Wednesday, October 16, 2019

தொன்னூறுகளில் யூகோஸ்லோவியா என்ற ஐரோப்பாவின் ஆகப்பெரிய நாடு சிதறுருகிறது..நாடு துண்டாடப்படுகையில் இனப்படுகொலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறதெனச் சொன்ன..பின்னாளில் செர்பியா மற்றும் யுகோஸ்லாவியா எனப் பிரிக்கப்பட்ட நாடுகளின் அரசுகளுக்குத் தலைமைதாங்கிய அதிபர் சொலோபோடன் மிலோசோவிக்..அகண்ட உலக நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்...பாஸ்னிய போர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான கொடுரங்களைச் சந்தித்த யுத்தமென வரலாறு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அதில் குருதி எழுத்துக்களால் அதைப் பதிந்து வைத்திருக்கிறது..அவருக்கான குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க அவர் தனக்கான வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் வாதாடிக்கொண்டிருக்கிறார்..அவரின் கம்யூனிஸ வளர்ப்பும் சிந்தனைகளும் அவரிடம் பாசாங்கற்ற எந்தவித பயமுமற்ற மன நிலையைத் தந்திருந்ததால்..சிறையிலிருந்தவாறே தன்மீதான வழக்குகளை துச்சமென மதித்து நேர்கொண்டிருந்த ஒரு நாளில் சிறைச் சாலையில் மரணமுறுகிறார்..அவரின் இறுதிச் சடங்கில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹாண்ட்கி கலந்துகொண்டு இரங்கற்பா வாசிக்கிறார்..ஒரு போர்க்குற்றவாளியை ..அதுவும் கம்யூனிஸ சித்தாந்தங்களை செயல் படுத்திய நாட்களில் தன் கைகளில் மனிதக் குருதியை அள்ளிக் குடித்தவரை புகழந்து எழுதிய ஒருவருக்கு எப்படி நோபல் கொடுக்கக்கூடலாம் என்ற குரல் இன்று இலக்கிய உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது..எழுத்து என்பது நிஜங்களை உரத்தக் குரலில் பதிவு செய்வது..அது மனித மனங்களின் இருண்ட பகுதிகளை வெளிச்ச மிட்டுக் காட்டுவது..சொலோபோடன் மிலோசோவிக் குற்றவாளியாக இருந்தாலும் நிர்வாகத் திறமையுடையவர் என்றும் ..இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் என்றும் அவரின் கருணையுள்ளம் அறிந்தவன் நான் என்றும் முழங்குகிறார்..பீட்டர் ஹாண்ட்கி...இருந்தாலும் கனடாவின் மார்க்ரெட் அட்வுட்..ஹாருகி முராகமி..கென்யாவின் நூகி வா தியாங்க் போன்றவர்களைப் புறந்தள்ளி பீட்டருக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த உலகளாவிய மிகப்பெரிய பரிசு தரப்பட்டதா என்ற கேள்விக்கு.
.நோபல் பரிசு தேர்வுக்குழு இப்படிச் சொல்லியிருக்கிறது.." மனித வாழ்வின் அனுபவங்களை ..சந்தித்த அவலங்களை..துல்லியமாக ..அதற்கான வரையறைகளுடன்..மிகவும் சக்திவாய்ந்த மதி நுட்பம் நிறைந்த வார்த்தைகளால் இலக்கியம் படைத்தவர் பீட்டர் ஹாண்ட்கி.." இது போதாதா...அவரே எதிர்பார்த்திராத பரிசை அரங்கன் அவருக்குத் தந்திருக்கிறான்..அவரின் தனிப்பட்ட விருப்பமான தலைவர் உலக மக்களால் வெறுக்கப்படுவதால் அவரும் வெறுப்பைக் காட்ட வேண்டுமா..வெறுப்பையும் மீறிய நட்பின் சக்தி ஆழ்மன உள்ளத்தில் அசாத்திய துணிச்சலைத் தரும் அல்லவா..நோபல் தேர்வுக் குழுவிற்கும்..மஹாகவி பீட்டர் ஹாண்ட்கீ அவர்களுக்கும்..அனைத்து நண்பர்களுக்கும் அரங்கனுக்கும் என் நன்றிகள்...அன்பன்..ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...