கொட்டித் தீர்த்த
கோர காலை மழையின்
கொடூரக் கரங்களில் இருந்து
என் மகிழுந்துவை
தண்ணீர் படாமல்
காப்பாற்றமுடியவில்லை..
கோர காலை மழையின்
கொடூரக் கரங்களில் இருந்து
என் மகிழுந்துவை
தண்ணீர் படாமல்
காப்பாற்றமுடியவில்லை..
துருவேறிப் போன
பொருளாதாரக் குறியீடாய்
நாளைய பட்டறையில்
தேயப்போகிறது அது..
பொருளாதாரக் குறியீடாய்
நாளைய பட்டறையில்
தேயப்போகிறது அது..
சாமான்ய பொதுஜனனாய்
பர்கேப்பிட்டா இன் கம்மிற்கும்
ரெப்போ ரேட்டிற்கும்
வளர்ந்து வரும்
வளர்ந்து கொண்டிருக்கும்
வளர்ந்தே தீரும்
என்ற சொற்றொடர்களின்
இழைகளின் அறுந்துவிழாத
ஆங்கில வார்த்தைகளின்
கம்பி நடனமும்
புரியாமல் மழையையும்
மகிழுந்துவையும்
பார்த்தபடியிருக்கிறேன்..
பர்கேப்பிட்டா இன் கம்மிற்கும்
ரெப்போ ரேட்டிற்கும்
வளர்ந்து வரும்
வளர்ந்து கொண்டிருக்கும்
வளர்ந்தே தீரும்
என்ற சொற்றொடர்களின்
இழைகளின் அறுந்துவிழாத
ஆங்கில வார்த்தைகளின்
கம்பி நடனமும்
புரியாமல் மழையையும்
மகிழுந்துவையும்
பார்த்தபடியிருக்கிறேன்..
சுர்ஜித்தை வெளிக்கொணர
நடத்தப்படும் பிரயத்தனங்களும்
பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதத்தை
ஏழு சதமாய் உயர்த்தப்போகும்
விந்தை நாடகத்தையும்
அறியாத வருணன்
மகிழுந்துவின் மேல்
குதித்துக் குதித்து
விளையாடிக்கொண்டிருக்கிறான்..
நடத்தப்படும் பிரயத்தனங்களும்
பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதத்தை
ஏழு சதமாய் உயர்த்தப்போகும்
விந்தை நாடகத்தையும்
அறியாத வருணன்
மகிழுந்துவின் மேல்
குதித்துக் குதித்து
விளையாடிக்கொண்டிருக்கிறான்..
இறக்குமதிகளுக்கான
சந்தையின் ஏற்றமோ இறக்கமோ
புரியாமல்
வெங்காயத்திற்கு
விலைபேசியபடி
கொச்சைத் தமிழில்
திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்
மனைவி..
சந்தையின் ஏற்றமோ இறக்கமோ
புரியாமல்
வெங்காயத்திற்கு
விலைபேசியபடி
கொச்சைத் தமிழில்
திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்
மனைவி..
ஆறாய் பெருகி ஓடும்
மழையின் சாலை வாய்க்காலில்
நனைந்தபடியே
என் கவிதை நோட்டின்
பக்கங்களைக் கிழித்து
கப்பல் விட்டுக் கொண்டிருக்கிறாள்..
மகள்...
மழையின் சாலை வாய்க்காலில்
நனைந்தபடியே
என் கவிதை நோட்டின்
பக்கங்களைக் கிழித்து
கப்பல் விட்டுக் கொண்டிருக்கிறாள்..
மகள்...
இந்தியப் பொருளாதாரமாய்
மழை ஓய்ந்த
வீட்டின் வாசற்பெரு வெளியில்
மகிழுந்துவின்
சக்கரத்தினடியில்
தடம்புரண்டு
கவிழ்ந்து கிடக்கிறது
காகிதக் கப்பல்..
ராகவபிரியன்
மழை ஓய்ந்த
வீட்டின் வாசற்பெரு வெளியில்
மகிழுந்துவின்
சக்கரத்தினடியில்
தடம்புரண்டு
கவிழ்ந்து கிடக்கிறது
காகிதக் கப்பல்..
ராகவபிரியன்

No comments:
Post a Comment