ஒரு பின் நவீன மழைக் கவிதை...மழைக் கவிதை எழுதாதவன் கவிஞனாய் இருக்க முடியாது...என்ன நான் சொல்றது..
மேலொன்றும் கீழொன்றுமான
இரண்டு மழைத்துளிகளை
விட்டு வைத்திருக்கிறது
என் வீட்டிற்கு வந்து போன மழை..
இரண்டு மழைத்துளிகளை
விட்டு வைத்திருக்கிறது
என் வீட்டிற்கு வந்து போன மழை..
கீழிருக்கும் மழைத்துளி
காயும் வரை
பார்த்திருக்கிறேன்..
காயும் வரை
பார்த்திருக்கிறேன்..
கொஞ்சமும் பொறுமையற்ற
மேலிருக்கும் அத்துளி
அன்னாந்த என் முகத்தில்
விழுந்து தெறிக்கிறது..
மேலிருக்கும் அத்துளி
அன்னாந்த என் முகத்தில்
விழுந்து தெறிக்கிறது..
கீழே அதுவரை
உருண்டுகொண்டிருந்ததுதுளியல்ல..
உருண்டுகொண்டிருந்ததுதுளியல்ல..
மேலே மழை பொறுமையற்றிருக்க..
கீழே துளியற்றதாய்
உருள்வது ..மழையல்ல..
ஒரு மாநதியின் சுருக்கம்..
கீழே துளியற்றதாய்
உருள்வது ..மழையல்ல..
ஒரு மாநதியின் சுருக்கம்..
பூமியின் மேல் மழை..எனில்
மழையின் கீழ் தான் பூமி..
மழையின் கீழ் தான் பூமி..
பூமியின் வீட்டிற்குத்தான்
வந்து வந்து திரும்புகிறது மழை..
ராகவபிரியன்
வந்து வந்து திரும்புகிறது மழை..
ராகவபிரியன்

No comments:
Post a Comment