Monday, January 26, 2026

 





நேற்று காஞ்சியில் காய்கறி வாங்கச் சென்றாக வேண்டியிருந்தது. திருச்சியில் நான் பிரபலம் என்பதால் காய்கறிக் கடைகளில் கூடியிருக்கும் வாடிக்கையாளர்கள் சட் டென விலகி பக்கத்துக் கடைக்குச் சென்றுவிடுவார்கள்.. தெனாலிராமனைத் தெரியாத விஜயநகர காய்கறி கடை எதாவது இருக்கிறதா என்ன.. ஆனால் காஞ்சியில் இருந்தது. நேற்று காஞ்சி காய்கறிகடையில் கூட்டம் அப்பிக்கொண்டிருந்தது.. கொஞ்ச நேரம் தள்ளி நின்றுகொண்டிருந்தேன்.

காய்கறிக் கடைக்காரர்..அய்யா ஏன் தள்ளி நின்று கொண்டிருக்கிறீர்கள்..
உ..ரா.பி.. வெண்டைக்காய் முனை உடைத்துப் பொருக்கி எடுக்க வேண்டும்.. கூட்டம் குறையட்டும்..அதான்..
கா. க.. ஐயா முனை உடைத்து காய் வாங்க அனுமதி இல்லை..வேறு கடை பாருங்கள்..
சொல்லிவிட்டு கொஞ்சம் கூட கருணையின்றி விரட்டினார். ஒரு பிரபலம் காய் வாங்க வந்ததை ரீல்ஸ் எடுத்துப் போட்டால் போதுமே.. கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாமே... அவரின் அறியாமை வியப்பில் ஆழ்த்த..
உ.ரா.பி.. என்னைத் தெரியவில்லையா..
கா.க...சொல்லுங்கள் ஐயா.. இங்கே கூட்டம் அதிகம்..பொருக்கி எடுக்க வழியில்லை. என் கடையில் காய் புதிது..கனி புதிது.. சுவை மிக்க நவகாய்கள் என்னாளும் அழுகாத இளம் காய்கள்..
இந்த இடத்தில் தான் தெனாலி ராமனின் அறிவு அட்டகாசமாய் மின்னியிருக்கும்..வயதான நட்சத்திர மின்னும் சக்தி மங்கத்தானே செய்யும்..போகட்டும்..பரிதாபமாக..
உ.ரா.பி..நீங்கள்... தமிழ் எழுத்தாளரா...
கா. க... கொஞ்சம் எழுதுவேன்.. சரி எதுக்குக் கேட்கிறீர்கள்..
உ.ரா.பி...இல்லை என்னைத் தெரியவில்லையே அதனால்தான் கேட்கிறேன்..
கா.க. வேலை நேரத்தில் தொந்திரவு செய்கிறீர்கள்..உங்களைத் தெரியவில்லை...ஆனால் ஒரு வரி உங்களுக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..
சொல்லிக்கொண்டே காய்கறி வியாபாரத்தையும் கனக்கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தார்..
உ.ரா.பி...சொல்லுங்கள்..
கா.க...we are all in the gutters but some of us are looking at the stars...
குதிரைவாங்கச் சென்ற தெனாலி ராமன் விஜய நகரவீதிகளில் குதிரையின்றி கம்பிரமாக வானத்தைப் பார்த்தபடி திரும்பி நடக்கத் தொடங்கினான்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...