ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...
சில நிகழ்வுகள் மானுடம் நிகழ்த்தியதாகக் கொண்டாலும் அதன் தூரத்து இயக்குக் கருவி ஆண்டவனிடம் இருப்பதை ஆன்மபலம் பொருந்திய ஞானக்கண் காட்டிக் கொடுத்துவிடும்..அத்தகைய ஞானக்கண் அன்பே சிவமாக உருவம் கொண்ட ஆதிசிவனின் முகத்தில் இருப்பதை அறிவோம்..
சிவ ஞான போதம் அதை இப்படிக் கூறுகிறது..
சிவ ஞான போதம் அதை இப்படிக் கூறுகிறது..
தொண்டர்கள் தாமும் வானோர் தொழும் திருமேனி தாமும்
அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி
வெண்சரளங்கள் சிந்த விழி மொழி குளற மெய்யே
கண்டுகொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே..
அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி
வெண்சரளங்கள் சிந்த விழி மொழி குளற மெய்யே
கண்டுகொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே..
ஒரு பக்தியின் வெளி சிவமயமாய் மாறுகிறது...அங்கே சின்ன திடலொன்று உருவாக சிவம் சிவனென்று உறங்கத் தொடங்குகிறது..இருபுற நிழலில் திடல் குளிர சிவபக்தர்கள் சிவமென்றறியாமல் தாமும் உறங்குவதைக் காண உவகையெழும்பும் முகம்..அம்முகம் கண்டு சிவ ஞானக் கண் திறக்கும்..திடலும் உவகையும் ஆணவமும் எரிந்து சாம்பலாகிவிடும்...
இருளாது அன்றி இலது..எவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள் என்று சித்தாந்த அட்டகம் பேசுகிறது...
உறங்கும் திடலின் சிவ நிழலென அறியாமல் மகிழுந்துவை நிறுத்த...சிவன் மனித உருவின் ஆணவமென உருவெடுத்து...இடம் தனதென்கிறான்..மகிழுந்து தனதான உவகையிடம் சென்றடைய..ஆணவம்...
ஒரு பொருளும் காட்டாது இருள்..உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது...
இரு பொருளும் காட்டாது இது...
என்ற சிவ ஞான சூத்திரத்திற்கினங்க..இருள் கூட பொருளின் உருவம் தெளிவின்றி காட்டக் கூடும்..ஆணால் ஆணவம் கண்ணை மறைத்தால் இருளும்..அதனுள்ளே மறைந்திருக்கும் பொருளும்..உள்ளுறங்கும் சிவமும் தெரியாமல் செய்துவிடும்..உண்மையைக் காண...அதிசயமாய் தூரத்து இயக்கு கருவியின் சிவ விரல் நடன முத்திரையைக் கண்டு அதிர நேர்ந்தது..
வெளிக்கான வேலியின் கல்தூண்களை ரிஷபவாகனமெடுத்துச் சாய்த்தும் கூட ஆணவம் நிஜம் உணர மறுக்க...சிவ உறக்கம் கலைந்து...நிழற்சுவர் ..மணற்சுவர்..அடுக்கிக் கிடந்த மாயா கன்மங்களான கற்றூண்கள் ...தனு கரண புவன போகங்கள்..இரண்டாகப் பிளக்க...ரிஷபங்கள் திடலின் ஆணவப் புல் மேய..சிவம் தன் இருப்பைக் காட்ட...இன்னமும் விழித்தெழாத...வேலியகற்றாத சிவ உடலின் மேல்..பிளந்த கற்றூண்களை அடுக்கி கிடப்பதை என்னவென்று சொல்ல...
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து..
வடிவாதி கன்மத்து வந்து..
எங்கே நிகழ்வின் இயக்கு கருவியைக் காணும் பேறு பெற்ற கண் இருக்கிறதோ...அங்கே சிவம் சிவமாய்க் கிடக்கும்..உடலெல்லாம் விபூதிப் பட்டைகளுடன் கன்ம மாயைகளை அடக்கும் சிவசக்தியின் ஞான விழி நெற்றியை உடலெங்கும் உடுத்தியிருக்கும்..நிஜமான ஆச்சாரியர்கள் உடலெடுத்து சிவமாய்க் கிடந்திருக்கிறார்கள்..
அருளில் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளில் தலையிலது போல..
பொருளில் தலையிலது போல..
எனும் சிவ ஞான வாக்கினை தியானித்து...அனைத்தையும் சிவம் ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து...அரங்கனுக்கு நன்றி சொல்வோம்..
பஞ்ச நதீஸ்வரர் திருவடிகளே சரணம்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்
பஞ்ச நதீஸ்வரர் திருவடிகளே சரணம்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:
Post a Comment