எனது புத்தக அவதாரம்
அவதை நிறைந்தது..
ஊற்று தேடி
அள்ளப்பட்டுவிட்ட
காவிரி கொதிமணலில்
நடப்பதானது..
யுகங்களாய் ஓடிக் களைத்த
நதி மீண்டும்
புத்தக வடிவையெடுப்பதற்காக
சுவைத்த
உதட்டு பாண மிடறின்
மீந்த அமிர்தத் துளியது...
அவதை நிறைந்தது..
ஊற்று தேடி
அள்ளப்பட்டுவிட்ட
காவிரி கொதிமணலில்
நடப்பதானது..
யுகங்களாய் ஓடிக் களைத்த
நதி மீண்டும்
புத்தக வடிவையெடுப்பதற்காக
சுவைத்த
உதட்டு பாண மிடறின்
மீந்த அமிர்தத் துளியது...
எனது மொழி பிரவாக சப்தமெனில்
புத்தகம் அலறுவதாகும்..
எனது வார்த்தைகள் வரிகள் கவிதையெனில்
புத்தகம் தேங்கிப்போகும்..
எனது பக்கங்கள் நகர்த்தமுடியா பொழுதின்
ஆழ்மன சிம்ம உறக்கம்..
எனது புத்தக அட்டை
உங்கள் மனக்கொக்கியில்
தொங்கப்போகும் வண்ணச் சட்டை..
புத்தகம் அலறுவதாகும்..
எனது வார்த்தைகள் வரிகள் கவிதையெனில்
புத்தகம் தேங்கிப்போகும்..
எனது பக்கங்கள் நகர்த்தமுடியா பொழுதின்
ஆழ்மன சிம்ம உறக்கம்..
எனது புத்தக அட்டை
உங்கள் மனக்கொக்கியில்
தொங்கப்போகும் வண்ணச் சட்டை..
கடைகளில்
நான் புத்தகங்களின் நடுவில்
பாதிமுகம் காட்டப்போவதில்லை..
நூலகங்களில்
எனை நீங்கள் தேடவேண்டியதில்லை..
மற்றவர்கள் எனைக் கடன் கேட்டால்
புதிதாக அவர்களுக்கு
எனைப் பரிசாக்குங்கள்..
அவர்கள் விரல்கள் எனைப் பிரிக்கையில்
மகிழ்வின் மடல் திறக்கும்
வாச சப்தம் நாசித் துவாரங்களில்
நறுமணமாய் எதிரொலிக்கும்..
என்னிலும் உன்னிலும் அவர்களிலும்..
வாசத்தின் விலை சுவாசமெனில்
உயிரதன் உயிர்பிற்கு
அவசிய..மது..
நான் புத்தகங்களின் நடுவில்
பாதிமுகம் காட்டப்போவதில்லை..
நூலகங்களில்
எனை நீங்கள் தேடவேண்டியதில்லை..
மற்றவர்கள் எனைக் கடன் கேட்டால்
புதிதாக அவர்களுக்கு
எனைப் பரிசாக்குங்கள்..
அவர்கள் விரல்கள் எனைப் பிரிக்கையில்
மகிழ்வின் மடல் திறக்கும்
வாச சப்தம் நாசித் துவாரங்களில்
நறுமணமாய் எதிரொலிக்கும்..
என்னிலும் உன்னிலும் அவர்களிலும்..
வாசத்தின் விலை சுவாசமெனில்
உயிரதன் உயிர்பிற்கு
அவசிய..மது..
புத்தகமோ கவிதையோ
நானென நினைத்தால்
அவதார நோக்கம் சிதையலாம்..
என்னையதில் தேடாதீர்கள்..
இது ரசவாதமல்ல..
என் புத்தகம் வாங்க
உங்கள் நிழலென
ஒட்டியும் வெட்டியும் ஓடியும் நடந்தும்
உங்களுக்குள் மறைந்தும்
உங்களுடனேயே இருப்பேன்...
யுகங்களாய்...
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்
நானென நினைத்தால்
அவதார நோக்கம் சிதையலாம்..
என்னையதில் தேடாதீர்கள்..
இது ரசவாதமல்ல..
என் புத்தகம் வாங்க
உங்கள் நிழலென
ஒட்டியும் வெட்டியும் ஓடியும் நடந்தும்
உங்களுக்குள் மறைந்தும்
உங்களுடனேயே இருப்பேன்...
யுகங்களாய்...
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்

No comments:
Post a Comment