Friday, February 20, 2026






 பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது இருத்தலிய நிஜத்தின் பதிவேடுகள்..அறுபத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்ததற்காக மட்டுமல்ல.. சமூக வாழ்வியலில் ஏதோ ஒரு சிறு பங்களிப்பையாவது பதிவு செய்ய இயன்றததற்காகவும் தான் சக மானுடத்தின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள் இருத்தலிய நிஜம். இது மெய்.. ஆனால் மெய்யியலில் வாழ்த்துக்கள் என்பது இடு பொருள் மறுப்பின் தத்துவமாக பார்க்கப்படுகிறது. நீட்ஷே அதனால் தான் இருத்தலிய நிஜத்தின் அவசியம் பற்றிய தத்துவங்களை விட்டுச் சென்றிருக்கிறார்..

வாழ்த்துக்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவின் மூலம் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை பதிவு செய்துவிடுவது முக நூல் பண்பாட்டுத் தளத்தின் உத்தியாக பார்க்கப்பட்டது. அதனால் உங்கள் ராகவபிரியனும் அதையே பின்பற்றினான். ஆனால் மெய்யியல் தத்துவத்தின் பொருள் மறுப்பின் விதி, இந்த ஒற்றை நன்றி எனும் வார்த்தையைக்கூட இருத்தலிய போதாமையை உணர்த்துவதாகக் கூறுகிறது..
ஜீன்பால் சாத்ரே இருத்தலியல் என்பது இருத்தலின் பயனைச் சொல்வதல்ல என்று சொல்லிச் சென்றது அதிர்வைத் தருகிறது.. வாழ்த்து என்பது இருத்தலிய நிஜத்தின் ஒப்புகை பதிவு. நன்றி என்பதே இருத்தலிய நிஜத்திற்கான ஒப்புகைப் பயன்.
ஆதலால் இவ்வாண்டு ஒவ்வொரு வாழ்த்துக்கும் தனித்தனியாக நன்றியைப் பதிவு செய்ய முடிவானது. இருத்தலிய நிஜத்தின் ஒப்புகைப் பதிவை பதிவு செய்தாக வேண்டுமெனும் தீர்மாணம் இதயக் கடலின் நீர்மூழ்கியென மிதந்து அடியாழப் படுகை வரை சென்றது. அங்கே மெய்யியலின் பொருள் மதிப்பு விதியை புறந்தள்ளும் பவளப் பாறைகளை புறம் தள்ளி நன்றி எனும் முத்துச் சிப்பிகளை அள்ளிவர இயன்றது..
இந்த அறுபத்தேழாவது பிறந்த நாளில் முக நூல் மூலமும் நேரிலும் உள்பெட்டியிலும் மின்னஞ்சல் மூலமும் உங்கள் வாழ்த்துக்களால் இந்த எளிய உங்கள் ராகவபிரியனின் இருத்தலிய நிஜத்தை கனக்கச் செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனும் வெண்மை பளீரிடும் உள்ளத்து முத்துவை பரிசளிக்கிறேன்..
இந்த எளியவனின் கண்ணில் பட்ட வாழ்த்துக்களுக்கான நன்றியினை உளமார்ந்து நெஞ்சின் ஆழத்திலிருந்து பீறிட்டடிக்கும் நன்றி ஊற்றிலிருந்து நன்றி எனும் ஒரு செம்பு உயிர் நீரை உங்களின் கண்கள் பருகத் தர இயன்றிருப்பதில் நிஜம்மாகவே பெருமிதம் கொள்கிறேன்..
இனி உங்கள் ராகவபிரியன் ஒருபோதும் மரிக்கப்போவதில்லை.. அவனின் எழுத்தும் தான்..
வாழ்த்துக்கள் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அரங்கன் அருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்..
என்றென்றும் நன்றியும் அன்பும்..
ராகவபிரியன் தேஜஸ்வி..

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...