தமிழ் மண்ணின் பேசும் மொழி பல உட்பிரிவுகளைக் கொண்டது. சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ் கொங்கு தமிழ் தஞ்சைத் தமிழ் என இன்னமும் பிராந்திய பிரிவுப் பெயருடன் மரனமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.. பிரிவு எனும் சொல் இங்கே பேசும் மொழியைச் சொல்கிறதே தவிர மானுட வாழ்வியலையோ இல்லை அது சார்ந்த வேறெந்த பிரிவுகளையோ செப்பவில்லை.. இந்த மண்ணின் மானுட வாழ்வியலோடு இலக்கியத்தையும் எவ்வித பிரிவுகளுமற்று தன்னோடு இணைத்த தனித்த வாழ்வுமுறைமையைக் கொண்டிருந்தவர்கள் தான் பண்டைய மதராஸ் ராஜதானியெனும் தக்கான பீடபூமி மாந்தர்கள்..
அப்படியான தென்னிந்திய தமிழ் மக்களின் கலாச்சார மொழிபற்றுடன் கூடிய ஒற்றுமை வாழ்வியலை சிதைக்க வந்தவன் தான் ஆங்கிலேயன். 1856 வரை இந்தத் தமிழ் மண்ணில் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகள் பரவலாக காணப்படவே இல்லை. தொழில் சார்ந்த பிரிவுகளுக்கு சாதீய பிரிவுகளென பெயரிட்டு ஊதிப் பெரிதாக்கி மக்களைப் பிளவு படுத்தி ஆட்சியதிகாரத்தை அன்று தக்க வைத்து கொண்டான் ஆங்கிலேயன். அதே உத்தியைப் பயன்படுத்தி இன்று தமிழ் மொழியின் பேச்சு வழக்கின் பிரிவுகளை உள் வாங்கி மக்களையும் பிளவுபடுத்தி இன்னமும் ஒன்றுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகளையும் விதைத்துவிட்டே சென்றிருக்கிறான் கல் நெஞ்ச மேலைத் தேய மொழிவெறியன்.. அவ்வாறான ஆங்கில வழி பயிற்றுப்பள்ளிகள் இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் கால் ஊன்று கர்ஜிக்கச் செய்பவர்கள் இன்றைய அரசியல் வாதிகள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் தான்..அப்படியான உத்தியால் உருவாக்கப்பட்ட பிரிவினை வார்த்தைகள் தான் திராவிடன் ஆரியன் என்பது மட்டுமல்ல.. வடமொழி தென்னாட்டு மொழி என்பதும்..
இது போன்ற மொழியின் பேச்சுவழி உட்பிரிவுகளை பயன்படுத்தி மதமாற்றம் மட்டுமல்ல மொழிமாற்றமும் செய்தவன் தான் கொடுமைக்காரன் கால்டுவெல் போப். அந்த வித்தையை அதிகாரத்திற்கு பயன்படுத்தி இத்தமிழ்மண்ணை இன்னமும் நிரந்தரமாக பிளவுபடுத்தினால் நிரந்தரமாக ஆட்சிசெய்யவியலும் என உணர்ந்த கட்சிதான் இப்போது மொழியரசியலை தேவைப்படும் போதெல்லாம் கையிலெடுக்கும் கட்சி.. அந்தக் கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவர்
கண்ணகிக்கு ஓர் சிலை..கால்டுவெல் போப்புக்கும் சிலை..
என முரசொலியில் அன்று எழுதியது இன்னமும் நெருடலைத் தந்துகொண்டிருக்கிறது.
கண்ணகிக்கு சிலை என்பது இம்மண்ணின் கலாச்சார நீட்சியை அதன் புனிதத் தன்மையை தலைமுறைகள் உணர்ந்து கொள்ள என்பதைப் புரிந்துகொள்ளலாம் ஆனால் அதனோடு சேர்த்து கால்டுவெல் போப்பிற்கும் சிலை எனும் உள் நோக்க பிளவுபடுத்தும் அரசியல் உத்தியை இன்னமும் தமிழ் மக்கள் புரிந்துணர்வு கொள்ளவே இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிஜம்..
1856 முதல் 1900 வரையிலான காலகட்டம் தமிழ் இலக்கியம் ஓலைச்சுவடியிலிருந்து அச்சிற்கு இடம்பெயர்வதற்கான பாய்ச்சல் நிகழ்த்திய காலம்.. ஆனால் அப்பாய்ச்சலால் குறுகிய பிரிவுகளற்று அடர்வு நிறைந்திருந்த தமிழ்மொழி பிராமண பேசும் மொழி பிராந்திய பேசும் மொழி என பிளவுபட்டு பரிதாபகரமான இடத்தில் இன்று நின்று கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அதுமட்டுமல்ல அது அனாதையாய் அரசியல் வாதியின் அல்லது ஆளும் கட்சியின் ஆதரவை அண்டி நிற்பதுதான் கொடுமை..அதைவிடக் கொடுமை தமிழிலக்கியம் பிழைப்பு வாத பிரிவினை மொழியை இன்று உள்வாங்கியதால் அதன் நிலைத்து நிற்கும் கால்கள் மெலிந்து சூம்பி தள்ளாடுவதைக் காண சகிக்கவில்லை..
என்ன செய்வது? பிரித்தாளும் உத்தியை ஆட்சி செய்ய பயன்படுத்தக் கற்றுத் தந்தவன்ஆங்கிலேயன். அதே உத்தியால் இன்று இந்த மண்ணின் கலாச்சாரத்தை மொழியை மக்களை ஏன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக்கூட பிரித்தாளும் தந்திரத்தை அதிகாரத்திற்காக கையிலெடுப்பதுதான் டாஸ்மாக் மற்றும் இலவசங்கள்..
இந்தக் கேவலமான அரசியலைப் புரிந்து கொண்டால் மக்கள் மதப் பிரிவுகளை முன்னிருத்தி செய்யும் அரசியலையும் புரிந்து கொள்ளுதல் சுலபம்.. தமிழ் அல்லாத தாய்மொழி கொண்டவர்கள் இந்த மண்ணில் அரபு மற்றும் ஆங்கில கலாச்சாரத்தை புகுத்தியது மட்டுமல்ல நம் மொழியின் வளமையையும் சிதைத்து நம்மிடையே நிரந்தர பிரிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
மேலைத்தேயத்திலிருந்து வந்த மொழிகளை நாம் வெறுப்பதில்லை. மாறாக இந்த மண்ணில் முகிழ்த்த மொழிகளை அதாவது இந்தி பார்ஸி குஜராத்தி கொங்கணி சம்ஸ்கிருதம் எனும் இந்திய மொழிகளை வெறுக்கச் சொல்லும் கீழ்த்தரமான அரசியலை தமிழ் மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.. இப்போது கூட தமிழ் மண்ணில் ஜெர்மன் ப்ரெஞ்சு மற்றும் ஏனைய மேலைத்தேய மொழிகள் கற்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன..
ஆதலால் இந்த மண்ணின் மொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒற்றுமையாய் மொழிப்பிரிவினை பேசுவோரை எதிர்த்து ஒன்றுபடவேண்டிய அவசியம் இப்போது கட்டாயமாகிறது..
சிந்திப்போம் செயல்படுவோம்.. இம்மண்ணை மொழியால் பிளவுபடுத்தும் உத்தியை பொடிப்பொடியாய் தகர்த்தெறிவோம்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment