மனித வாழ்வின் காய்கறி வாங்கும் செயல் வகைமையென்பது தனித்துவமானது..அதுவும் ஒரு மழை நாளில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாங்கும் செயல் வகைமை சிந்திக்க வைக்கும் வல்லமையுடையது.. ஒரு காய்கறிப் புலத்தினுள் கொம்புடைய மாடுகள் சேற்றில் அனாயாசமாய்ச் சுற்றி வந்து அதற்கான காய்கறித் தீவனங்களுக்கான உத்தியைக் கட்டமைக்கும் நேர்த்தியை நனைந்தபடியே ரசித்தபடி எனது வாடிக்கைக்காய்கறி கடையில் நிரூபிக்கப்பட்ட புரிதல் உள்ள விற்பனை நுட்பமறிந்த பெண்மணியிடம்..
உருளை என்னா வெல...என்று கேட்டேன்..
இன்னா சாமி..தாடி சுருள் சுரூளா அழகாகீது..இன்னா வெசயம்... அவள் விலை இன்னும் சொல்லவில்லை...
அத வுடும்மா..உருளை என்னா வெல அதச் சொல்லு...
ம்...வழக்காமன வெல தான் சாமி..மழ கொட்டு கொட்டுன்னு கொட்டுது..காய வித்து ராங்கா வெல சொல்லி காசு கொட்டப்போவுதாக்கும்..எத்துனை கிலோ..சொல்லியவாறே உருளைக் கிழங்குகளை தராசில் அள்ளிப் போட்டாள்...
ஆமா...கிலோவாங்குறாங்க...ஒரு அரை கிலோ போதும்...
சாமி...நீ எப்பப் பாறு எதோ தலையில கொம்பு மொளச்சா மாதிரி தான் பேசுவ...குடுக்கற காச குடு சாமி...பொறவு..உங்கிட்ட ஒன்னு கேக்கனும்..கோவிச்சுக்காத சாமி..இன்னைக்கி...குருசாமி வேற இடத்துக்குப் போவுதாமே..எந்த எடம் சாமி...அவளின் கண்ணெல்லாம் அதிசயம் பொங்கி கொம்பு போல் வளர்ந்திருந்தது...
யம்மா...ஆள வுடு..அவரு எதனாச்சும் ஒரு எடத்துக்குப் போவட்டும்..எவ்ளொ ஆச்சு...ஏறக்குறைய காய்கறிகளை பேச்சுக் கொடுத்தபடியே வாங்கி பையில் நிறைத்துக் கொண்டேன்..
சாமி ...சாமி..சொல்லு சாமி...சொன்னா இன்னா கொறைஞ்சா போயுடுவே..எப்பப் பாறு கொம்பு வச்சா மாதிரியே திரியற...சொல்லு சாமி...
அதிகம் பேசாத...கொம்ம்ப பத்தி உனக்கு என்னா தெரியும்....
நரிக்கொம்பு வித்தாலும் விப்பேனுங்க...ஆனா நரிபோல வஞ்சன செய்யாமாட்டேன்...சட்டென்று பாடிக் காட்ட அதிர்ந்தேன்..
யம்மா...குரு விருச்சிகத்துலேர்ந்து தனுசுக்குப் போறாரு...ஆள வுடு...அவ்ளோதான் தெரியும்...
ஒரு ஐன்னூறு ரூபாயை கொடுத்து சில்லரைக்காக நிற்கும் நொடிகளில்...
ஒரு ஐன்னூறு ரூபாயை கொடுத்து சில்லரைக்காக நிற்கும் நொடிகளில்...
காண்டா மிருகத்தின் கொம்பு பற்றிய சில விடயங்களைப் பற்றிய புனைவுகள் மனமிருகத்தின் தலையின் நடுவில் வளரத் தொடங்கியது...கொம்பின் சில மருத்துவ வியாபார தேவைகளுக்காக காண்டா மிருகங்கள் இன்றளவும் வேட்டையாடப்படுவைதை எண்ணி என் நினைவுக் கொம்பை சட்டென்று உடைத்துப் போட...
சாமி...நீ சோசியத்துல கொம்பனாம்ல..சொல்லிக்கிறாக...குருசாமி மாறினா..காந்தி மார்க்கெட் கள்ளிக்குடிக்குப் போயிடுமா சாமி...அப்பாவியாய் தன் வாழ்வாதாரமே பிடுங்கி எறியப்படப்போகும் நிகழ்வின் கூறுகளை தனக்கே உரிய இன்னொஸன்ஸில் கேட்க...எனக்குள் கோபத்தின் கொம்புகள் அடர்த்தியாய் முளைக்கத் தொடங்கின....
அவரு எங்கிட்டுப்போனா உனக்கென்ன..அரசில்வாதியா ஆன பொறப்ப்பாடு கொம்பு மொளைச்சு சாதா ஜனத்தை மறந்துடறாங்க...எத வேணாலும் எங்க வேணாலும் மாத்துவாங்க....நீ பயப்படாத...அதெல்லாம் மார்க்கெட்டு இங்க தான் இருக்கும்...நீ சொல்ற குரு சாமிக்கு கொம்பு இருக்கு தெரியுமா...எனது வார்தைகளின் கூறுகள் கலைந்திருந்தை அவள் கவனித்தபடியே...
சொல்லு சாமி...மழ வுட்டாதான் சனம் காய் வாங்க வரும்..நீ சொல்லு சாமி..சொல்லு சாமி...
இன்னும் இரண்டு தக்காளிப் பழங்களை எனது பைக்குள் போட்ட படியே அவள் கேட்டது...கொம்பு தீய்க்கப்பட்ட வண்டி மாடு ஒன்று அப்பாவியாய் நுகத்தடியில் கட்டப்பட பின்னங்கால்களை நகர்த்துவது போலிருந்தது...
இன்னும் இரண்டு தக்காளிப் பழங்களை எனது பைக்குள் போட்ட படியே அவள் கேட்டது...கொம்பு தீய்க்கப்பட்ட வண்டி மாடு ஒன்று அப்பாவியாய் நுகத்தடியில் கட்டப்பட பின்னங்கால்களை நகர்த்துவது போலிருந்தது...
கண்ணை மூடிக்கொண்டு சொல்லத் தொடங்கினேன்...
சொல்லிய ரவிக்குச் சிரசு மத்தியினில்
துலங்குகூரிலாமல் நோக்கும்
துய்ய கொம்பு உளதாம்...வெண்பிறை தனக்கே
சொற்றனர் கொம்பு இலை என்றே
வல்ல செவ்வாய்க்குச் சிர நடு மேலாய்
வளர்ந்து எழு கூரிய கொம்பு ஆம்
மாலவன் தனக்கே சிரத்து ஒரு புறத்தின்
மருவிய கொம்பு உளது ஆகும்
நல்ல பீதகற்கே சென்னி மத்தியினில்
நாடிரு கொம்பு என நவில்வர்
நலம் உடன் செறிந்திடு கொம்பு ஆம்
அல்லல் சேர் காரி இருவகைப் பாம்பு
ஆகிடும் மூவர்கள் தமக்கு
அறுத்தி மறுப்பட்டு இருந்து கீழ் நோக்கும்
ஆகிய கொம்பு உளது ஆமால்...
[ஞானப் பிரதீபிகை சம்ஸ்கிருத பாடல் தமிழில் தந்தவரின் பெயர் தெரியவில்லை...}
துலங்குகூரிலாமல் நோக்கும்
துய்ய கொம்பு உளதாம்...வெண்பிறை தனக்கே
சொற்றனர் கொம்பு இலை என்றே
வல்ல செவ்வாய்க்குச் சிர நடு மேலாய்
வளர்ந்து எழு கூரிய கொம்பு ஆம்
மாலவன் தனக்கே சிரத்து ஒரு புறத்தின்
மருவிய கொம்பு உளது ஆகும்
நல்ல பீதகற்கே சென்னி மத்தியினில்
நாடிரு கொம்பு என நவில்வர்
நலம் உடன் செறிந்திடு கொம்பு ஆம்
அல்லல் சேர் காரி இருவகைப் பாம்பு
ஆகிடும் மூவர்கள் தமக்கு
அறுத்தி மறுப்பட்டு இருந்து கீழ் நோக்கும்
ஆகிய கொம்பு உளது ஆமால்...
[ஞானப் பிரதீபிகை சம்ஸ்கிருத பாடல் தமிழில் தந்தவரின் பெயர் தெரியவில்லை...}
கண்ணைத் திறந்து பார்க்க..காய்கறிக் காரி என் வழுக்கைத் தலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்..அதில் மழைத்துளி இரண்டு தளும்பிக்கொண்டிருந்ததை அனிச்சையாய்த் துடைக்க தலையிலிருந்த கொம்பு ஒன்று உதிர்ந்து முள்ளங்கிப் பத்தைக்குள் பதுங்கிக்கொண்டதைப் பார்த்தேன்..
ராகவபிரியன்
ராகவபிரியன்

No comments:
Post a Comment