Sunday, October 6, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..
காண்டீபத்தை வீசியெறிந்து யுத்தம் செய்ய மறுத்த பார்த்தனைப் பார்த்து பகவான்..யுத்தம் செய்தாக வேண்டிய கட்டாயத்தை...அதன் நியாயங்களை..அருமையாக எடுத்துரைக்கிறார்...யுத்தம் என்பதன் காரணமே..நியாயங்களை வெற்றி கொள்ளவைப்பதற்கான செயல் என்பதை அரங்கன் கீதையில் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில்..பார்த்தனின் யுத்தம் செய்ய பயப்படும் தன்மையை அலித் தன்மை என்று சொல்வது ஆச்சர்யங்களைத் தருகிறது..
க்லைப்யம்மா ஸ்மகம: பார்த நைதத்த்வய்யுப்பத் யதே
க்ஷூத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப!
இங்கே அரங்கன் அர்ஜுனனிடம்..இழிந்த உள்ளம் என்பதை அலியின் தன்மையாகக் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது..
அல்லூருக்கு வந்த முதல் நாள் அன்றே..அரங்கனை என்னிடத்தில் தவறாகக் கூறியது..அது அரங்கன் காதில் விழும் என்பதை உணராத அறியாமை..ப்ராமணன் என்றால் ஒரு சில அடையாளங்கள் வேண்டும் என்ற..அந்த அடையாளங்களைத் தாங்காத நிஜம்மான ப்ராமணனை மறைமுகமாக மனக்காயமுறுத்தும் திமிர் நிறை செயல்கள்..அரங்க பக்தியை சந்தேகமுறுதல் போன்ற சில ஒவ்வாமைகளை அரங்கன் எனக்குக் காட்டிக் கொடுக்க..நான் அரங்கனிடம்.."அரங்கா..இதையெல்லாம்..ஏன் என்னிடத்தில் சொல்கிறாய்...திருக்கச்சி நம்பியின் வரலாறை அறிந்தவர்கள் தான் நீ உரையாடும் செய்தியை ஓரளவு நம்புவார்கள்..ஆக அது போயிற்று ஆயிரமாண்டுகள்...இன்னமும் நீ உரையாடுகிறாய்..அதுவும் என்னிடம் என்பதை யாரும் நம்ப மறுப்பது மட்டுமன்றி..என்னை ஏமாற்றுக் காரணாகவும்..எதோ ஒரு காமக் கண்ணோட்டத்தில் நான் புதுப் புது உத்திகளைக் கையாள்வதாகவும் எண்ணி..என்னை ஒதுக்கி வைப்பது மட்டுமல்ல..என்னோடு யாரும் ஆகச் சாதரண உரையாடல்களைக் கூட தவிர்த்தும் விடுகிறார்கள்..அது மட்டுமல்ல...எனது அறுபது வயதிற்குத் தரவேண்டிய நியாயமான மரியாதையைக்கூட தருவதில்லை...அரங்கா..உனக்கான மிருஷ்ட்டா பூஜைகளை நேரம் தவறாமல் நியமமாகச் செய்ய வேண்டுமெனில்..அதை உரியவர்களிடம் நேரே நீ சொல்லிவிடு" எனக் கதறினேன்..மனக் காயத்திற்கான களிம்புகள் ஆன்மீக பரிசோதனை மருத்துவ மனையில் நிறைய இருப்பதால்..கொஞ்சம் வலி குறைய..அரங்கனிடம் சரணாகதி செய்தேன்..உடனே..
அரங்கன்.." நீ என்ன கோழையா...இல்லை..அலியா..நான் இருக்க நீ ஏன் பயம் கொள்கிறாய்...போருக்குப் பயந்த அர்ஜூனனிடமும் இதையேதான் சொன்னேன்.."என்று சொல்லி..தன் வலது கையைத் திறந்து காட்ட மேற்கண்ட ஸ்லோகம் என் உப்பிலியப்பனின்..கையில்...பொறிக்கப்பட்டிருந்தது..திடுக்கிட்டுக் கண்விழித்து கீதைப் புத்தகம் எடுத்துப் பார்த்தால்..அதே வரிகள்...அதிர்விலிருந்து நான் மீள..சில நாட்கள் பிடித்தன..எனது பிரபந்த வாசிப்பின் போர் இன்னும் துல்லியமாக..அதிகச் சக்தியுடன் ..அதீத சப்தத்துடன் ..அதன் இலக்கை நோக்கி நகர..எனது சாதாரண எந்த உள் நோக்கமும் அற்ற உரையாடல்கள் ,,அதுவும் என் குடும்பத்தாருடனான..உரையாடல்கள் கூட...ஒட்டுகேட்கப்பட்டு...கீதையின் பொருளுரை போல வெவ்வேறு அர்த்தங்களுடன் சிலரின் உள்ளத்தைத் தாக்க்கியதை அறிந்து மேலதிக வருத்த முற்றேன்..
இருந்தும்...அரங்கனின் கட்டளை..என்பதால் பிரப்ந்த வாசிப்பை காலையிலிருந்து இரவு வரை என்று நீட்டித்த முதல் நாள்..அரங்கனிடம் .."அரங்கா..இந்த அவதையை முடிவிற்குக் கொண்டு வா..."என்று வேண்டியபடியே..தொலைக்காட்சியில் மனம் லயிக்காமல் இருந்த ஆன்மீகப் பொழுதில்..என் மகள்..ஜோதி தொலைகாட்சியில் கேளம்பாக்கம் பிரம்ம பெருமாளின் அபிஷேக ஆராதனைகளை காட்டும் நிகழ்வின் ஒளிபரப்பை வைத்துவிட்டு நகர்ந்து விடுகிறாள்..அரங்கனின் மூன்று முகங்களில் நரசிம்மமும்..வாராக முகமும்..மச்ச உடம்பில்..பதினாறு கைகளுடன் இருக்கும் அந்த அர்ச்சையின் வித்தியாசமான உருவம் மனதை ஈர்க்க..அதில் லயிக்கிறேன்..அபிஷேக ஆராதனை முடிந்து..அலங்காரமும் முடிந்த பின்..அரங்கனின் வலது கரத்தில்...ஒரு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பலகையில்.." நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மாட்டப்பட...அரங்கன் இனி அனைத்தையும் தானே கவனிக்கப்போகிறான்...என்பதுணர்ந்து..மனதின் கனம் குறைய..வாசலுக்கு வருகிறேன்..எனது அருமை நண்பர்..அல்லூர் ப்ரகாஷ்..நாளை நாம் திருச்சி கலெக்டரைச் சந்தித்து.. ஜீயபுரம்..அரங்கன் கோவிலுக்குச் சொந்தமான மண்டபத்தை ..சாலை விரிவாக்கத்தால் இடிபடாமல் தவிர்க்க..விண்ணப்பம் தரச் செல்கிறோம்..என்றார்..
நானும் இது அரங்கன் செயல் என்றே..நினைத்து ஒப்புக்கொண்டு விட்டேன்..அடுத்த நாள் காலை வானம் மெல்ல தூறிக்கொண்டிருக்க..நானும் ஒன்பது மணிவரை மிருஷ்ட்டா பூஜைகள் நடைபெற வில்லை என்பதை..கவனித்தவாறு இருக்க..எங்கே நான் பிரபந்த வாசிப்புப் போரை உக்கிரமாகத் துவக்கி விடுவேனோ எனப் பயந்தவர்கள்..வித்தியாசமான ஆயுதமொன்றால் என்னைத் தாக்கத் தயாரானார்கள்..அரங்கன் அன்று எனது பிரபந்த வாசிப்பு வேண்டாம் என்பதை முன் கூட்டியே சொன்னதை உணர்ந்து...திருச்சி ஆட்சியரைக் காணச் சென்றுவிட்டேன்..பிரபந்தம் வாசித்தால்..கருத்து வேறுபாடுகளின்..கூடாத பிற்போக்குப் பார்வை கொண்டோரால் விளக்கு மாற்றால் அடிவாங்க நேரிடும் என்பதையும் உணர்ந்தேன்..அரங்கனுக்கான போர் நிகழ்ந்தால் அஸ்திரப்பிரயோகங்கள் அரங்கனையும் தாக்கும் என்பதை அறியாதவர்கள்..நான் பயந்து பின் வாங்கிவிட்டேன் எனப் புல்லரித்துப் போயிருப்பார்கள்..
கார்பண்யதோஷாபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸ்ம்மூடசேதா:
யச்ச் ரேய:ஸ்யா ந் நிஸ்சிதம் ப்ரூஹித ந் மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதிமாம் த்வாம் ப்ரபந்நம்..!!
அரங்கா..கோழைகளுடனும்..கோழைத்தனத்தாலும் பக்தியின்... அரங்க பக்தியின் மேன்மையறியாதவர்களிடம்..எவ்வாறு உனது கட்டளையை எடுத்துச் சொல்வது..?அரங்கா..எந்தச் செய
ல் அல்லது சாதனை உறுதியாக மேன்மை படுத்துமோ ...அதை எனக்குக் கூறு...நான் உன்னைத் தானே பற்றியிருக்கிறேன்..உன் அடிமை என்பதால்..என் மீதான விளக்குமாற்றின் அடிகள் உன் மீதும் விழும் என்பதை அறியாதவர்களின் செயல்களை மன்னித்துவிடு...எனக்கு தகுந்த அறிவுரையையும் வழி நடத்தலையும் தருவாய்....
என்பதாக என் சின்னஞ்சிறிய அறிவிற்கு எட்டியவரை பொருள் சொல்லி...இதோ இந்த பிரபந்தப் போரை முடிவிற்குக் கொண்டு வருகிறேன்...இனி அரங்கன் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வான்...
பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்கிருதாம்..
தர்மசம்ஸ்தாப நார்த்தாயே சம்பவாமி யுகே...யுகே...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...