Thursday, April 11, 2019

கடந்த இரண்டு நாட்களாக தமிழிலக்கியம் அதன் புரவலர்களாலேயே புரட்டிப்போடப்படுவதைக் கண்டு மனம் வெதும்புகிறது...நாஜி முகாம்களிலிருந்து தப்பி வெளியேறிய யூத எழுத்தாளர்களின் புலம்பல்களை விட நாராசமாய் ஒலிக்கிறது சில சாதிமுகாம்களில் அடைபட்டு இலக்கியம் செய்து பின் வெளியேறி தற்கொலை செய்து கொண்டுவிட்டு.....தூய தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுவது போல் பிதற்றுவது இன்னும் சகிக்கமுடியவில்லை..அதனால் தான் இப்பதிவு..இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகப் பதியப்படவில்லை..
ப்யூடலிஸம்..ஸ்ட்ரக்சரலிஸம்..பின் நவீனத்துவம்...பெரியாரிஸம் ..இடது..வலது..மிக்சரிஸம்..ரியலிஸம்..பாசிஸம்..இந்து முஸ்லீம் கிறிஸ்தவ ஜைனிஸம்..சமத்துவ சமணரிசம்..பேரழிவு புனைவிஸம்..என்றெல்லாம் முற்றுப்புள்ளியில்லாமல் சில அர்த்தமற்ற வாக்கியங்களைப் படைவித்துவிட்டு அதற்கு தரமற்ற விமர்சனங்களை தன் அடிப்பொடிகளை விட்டு எழுத வைத்து...வசவிலக்கியத்தில் வானைத் தொடம் தன்னிருத்தலிஸம் கண்டு கொதித்திப்போகாத தமிழ் வாசகர்களே இப்போது முக நூலில் இருக்கமுடியாது...
வாசகர்களை வாசிப்பினின்று நகர்த்தி மின்னணு விளையாட்டுக்களிலாழ்த்திவிட்டு..ஒரு மெளனத்தின் அலறலுடன் கடந்து போய்...தூரத்தில் கால்மேல் கால் போட்டமர்ந்து... பின்பு தமிழிலக்கியம் இன்னும் நவீனத்தைக் கடக்கவில்லை என்று கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
சாதிகளைப் பற்றிய அலப்பறைகள் ஆய்வுகள் இன்ன பிறவும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறது...எதோ பிராமணர்கள் தான் சாதியைப் புகுத்தியவர்கள் என்பது போல் மாயை உருவாக்கி பிராமணீயம் என்பதை பிராமணர்களின் உருவமாக்கி அவர்களின் அன்றாட வாழ்வை ஆபத்துக்கள் நிறைந்ததாக்கியது தான் கடந்த ஐம்பதாண்டுகால திராவிட இலக்கியம் செய்த மிகப்பெரிய சாதனை..இடதுவிஸம் தமிழ் திராவிடத்திடம் ஒரு சீட்டிற்கும் இரு சீட்டிற்கும் அல்லாடும் அரசியலை அதியற்புத இலக்கியமாக பதியவைத்து தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் விருது நிகழ்வுகள் வரலாற்றின் நாளைய மிச்சங்களோ எச்சங்களோ எச்சைகளோ பிச்சைகளோ அறியமாட்டோம்..
பிராமணர்கள் அல்லாத ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான் தங்களின் அரசியல் ராஜதந்திரத்தால் பட்டியலினத்தவரையும் பிராமணர்களையும் சேர்த்தே வதைத்து வந்திருக்கிறார்கள்...ஒரு பட்டியலின யுவன் ஒரு பிராமண யுவதியை வலுக்கட்டாயமாக மணந்து கொண்டால் அந்த பட்டியலின யுவன் பாரதியின் முன் உதாரணத்தைக் கொண்டு பிராமணனாகிவிடுகிறான்..அந்த அப்பாவிப் பெண் பின்னால் தொடர்ந்து வந்து வாழைக்காய் வெட்டும் அரிவாளால் வெட்டி வீழ்த்தவும் அவனுக்கு திராவிட் இலக்கியங்கள் அதிகாரம் அளிக்கும்...அந்த பாவப்பட்ட யுவதியின் பிராமண தந்தையும் அவர்கள் குடும்பமும் தற்கொலை செய்து கொண்டு காணாமல் அடிக்கப்பட்டுவிடுவார்கள்...அதே நேரம் ஒரு ஆதிக்க சாதியின் பெண்ணை ஒரு பட்டியலின யுவன் தொட்டுக்கூட பார்க்க முடியாது மனதளவில் கூட..வெட்டிக் கூறு போட்டுவிடுவார்கள்...இது போன்ற அதி தீவிர திராவிட கலாச்சாரத்தை வலிந்து புகுத்திய இலக்கிய கர்த்தாக்களின் அரசியல் ராஜபாட்டையில் எவரும் இடது புறமாகவோ வலது புறமாகவோ நடக்கக்கூட முடியாது.. நின்று வேடிக்கைப் பார்த்தால் கூட நாக்கூசும் ஈன வார்த்தைகளை பிரயோகித்து ஓட ஓட விரட்டி அதுதான் இலக்கியம் என்று கூட்டம் போட்டு சீரான இடைவெளிகளில் இடைவெளியின்றி கர்ஜிப்பார்கள்...
திருவள்ளுவர்..பிராமணர் இல்லை என்று ஆய்வு முடிவுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சாதித்ததால் தான்.. திருக்குறளை இலக்கியம் என்று ஆண்டைகள் ஒத்துக்கொள்கிறார்கள்..அவர் மட்டும் அய்யராய் இருந்திருந்தால் கம்பரின் ஏரெழுபது சிலையெழுபது போன்ற சில ஆதிக்க சாதிகளை உயர்த்தியெழுதிய நூல்களைப் போல ..[திருவள்ளுவரும் வள்ளுவர் சாதி என்ற கூற்றும் இருக்கிறது..]வள் வள் உவர் எழுபது என்று எழுதிய இலக்கியங்கள் கிடைக்கக்கூடலாம்...
பெரியாருக்கு முன்பே திருவள்ளுவர் பெரியாரைப் பாராட்டி ஒரு திருக்குறள் எழுதியிருக்கிறார் என்று கல்லூரியில் ஒரு பேராசிரியர் எண்பதுகளில் மாணவர்களின் கூட்டத்தில் ஒரு அன்றைய ஆகப்பெரிய பிரபல கவிஞரை வைத்துக்கொண்டு சொன்னபோது கவிஞர் மட்டுமல்ல அந்த அரங்கமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்த போது திருவள்ளுவரின் அங்கே இருந்த படத்தை மாலையொன்று மறைத்திருந்தது ஆறுதலைத் தந்தது..அந்தக் குறள்...
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பைத் தரும்..
பிற்காலத்தில் பெரியார் கையில் மூத்திரப் பை மட்டும் இல்லை பேணாவும் இருந்தது என்று இதற்கு பொருள் சொல்வோரும் முளைத்து வரலாம்..அவர்கள் ஆகச்சிறந்த இலக்கியக் கர்த்தாக்களாய் கொண்டாடவும் படலாம்...
ஹோலோகஸ்ட இலக்கியம் அதாவது பேரழிவு இலக்கியம் என்ற ஒன்று நவீனத்தில் இருப்பதாக அறியப்படுகிறது...அதற்கு உதாரணமாக ஹிட்லரின் விஷவாயு முகாம்களில் இருந்த பெண்கள்..கோடிக் கணக்கில்.... அணிந்திருந்த அங்கிகள் ஒரு நாள் திடீரென உருவப்படுமாம்...துவைப்பதற்காகவாம்...அவைகள் துவைத்துத் தரப்படும் வரை..அவர்கள் நிர்வாணமாய் இருக்க வேண்டும்..இல்லையேல் விஷவாயு கிடங்கிற்குள் நுழைந்து விடலாம்..எது வசதி.. என்பது போன்ற ஒரு வரலாற்றுக் கொடுமையை பிரைமோ லெவி தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்..அவர் ஒரு இத்தாலிக் காரர் என்பது கூடுதல் தகவல்...நாம் உம்பர்ட்டோ ஈகோவையும் இடால் கால்வினோவையும் அவர்களின் எழுத்துக்களின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பாராட்டிக்கொண்டிருப்போம்...
அது போன்ற தற்போதைய இடது சாரி கடவுள் மறுப்புச்சிந்தனைத் திணிப்பும் அதற்கு உடன் படாதோர் முக நூல் வெளியில் அவர்களின் எழுத்தாடை உருவப்பட்டும்..சமயத்தில் உடைக்கப்பட்டும் சித்தரிக்கப்படும் இலக்கிய நிதர்சனம் என்னை தற்கால சூழலில் வெகுவாகப் பாதிக்கிறது..மீண்டும் எழுத வந்தது தவறோ என்ற நினைவு என்னை வாட்டிவருகிறது...நண்பர்களே ..ஒரே ஒரு கவிதையால் உங்களுக்கு விளக்க முயல்கிறேன்..
என் எழுத்துக்கள்
பயணிக்கும்
ராணுவ வண்டியின்
அருகில்
ஒரு வெறுப்பெழுத்து
ஊர்தி நெருங்கி
இடது புறமாய்
வெடிகுண்டுகளை வெடித்து
என்னைச்
சிதறடித்துவிட்டது..
அதன்
வெறுப்புக்கான
புரிதலற்ற
பயிற்சி வெளி
பாலக்கோட்டின்
இடது புறம்
கடவுள் படங்கள் இல்லாத
மாளிகையொன்றில்
உள்ளதையறிவேன்..
என்
கவிதையபிநந்தன்
நடத்திய
துல்லிய தாக்குதலில்
காணாமல் போனவர்களின்
எழுத்துப் பிணங்களை
இப்போது
தங்க நாற்கர சாலையின்
நடுவில்
நெகிழிப்பைக்குள்
அடைத்துக்கொண்டிருப்பதை
அவர்களே
படம் பிடித்து
அப்படியொன்றும்
இல்லை என்று
சாதிப்பதுதான்
இலக்கியமென்கிறார்கள்..
அந்தக் கடவுள்
படங்களுக்கு
ஒன்றுமே ஆகவில்லையென்பது
நம்பமுடியாத
நிஜம் தானே...
ஆமாவா இல்லையா..
ஆமென்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...