Sunday, April 5, 2026

 




கோடையிடி
அதைப் பதிவு செய்யத்தான்
அவன் கைபேசியுடன் நடக்கத் தொடங்கினான்..
நிஜம்மான ஒன்றை
இயற்கையின் சப்தமிடும் சக்தியை
தூரத்துச் சப்தத்தின் துல்லியத்தை
பதிவு செய்தே ஆகவேண்டும் அவனுக்கு..
அவனால் எட்டவியலா உயரத்தில்
மேகங்கள் மோதிக்கொள்ளத் துவங்கின..
கைபேசியைத் திறந்தான்..
மின்சக்தி குறைவாய் இருப்பதைச் சொல்லியதது..
ஓடினான்..
போதை உந்தித் தள்ளிய வேகமுடன்..
ஆங்கொரு
அரசாங்க மதுபாணக்கடையொன்றின்
மின்னூட்ட அமைப்பானில்
மின்னூட்டியை பாங்கெனச்செருகினான்..
அங்கே மின்சார வினியோகம் தடைபட்டிருந்தது..
இடியோசை கடகடவென ஒலிகூட்டி
தன் உறுமலைத் தொடங்கியது..
விருட்டென கைபேசியை உருவியவன்
ஒலிப்பதிவு பொத்தானை அழுத்தினான்..
கைபேசி இறந்து நெடுநேரம் கடந்திருந்தது..
இறந்த காலத்தின் கைபேசியுடன்
அவனுக்கு முன்னான உலத்தின்
இடியோசையுடன் கைகுலுக்க
இல்லை இல்லை
கோடையிடியைப் பதிவு செய்ய....
காத்திருக்கிறான்..
இன்னமும் மதுபானக் கடையில்
யுகங்களைக் கடந்தும்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...