படைப்பு என்பது இந்த உலகத்தின் ஆன்மாவுடன் அதன் வலிகளுடன் தன்னை இணைத்து நயமுடன் ஒரு ஓட்டுக்குள்ளிருந்தோ கர்பத்திலிருந்தோ வெளிவருவது எனச் சொல்லும் போதே எனக்குள்ளான ஒரு கேள்வி..அப்படைப்பு அதன் பிறப்பின் ஆத்ய நொடிகளில் அலறவேண்டியதாகிவிடுகிறதே ..ஏன் என்பதுதான் அது..படைப்பின் உயிர்த்திருக்கும் காலங்கள் வாசகர்களின் வாசிப்பு உயிர்காற்று தொடர்ந்து அதன் நாசிவழியே உட்புகுந்து வெளிவரவேண்டும்..எப்போது ஒரு வாசகன் கூட அந்தப் படைப்பிற்கு வாசிப்புக்காற்றைத் தரவில்லையோ அப்போது அது மரணித்துப் போய்விடுகிறது..ஆத்ய முதலான அந்தி நொடிகள் வரை அதை கூறு கூறாய் கிழித்தெறிய தன் ஆனந்த உயிர்த்திருத்தலை அது பெற்றுவிடுகிறது...கிழிபடும் காலங்களில் அந்தப் படைப்பானது உலகையே உலுக்கி அனைவரின் கவனத்தை கவர்ந்து...ஒரு சில விருதுகளையும் பெற்று விடுமாயின் அது தன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதென்றே அறியத்தரலாம்..இன்னும் ஒரு அடி மேல் மிதந்து நோபல் பெற்றுவிட்டால் அது சாகா வரம் பெற்று வாசக உயிர்க்காற்றின் நீண்ட நீட்சிக்கான உத்தரவாதம் பெற்று விட்டதாகவே கருதலாம்..அப்படிப்பட்ட படைப்புகளைத் தந்த முதல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரஞ்சுக் கவி சல்லி புருதோம் அப்போதைய ஆகப்புகழ்பெற்ற லியோ டால்ஸ்டாயை[லியோ டால்ஸ்டாய் ஆறு ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டும் நோபல் பரிசை வெல்ல முடியவில்லை] புறந்தள்ளி இப்பரிசைப் பெற்றார் எனில் அவரின் கவியாளுமையை முகமூடி அணிவிக்கப்படாத படைப்புத்திறனை நம்மால் பார்க்க முடியும்...அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
ஒரு நீர்தேக்கத்தின்
அலைகளில்
கால்பதித்திருக்கிறீர்களா..
அலைகளில்
கால்பதித்திருக்கிறீர்களா..
ஒன்றன் பின் ஒன்றாய்
அலைக் கரங்களால்
உங்கள் கால்பிடித்துக்
கெஞ்சும்....
என்னை முற்றாகக்
குடித்துவிடாதீர்களென்று..
அலைக் கரங்களால்
உங்கள் கால்பிடித்துக்
கெஞ்சும்....
என்னை முற்றாகக்
குடித்துவிடாதீர்களென்று..
புயல் தூக்கி வீசிய
பூவொன்று
உங்கள் முற்றத்தில் விழுந்தால்
அதை தயவு செய்து
மிதித்தோ அப்புறப்படுத்தியோ
விடாதீர்கள்..
பூவொன்று
உங்கள் முற்றத்தில் விழுந்தால்
அதை தயவு செய்து
மிதித்தோ அப்புறப்படுத்தியோ
விடாதீர்கள்..
அன்று வரமுடியாத
தன் தேனீயை
அது தேடிக்கொண்டிருக்கலாம்..
தன் தேனீயை
அது தேடிக்கொண்டிருக்கலாம்..
பயணக் கப்பல்
புறப்படுவதற்கு முன்
கரையில்
கைதொட்டிலில்
குழந்தையை
தாலாட்டிக்கொண்டிருக்கும்
தாய்மாரின்
கண்ணீர் துளிகள்
கடலில் விழும்
அதிர்வலைகளால்தான்
அந்தக் கப்பல்
அப்படி ஆடுகிறதென்று
அறிவீர்களா..
புறப்படுவதற்கு முன்
கரையில்
கைதொட்டிலில்
குழந்தையை
தாலாட்டிக்கொண்டிருக்கும்
தாய்மாரின்
கண்ணீர் துளிகள்
கடலில் விழும்
அதிர்வலைகளால்தான்
அந்தக் கப்பல்
அப்படி ஆடுகிறதென்று
அறிவீர்களா..
சரி
உங்களுக்கு
நான் சொல்வது
கொஞ்சமாவது
புரிகிறதா..?
ராகவபிரியன்
உங்களுக்கு
நான் சொல்வது
கொஞ்சமாவது
புரிகிறதா..?
ராகவபிரியன்

No comments:
Post a Comment