Tuesday, January 15, 2019

பொங்கல் அரங்கன்

நக்கீரரே புகழ்ந்து போற்றிய[ இடஒதுக்கீட்டை சிறிதும் எதிர்பாராமல்] தன் கவித்திறமையால் சங்க இலக்கியங்களில் இடம்பிடித்த ப்ராமண கவியான கபிலர்..குறிஞ்சித்திணையைப் பாடுவதில் வல்லவர்...புற நானூற்றுப்பாடலொன்றில் பொங்கல் விழாவை அருமையாகக் குறிப்பிடுகிறார்....
"கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தவளே...வாணுதல் இனியே...
காய் நெல் கவளம் தீற்றிக் காவு தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி வருதலானார் வேந்தர்..."[ கபிலர்]
இப்படியெல்லாம் போற்றதலுக்குரிய பொங்கல் திரு நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவரங்கத்தை முகம்மதிய படையெடுப்பு புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலம்..கொடிய வரலாற்று நிகழ்வின் காயங்கள் இன்னும் ஆறாத...நமது கலாச்சாரத்திற்கு விடப்பட்ட ஒரு துயர சவாலால் நமது பண்டிகைகள் களவாடப்பட்ட காலகட்டத்தில் அரங்கனின் தரிசனம் சுவரெழுப்பி மூடப்பட்டிருந்தது..உற்சவ மூர்த்திகள் தமிழக எல்லைகளைக் கடந்து காடேகிவிட..நமது ஆச்சாரியர் ஸ்ரீமான் நிகம்மாந்த மஹாதேசிகன் மனம் வெதும்பி கொள்ளிடம் கடந்து ஆசிரம் அமைத்து தங்குகிறார்...பக்தியின் மிகையென எதுவுமில்லை எனும் உண்மையை எப்படிப் பகைவர்களுக்கு விளங்க வைப்பதென அறியாது துடித்துப்போகிறார்..அமைதியயை, அரங்கனுக்கான ஆராதனைகளை, துண்டாடப்பட்ட விவசாயத்தை, பண்டிகைகளை எப்படி மீட்டெடுப்பதெனும் வகைமைகளை எப்போதும் சிந்தித்தப்படியே இருக்கிறார்...பயம் எனும் பேயின் ஆனந்த நடனம் திருவரங்க மக்களின் மனமேடைகளில் நட்டுவாங்கமில்லாமல் இடைவெளியில்லாமல் நடைபெற்றதால் மக்கள் நடைப்பிணமாக வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமின்றி யிருப்பதைக் கண்ணுற்ற ஆச்சாரியார் ...பண்டிகைகளைக் கொண்டாடும் போதில் மனம் அச்சம் நீங்கி மகிழ்வு பிறக்கும்..பண்டிகைகள் எதிரிகளையும் நண்பனாக்கும் என்ற நமது பாரம்பரிய கலாச்சாரத்தின் சக்தியை உணர்கிறார்...அது அறுவடைக் காலம்...மார்கழி தொடங்கியும் அரங்கனுக்கான அத்யயன உத்சவம் தொடங்கப்படவில்லை...மக்களின் மனமெல்லாம் அச்சம்...பயம்..பரிதவிப்பு...அரங்கனை நோக்கி 29 பாடல்களை இயற்றுகிறார்....அதில் ஒரு பாடல்...
"மருத் தரணி பாவக த்ரிதச நாத காலாதய:
ஸ்வக்ருத்ய மதிருர்வதே த்வதபராததோ பிப்யத:
மஹத் கிமபி வஜ்ரம் உத்யதமிவேதியத் ஸ்ருவதே
தரத்ய நக தத் பயம் ய இஹ தாவக: ஸ்தாவக:"
[ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார்}
இதன் பொருள் என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில்...
குற்றமற்ற அரங்கா...நாங்கள் என்ன குற்றம் செய்தோம்..வஜ்ராயுதம் போன்ற உன் கட்டளையை மீறுபவர்கள் எவ்விதமான தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதைக் கண்டுவிட்டோம்...உனக்கான ஆராதனைகளில் சமரசம் செய்வது எவ்வித தீங்கை விளைவிக்கும் எனப் புரிந்தோம்..வாயு, அக்னி, இந்த்ரன், யமன் போன்ற தேவர்களே உன் கட்டளையை மீறத் தயங்குகையில் நாங்கள் சுய நலத்திற்காக உன்னை மீறீயதைப் பொருத்தருள்வாய்...உப நிஷத்தில் கூறியதையும் நாங்கள் மறந்து ..எங்கள் இஷ்ட்டத்திற்கு உனக்கான பூஜைகளில் குறைவைத்துவிட்டோம்...இப்போது பயம் எங்களைச் சூழ்ந்துகொண்டுள்ளது..இந்த பயம் போக்க உன்னால் தான் முடியும்.. ஹே ரங்க நாதா...பரம தயாபரனே...எங்களை மன்னித்து நற்கதியருள்வாய்...
இந்த ஸ்லோகம் அபிதிஸ்தவத்தில் உள்ளது...ஆச்சாரியரின் பாடல்களுக்குச் செவிசாய்த்த அரங்கன் அடுத்த ஆண்டிலேயே உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து தன் முன்னான சுவர் சாய்க்கப்பட்டு பொங்கல் பண்டிகை வெகு வியமரிசையாக நடைபெற்றதை திருவரங்கக் கோவில் கல்வெட்டில் பதிக்கச் செய்திருக்கிறான்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...