Sunday, January 13, 2019

யானையின் காடு

யானைகளின் காட்டுக்குள் தான்
கும்கிகளும் பிறக்கின்றன..
எதோ ஒரு யானையது என்ற
காதம்பகம் கொடியது..
யானைத் தடங்களின் நடுவே
வெள்ளையும் இடைக்கோடுகளும் இடல்
வேகப் பதாகைகள் நடல்
இடை மறித்து தண்டவாளங்கள் செலல்
யானை தின்னிகளின்
கும்கி வியூகங்கள்..
கும்கிகளுக்கும்
மத்தகங்களும்
தந்தங்களும்
பதித்த பிரம்ம பட்டரைகளை
மூடமுடியாத
வலியின் போர்ப்பிளிறல்கள்
காடுகளெங்கும் எதிரொலிக்க..
வலிந்து திணிக்கப்பட்டு
தடதடத்து வரும்
ஒரு தண்டவாள யமனை
யானைத் தன்காலால் உதைக்கும்
அப்பொழுதில்
துண்டாடப்படுவது துயரம்..
கும்கிகளுக்குத் தரப்படும்
பச்சையங்களும் கவளங்களும்
காடுகளெங்கும் நிறைந்திருக்கையில்
வீடுகளிலும் வீதிகளிலும்
துதிக்கையால் ஒரு புத்தகத்தின்
அச்சிட்டப் பக்கத்தைச் சுருட்டி
மத்தகத்திற்குக் கடத்துவதென்பது
நம் காலத்தின்
இலக்கியக் கொடுமை..
கும்கிகளுக்கெதிரான
ஒரு ஈ.புத்தகம்
பிறக்கப்போகும் பிரசவ பூமியை
சுற்றிச் சுற்றி குலவையிடும்
யானைக் கூட்டம்...
{திருச்சியில் ...18.02.2018ல்
வாருங்கள் ...
கோடுகளற்ற காடுகள் படைப்போம்..}
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...