நமது பாரத கலாச்சாரமென்பது பழமைவாய்ந்தது மட்டுமல்ல..பல தாக்குதல்களைத் தாங்கி உயிர்த்து புடம்போட்ட தங்கமென மின்னும் தனித்தன்மை வாய்ந்தது.. அப்படியான பாரத தேசத்தின் வாழ்வு முறைகள் வாழ்வின் நியதிகள் வாழ்வின் அத்தியாவசிய ஒழுக்கங்கள் போன்றவை புராணக் கதைகள் மூலம் சொல்லப்பட்டு...அதை கடைப்பிடிப்போர் பெற்ற நன்மைகளின் உண்மைத்தன்மை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பின்பே நம்பிக்கையாய் உருமாறி இப்போதும் பெரும்பான்மையாய் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம்..அப்படியான ஒரு வாழ்வின் முறைதான் ஏகாதசி விரதம்..முரண் எனும் அரக்கன் தேவர்களைச் சிறைபிடித்து சொல்லொனா துன்பங்கள் தருகிறான்..தேவர்கள் அரங்கனை வழிபட அரங்கன் முரணுடன் போர் புரிகிறார்..ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல...சுமார் ஆயிரம் வருடங்கள்..களைத்துப்போன அரங்கன் குகையொன்றில் ஓய்வெடுக்கிறார்..அவரைத் தேடி வந்த முரண் அரங்கனின் பள்ளி கொண்ட கோலத்தில் அவரை எளிதாக வென்றுவிடலாமென்று உள் நுழைய எத்தனிக்கையில் அரங்கனின் சக்தி அழகான பெண்ணுருவில் முரணை அழிக்கிறாள்..அந்தப்பெண்ணின் பெயர்தான் ஏகாதசி...சுமார் ஆயிரமாண்டுகள் அரங்கன் உணவேதும் உட்கொள்ளவில்லை..முரணை அழித்தவுடன் அரங்கனுக்கான படையல் மலைமலையாகக் குவிக்கப்படுகிறது...இன்னமும் திருவரங்கம் பெரியகோவிலில் சீரான இடைவெளிகளில் பெரிய அளவில் படையல்கள் படைக்கப்படுகின்றன...அதற்கு பெரிய அவசரம் என்று பெயர்...
பெரிய கோவில் பெரிய மதில் பெரிய அரங்கன் பெரிய[படையல்] அவசரம்..ஆற்றல் மிகு தத்துவத்தின் அரியதொரு திருவரங்கம்...என்ற பாடலொன்று திருவரங்கன் தந்த திருவிருத்தங்களில் காணப்படுகிறது..
பெரிய கோவில் பெரிய மதில் பெரிய அரங்கன் பெரிய[படையல்] அவசரம்..ஆற்றல் மிகு தத்துவத்தின் அரியதொரு திருவரங்கம்...என்ற பாடலொன்று திருவரங்கன் தந்த திருவிருத்தங்களில் காணப்படுகிறது..
ஓரு நீண்ட பட்டினியால் தன்னை வருத்திக்கொண்ட அரங்கன் தேவர்களைக் காக்கிறார்..இது புராணம்..இதன் வாழ்விற்கான தத்துவம் தன்னலமற்ற செவ்விய செயல்களால் பிறர் நலம் விழைவோர் அரங்கனுக்கு ஒப்பாவார்..அதாவது கடவுளுக்குச் சமம்..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்...
என்று பேசிச் சென்றுள்ளார் தெய்வப்புலவர்...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்...
என்று பேசிச் சென்றுள்ளார் தெய்வப்புலவர்...
பிறர் நன்மைக்கான பட்டினியிருப்போர்..அதாவது ஏகாதசி விரதமிருப்போர்..துவாதசியில் பாரணை செய்விக்கப்படவேண்டும்..இதில் எந்தவித சமரசமும் அரங்கனால் ஒப்புக்கொள்ளப்படமாட்டாதது...சில பெருமாள் கோவில்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்..பாரணை செய்விக்கும் முன் துளசி தீர்த்தம் ஒரு மிடறாவது உள்செல்லவேண்டும்..அந்த மிடறின் சப்தம்தான் முரணை அழித்த அரங்க சக்தியின் நித்ய வாசத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது..துவாதசி பாரணையை செவ்வனே செய்விக்காத கர்த்தாக்கள் தங்கள் கர்ம வினையால் தாக்கப்பட்டு அரங்கனின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்..
இப்படியான ஒரு விவாதம் தசரதருக்கும் கோசலைக்கும் நடந்து கொண்டிருந்த போது சின்னஞ்சிறிய ராமனாகிய அரங்கன் அவர்களிடையே வருகிறான்...
கோசலை குழந்தையை வாரி எடுத்து..உச்சி முகர்ந்து..ராமா..உன் அன்பெனும் மாயையில் நாங்கள் கட்டுண்டு விட்டோம்..இருந்தாலும் என் உள்ளுணர்வு நீ அந்தப் பரந்தாமன் தான் என்று சொல்லிய வண்ணம் உள்ளது...அது நிஜமா குழந்தாய்...என்று கேட்க..
கோசலை குழந்தையை வாரி எடுத்து..உச்சி முகர்ந்து..ராமா..உன் அன்பெனும் மாயையில் நாங்கள் கட்டுண்டு விட்டோம்..இருந்தாலும் என் உள்ளுணர்வு நீ அந்தப் பரந்தாமன் தான் என்று சொல்லிய வண்ணம் உள்ளது...அது நிஜமா குழந்தாய்...என்று கேட்க..
அரங்கன் தன் விஸ்வரூபத்தை கெளசல்யாவிற்கு காட்டியதாக அத்யாத்ம ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...அந்த விஸ்வரூபத்தைக் கண்டு பயந்த கெளசல்யாவை சமாதனப்படுத்திய அரங்கன்.. அம்மா நீயும் அப்பாவும் கண்ட இந்த விஸ்வரூபம் பல பிறவிகளாய் நீங்கள் ஏகாதசி விரதமிருந்து துவாதசி பாரணைகளை நியமமாகச் செய்ததின் பலன் தான்..என்று சொல்லி மீண்டும் சின்ன ராமனாய்..அருகிருந்த அம்ஸமஞ்சக் கட்டிலில் ஏறியமர்ந்து மெல்ல வலக்கையை தலைக்கு வைத்துக்கொண்டு கால் நீட்டி உறங்கத் தொடங்க ஸ்ரீரங்க விமான அரங்கனின் உருவைக் கண்டு கண்ணீர் மல்க..தசரதச் சக்ரவர்த்தியின் பூஜை மந்திரங்களோடு கூடிய பூஜையறையின் மணிச் சப்தம் இன்றும் அரங்க பக்தர்களில் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது நமது கலாச்சார நிஜம்...
நன்றிகளுடன்...ராகவபிரியன்
நன்றிகளுடன்...ராகவபிரியன்

No comments:
Post a Comment