ஒரு கோவிலின் புனிதமென்பது தொடர்ந்து காப்பாற்றப் படவேண்டிய ஒன்று..தொன்று தொட்டு ஆயிரமாயிர வருடங்களாய் பின் பற்றப்படும் நடைமுறைகள் ஆகமவிதிகள் நிரூபிக்கப்பட்ட நன்மைகளை மக்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்கிவந்திருக்கின்றன..அது போன்ற புனிதமிகு ஆகம விதிகளை பின் பற்றி பூஜைகள் செய்யப்படும் கோவில்களில் பூஜாவிதிகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை..
கோவில் பூஜைகளைச் செய்யும் உரிமை அந்த குலத்தில் அல்லது குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டும் தரப்படுவதில்லை...ஆகமங்களை கசடறக் கற்றிருக்க வேண்டும்..தீட்சை பெற்றிருக்க வேண்டும்..நியமங்களையும் நித்ய கர்மாக்களையும் தவறாது கடை பிடிக்கவேண்டும்...நமது மதத்தின் தத்துவங்களில் தர்மம் சார்ந்த நெறிகளில் போதிய ஞானம் பெற்றிருக்க வேண்டும்...சம்ஸ்கிருத அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்..பூஜைகளின் கால நேர நிர்ணயங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்..அது தான் சரியான தகுதியென்று வைகானஸத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...அப்படியின்றி தன்னலத்திற்காக கோவில் பூஜையை பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுதல் மேற்கண்ட தகுதிகள் இருந்தாலும் மஹா பாவம்..என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன...
தனக்கு பூஜைக்கான கிரமங்கள் சாத்தியப்படவில்லையெனில் அதற்கான தக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்..அப்போது தான் கோவிலின் புனிதமும் அதன் சக்தியும் காப்பாற்றப் படும்..இல்லையேல் அரங்கனின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...
சுக்ரீவன் ராமனாக அவதரித்த அரங்கனிடம் சந்தேகம் கொள்கிறான்...தன் அண்ணன் வாலியை விட வலிமை இந்த மானுட ராமனுக்கு இருக்குமா எனச் சந்தேகிக்கிறான்..இதையுணர்ந்த எம்பெருமான்...கடும் கோபம் கொள்கிறார்...அரங்க பக்தர்களைச் சந்தேகிப்பவர்கள் மேல் அரங்கன் கொள்ளும் கோபத்தைவிடக் கடுமையாக அது இருந்திருக்க வேண்டும்...உடனே ஒரு செயலை ராமபிரான் யாரும் எதிர்பார்க்காமலேயே செய்கிறார்...துந்துபி என்ற அரக்கன்...நிறைய மலைகளை ஒன்று சேர்த்தார்ப்போன்ற மிகப்பெரிய உடலையுடையவன்..அவனை வாலி கொன்றுவிட அவ்வரக்கனின் ஆகப்பெரிய எலும்புக் குவியல் இமயம் அளவிற்கு அப்போது அங்கே கிடந்தது...அதை ராகவன் தன் இடதுகால் கட்டைவிரலால் மெல்ல தட்ட...அது ஏழு கடல் தாண்டி சென்றுவிழ...சுக்ரீவன் வெடவெடத்துப்போனான்..ராமபிரானின் வலிமையைச் சந்தேகிப்பவர்களுக்கு அரங்கன் தன் வலிமையைக் காட்டினால் அண்டசராசரங்கள் நடு நடுங்கிப்போகும் என்பதாக நம் ஆச்சாரியன் ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார் சுவாமிகள்...தான் எழுதிய அபூர்வமான ஸம்ஸ்கிருத உரை நடைக் காவியமான ஸ்ரீ மஹாவீர் வைபவத்தில் இப்படிச் சொல்கிறார்..
த்ருத கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்கானகூட தூர விஷேப தக்ஷ தக்ஷிணேதா பாதாங்குஷ்ட்ட தர சல ந விஸ்வஸ்த ஸூஹ்ருதாசய:
[ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார்}
[ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார்}
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
திருவஹிந்தபுர திவ்ய ரெங்கன் திருவடிகளே சரணம்...
அன்பன்...ராகவபிரியன்
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
திருவஹிந்தபுர திவ்ய ரெங்கன் திருவடிகளே சரணம்...
அன்பன்...ராகவபிரியன்

No comments:
Post a Comment