பனவனும் மார்கழியும் அரங்கனும் அரையர் சேவையும்...4
ஆன்மீக முதலீடு செய்திருப்பவன் அரங்கன் மட்டுமே...இவ்வுலகில் ஆன்மீகம் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் அரங்கனின் முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே...அது போன்றவர்கள் உயர்ந்த குணங்களையும் உயர்ந்த சிந்தனையையும் அரங்கன் சேவையே வாழ்வின் உயர்விற்கு வழி என்ற உண்மையின் நிலையையும் மனதில் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்...சம்பாதிப்பதற்கு எத்தனையோ சுலபமான வழிகள் உள்ளன...நிறைய சம்பாதித்தவர்கள் நிஜமாகவே அரங்கனின் சேவையில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி வழிவிடவேண்டும்..இல்லையேல் அரங்கனின் அளவிலா திருவிளையாட்டுகளில் தோற்று வாழ்விழக்கவேண்டிவரும்...அரங்கனின் பூஜைகளை பற்றியும் அரங்க சேவையைப் பற்றியும் அறியாத ஆகம ஆன்மீக அடைப்படையறிவற்றர்கள் வெறும் பிறப்பால் கோவில் பூஜைகளில் ஈடுபடுவது பேராபத்தானது என்பதை உணரவேண்டும்... வன்முறைகளால் அரங்கனின் அடியவனையும் அரங்க பக்தர்களையும் இப்போது மட்டுமல்ல எப்போதுமே வீழ்த்திவிடமுடியாது...
1371 பரிதாபி வருடம் கோபணார்யர் சத்யமங்கலத்தில் 102 வயதான ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகரைச் சந்திக்கிறார்...நாற்பத்தெட்டு ஆண்டுகளாய் உலகெலாம் சுற்றி வந்த அரங்கன் திருவரங்கம் திரும்பும் வேளை வந்துவிட்டதென கூறுகிறார்...இஸ்லாமிய படைகள்... விஜய நகரப் படையுடன் கூட்டுச் சேர்ந்த திருவரங்கனின் தொண்டர்படைகளின் ஆக்ரோஷமான தாக்குதலில் நிலைகுலைந்து இன்றைய சமயபுரம் அன்றைய கண்ணனூரிலிருந்து தோற்றோடுகின்றன...இஸ்லாமியர்களால் மசூதியாக மாற்றப்பட்ட ஒய்சலேச்வரர் கோவிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டினார் கோபணார்யர்...இன்றும் சமயபுரத்தில் பொய்ச்சலேச்வரர் கோவில் என்ற அதே புதிய பெயரில்...கம்பிரம் குறையாமல்... கோபணார்யரின் அரங்க பக்தியையும் ஆற்றலையும் ஆன்மீக வரலாற்று நிஜத்தையும் உலகிற்கு உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது...
ஆரவாரமுடன் அரங்கனின் கடுமையான சோதனைகளையும் தாக்குதல்களையும் தாங்கி மீண்ட நம்பெருமாள் விக்ரஹம் திருவரங்கத்தில் நுழைகிறது...ஏற்கனவே நம்பெருமாள் விக்ரஹம் ஒன்று அங்கே பூஜிக்கப்படுகிறது...வடதிருக்காவேரியின் மறுகரையில் அப்போதிருந்த அரங்க பக்தர்கள் காய்ந்து கிடந்த சுடுமணலிலும்...கடுமையாள வெள்ள நீரிலும் திருவரங்கம் வந்து...தினமும் அரங்கனின் சேவையை முடித்த பிறகே அன்றாடம் உணவு உண்பார்கள்...அதுவரை தலைமுறைகளாய் பின்பற்றப்பட்ட தொன்ம நிகழ்வு...இன்றும் கூட ஒரு சில குடும்பங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது....நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்...அதாவது...1328ல் நிகழ்ந்த இஸ்லாமிய படையெடுப்பால் திருவரங்கனை கல்சுவர் எழுப்பி ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் மூடிவிடுகிறார்... மூல அரங்கன் தன்னை மூடிக்கொண்டுவிட்டார்...நம்பெருமாள் விக்ரஹம் சுமந்து அரங்கனின் ஆத்மார்த்த வரலாற்றில் தன் பெயர் பொறித்துச் சென்ற குலசேகரனும்...மஹான் பிள்ளை லோகாச்சாரியரும்...சுமந்து தோள்கள் வலியெடுக்க அரங்கனை தென்திசை கூட்டிச் சென்றுவிட்டார்கள்...வடதிருக்காவிரியின் அக்கரையைச் சேர்ந்த அரங்க பக்தர்கள் அரங்கனின் பூஜைகளைக் காணாமல்...உண்ண மாட்டார்கள் என்பதால்...தொடர் பட்டினியாய் இறக்கத் தொடங்கினார்கள்...பக்தர்களின் மரணம் பெருமாளை அசைத்துப் பார்த்தது...அரங்கன் ஒரு வயதானவர் வேடம் எடுத்து... நம்பெருமாள் விக்ரஹம் இங்கே தான் ஓளித்து வைத்திருக்கப்பட்டிருந்தது...இனி பூஜைகள் நடைபெறட்டும் என்று சொல்லி அங்கிருந்த பட்டர்களிடம் கொடுத்து உடனே தன் உடலெடுத்த அவதார காரியத்தை நிறைவு செய்கிறார்...வேறெந்த தகவல்களும் கிடைக்காமல்...கடந்த இருபதாண்டுகளுக்கும் மேல் மீண்டும் நம்பெருமாளுக்கான நித்ய ஆராதனங்கள் நிகழ த்தொடங்கின...இதைப்பற்றிய கவலையெதுவுமின்றி... வடதிருக்காவிரியின் ஆத்மார்த்த அரங்க பக்தர்களின் சந்ததிகள் அரங்க பூஜையை மீண்டும் கண்டு தங்களின் வாழ்வை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்...
நம்பெருமாள் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் உள்ளே வருகிறார்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகரும்...கோபணார்யரும் வருகிறார்கள்...ஏற்கனவே பூஜைகளை ஏற்றுக் கொண்டிருந்த அரங்கனே வடிவமைத்த நம்பெருமாள் அட்டகாசமான புன்னகையுடன் உலகம் சுற்றி பக்தர்களையெல்லாம் பார்த்துவிட்டு நாற்பதெட்டு ஆண்டுகளுக்குப் பின் வரும் நம்பெருமாளின் அசல் பிரதியை வரவேற்கிறார்...பூஜிக்கும் பாத்யதைப் பட்ட பட்டர்களுக்குச் சந்தேகம்...எது நிஜம் எது போலி...?வைகானசம் நிஜமா...பாஞ்சராத்ரம் போலியா...?பாஞ்சராத்ர ராமானுச தென்கலை அய்யங்கார்கள் அய்யங்கார் என்று சொல்லிக்கொண்டால் இன்னமும் கோபம் கொள்ளும் சில போலி வைகானசர்கள் இன்றிருப்பது போல் அன்றும் இருந்தார்கள்...அவர்களின் கபட நாடகமறிந்த ஆச்சாரியர்...தொன்னூறு வயதான... அரங்கனின் வஸ்திரங்களைத் துவைத்துத் தரும் முதிய வண்ணார் எனும் அரங்க பக்தரை வரச்சொல்கிறார்...அவர் கண்பார்வை பறிபோனாலும்...இரண்டு நம்பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்த ஆடைகளைக் களைந்து அதன் தீர்த்தச் சுவையில் நிஜ நம்பெருமாளைக் காட்டிக் கொடுக்கிறார்...ரங்கா ரங்கா என்ற கோஷம் வானைப் பிளக்கிறது...மூடப்பட்ட செங்கற்களை தன் 102 வயதான நடுங்கும் தன் புனிதக்கரங்களால் ஆச்சாரியர் ஒவ்வொன்றாய் அகற்றுகிறார்...உயர்வற உயர் நலம் உடைய மூல அரங்கனின் அர்ச்சை வடிவில் அப்படியே புத்தம் புதிதாக செந்நிற பட்டு வஸ்திரம் அணிந்து காட்சிதருகிறான்...அங்கிருந்த பூஜைப் பொருட்கள் கடைசீயாக சூட்டப்பட்டிருந்த மாலைகள் மற்ற அனைத்தும் புழுதிகூட படியாமல் இருக்க...ஆச்சாரியரின் கண்களில் இருந்து கண்ணீரும் அவரின் மனதில் பொங்கியெழுந்த அரங்கனின் பாடல்களும் நிற்கவே இல்லை...கோபணார்யரைக் கட்டித் தழுவி ஆச்சார்ய ஆசுகவி ஒரு பாடல் சொல்கிறார்...இன்றும் திருவரங்கனின் கோவில் கல்வெட்டில் காலத்தால் அழிக்க முடியாதபடி செதுக்கப்பட்டிருக்கிறது இந்த வரலாறு....
ஆநீயா நீலஸ்ருங்கத் யுதிரசித ஜகத்ரஞ் ஜனதஞ்ச நாதஞ்ஜானாத்ரேஜ்
செஞ்சியாமாராத்யகஞ்சித ஸமயமத நிகன்யோத்த நுஷ்கான்ஸ துலாஷ்காத்
லக்ஷ்மீ கஷ்மாப்யா மூபாப்யாம் ஶநிஜ நிலயஸ்தாபயந் ரங்கனாதம்
ஸம்யக்வர்யாம் ஸ்பரியாம் குருத நிஜயஸோதர்ப்புணோ கோபணார்ய..
எங்கெங்கோ சுற்றி....திருப்பதி வந்து...அங்கிருந்த கலியுக வரதன் எம்பெருமானுடன் அளவாளாவி மகிழ்ந்து பின் செஞ்சி வந்து அரங்க பூஜைக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட அரங்க பக்தர்களால் பூஜிக்கப்பட்ட ஆச்சர்யமான எங்கள் அரங்கனை...மீண்டும் திருவரங்கம் எழுந்தருளப்பண்ணிய கோபணார்யர்..கொடிய துலுக்கர்களை மட்டும் வெல்லவில்லை...அரங்கனுக்கும் அரங்க பக்தர்களுக்கும் தீங்கு செய்த அத்தனை அராஜக பக்தியற்ற கீழ்தரமான மானுடர்களையும் வென்று வந்திருக்கிறார்...
மேற்கண்ட ஆச்சாரியனின் வரலாற்றுப் பதிவு இன்றும் தர்மவர்மாவின் திருச்சுற்று கற்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது....
கடந்த சில வருடங்களாக அரங்கனையும் ஆழ்வார்களையும் அரங்க பக்தர்களையும் ஒலிபெருக்கியில் மார்கழி மாதம் முழுவதும் ஒரு பிராமண துவேஷ போலி பூஜையாளர் சொற்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான்...தற்போது இன்னும் மிகவும் தரம் தாழ்ந்து அய்யர் என்றாலும் அய்யங்கார் என்றாலும் தனக்குக் கோபம் வருகிறது என்று இருமாப்புடன் சப்த வெறும் கூச்சலுடன் முழங்குகிறான்...அது மட்டுமல்ல...தன்னை....தனது ஆன்மீகப் போதாமையை...ஆகம அறிவின் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி கேள்வி கேட்பவர்களை தனிமைப் படுத்தி...கோவிலில் நுழையாமல் செய்வது மட்டுமல்ல... அவ்வூர் வாழும் அறம் சார் மனிதர்களைக்கூட வாழ் நாள் பகைவர்களாக மாற்றி எளிதாக அழித்துவிடமுடியுமென்றும் ஆணவ சூளுரைக்கிறான்...என்ன செய்வதரங்கா...என்று இந்த அடியவன் அரங்கன் முன் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து....திருவரங்கனின் பாதகமலங்களைப் பற்றியபடி....சக்தியற்று மன்றாடிக்கொண்டிருக்கிறான்...
நேற்று ஒரு குட்டிப் பையனாய் தளர் நடையுடன் இந்த அடியவனின் எதிரே தடுமாறி விழுகிறான்...நான் ஓடிச் சென்று குழந்தையைத்தூக்காமல் உன் அம்மா எங்கே என்று கேட்கிறேன்...உடன் வந்த இன்னொரு சின்னஞ்சிறிய பெண்குழந்தை அருமையாக எப்படி அந்தப் பையன் விழுந்தான் என மழலையில் அற்புதமான நாடக பாவங்களுடன் விளக்குகிறாள்... மெய் மறந்து போகிறேன்...அந்த தீய எண்ணம் கொண்ட கயவனின் செயல்கள் கேள்விகள் என் வாழ்வின் அமைதியை கெடுக்கும் சதிவேலைகள்...சிலவருடங்களாகவே பதில்கள் அற்று இருக்கும் கொடிய சூழலின் பாலைத் திண்ணையில் அமர்ந்து வேதனையுடன் கைபேசியைத் திறந்தால் சுபாஷ் கோப்லாவின் ஆச்சர்யமான அட்டகாசமானபதிவு...அப்படியே அந்தக் கயவனின் கேள்விகளுக்கு சம்மடியடியாய் பதில்கள்...தடுமாறி விழுந்த குழந்தையின் அரங்க பாதம் கண்முன்னே சட்டென்று வர...மெய்மறந்த நொடிமுன்னான சிந்தனை மெய்சிலிர்ப்பில் சூழல் பாலைத் திண்ணையெங்கும் பூமாறிப் பொழிகிறது... மனமெங்கும் அப்படியொரு ஆன்மீக நிம்மதி...இதற்கு முந்தைய பதிவில் சுபாஷ் கோப்ளாவின் பதிவை அப்படியே பகிர்ந்திருக்கிறேன்.....
கீழே குழந்தையாய் விழுந்த என்னை நீ வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாய்...நீ விழும்போதெல்லாம் நான் கை தூக்கிவிட்டேனே...என்று அரங்கன் குழந்தைச் சிரிப்புடன் மழலைத் தமிழின் அமிழ்தினும் இனிய வார்த்தைகளில் சொல்வது....பொட்டில் தொடர் சுத்தியல் கைகொண்டு பளார் என அறைந்தது...வந்தது அரங்கனென்று அறியாமல் போனேனே...அரங்கன் தளிர் நடையுடன் தடுமாறி பாத தரினம் தந்த அந்த அரிய காட்சியை மீண்டும் காண மனம் ஏங்குகிறது...பதில்களாய் என் கைபேசியெங்கும் அரங்கனின்...ஆச்சாரியனின்...நம்மாழ்வாரின் சொற்கள் பட்டாடையுடுத்தி பவனி வருகின்றன...கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்...இனி அந்தக் கயவனாலோ இல்லை அவனின் அடியாட்களாலோ என் உயிர் பிரிந்தாலும் மகிழ்வேன்...அரங்கனின் பாத வரிகளில் இந்த அடியவனும் நிரந்தரமாய் நெளிந்து கிடப்பேன்....
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...

No comments:
Post a Comment