Monday, January 12, 2026



பொங்கல்ன்னாவே சிக்ஸ்டீஸ் கிட்ஸுங்களுக்கு அதாவது என்னைப் போன்ற கிழங்களுக்கு எய்ட்டீஸ்ல பண்ண காதல் ஞாபகத்துக்கு வந்துடும்..

அப்பெல்லாம் லவ் ஈஸ் பார் த ரிச் அண்ட் நாட் ஃபார் த அனெம்ப்ளாய்ட் ன்னு எதோ ஒரு படத்துல வர்ற வசனம் லவ் பண்ற பொண்ணப் பார்க்கறப்பெல்லாம் மனசுல ஓடும்..
உடனே நான் தலை குனிஞ்சுடுவேன்.. பஸ்ல காலேஜ்க்குப் போகும் போது தான். காலேஜ் ஸ்டாப்பிங்கல இறங்கறவரைக்கும் நான் பார்க்கும் போதெல்லாம் என்னோட லவ்வரும் தலை குனிஞ்சிண்டே தான் வருவா.. இந்த அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்..ங்கறத எங்க லவ் லைப்ல காலேஜ் முடியறவரைக்கும் நடக்கவே இல்லைங்க... அதாங்க எய்ட்டீஸ் லவ்வோட தெய்வீகம்..
அப்போதாங்க தமிழ் நாட்ல தெலுங்கு தெரியாமயே மரோசரித்ராவ பார்த்து புல்லரித்து காதலித்த டைம்.. பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சாலும் பாவாடை தாவணி செயின்ல மாட்டிடும்ங்கறதால சைக்கிள்ல வந்த ஒரு தேவதையைக்கூட அப்ப நாங்க எங்க ஊர்ல பார்க்கலீங்க..
ஆனா பாருங்க..ஒரு நாள் அதுதாங்க.. போகிக்கு மொத நாள்..என்னோட தேவதை சைக்கிள்ல காலேஜ்க்குப் போறத பார்த்தேங்க..எய்ட்டீஸ்ல ஒரு சாதாரண அனெம்ப்ளாய்ட் ஏழைக் காதலனுக்கு அமைஞ்ச ரேர் அமெங்க் த ரேரஸ்ட் லவ் சிச்சுவேஷன மிஸ்பண்ணலாங்களா..ஒடனே என்னோட ஓட்ட சைக்கிள எடுத்துட்டு கமல் மாதிரி பாலோ பண்ணலாம்னு பொறப்பட்டுட்டேங்க.. ஒடனே..
ஏத்தீக்க பூங்குணூ ஏதும்ம ஹேசினு கலிப்பிந்தி ஏனிந்த அனுபந்த மெளனம்னு
பாட ஆரம்பிச்சேங்க. அப்ப பார்த்து என்னோட சைக்கிள் செயின் கழண்டிடுச்சு..
சரின்னு இது தெய்வச் செயலாள நடந்த தெய்வீக காதல் சாபம்னு நெனைச்சேங்க.. ஒடன..இந்த சினிமா சீன்ல லவ் பண்றப்ப ஹீரோ சைக்கிள சரி பண்றாமாதிரி லவ்வர பார்ப்பார் பாருங்க. அந்த சிச்சுவேஷன் அமைஞ்சதா நெனைச்சேங்க.. காதல்ல சாபம் எப்பவுமே வரம் தாங்க... டக்குன்னு..அதே மாதிரி பார்வைய சைக்கிள் வீல் வழியாவுட்டேங்க...எதிர்ல சரிதாவ விட சூப்பரா சாகர சங்கம ஜெயப்ரதா எதிர் வூடல என் கண்களை நோக்க..அட அடா வரம்னா வரம் தாங்க.. பட் ஒரு செகண்ட்ல மறுபடியும் அது சாபமா மாறுனதாங்க எய்ட்டீஸ் காதலோட அவலம்ன்னா நீங்க நம்பவா போறீங்க..ஆனா அதாங்க நெசம்..அந்த சமயத்துல என் முன்னாடி வந்து நிக்கறா என்னோட சரிதா...இப்ப புரியும்னு நெனைக்கேங்க...
சரி ஓகே.. போகட்டும்..இந்த ஏழை மோகனுக்கு ஜெயப்ரதாவெல்லாம் ரொம்ப ஓவர்னு நீங்க சொல்றது கேக்குது...ஆனா தெய்வீக காதல்ங்கறதால...
வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் னு
பாட்ட மாத்திப் பாடி சமாளிச்சேங்க..ஆனா சரிதா வாடிவாசல்லேர்ந்து தும்பறுத்து கொம்பு சொழட்டுற செவலைக் காளை மாதிரி என்னை பார்த்த பார்வை இருக்கே...அதெல்லாத்தையும் எழுத்துல இல்லீங்க என் மனசுல ரத்தத்துல எழுதி வச்சிருக்கேங்க...
ஒடன..சாரி ...அப்படீன்னு சரிதாகிட்ட வழிஞ்சேனா
...வைகைறையில சைக்கிள் அறுந்ததால பாதிவழியில எவளையோ பார்த்து வழியறையான்னு ஒரு கேள்வி கேட்டுப்புட்டாங்க...
ஆனா தெய்வீகக் காதலனுக்கு தாடி வளரலாம்..கோபம் வளரமட்டுமில்லீங்க..மொளைக்கவே கூடாதுங்களா... பட்டுன்னு பொங்கல் வாழ்த்து கார்ட அப்பெல்லாம் அதுதாங்க ட்ரெண்டு.. எடுத்து கொடுத்துட்டேங்க..
இப்ப தாங்க அவ பாட ஆரம்பிச்சா...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன். அப்போது நீயும் இங்கேயே இருந்தா ஒன்னோட நான் இருப்பேன்..இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்னு...
பாடி எங்க காதல் குப்பையை போகி நெருப்புல கொளுத்தி போட்டுட்டு சைக்கிள்ல பறந்து போயிட்டாங்க...
எல்லாம் என்னோட காதல் சாபம் தான்.. என்ன பண்றது..சைக்கிள் செயினை சரி படுத்திட்டு எழுந்தா...ஹேண்டில் பார புடிச்சுகிட்டு வருங்கால மாமனார் மீசைய முறுக்கிட்டு எதிர்ல நிக்கறாரு...
ஏண்டா என் பொண்ணுகிட்ட பொங்கல் வாழ்த்தா குடுக்கற.. என் வீட்டு பக்கம் வா... ஒன் காலை வெட்டறேனா இல்லையான்னு பாரு
ன்னு சொல்லிட்டு அவரு என்னோட சைக்கிள எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு...
இப்பவும் கூட போகிக்கு முன்னாடி எங்க அண்ணாமலை காலை ராஜ் தாக்கரே வெட்டறேன்னு சொன்னாராமே... அதாங்க... பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா..இப்ப இந்த போஸ்ட்...
ராகவபிரியன்..

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...