பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...6
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Tuesday, December 29, 2020
Saturday, December 26, 2020
பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும் 5
Friday, December 25, 2020
பனவனும் மார்கழியும் அரங்கனும் அரையர் சேவையும்...4
Thursday, December 17, 2020
படைப்பொன்றின் இடைச்செருகல்களாய் புகழ்தொன்மச் சிறுபுனைவுகளை இணைத்து புரியாத மொழியின் புதிர்வரிகளால் ஆக்கப்படும் ஆக்கங்கள் எண்பதுகளில் மேலை இலக்கியங்களில் பின் நவீனமாகக் கருதப்பட்டது நிஜம்...இடைச்செருகும் தொன்மங்களின் தேர்வின் அளவு கோள்கள் படைப்பாளனின் வாசிப்பின் ஆழத்தைக் காட்டுவதாக வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் அல்லது பிரமித்துப் போவார்கள் என்பதை ஊகத்தால் தனதாக்கி வெளிவந்து தோல்விகளைத் தழுவி...பின் நவீனமென்பது அதுவல்ல என்பதை உரத்து இலக்கிய உலகிற்குச் சொல்லிச் சென்றது யாருக்கும் கட்டுப்படாத காலம்...எண்பதுகளின் இறுதி இலக்கியப் படைப்புகள்...காலத்தின் அசுரப் பிடியில் சிக்கி நெளிந்து கொண்டிருக்கின்றன...தொன்மங்கள் என்பது எழுத்துருவமற்ற சொற்சேர்க்கைகளின் நீட்சி...தொடர்ந்து...சில ஆயிரவருடங்களுக்குப் பின் எழுத்துருவம் பெற்று...சமுதாயக் கூட்டத்தின் சில பிரிவுகளால் இன்னமும் வாழ்வின் சில கணங்களில் உச்சரிக்கப்படுபவை...தொன்மங்கள் படைப்பாளியின் வாசிப்பின் ஆழத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை...செம்புலப்பெயல் நீர் போல என்ற ஒரு தொன்மத்தை இடைச்செருகலாய் கொண்ட படைப்பின் படைப்பாசிரியர் சங்க இலக்கியங்கள் அத்தனையையும் ஒரு முறையாவது வாசித்திருப்பார் என்பதற்கான உத்தரவாதமாய் கொள்வது பூனை பிடிப்பவர் புலியை பிடிக்கும் சக்தியுடையவர் என்பது போன்றது...சரி பின் நவீன படைப்பில் தொன்மங்கள் கையாள்வது சொல்லாட்சி சாதனங்களில் ஒன்றென அறுதியிட்டுக் கூறமுடியாதா என்ற கேள்வியை தன்னிடம் கேட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்...ப்ரெஞ்சு மொழியியல் அறிஞர்...ஹெரால்ட் ஆரம் வீஸா...நேரியல் எழுத்தும் நேரியல் சாரா எழுத்தும் பின் நவீன மொழியில் இல்லையா என்ற ஒரு கேள்வியை அவர் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளைப் பார்த்துக் கேட்கிறார்...ஒரு காலத்தின் மறக்கமுடியா நிகழ்வொன்றை தாங்கி நிற்கும் கதைகளின் வடிவம் பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கலாம்...அது சிதைந்து விடாமல் இருக்கவேண்டும்...நேரியல் எழுத்தின் அடிப்படை வாதம் இதுவென உரத்துச் சொல்லவும் முடிவதில்லை என்பதே நிஜம்...தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது ராஜராஜ சோழனுக்குக் கண்டிப்பாய்த் தெரியும் என்றெழுதுவது நேரியல் சாரா எழுத்தென வாதிட முடியுமா...? நவீனமோ...அல்லது அதன் பின் நின்றுகொண்டிருக்கும் பின் நவீனமோ....எதுவாக இருப்பினும் வாசகனுக்கும் காலத்திற்கும் சுமையாகிவிடக்கூடாதெனச் சொல்கிறார்கள் மொழியியல் ஆய்வர்கள்...மார்க் எஸ் புல்லரும்...ப்ரெஞ்சீ எப் அப்ளேயும்...சுமைதரக்கூடிய எதுவும் இறக்கி வைக்கப்பட்டுவிடும்...தோளில் இருந்து மட்டுமல்ல...காலத்தின் தூணொன்றிலிருந்தும்...இனி உங்களுக்காக ஒரு பின் நவீன தொன்ம இடைச்செருகல்கள் உள்ளடக்கிய ஒரு கவிதை....???
Wednesday, December 16, 2020
பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...1
Saturday, November 14, 2020
உலகளாவிய இலக்கிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக இலக்கிய கர்த்தாக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...ராகவபிரியன்
Monday, May 4, 2020
யோகேஸ்வரததோமே த்வம்தர்ஸயாத்மாநமவ்யயம்
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீ நி..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
Saturday, March 21, 2020
பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது..
முன்னறிவிப்புகளின்றி..
வெளியேயான தோட்டத்தில்
என் இதய அடுக்குகள்
அறிந்த வற்றையே
பூச்செடிகளாக
பயிரிட்டு வளர்த்திருக்கிறேன்..
கள ஆராய்சிக்கான
என் தண்ணீர் குழாயின்
மூடியைத் திறந்தேன்..
ஆராய்சி நீர்
தோட்டமெல்லாம்
ஆக்கிரமித்திருக்கலாம்..
முட்களில்லாத ரோஜாக்களின்
வேர்கள்
தங்களின் மறைவிடத்திலிருந்து
வெளிவந்து
அலறிக் கொண்டிருக்கலாம்..
மரமிறங்கிய எண்ண அணில்
நீரில் நீந்திக் கொண்டிருக்கும்
சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது..
உங்களுக்கும் கூட..
பழுத்துதிர்ந்த செர்ரிப் பழங்களை
காயவைத்திருக்கும்
என் வெற்று மனத்திடல் வரை
இந்நேரம்
தண்ணீர் கைகளை
நீட்டிக் கொண்டிருக்கும்..
ஒரு வெப்ப அளவு மாணியுடன்..
சரிந்து கிடக்கும்
சாய்ந்த நீர் தொட்டி
என் மனத்தோட்டமெங்கும்
விசனித்துக் கிடக்கையில்..
என் பள்ளிக் கூடம்
திறக்கப்பட்டு
நீர் கசிவுகள் நிறுத்தப் படும் வரை
பூச்சு முகங்களும்
ஆர்பரித்தபடி
ஆனந்தமாய்
தோட்டமெங்கும்
ஆடிக் கொண்டிருக்கும்..
என் பள்ளிக் கூடம்
முன்னறிவிப்பின்றி
மூடப்பட்டது...?
உள் நுழையும் எவரேனும்
என்
தோட்டத்து தண்ணீர் குழாயை
மூடிவிட நேர்ந்தால்..
கள ஆராச்சித் தோட்டத்தில்
வானவில்லொன்றை
நீங்களும் பார்க்கலாம்..
ராகவபிரியன்
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....








