எழுதும் திறனும் அதைத் தாண்டிய அனுபவமும் அதையும் வரலாறாய் மாற்றத்தக்க எழுச்சிமிகு எழுத்தாற்றலும் அபரிமிதமாய் வாய்க்கப்பெற்ற எழுத்தாளுமை 2018ற்கான நோபல் இலக்கியப் பரிசை வென்ற போலந்தின் ஓல்கா டொக்ரகொசா..
போலந்தின் மக்கள் சோவியத் ஸ்டாலினிடமும்..கம்யூனிஸ அடக்குமுறையிடமும்..பொருளாதர நிரந்தரமற்ற வாழ்வுமுறையிடமும்..அத்தகைய பொருளாதார அடக்குமுறைமையைச் செயலாக்கிய ஸ்டாலின் என்ற இரும்புக்கை மாயாவி மறையும் வரையும் பட்ட துன்பங்கள் வரலாற்றின் சிகப்புப் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன..கம்யூனிஸத்தின் பொருந்தாக பிற்போக்குக் கொள்கைகளால் உலகளாவிய அளவில் அதன் வீழ்ச்சியை நாம் தற்சூழலில் கண்ணுறுவது போல போலந்தும் 1953றிற்குப் பிறகு கண்ணுற்றது..ஓல்கா என்ற பிறவி எழுத்தாளுமை 1962ல் போலந்தின் ஒரு குக்கிராமத்தில் பிறக்கிறது..அது பிறந்த நாளில் தான் திடீரென போலந்தின் உணப்பண்டங்களுக்கான விலை நிர்ணயக் கோணம் வித்தியாசமாய் சோவியத் ருஷ்யாவால் பார்க்கப்பட்டு... பன்மடங்கு விலையுயர்வு திணிக்கப்பட்டது..மெல்ல நடைவண்டியைத் தள்ளியபடி வீதியில் அடியெடுத்துவைத்த சின்னஞ்சிறு ஓல்கா ரொட்டித் துண்டிற்காக தங்களது வீட்டையே விற்றுவிட்டு நடுத்தெருவில் தாயின் கைபிடித்து நடந்த அந்த நாட்களை பின்னொரு நாளில் கச்சிதமாகத் திட்டமிட்டு இலக்கிய உலகம் எதிர்பார்த்திராத உத்தியும் நடையும் கொண்டு நாவலாய்ப் படைக்கிறார்..உலகம் அதிர்வின்..எழுத்து தந்த அதிர்வின் காரணமாய் எரிமலையொன்று வெடித்துச் சிதறியதை உணர்ந்தது..
கிடைத்த உணவுகளுக்கான போராட்டங்கள் மனதிலும் வயிற்றிலும் தங்கிவிட சிக்மண்ட் ப்ராய்டையும் வில்லியம் ப்ளேக்கையும் உண்டு அவ்வப்போது பசியாறியதாய்ச் சொல்லும் ஓல்கா..இலக்கிய உலகின் அத்தனை விருதுகளையும் பரிசுகளையும் குவித்திருக்கிறார்..தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட முன்வராத பதிப்பக உலகிற்குச் சாட்டையடியாய் தனது சொந்தப் பதிப்பகம் தொடங்கி அழியாத எழுத்தை அகில உலகிலும் உலவவிடுகிறார்..இரண்டாம் உலகப்போரின் விளைவாய் போலந்து நாட்டவர்கள் நாடற்று வீடற்று நாடோடிகளாய் ஐரோப்பாவெங்கும் வீதிகளில் உறங்கியதால் மன நோய்க்கு ஆட்பட்டு மரணமுறுவதைக் காணச் சகியாமல் மன நோய் ஆலோசனை மையம் ஒன்றைத் துவக்கி இன்னமும் நடத்திவருகிறார்..
அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ மொழியாக்கமோ இல்லை...
சிறகுகள் பொறுத்தப்பட்ட
பசுவொன்று
வானில் மேயத்தொடங்குகிறது..
பசுவொன்று
வானில் மேயத்தொடங்குகிறது..
போலந்தில் புல்வெளிகளின்
மேச்சல் விலை மேலதிகம்..
மேச்சல் விலை மேலதிகம்..
வானில் கூட
புல் மேயும் பொழுதுகளில்
கொம்புகளை அசைக்க
அதற்கு உரிமையில்லை..
புல் மேயும் பொழுதுகளில்
கொம்புகளை அசைக்க
அதற்கு உரிமையில்லை..
கீழே விரிந்திருக்கும்
புல்வெளிகள்
அதனுடையதெனினும்
அதன் சொந்த மல்ல..
புல்வெளிகள்
அதனுடையதெனினும்
அதன் சொந்த மல்ல..
அதனால் தான் வானில்
நட்சத்திரங்களுக்கிடையில்
வளர்ந்திருக்கும்
புல் நுனிப் பனித்துளிகளில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது..
நட்சத்திரங்களுக்கிடையில்
வளர்ந்திருக்கும்
புல் நுனிப் பனித்துளிகளில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது..
அதன் தொழுவம்
அதனுடையதில்லை..
அது நமைச்சல் தாங்காமல்
அவ்வப்போது வீசும்
வாலில் அமர்ந்த ஈக்கள்
வசதியாய்
முகத்தில் அமரும்..
அதனுடையதில்லை..
அது நமைச்சல் தாங்காமல்
அவ்வப்போது வீசும்
வாலில் அமர்ந்த ஈக்கள்
வசதியாய்
முகத்தில் அமரும்..
ஈக்களை விரட்டுவதற்கான
விலை போலந்தில்
ஆகமிகு அதிகம்..
விலை போலந்தில்
ஆகமிகு அதிகம்..
வானில் ஈக்கள் மொய்க்க
அனுமதி யில்லையென்பதால்
அங்கு மேய்வதில்
சுகம் அதற்கு..
அனுமதி யில்லையென்பதால்
அங்கு மேய்வதில்
சுகம் அதற்கு..
புல் மேய்வது மட்டும்
மாட்டிற்கான
ஒரே வேலையில்லை..
சில சமயங்களில்
காய்ந்த வைக்கோலுக்காகவும்
வயிற்றில்
ஈரத்துணியுடன்
அது பறந்தாக வேண்டும்..
ராகவபிரியன்
மாட்டிற்கான
ஒரே வேலையில்லை..
சில சமயங்களில்
காய்ந்த வைக்கோலுக்காகவும்
வயிற்றில்
ஈரத்துணியுடன்
அது பறந்தாக வேண்டும்..
ராகவபிரியன்

No comments:
Post a Comment