Monday, May 4, 2020

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...2+8
தோற்ற மயக்கம் என்ற பதம் நமக்கு பாரதி தந்தது..ஒரு தோற்றத்தை வைத்து எதையும் மனிதனால் புரிந்து கொள்ளவோ அல்லது முடிவெடுக்கவோ முடியாதென்பது தான் நிஜம்..கடந்த சில நாட்களுக்கு முன் திவ்ய பிரபந்தங்கள் உரத்து வாசிப்பதை நிறுத்தச் சொல்லிய அரங்கனின் கட்டளையை பதிவு செய்திருந்தேன்..அறிவீர்கள்..அந்தப் பொழுதுகள்...அல்லது அந்த நாட்கள் ஒரு ஆன்மீக நெருக்கடியான நாட்கள்..உரத்து வாசிப்பதை நிறுத்திய போதும் அரங்கன் வேறு விதமாக தன் வடிவங்களை எனக்குக் காட்டியபடியே இருந்தான்..ஒரு ஆன்மீக வாழ்வியலின் தோற்ற மயக்கமென அதை நான் ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை..ஓர் இரவின் முடிவுத் தளத்தில் எனது ஆழ்ந்த உறக்கத்தின் மேடையில் அரங்கனின் கோவில் கதவுகளை ஒருவர் தாளிடுகிறார்..அவரை நான் பிடித்துத் தள்ளுகிறேன்..அவர் என்னை மேடையிலிருந்து தள்ளிவிட என் கால்கள் தரையை உதைக்கின்றன..கடுமையான வலி இன்னமும் எனது இடது காலில் தங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என அறியேன்...அர்ஜூனன் அரங்கனின் ஈஸ்வர ஸ்வரூபத்தை அரங்கனே வர்ணித்ததை கேட்டு ஆச்சர்யம் அடைகிறான்..அரங்கனின் வார்த்தைகளை அரங்க பக்தன் நம்புகிறானா இல்லையா என்பதை அரங்கனால் உணரமுடியாதா என்ன..இருந்தாலும் பக்தன் அதை ஒரு வேண்டுதலாக தன்னிடம் விண்ணப்பிக்கட்டும் என நினைத்த நொடியில்...அர்ஜுனன்...
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ
யோகேஸ்வரததோமே த்வம்தர்ஸயாத்மாநமவ்யயம்
அரங்கா..உன் ஈஸ்வர உருவத்தை அதிதீவிர பக்தனான என்னால் பார்க்க முடியுமெனில்...எனக்கு அந்த தரிசன பாக்யத்தைத் தாருங்கள்....எனக் கெஞ்சுகிறான்...
இந்த அரங்கனடிமை குலசேகர படியில் கால் வைக்காமல் அரங்கனின் அர்ச்சையை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்..அரங்கன் என்னை சற்றே எதிர் திசையில் நில் எனச் சொல்கிறான்... நின்று தெருவை நோக்க..உலகில் என்னைக் காணும் சக்தி உள்ளவர்களில் உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன்..ஆனால் என் மேனியில் அதாவது அர்ச்சையின் எண்ணற்ற மாற்றங்கள் தெய்வீகமானவை..மேலே பார்..ஒரு மேகத்திரட்டிற்குள் என் உருவத்தை ஒரு நொடியில் நீ கண்டுவிடலாம்..என்று சொல்வது போன்ற பிரமை பூசிய எழுத்துக்கள் மனதில் ஓட...
பகவானின்...
பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ்:
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீ நி..
என்ற பதில் ஒரு சாட்டையென முதுகில் விழுகிறது...ஓடிச்சென்று என் வீட்டிலிருந்து கைபேசியை எடுத்து வந்து கோவில் வாசலில் குலசேகரப்படியின் அருகிருந்து அந்த மேகவர்ணனின் வடிவை நிழற்படமாய் எடுக்கிறேன்..பெரிது செய்து பார்க்க விழித்திரை தடுமாறுகிறது...பக்தனே என் நூற்றுக்கணக்கான ...ஏன்..ஆயிரக்க்கணக்கான..பலவித வடிவங்களான தெய்வீகமான... யாருமே காண முடியாத உருவத்தைப் பார்.. என்று பார்த்தனுக்குச் சொன்னதை...தனது கிரீடத்தைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு...ஆணவத்தை..தலையிலிருந்து அகற்றிப் பார்...என இந்த அரங்கனடிமைக்குச் சொன்னதாக நினைத்துச் சிலிர்த்துப் போகிறேன்..மயக்கமே வந்து விட்டதை அரங்கன் அறிவான்...இது தான் தோற்ற மயக்கங்களோ...?
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...