Tuesday, January 29, 2019

யாருமற்ற சுவரதில்
நாட்காட்டித் தாள்களென
கிழிபட்டுக்கொண்டிருக்கிறேன்..
புதிய ஆண்டொன்றில்
கிருதஞ்ஞதையென
என்மீதான பரீட்சைகளுக்காக
குழந்தைக் கைகளில்..
எறியப்படுகிறேன்..
அதன் குழகாக சுமந்து செல்லப்படுகையில்..
என் ஆகப்பெரிய வானம்
பிஞ்சுக் கைகளால் வருடப்படும்
சின்ன பரப்பென சுருங்கும்..
என் நாட்கள் சுமந்த
ஆணித் தடங்களின் துவாரத் துரு
பிஞ்சு விரல்களின்
வருடல் பாதைகளில்
வேகத் தடைகளென கிடக்கிறது..
வானத்தின் வேகத் தடைகள்
குழந்தை வேகத்தை கட்டுப் படுத்துமோ....?
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  ஆறு என்பதனுள் வைத்துத்தான் மானுட நாகரீக வரலாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டின் வாழ்வியல் காவிரி ஆறின் ஓட்டத்தைக் கொண்டே மானுட ஓட...