ஆட்சியாளர்களையும் ஆட்சியையும் கண்மூடித்தனமாக எதிர்த்து தரமற்ற முறையில் எழுதினால் நோபல் பரிசு கிடைத்துவிடும் என்ற தவறான புரிதல் தமிழ் இலக்கிய உலகில் கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக தவழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் நம்ப மறுக்கும் நிஜப்பொழுதுகளில் ஒரு நம்பிக்கையின்மை எழுத்து மண்ணில் முதல் துளிராய் நம் மண்ணில் முட்டி முகம் காட்டுகிறது..பெரும்பாலன இலக்கியத்திற்காக தரப்பட்டநோபல் பரிசுகள் அரசியல் ரீதியான பார்வையுடனோ அரசியல் கருத்துக்களுக்கான கவனம் பெற்ற ஆக்கத்தினாலோ படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கே கொடுக்கப்பட்டிருப்பதை கவனம் கொண்டால் தமிழ் எழுத்தாளர்களில் நோபலை நோக்கி நகர்பவர்கள் இந்தக் கருத்தைப் பற்றிக்கொண்டு கண்மூடித்தனமாக ஆளும் கட்சியை எதிர்த்து எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று கவ்லையுற வேண்டியதாகிறது...இதான சிந்தனையோட்டதில் நேற்று காலை தி இந்துவின் ஆங்கில பதிப்பின் இலக்கிய மீள்பார்வை பகுதி என் எதிரே மிதந்து கொண்டிருந்தது..அதில் ஒரு கட்டுரை ஒரான் பாமுக் பற்றியும் அவரின் ஒரு சில படைப்புகளைப் பற்றியும் இருந்ததைக் கண்டு அவரின் ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டமும் படைப்பு வெளியில் அவர் சந்தித்த துயரங்களும் அவர் வலிந்து சிறை வைக்கப்பட்ட கொடுமையும்..அதையும் மீறி நாடுகடத்தப்பட்டும் பட்ட அவமானங்கள் என் மனதில் வந்து போயின..
தன் ஐம்பத்து நான்காம் வயதில் 2006ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்..ஒரு தனித்தீவில் துருக்கியில் தன் மனதிற்கினிய நகரமான இஸ்தான் புல்லின் அருகிலிருக்கும் ஒரு தீவில் நமது இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் மனம் திறந்து பேசுகிறார்...அந்தத் தீவிற்கு பத்திரிகையாளர் எவ்வளவு இடையூறுகளைத் தாண்டிச் சென்றார் என்பதை உற்று நோக்கினாலே துருக்கியின் இன்றைய நிலையை அறியலாம்..
நேர்காணல் என்றால் இப்போது நமது எழுத்தாளர்கள் தங்களின் விளம்பரத்திற்காக காசு கொடுத்துக்கூட தாங்கள் நடத்தும் பத்திரிகைகளில் வெளியிட்டுக்கொள்கிறார்கள்..அவைகளைப் படிக்கும் போது அதிலுள்ள பகடியைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்காத வாசகர்களே இருக்க முடியாது..அது தன்பகடி வகையைச் சார்ந்தது...ஆனால் ஒரான் பாமுக்கின் நேர்காணல் வெளி வந்தவுடன் அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்படுகிறது..அவர் அதில் தன்னைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் தரத் தயங்குவதிலிருந்தே அவரின் உயரின் நமக்குப் புரியலாம்...
துருக்கியின் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர் தன் எழுத்துக்களை வடிவமைத்தார்..குறிப்பாக அமெரிக்கர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அங்கே குடியேறி ஒருவிதமான ஓட்டோமன் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்..துருக்கியின் தற்போதைய கொடுமையான நிஜநிலையெதுவெனின் கட்டாய மதமாற்றம் தான் அது..இஸ்லாத்திற்கு மாறாதவர்கள் பேசக்கூட தகுதியற்றவர்களாய் அறிவித்திருந்த அன்றைய அரசை எதிர்த்து ஒட்டோமன் மொழியின் வரலாற்றை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தனக்கே உரிய பாணியில் பாமுக் எழுத ஆட்சியாளர்களின் வெறுப்புக்கும் தாக்குதல்களுகும் ஆளானார்...
நோபல் பரிசு பெற்ற பின்னும் கூட தனது தனித்தீவில் கடல் குளியல் இருவேளையும் கடல் பாசியாலான உணவையும் மட்டுமே உண்ணும் பாமுக் கடந்த 2013 தேர்தலில் வாக்களிக்க வில்லையென்று சொல்கிறார்...ஒரு சர்வாதிகாரத்திற்கு வாக்களிக்க மனம்வரவில்லை என்று சொல்லும் அதே வேளையில் இஸ்லாமிய சர்வாதிகாரம் தான் ஆகக் கொடியது என்றும் சொல்கிறார்... அவர் அங்கிருக்கும் ஒருசில மதச்சார்பற்ற சிறுபான்மை மக்களின் ஆதரவில் கடுமையான போராட்டங்களுக்கு நடுவே தன் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்...
இந்தியாவின் அரசியல் நிலைமை.. நமது பண்பாடு கலாச்சாரத்திற்கு... மதமாற்ற தாக்குதல்களைச் சமாளித்து இன்னமும் உயிரூட்டி வருகிறது..இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சில மத தீவிரவாதிகளால் குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருத்துவ தீவிரவாதிகளால்தான் அச்சுறுதல்கள் இருக்கின்றனவே..தவிர ...பெருன்பான்மையான இந்து மக்களின் சகிப்புத்தன்மை உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது..அதையும் ஓரான் பாமுக் பாராட்டியிருக்கிறார்..நாமும் கண்மூடித்தனமாக வலது எழுத்தையும் ஜனநாயக தேர்தெடுக்கப்பட்ட அரசையும் எதிர்க்காமல் ஆக்கபூர்வமான சாமான்ய இந்தியர்களின் குறிப்பாக தமிழ் மக்களின் வலிகளை அவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகளை நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை...விவசாயத்தொழில் சமுதாய அந்தஸ்த்தைப் பெற்றுத் தராதென்ற பிம்ப முக மூடியை பிய்தெறியும் தரமான இலக்கியம் தந்தால் நிச்சம் நோபல் நம்மைத் தேடிவரும் என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கிறது அவரின் கவிதையொன்று...அதை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
கடலின் நடுவில்
மாளிகை தருகிறீர்கள்..
நீங்கள் வலிந்து
செலுத்திய நச்சுக் காற்று
நுரையீரலிலும்
கடற்காற்று
மாளிகையெங்கும்
நிறைந்திருக்கிறது..
மாளிகை தருகிறீர்கள்..
நீங்கள் வலிந்து
செலுத்திய நச்சுக் காற்று
நுரையீரலிலும்
கடற்காற்று
மாளிகையெங்கும்
நிறைந்திருக்கிறது..
என் எண்ண மாளிகையின்
வண்ணங்கள்
கடலலைகளால்
அரிக்கப்பட்டுவிடும் என
கனவு காண்கிறீர்கள்...
வண்ணங்கள்
கடலலைகளால்
அரிக்கப்பட்டுவிடும் என
கனவு காண்கிறீர்கள்...
என் மகளுக்கு
நான் "கனவு "
என்றுதான் பெயரிட்டிருக்கிறேன்..
நான் "கனவு "
என்றுதான் பெயரிட்டிருக்கிறேன்..
சர்வாதிகாரக் கடலின் நடுவில்
எம் மக்களுக்கான மாளிகை
அலைகளால் மட்டுமல்ல
ஆட்சியாளர்களாலும்
ஆடிக்கொண்டிருக்கின்றன..
எம் மக்களுக்கான மாளிகை
அலைகளால் மட்டுமல்ல
ஆட்சியாளர்களாலும்
ஆடிக்கொண்டிருக்கின்றன..
அவர்களின் வாழ்வை
இஸ்லாமிய சர்வாதிகார கறையான்
அலைகளாய்
சதா அரித்துத் தின்னும் சப்தம்
என் எழுத்தில் கேட்கும்..
இஸ்லாமிய சர்வாதிகார கறையான்
அலைகளாய்
சதா அரித்துத் தின்னும் சப்தம்
என் எழுத்தில் கேட்கும்..
உலகில்
எல்லா மதத்தினரையும்
இஸ்லாமியர்களாக
மாற்றிவிட முடியாதென்பதை
ஆட்சியாளர்களுக்கு
நான்
எப்படிச் சொல்வது...?
ராகவபிரியன்
எல்லா மதத்தினரையும்
இஸ்லாமியர்களாக
மாற்றிவிட முடியாதென்பதை
ஆட்சியாளர்களுக்கு
நான்
எப்படிச் சொல்வது...?
ராகவபிரியன்

No comments:
Post a Comment