ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்...தொடர்ச்சி...
ஆச்சாரியன் தரிசனம் அனைவருக்கும் எளிதில் கிட்டிவிடாது என்று தழுதழுத்த குரலில் சொன்ன பட்டர்... ஆச்சாரியன் சிறுவனாய் இருக்கும் போது ஒரு காலட்சேபத்திற்கு கதை கேட்க அவரின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்..அப்போது அவருக்கு நான்கு வயதுதான் இருக்கும்..அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த பிரம்மதேஜஸ் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது..கலாட்சேபம் செய்பவர் பகவத் கீதையை சொல்லிக்கொண்டிருந்தார்..அதில் அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும் என்ற பரமாத்மாவின் நியாயங்களைத் தவறாக சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட குழந்தை ஆச்சார்யன்...அரங்கனின் அவதாரம் அல்லவா...மெல்ல மேடையில் ஏறி...
அகீர்தம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாத திரிச்யதே...
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாத திரிச்யதே...
என்ற மேற்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல அங்கிருந்தவர்கள் வெலவெலத்துப்போகிறார்கள்..
ஒருவனை நீண்ட காலம் இகழ்ச்சியாக நடத்துபவர்கள்...யுத்தத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்...இகழ்ச்சி என்பது மரணத்திற்குச் சமமாகும்..என்றெல்லாம் பகவத் கீதையின் இந்தச் ஸ்லோகத்திற்கு மழலை மாறாத பாஷ்யத்தை எடுத்துச் சொல்கிறார் குழந்தை ஆச்சார்யன்...
அந்த இடம் தாம் தூப்புல் அருகில் உள்ள விளக்கொளி எம்பெருமான் கோவில்...அது முகலாயர்களின் படையெடுப்பால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருந்த நேரம்..இந்து மதத்திற்கும் பக்தர்களுக்கும் கோவில்களுக்கும் பாதுகாப்பற்ற கொடிய பொழுதின் உக்கிர நாட்களில் தன் கோவில்களையும் பக்தர்களையும் பாதுகாக்க அரங்கனே ஆச்சார்யனாய் அவதாரம் எடுத்திருப்பதாக அனைவரும் உணரத்தொடங்கினார்கள்...
ஆச்சார்யனுக்கு உபநயனம் செய்விக்க வேண்டும்..அரங்க நாயகியே ஆச்சாரியனின் அன்னையாய் அதற்கான ஏற்பாடுகளை செய்வித்தாக இன்றளவும் நம்பப்படுகிறது...தினமும் மூன்று வேளைகளும் ஆச்சார்யன் அக்னி ஹோத்திரம் செய்ய ஆரம்பித்தார்...
ஆஹவனீயம் தக்ஷினம் மற்றும் காம்ஹபத்யம் என்ற மூன்று அக்னிகளும் அதன் பிரத்யக்ஷ தேவதைகளும் அந்தக் குழந்தைக்கு அத்தனை சாஸ்திரங்களையும் வேதங்களையும் போதித்தாகச் சொல்கிறார்கள்..
ஆஹவனீயம் தக்ஷினம் மற்றும் காம்ஹபத்யம் என்ற மூன்று அக்னிகளும் அதன் பிரத்யக்ஷ தேவதைகளும் அந்தக் குழந்தைக்கு அத்தனை சாஸ்திரங்களையும் வேதங்களையும் போதித்தாகச் சொல்கிறார்கள்..
ஆச்சார்யனின் சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் தமிழ்கவிதைகளையும் படிக்கும் போது அதிலிருக்கும் அக்னி ஜ்வாலைகளை நாம் பார்க்க முடிவதே அதன் நிஜத்தை நமக்கு இன்றும் கூட உணர்த்திக்கொண்டிருக்கிறது...
வெளியில் வந்து மீண்டும் ஆச்சார்யன் மணிமண்டபத்திற்குச் சென்றோம்...உள் பிரஹாரத்தில் ஆச்சாரியனின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது...அவைகளைப் புதுப்பித்தால் அரங்கனுக்கான கைங்கர்யம் செய்த பலன் கிடைக்கும்...
மணி பண்ணிரண்டைத் தொட வெயிலின் கிரணங்கள் உக்கிரம் காட்ட என் கைபேசியில் ஒரு அங்கத அனுமானத்தில் சில படங்களைப் பிடித்துக் கொண்டேன்..இன்னும் அரை மணி நேரம் தான்..அத்தகிரி வரதனையும் தரிசித்து விடவேண்டுமென்ற அவசரத்தில் புறப்பட்டு வந்துவிட்டோம்..ஆச்சாரியன் எங்களை ஆசீர்வதித்திருப்பார்...
அத்தி வரதன் கோவிலுக்குள் நுழையும் போதே ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் வேகவேகமாய் எங்கள் முன்னே கொதிக்கும் பாறாங்கல் தரையில் ஓடி உள் நுழைய நாங்களும் ஓட்டமும் நடையுமாய்...அவர்களைப் பின் தொடர்ந்தோம்..பெருந்தேவியின் சன்னிதிக்குள் அத்தனைக் கூட்டமும் சென்றுவிட நான் மனைவியிடம் வரதனை முதலில் பார்த்துவிடுவோம்..அதற்குள் கூட்டம் தாயாரை தரிசித்து வந்துவிடும்..பிறகு தாயாரை தரிசிப்போம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு...அரங்கனை தரிசிக்கும் முன் அரங்க நாயகியை தரிசிக்க வேண்டுமென்ற அரங்கனின் கட்டளையை எங்கள் ஆவல் மேலீட்டின் காரணமாய் மறந்ததை பெருந்தேவித் தாயார் கவனித்துக் கொண்டிருந்தார் போலும்..
நான் எப்போதும் திருவரங்கம் செல்லும் போதெல்லாம்...
அரங்க நாயகித் தாயே...
அரங்கனின் அடிமைப்பிள்ளை
உன் முன்னே நிற்கின்றேன்..
அரங்கனின் தரிசனத்திற்காக
உன் அனுமதியைக் கோருகிறேன்..
அரங்கனின் அடிமைப்பிள்ளை
உன் முன்னே நிற்கின்றேன்..
அரங்கனின் தரிசனத்திற்காக
உன் அனுமதியைக் கோருகிறேன்..
உன் தரிசனமும் அரங்கனின் தரிசனமும் தந்து
அறியாப் பிழையும் பெரும் பழியும் போக்கி
என் உள்ளத் தாமரையை ஏற்றருள வேண்டும்..
அறியாப் பிழையும் பெரும் பழியும் போக்கி
என் உள்ளத் தாமரையை ஏற்றருள வேண்டும்..
என்று பிரார்த்திப்பேன்...இன்றோ நேரே அத்தி வரதன் முன் நிற்கிறேன்..
.நின்னருளாங்கதியின்றி மற்றொன்றில்லேன் என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை உரத்துச் சொன்னேன்...அத்தகிரி அருளாலன் உவந்து ஏற்றுக் கொண்டதை உணர்ந்து தங்கப் பல்லிகளைத் தொட்டு ஓட்டமும் நடையுமாய் தாயார் பெருந்தேவியின் முன் நின்றேன்..பின்னால் மனைவி...அம்மா என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தீர்த்தம் சடாரி பெற்று வெளியில் வரும் போது என் இடுப்பில் சுற்றியிருந்த அங்க வஸ்திரம் அவிழ்ந்து வி
ழுந்துவிட்டதைக் கண்ட என் மனைவி...என்னங்க...என்று அழைக்க திரும்பினால் பெருந்தேவித் தாயார்..அரங்க நாயகியாய்..புன் முறுவலுடன்..நிற்கிறார்..நான் அதிர்ந்து பார்க்க..நொடியில் தாயர் மீண்டும் விக்ரஹமாகத் தெரிய... என் மனைவி ஒன்னுமில்லீங்க..அங்க வஸ்திரத்தை கீழே விட்டுட்டீங்க என்று அதை என்னிடம் கொடுத்தாள்...
அம்மா..அடியவனின் பிழையைப் பொறுத்துவிடம்மா...என்று தியானித்தபடியே...திரும்பிக்கொண்டிருந்தேன்...
[என் ஆசான் கே ஜி ஜவஹர் அவர்களுக்காக...தூப்புல் என்பதை தற்போது திருத்தண்ஹா என்று சொன்னால் ஆட்டோ காரர்கள் புரிந்து கொள்கிறார்கள்...தேசிகப் பெருமாள் கோவில் என்றாலும் விளக்கொளி எம்பெருமான் கோவில் என்றாலும் ஒரு சிலர் புரிந்து கொள்கிறார்கள்...அந்த இடம் காஞ்சிமா நகருக்குள்ளேயே தான் இருக்கிறது....]
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்










