண் உறவை ஆடையின்றி எழுத்தில் கொண்டுவருவதுதான் தமிழிலக்கிய பின் நவீனமெனச் சொல்லும் உங்கள் பிதற்றலை உலகம் பார்த்துக்கொண்டு மெலிதாக கேலிப்புன்னகையை வீசிவிட்டுக் கடந்து செல்வது உங்களுக்குத்தெரியுமா..
முதலில் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தைப் பற்றிப் படியுங்கள்.. இந்திய தமிழ் கலாச்சார தொன்மை வாழ்வுமுறையை அதன் மேன்மைக் கலாச்சாரத்தை போற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.. போஸ்டர் ஒட்டியபடியே எழுபத்தைந்து வருடங்களாக உழைக்கும் கட்சியின் கடைமட்டத்தொண்டன் ஒரு நாள் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியும் எனும் நிஜ ஜனநாயகத்தை உங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் நடத்தும் உங்களின் விசுவாசத்திற்குகந்த கட்சிக்கட்டமைப்பிற்குள் புகுத்த இயலுமா எனப் பாருங்கள்..
பிறகு இந்த எளியவனின் எழுத்து வலதுசாரியா இடது சாரியா என விவாதத்தை நடத்தலாம்..
ராகவேந்திரர் படத்தில் ஆஸ்தான பண்டிதராக நடிக்கும் நடிகர்...பெயர் மறந்துவிட்டது... ரஜினியின் வாதங்களில் ஆழம் இல்லை என்பார்..
இதை வாசித்தவுடன் நீங்களும் அப்படித்தான் சொல்லப்போகிறீர்கள்..
தேவைப்பட்டால் இன்னும் ஆழமாக இலக்கியப் பேராழியின் அடியாழம் வரை உங்களை அழைத்துச் செல்லத் தயார்... மூச்சு முட்டி உங்கள் பொய் எழுத்துடல் மிதந்தால் இந்த எளியவன் பொறுப்பல்ல..
நன்றியும் அன்பும்..
ராகவபிரியன்



Tuesday, December 16, 2025

 HATRED IS BLUE AND UNFINISHED

From the day I could see things
through my Brahmin eyes
The entire world around me
shedding Brahmin hatred..
This glitch between casteism
is nothing less than that of Antisemitism
between Muslims and Jews..
One father and son suddenly open fire
on innocent jews in Australia...
Kangaroos jumped with shock and terror
They could not understand the algorithm
between Antisemitism and Brahmin hatred.
The entire world always becomes silent
on knowing the fact that
All terrorists are Muslims.
In Tamil and English, and in almost all languages
We poets, write poems
But could not count the
Antisemitism and Brahmin hatred
Today in Australia, we poets are counting
Bodies instead of similes and metaphors.
This incident will also be forgotten soon.
Tomorrow, another incident of
cutting the sacred thread of a Brahmin
Or shooting an innocent jew will definitely happen.
Certainly, that tomorrow will arrive.
And we poets will write poems on pseudo-secularism.
and tell the world about community solidarity.
So far...
It had happened at
Delhi, Kovai, Mumbai, New York, and Kashmir
and all other places except Australia.
Now the octopus of hatred reached its hands
at every knook and corner of this cosmic...
Till yesterday, Kangaroos were jumping with joy.
Now the entire world of Kangaroos is in
shock and terror...
was lit on the Deepa pillar..
Now the deepam is loitering its flames
on the verandah of courts..
The solution now lies at the bottom
of the ocean of humanity, which is
silent blue and unfinished...
How to make it float on the surface...?


 திராவிடவியல் என்பது நமது பண்டைய தமிழர் பண்பாட்டுவியலில் இருந்து இந்தத் தலைமுறையை விலகிச்செல்ல வற்புறுத்துகிறது..மார்கழியின் முக்கியத்துவத்தை அந்தப் பாரம்பரிய தமிழரின் பண்பாட்டு நீட்சியை ஆங்கில வருட இறுதியாண்டென்றும் இந்து தெய்வீக பணிகளைவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான முக்கியத்துவமளித்தும் சிதைக்கிறது. இன்றைய தலைமுறை மார்கழி விடியலில் உறக்கத்திற்கு முக்கியம் தரவேண்டுமென கற்பிக்கப்படுகிறது. திராவிடவியல் இன்றைய தலைமுறைத் தமிழர் பண்பாட்டைச் சிதைத்து ஆங்கில மற்றும் இஸ்லாமிய கலப்பு வாழ்வுமுறையைப் புகுத்தும் உத்திகளை வலிமையாக பின்பற்றுகிறது..

தமிழக வீட்டு வாசல்களெங்கும் விடியலில் ஆக்கிரமித்திருக்கும் பிருமாண்ட வண்ணக் கோலங்கள் சுருக்கப்பட்டுவிட்டன. தெருவில் குப்பை தின்னும் மாடுகளின் சாண வாசம் மனித மலத்தின் வாசத்துடன் இணைந்து வீசுவது பண்பாட்டுவியல் சிதைவின் வாசமாகிப் போனது. அதன் பொருட்டே பரங்கி பூசணி பூக்களுக்கான பீடங்களாகும் மாட்டுச் சாண உருண்டைகள் தமிழர் கைகளால் இப்போது தொடப்படுவதேயில்லை..
விடியலில் குளித்து நீண்ட கேசத்தின் ஈரம் சொட்டும் தலையில் துண்டு சுற்றி கோலமிடும் பெண்களைக் காண பனியில் நனையும் இளைய தமிழ் இளைஞர்கள் இப்போதெல்லாம் வெளி நாடுகளுக்கு துரத்தப்பட்டு விட்டார்கள்.. அவர்கள் சுருட்டி எடுத்துச் சென்ற பண்பாட்டு பாயின் தடங்களில் மார்கழி விடியலில் திராவிடவியல் டாஸ்மாக் வெளிக்கொணர்ந்த வாந்திகள் ஆக்கிரமித்து அருவருப்பூட்டுகின்றன. அருவருப்பூட்டும் உத்திதான் சிதைக்கும் சுத்தியலடியென அதிகாரக் கைகளில் சுமந்து திரிகிறது திராவிடவியல். பண்டைய பண்பாட்டின் மேல் பாசம் கொண்ட தமிழன் அத்தடத்தின் மேல் கால் வைக்கக் கூச்சப்படுகிறான். அதனால் தான் அவன் மார்கழிவிடியலில் ஆதவன் வந்தபின்பே விழித்தெழுகிறான் அல்லது தொடந்து உறக்கம் கொள்ள தூண்டப்படுகிறான்.
பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய கோவில் கலாச்சார பண்பாட்டுச் சிதைவு திணிப்புகளையும் மீறி மீந்திருக்கும் ஒன்றிரண்டு கிராமத்துக் கோவில் வாசல்களில் தமிழ் பண்பாட்டு வெண்பொங்கல் கலப்படமற்ற பசுநெய் ஒழுக கொடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதில் மிருகக் கொழுப்பைக் கலக்கும் திராவிடவியல் உத்தி கொடுத்த அச்சம் அதனை தமிழன் வாங்கவிடாமல் விலகிச் செல்ல வைப்பதிலிருந்து இன்றைய தமிழ் மார்கழியின் பண்பாட்டு விலகலின் தூரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
என்ன செய்வது தூரங்களைக் கடந்தபின்பு தான் அவ்விடத்தை இணைக்கும் திட்டங்களைத் தீட்ட இயலும்.. விரைந்து விலகிச் சென்றுகொண்டிருக்கும் நம் தமிழர் பண்பாட்டை மீண்டும் இம்மண்ணில் கட்டி நிறுத்த வேண்டுமெனில் போலி திராவியலைப் புறந்தள்ளியே ஆகவேண்டும். இந்த மார்கழியில் விடியற் காலையில் கண்விழிப்போம். விடியாத போலி திராவிடத்தைத் துரத்தும் மாற்றம் நோக்கி பார்வை நோண்பும் பாவை நோண்புமிருப்போம்.
ராகவபிரியன்..



Saturday, December 13, 2025

 இலக்கிய வலதுசாரிகள்..7

[ சங்க காலம் ]
காஞ்சியின் அருகில் கூரம் என்றொரு குக்கிராமம்..ஆனால் ஆன்மீக வரலாற்றில் அழிக்கவியலா இடம் பெற்ற புண்ணிய பூமி..வைணவ புரட்சித் துறவி ராமானுஜரின் அத்யந்த சிஷ்யர் பிறந்த ஊர் இது. இந்த அரங்கனின் ஆதியடிமையின் பெயர் கூரத்தாழ்வான். அவரின் ஊர் தான் கூரம்.
கூரத்தின் பூமிப்பதிவுகள் தாமல் என்ற ஊரில்தான் செய்யப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் தாமலில் தான் இருக்கிறது. தாமல் என்ற பெயர் வித்தியாசமாக இருக்க அவ்வூருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கிருக்கும் வெகுமக்கள் கூடியிருந்த தேனீர் கடையொன்றில் இவ்வூரின் பெயருக்கான பொருளென்ன என வினவ நேர்ந்தது..
பாரம்பரிய பெருமை பேச்சில் சுகம் காணும் முதிய தாமல் மண்ணின் வெகுமக்களில் மூத்த வயோதிகப் பெரியவர் ஒருவர் சொன்னது இதுதான். தாமற்பல்கண்ணனார் என்று இங்கே கல்வெட்டில் ஒரு பெயர் செதுக்கப்பட்டு இருப்பதாகச் சொல்ல வியப்பில் தேனீர் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
தாமற்பல்கண்ணனார் என்பவர் பிராமணர் என்று புற நானூற்றுப் பாடலில் சொல்லியிருப்பதாக வேறு அவர் கூடுதல் தகவல் சொல்லிவிட்டு பாமர முகபாவத்தை மாற்றிவிடாமல் தேனீரைச் சுவைக்கத்தொடங்கினார்..
ஆஹா ஒரு வலதுசாரி சங்க இலக்கிய எழுத்தச்சர் கிடைத்த மகிழ்வில் அவரைப் பற்றி வெகுமக்கள் ஊடகத்தில் தேடி கண்டடைந்ததை அப்படியே கீழே தருகிறேன்..
சோழன் மாவளத்தான் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பினன். ஆயினும் நல்லதன் நலமுணரும் நயம் மிக்கவன். ஒருகால் இவனும் ஆசிரியர் தாமற்கண்ணனாரும் வட்டாடினர். வுட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை அறியாமல் அவர்க்கீழ் மறைந்துவிட்டதாக அதனைப் பின்பு உணர்ந்த மாவளத்தான் வெகுண்டு அவரை அவ்வட்டினால் எறிந்தான். உண்மை கூறவும் ஓராது வெகுண்டெறிந்த அவன் செய்கையை இகழ்ந்து அப்புலவர் “வேந்தே நின் செயல் பொருந்துவதன்று; நின் குடிப்பிறந்தோர்க்கு இச்செயல் இயல்பன்றாதலின் நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன் என வருந்தி உரைத்தார். அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை உணர்ந்து நாணினான். இந்நிகழ்ச்சியை உரைக்கும் பாடலில் கிள்ளியின் தம்பியாகிய தாமற்பல்கண்ணனார் புறவின் பொருட்டுத் துலை புக்கவனின் வழித்தோன்றல் ஆவார். அவனது முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார். இச்செயல் உனக்குத் தகுமோ? உன் பிறப்பில் ஐயமுடையேன் என்று கூறியதைக் கேட்டு நாணியிருந்த மாவளத்தானின் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து “நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப் பாராட்டுவதாக“நிலமிசை வாழ்ந ரலமர றீரத்…..என்ற புறநானூற்றுப்பாடல் (43) அமைந்துள்ளது.
தாமற்கண்ணனார் என்பவர் பார்ப்பனர். புலமைமிக்கவர். காஞ்சிபுரத்திற்கு மேற்கில் உள்ளதோர் நல்ல ஊர். இடைக்காலச்சோழ வேந்தர் காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதை இங்குள்ள கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வூரைத் தாமர் (ளு.ஐ. ஏழட. ஏ. 1004. யு.சு. 139 ழக 1896) எனக் குறிப்பிடுவதால் தாமற்பல்கண்ணனாராக இருக்கலாம் என்பர். பல்கண்ணன் என்பது இந்திரனைக் குறிக்கும் பெயராதலின் இவர் இவ்வாறு பெயர்பெற்றனர் என அறியலாம். பார்ப்பார் நோவன செய்யார் என்ற பாடலடி இக்குலத்தாரின் சிறந்த பண்பை எடுத்துரைக்கிறது..
அந்த வலதுசாரி சங்க இலக்கியப் பாடலையும் கீழே தருகிறேன்..
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
'நின்னான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய்போல் நனிநாணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்' எனக்
காட்டின; ஆகலின் யானே பிழைத்தனென்!
சிறக்க நின் ஆயுள்; மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
வெகுமக்களுக்கான இலக்கியத்தில் சிறுபாண்மைக்கான இடதுசாரி சிந்தனைகள் சங்ககாலத்தில் இல்லை என்பதே வரலாற்று நிஜம்..
ராகவபிரியன்




  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...