Tuesday, January 13, 2026

 



இந்துக்களின் போகிப் பண்டிகையை பொங்கல் கொண்டாட்டங்களை 16 ம் நூற்றாண்டிலேயே அப்போதைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் நசுக்கத் தொடங்கினார்கள்.. அக்பர் தீன் இலாகி என்ற மதச்சார்பின்மையைக் கடைபிடித்தார் எனும் பொய்யை வரலாறாக்கி நம்ப வைத்த கயமையை இந்த போகியிலாவது தீக்கிரையாக்குவோம்..

அன்றைய அக்பர் காலத்தில் தான் அவரது மகனான ஜஹாங்கீருடன் ஒன்றாக படிக்க வைக்கப்பட்டான் அக்பரின் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு மதம் மாற்றப்பட்ட ஏழைத்தாயின் மகனான துல்லா பட்டி எனும் பஞ்சாபின் ராபின்ஹூட். அந்த வீரமிகு இந்துப் போராளி இந்துக்களின் அறுவடைக் கொண்டாட்டங்களான லோரி திருவிழாவை நியாயமற்ற வரிவிதிப்பால் நசுக்கிய அக்பரை எதிர்த்துப் போரிட்டான். அது மட்டுமல்ல ஏழை இந்தியப் பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக முஸ்லீம் மன்னர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப் பட்ட கொடுமையை எதிர்த்து கொரில்லா போரிட்டு ஜஹாங்கீரையே சிறை பிடித்தான். பிறகு ஜஹாங்கீர் தன் சகோதரன் மட்டுமல்ல தன் பால்ய நண்பனும் கூட என்பதால் முகிழ்த்த தீராத பாசத்தின் மிச்சத்தால் விளைந்த கருணை இதயம் சொன்னதால் விடுதலை செய்தான். போராளிகள் எப்போதும் தங்கள் இதயத்தில் தீராத தூய அன்பு கொண்டவர்கள்..
ஆனால் ஆட்சியாளர்கள் இதயத்தில் அரக்கனை குடியேற்றியவர்கள்..அதிகார போதையில் நீதியை மறந்தவர்கள்.. மக்களும் போதையிலேயே இருந்தால் அ நீதியை சகித்துக்கொள்வார்கள் என்பதால் சோமபாணம் சுராபாணத்தை இன்றளவும் மலிவாக கிடைக்கச் செய்பவர்கள்..அந்த மொகலாய அரக்கன் அக்பர்தான் லாகூரில் மாவீரன் துல்லா பட்டியை தன்னை எதிர்த்துப் போரிட்ட தன் மகனையே தூக்கிலிட்டவன். அந்தத் துயரப் பொழுதில்தான் இந்தியத் தாய் தன் நழவிய பாராம்பரிய புடவையைப் பிடித்துக்கொண்டு தன்மீது வலிந்து போர்த்தப்பட்ட பர்க்காவை கிழித்தெறிந்தாள்..
அராஜகத்தை அதன் மீதான எதிர்ப்பைக் காட்டி போராடும் போராளியை பொதுவெளியில் தூக்கிலிட்டும் கல்லால் அடித்தும் கொல்லும் அதிகாரக் கோழைத்தன்மையை இந்த மண்ணிலிருந்து இன்னமும் எவராலும் அகற்றவியலவில்லை. வெட்கம்..
முஸ்லீம் மன்னனான அவுரங்கசீப் போகிப் பண்டிகையை இம்மண்ணிலிருந்து அறவே துடைத்தெறிய முஸ்லீம் அல்லாதவர்கள் இந்துவாய் அவர்களின் தாயகத்தில் உயிர்த்திருக்க வேண்டுமெனில் ஜெசியா வரி செலுத்த வேண்டுமென உத்தரவிட்டவன்..அவுரங்கசீப்தான் அறுவடைக் கொண்டாட்ட காலங்களில் காசியிலும் மதுராவிலும் இந்துகள் கோவில் திருவிழாக்களில் பெரும் திரளாகக் கூடுகிறார்களென அந்தக் கோவில்களை இடிக்க உத்தரவிட்டவன். இந்த உண்மை வரலாற்றை நம் தமிழ்







மண்ணில் மறைத்து சர்வமத பொங்கல் கிண்டும் நிழற்பட சுற்றுக்களை சமுக ஊடகங்களில் சுழலச் செய்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டும் இன்னமும் உயிர்த்திருக்கும் போகிப் பண்டிகையை நூதன முறையில் அகற்ற நினைக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் சனாதன எதிர்ப்புச் சிந்தனைக் குரூரத்தையும் போகிக் குப்பையுடன் சேர்த்தே கொளுத்தியாக வேண்டுமென சூலுரைப்போம்..
பிறகான ஆங்கிலேய ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பஞ்ச காலங்களில் விளைச்சலே இல்லையெனினும் வரிசெலுத்த விதை நெல்லைக்கூட பிடுங்கித் தின்ற ஆங்கிலேய அரசு போகிக் கொண்டாட்டங்களை இனி துளிர்க்க வியலாத சாம்பலாக்கிவிட்டதாக கொக்கரித்தது...
ஆனால் அப்போது தான் ஒவ்வொரு இந்துவின் வீட்டிலிருந்தும் வெளியேறிய போகிபுகையில் ஒரு போகிப்பீனிக்ஸ் உயிர்த்தெழுந்து ஆங்கில அரசாங்கத்தின் கண்முன்னே சிறகுப் புயற்புழுதிக்காற்றை விசிறி அவர்களின் முதல் கண்ணிர்த் துளியை வெளிக்கொண்டுவந்த வரலாறு நம் தலைமுறைக்கு இது நாள் வரை அறியத்தரவே இல்லை என்பது எவ்வளவு துயரம்..
மூட நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லால் இந்துக்களின் பண்பாட்டை நாகரீகத்தை கொண்டாட்டங்களை தடுத்தது மதமாற்ற உத்தி என்பதை இன்னமும் தமிழ் மண்ணில் இல்லை இல்லை போலி திராவிடம் எனும் சொல் இயந்திரத்தால் நம் மண்ணின் வளமையை வருவாயைத் திருடி அள்ளிச்செல்லும் திருட்டு ஆட்சியாளர்களின் தந்திரத்தை இம்மண்ணின் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மேலதிக வேதனையின் நீட்சி. மூட நம்பிக்கை எனும் வார்த்தையை முதலில் நாம் போகிக்குப்பைகளுடன் கொளுத்தியே ஆகவேண்டும்.. இந்து மதத்தையும் அதன் பாரம்பரிய பெருமையையும் இம்மண்ணிலிருந்து எவராலும் அகற்றமுடியாதென நாம் நிச்சயமாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்..நம்பிக்கை தானே எல்லாம்... அந்த நம்பிக்கையை எப்படி இன்று செயலில் காட்டப்போகிறோம்.. சிந்திப்பீர்கள்..
நம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போகிக்குப்பைகளை கொளுத்துவோம். சூழல் மாசுபாடற்ற நம் பாராம்பரிய முறையில் தீய சக்திகளின் துர்போதனைகளையும் சேர்த்தே கொளுத்துவோம்.. அப்படி எரியும் தீயின் உயிர்த்துடிப்பை கையிலேந்தி நாளை பரம் குன்றத்தில் பிரளயத் தீயென வாழ்வின் அணையா ஒளி தீபம் ஏற்ற பாதுகாப்பாய் இரு கைகளையும் அரணாக்கி பொய்புழுதி கலந்து வீசும் காற்றைத் தடுத்து உண்மையுடன் நம்பிக்கையுடன் தீரமுடன் நெஞ்சில் உரமுடன் எடுத்துச் செல்வோம்..
இது வெறும் போகிப் பண்டிகை மட்டுமல்ல..நம் முன்னோர்களின் தியாகத்தால் இன்றளவும் உயிர்த்திருக்கும் நம் பாராம்பரியத்தின் போராட்டத் தியாகத் திருநாள்..
அனைவருக்கும் இனிய லோரி போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ராகவபிரியன்..


No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...