Thursday, October 24, 2019

இந்த வருட தீபாவளி இல்லாத
வெளியொன்றைத் திறக்கிறேன்..
அப்பெருவெளியின்
படிமப்படிகளின் மேல் கிடக்கும்
வீதியோரக் கடைகளின்
சதுரமற்ற செவ்வகமற்ற
மிதியடியை
மிதித்தே உள்ளேகுகிறேன்..
விடியாத இரவொன்றிலிருந்து
நீளும் மத்தாப்புச் சிதறல்கள்
மன வெளியெங்கும்
வெறுப்பேற்றிச் சுற்றுகின்றன..
முதிராத மனமகிழ்வின்
அறைகளைத் திறப்பதற்கான
சாவி தேடியலைந்த
அவ்வெளியெங்கும்
என் வெற்றுக் கால்களில்
அப்பிக்கிடக்கிறது
சோகத்தின் சேறு..
முகம் கவிழ்ந்த
கூடடையும் பறவைக்காலென
நுனிப் பாதம் பட்ட
பழைய சாக்கின்
மிதியடி ஸ்பரிசம்
எம் மண்ணின் வாசமென
மனம் நிறைக்க..
ஏதுமற்ற என் பணப்பையில்
நிரம்பித் ததும்புகிறது
வெளியிடமுடியாத
அன்பு...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...