இதற்கு முன் அறிமுகமற்றவர்களிடையே சுவரொன்றைக் கட்டவியலுமா. நதியின் குறுக்கே நிற்கும் நாணல் புதர் இடம் வலமாய் நீரோட்டத்தை திசைதிருப்ப முடியுமா..
இதுபோன்ற கேள்விகளுக்கு இல்லை எனும் பதில் தருவோர் வாசகர்கள்.. ஆம் முடியும் என பதிலுரைப்போர் இலக்கிய கர்த்தாக்கள்..
1980ல் ஒரு உலக இலக்கிய இருண்ட நாள்..ருஷ்ய ஸ்டாலினின் ஆதரவாளரான ஹில்மேன் ஒரு நேர்மையற்ற எழுத்தாளர் என மேரி மெகார்த்தி எனும் இலக்கிய விமரிசகர் குற்றம் சாட்டுகிறார்.
விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியோ திறமையோ அற்றவர்கள் தங்கள் தொழிலில் உச்சம் தொடுவது கடினம் தானே..
தன் மீது அவதூறு பரப்பிவிட்டதாக மேரி மெகார்த்தி எனும் பெண் இலக்கிய விமரிசகர் மீது வழக்குத் தொடுக்கிறார். அவர் இழப்பீடாக கேட்ட தொகை சில மில்லியன் டாலர்கள். அது மட்டுமல்ல.. மேரி மெகார்த்தி ஸ்டாலினை எதிர்க்கும் எதிர் இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்.. விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளவியலாத ஹில்மேன் 1984ல் இறந்து போகிறார். வழக்கும் தள்ளுபடியாகிறது.
நம் செந்தமிழ் நாட்டில் பாரதி ஷெல்லியைக் காப்பியடித்தாகச் சொன்ன இலக்கிய பிராமண எதிர்ப்பாளர்கள் நிறைய இருந்தார்கள்..இன்றும் இருக்கிறார்கள்..இனியும் இருப்பார்கள்.. ஆனால் பாரதி மரணமற்ற வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருப்பான்..
The Isles of Greece, the Isles of Greece
Where burning Sappho loved and sung,
Where grew the arts of war and peace
Where Delos rose, and Phoebus sprung
Eternal summer glides them yet…
மேற்கண்ட ஷெல்லியின் கவிதையை பாரதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே.....
எனும் கவிதையாக தழுவி எழுதினார் என மனசாட்சி இல்லாமல் குற்றம் சாட்டிய இலக்கிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நம் தமிழிலக்கிய உலகத்தோர்..
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்மீது மட்டும் அல்ல அவர் ஒரு பிராமண எழுத்தாளர் என்பதால் அவரின் எழுத்துக்கள் மேலும் பொறாமை கொண்டவர்கள் பலர். அவரின் படைப்புகள் மேலை இலக்கிய காப்பிகள் என்று கூசாமல் சொன்னது வேறு எவரும் இல்லை.. நம்...புதுமைப்பித்தன் தான்..
சாரதையின் தந்திரம் சிறுகதைத் தொகுப்பு – இதில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சிசிர் குமார் கோஷ் எழுதிய “Glimpses of Indian Life” தொகுப்பில் உள்ளவற்றைத் தழுவியதாம்.
புது ஓவர்சீயர் சிறுகதை – இது பிரேம்சந்தின் நமக் கா டரோகா சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (நான் இரண்டையும் படித்திருக்கிறேன். மோசமாக காப்பி அடித்திருக்கிறார், பிரேம்சந்தின் அருகே கூட வரமுடியவில்லை.)
காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம் – இது மார்க் ட்வெய்னின் Cannibalism in the Cars சிறுகதையின் அப்பட்டமான காப்பி. (மூலமும் சரி, தழுவலும் சரி, என்னைக் கவரவில்லை.)
ஏட்டிக்குப் போட்டி – இதில் பல கட்டுரைகள் ஜெரோம் கே. ஜெரோமின் Three Men in a Boat புத்தகத்திலிருந்து சுட்டவையாம்.
வீணை பவானி – பால்சாக்கின் Opera Singer சிறுகதையின் தழுவலாம்
இதுபோல எத்தனையோ அவதூறுகளைத் தாண்டி சாதித்தவர்கள் உலக இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்து தமிழ் உள்ளவரை மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இருப்பார்கள்..
இடிப்பாறை இல்லா ஏமரா [இலக்கிய] மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்..
அவதூறு ரசாயணக் கலவையை இதுவரை நேரில் பார்த்திராத ஒருவரின் முகத்தில் வீச நெஞ்சுரம் அற்ற இலக்கிய கர்த்தா ஒருவரால்தான் இன்றைய பின் நவீன இலக்கிய உலகில் இயலும்.. அதுவும் தொழில் நுட்பம் அதன் உச்சத்தில் உள்ள இக்காலத்தில்..இதுவும் வரலாறு..
ஆனால் கொடிய ரசாயணத் தாக்குதலால் முகம் சிதைந்து மூச்சிழந்தாலும்... முன் தலை முழுவதும் முடியுதிர்ந்து பின் தலையில் கொஞ்சம் மீந்திருந்தாலும்..அவதூறு சிதையில் கொடிய தீயிட்டுக் கொளுத்தப்பட்டாலும்..மரணமற்ற அமர வாழ்வு இலக்கியத்தில் விதிக்கப்பட்டிருக்கிறதெனில் பீனிக்ஸாக மீண்டும் உயிர்த்தெழுவான் அடர்முடித் தலையோடு..பாதிக்கப்பட்ட கவிஞன்/எழுத்தாளன்/இலக்கிய விமர்சகன்..
அவனின் சிதைந்த முகம் ஆகப்பொலிவுடன் வரலாற்றுச் சுவரில் புத்தம் புதியதாய் இலக்கியப் பொலிவுடன் அழிக்கவியலாமல் செதுக்கப்பட்டிருக்கும்...
காற்றுள்ள வரை இந்தக் கவிதைகளும் வாழ்ந்திருக்கும்
ஆற்றலுடன் அரங்கனருள் அற்புதமாய் பெற்றுத்தரும்..
[திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்]
ராகவபிரியன்
No comments:
Post a Comment