Friday, March 27, 2026







அந்தக் காட்டு வழியில்
மீண்டும் அவன் நடக்கத் தொடங்குகிறான்.
ஏற்கனவே பாதையோரம்
பட்டா போட்டு படுத்திருப்பவர்கள்
அவன் மீது கல்லெறியத் தொடங்குகிறார்கள்..
ஒவ்வொன்றாய் எடுத்து
முடிவற்ற பாதையின்
முள்ளடர்ந்த
புறம்போக்கு இடமொன்றில்
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கத் தொடங்குகிறான்..
மெல்ல மெல்ல
உயர்ந்த கற்குவியல்
பொறுமையின் மேகம் தவழும்
தெய்வீகக் குன்றமென
உயர்ந்து நிற்கிறது..
அவ்வரலாற்று உச்சியில்
எக்கண்ணும் எட்டாவிடத்து
நிரந்தர குடிசையில்
நிலவொளியில்
நித்ய வாசம் செய்கிறான்...
அது காலப்போக்கில்
குன்றக் கோவிலாகிவிட்டது...
பட்டா உடையோர் பம்முவார்களா என்ன?
எவரும் நெருங்கவியலா
அவ்வுச்சிக்கோவிலில்
காற்றில் ஆடியபடி
கவி நடனமிடும்
காலத்தை வென்றெரியும்
தூங்கா விளக்கொளியின் மீதுதான்
இப்போது கைவலிக்க
கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்..
கற்கள் தாக்கினால்
குன்று என்ன
குனிந்தா நிற்கும்...?
ராகவபிரியன்



 

No comments:

Post a Comment

  ஆறு என்பதனுள் வைத்துத்தான் மானுட நாகரீக வரலாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டின் வாழ்வியல் காவிரி ஆறின் ஓட்டத்தைக் கொண்டே மானுட ஓட...