ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்....
குணசீலம் நடந்து செல்வதாக நிச்சயத்திருந்தேன்..ஆனால் அரங்கன் என்னை போர்ட் ஐக்கானில் சென்று வரப் பனித்ததால் சரியாக பத்து மணிக்கு குணசீலத்தில் நானும் மனைவியும் போர்ட் ஐக்கானும் இருந்தோம்...முடி காணிக்கைச் செலுத்திவிட்டு ஐயன் வாய்க்காலில் பதினோரு மணியளவில் தேங்கிக் கிடந்த குட்டைத் தண்ணீரில் குளிக்கும் போது.... சிறுவர்களாய் நாங்கள் வாராவாரம் திருப்பறாய்த்துறையிலிருந்து குணசீலம் வந்து பெரும்பாலும் கோடை விடுமுறை நாட்களில் ஐயன் வாய்க்காலில் [அப்போதெல்லாம் வருடம் முழுவதும் ஐயன் வாய்க்கால் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும்] நீந்திக்குளித்துவிட்டு பிரசன்ன வெங்கடேசரை கண்குளிர தரிசிப்போம்...அவரும் எங்களுக்குத் திருவிய தேங்காயில் வெல்லம் சேர்த்த பிரசாதங்களையும் ஆசிகளையும் அள்ளி அள்ளித் தருவார்...இப்போதெல்லாம் தேங்காய்த் துருவல் குணசீலத்தில் தருவதில்லை என்பது ஒரு உருத்தலாய் மனதில் தோன்ற மீன் ஒன்று என் உள்ளங்காலை முத்தமிட்டு நகர..மேலே கொளுத்தும் வெயிலில் திருமஞ்சனப் படிக்கட்டில் ஏகாந்தமாய் அமர்ந்திருந்த மனைவி...கத்தத் தொடங்கினாள்...சீக்கிரம் வாங்கோ...குட்டைக்குள்ள என்ன குதூகலம் வேண்டிக்கிடக்கு...என்று முக வாயைத் தோள்பட்டையில் இடித்துக் காட்டினாள்..
கோவிந்த சாஸ்திரிகள் கோதாவரிக்கரையில் குளிக்கப்போய் அவர் மகன் வெள்ளத்தில் சிக்கிவிட தன் பூணூலை கழற்றி வீச வெள்ளம் வடிந்த கதை நினைவில் வந்தது...கோவிந்த சாஸ்திரிகளை நாராயணதீர்த்தராக அரங்கன் மாற்றச் செய்த அதிசயம் என் கண்முன்னே ஒரு நொடி வந்து போக..அவர் குணசீலம் வர வேண்டுமென்ற அரங்கனின் கட்டளையை..குணசீலத்தில் வெள்ளை வராகங்களாய் தோன்றி நாராயணதீர்த்தரைப் பின் தொடரச் செய்து.... பிறகு அருகிலிருக்கும் வரகூரில் காட்சி கொடுத்த பிரசன்ன வெங்கடேசனின் அற்புதங்கள் மனக்கண்ணில் தோன்றி சூழலைக் குளிரச் செய்தது...கடுமையான சூரிய கிரணங்கள் உரைக்கவே இல்லை...பிரமை பிடித்தவன் போல கோவில் வாசல் வரை வந்துவிட்டேன்..உடன் வந்த மனையாள்...போய் அர்சனைத் தட்டு வாங்கிங்டு வாங்கோ..கூட்டமே இல்லை...இன்னிக்கு நன்னா தரிசனம் பன்னலாம்...என்றபடி ஏற்கனவே கையில் எடுத்து வந்திருந்த சகஸ்ர நாம புத்தகத்தை..ஒரு முறை விசிறிக்கொண்டு... விரித்து.. கோவில் நடையில் அமர்ந்து படிக்கத்தொடங்கிவிட்டாள்...
என் அசைவுகளை ..என் நொடிகளை ...என் செயல்களை செதுக்குபவன் குணசீலன் என்பது என் அனுபவம்...எனது பணியில் ஒரு முறை கவனக் குறைவாக ஒரு ரசீதை சமர்ப்பித்துவிட்டேன்..என் தவறுதான்..அரங்கன் என்னை தவறு செய்ய விடுவதில்லை...அப்படியிருந்தும் ஒரு நொடி கண் மறைக்க அந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது...அதற்கான தண்டனையும் பின் விளைவுகளும் பயமுறுத்த அரங்கனை நடந்து சென்று சேவித்த போது...குலசேகராழ்வாரின் தாலாட்டுப் பாடல்களை அரையர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்....உடனே அரங்கன் மீதான தாலாட்டுப் பாடலொன்றை எழுத அரங்கன் ஆணையிட்டதாய் உணர்ந்தேன்..அடுத்த நாளே குணசீலம் வந்துவிட்டேன்..குணசீலத்தில் நின்ற திருக்கோலத்து எம்பெருமான் என்னை கதவை தாண்டி உள் நுழைய விடவில்லை...எதுவோ தடுக்கிறது....எல்லா பக்தர்களும் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்...ஆனால் என்னால் அந்தக் கதவைத் தாண்டிச் செல்ல இயலவில்லை...அப்படியே நின்று விட்டேன்....கண்ணிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் பெருக்கெடுக்க....குணசீல எம்பெருமான் மீதான திவ்ய பிரபந்த பாடல் ஒன்றும் நினைவில் வரவில்லை...சம்ஸ்கிருத பாடல் இருக்கிறது...நாராயண தீர்த்தரின் ஸ்லோகம் இருக்கிறது...
"ஹிமகிரி தனயா பத்யம்
ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:
கிமபிமஹத்தம் மாத்யம்
ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'
கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.
கீழ் கண்ட ஸ்லோகம் வரகூர் எம்பெருமானைப் பற்றியது..
"ஸர்வஞான க்ரியா சக்திம்
ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்
ஸர்வ வேதமயம் விஷ்ணும்
ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'
திருமங்கையாழ்வார் ஒரு பாடல் பாடியிருப்பதாக அறிகிறேன்...ஆனால் எதுவும் நினைவில் வரவில்லை...
அரங்கா...
நின்ற திருக்கோலச் சேவை சாதிக்கும் எம்பெருமானே...
நின்ற திருக்கோலச் சேவை சாதிக்கும் எம்பெருமானே...
கண்ணால் உனைக் காண
கதவருகே நிற்கின்றேன்
என் நாளும் பிழை செய்த
பாவி நான் என்பதனால்
பின்னால் நிற்கச் சொன்னாய்
பிழை பொறுத்தாய் உணர்ந்திட்டேன்..
எ ந் நாளும் எனைக் காக்கும்
தென் அரங்கா குணசீலா...
கதவருகே நிற்கின்றேன்
என் நாளும் பிழை செய்த
பாவி நான் என்பதனால்
பின்னால் நிற்கச் சொன்னாய்
பிழை பொறுத்தாய் உணர்ந்திட்டேன்..
எ ந் நாளும் எனைக் காக்கும்
தென் அரங்கா குணசீலா...
என்று ஒரு விருத்தத்தை மனதில் எழுதி முடித்தேன்..அரங்கன் மனம் இளகியது போலும்...கோவில் சிப்பந்தி சார் ரொம்ப நேரமா நிக்கறீங்களே...உள்ள வாங்க சார்...என்ற வுடன்...வேக வேகமாய் கொடி மரம் தாண்டி குணசீலரின் முன் நின்றேன்...பாடல்கள் என் மனமெங்கும் வந்து கொட்ட ஆரம்பித்தன...
தவமிருக்கத் தெரியாது
தமிழ் எழுதத் தெரியாது
அவமிருத்து கண்டங்கள்
அது வந்தால் புரியாது
உவப்பான உயர்பக்தி
உன் மீது இருப்பதனால்
என் பிழையும் பொறுத்தருள்வாய்
தென் அரங்கா...குணசீலா...
தமிழ் எழுதத் தெரியாது
அவமிருத்து கண்டங்கள்
அது வந்தால் புரியாது
உவப்பான உயர்பக்தி
உன் மீது இருப்பதனால்
என் பிழையும் பொறுத்தருள்வாய்
தென் அரங்கா...குணசீலா...
உன் மீது பாட்டெழுதும்
உயர் தகுதி தந்துவிட்டாய்..
மண் மீது வாழ்வதனால்
மரியாதை தந்துவிட்டாய்
வின்னகரில் உருண்டதனால்
விடிவெனக்குத் தந்துவிட்டாய்
என் பிழையும் பொறுத்துவிட்டாய்
தென் அரங்கா குணசீலா...
உயர் தகுதி தந்துவிட்டாய்..
மண் மீது வாழ்வதனால்
மரியாதை தந்துவிட்டாய்
வின்னகரில் உருண்டதனால்
விடிவெனக்குத் தந்துவிட்டாய்
என் பிழையும் பொறுத்துவிட்டாய்
தென் அரங்கா குணசீலா...
நவமணிகள் நாணயங்கள்
நாற்றமிகு நறுமலர்கள்
இவையணைத்தும் மனதாலே
இன்றுனக்குத் தருகின்றேன்..
சபை முன்னே தலை நிமிர்ந்து
சிறப்புறவே வாழ்த்திட்டாய்....உன்
அவை வந்து தமிழ்சொன்னேன்..
அவ மானம் நீக்கிட்டாய்...தமிழ்
தவப் பாடல் ஏற்றுவிட்டாய்....
[ராகவபிரியன்]
என்று சொல்லி ..இன்றும் கூட தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்....சில நாட்களிலேயே...என் தவறுக்கான தண்டனையாக ஒரு வருட ஊதிய உயர்வு பிடிக்கப்பட்டது...மேலதிக தண்டனையென்றாலும்...அரங்கன் தந்ததால் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்...பிறகு நிறைய ஊதிய உயர்வுகளும் இன்னபிற சலுகைகளும் அரங்கன் தந்துவிட்டான்...திருவரங்க நாயகியின் மகனுக்குக் குறைவேது...
நாற்றமிகு நறுமலர்கள்
இவையணைத்தும் மனதாலே
இன்றுனக்குத் தருகின்றேன்..
சபை முன்னே தலை நிமிர்ந்து
சிறப்புறவே வாழ்த்திட்டாய்....உன்
அவை வந்து தமிழ்சொன்னேன்..
அவ மானம் நீக்கிட்டாய்...தமிழ்
தவப் பாடல் ஏற்றுவிட்டாய்....
[ராகவபிரியன்]
என்று சொல்லி ..இன்றும் கூட தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்....சில நாட்களிலேயே...என் தவறுக்கான தண்டனையாக ஒரு வருட ஊதிய உயர்வு பிடிக்கப்பட்டது...மேலதிக தண்டனையென்றாலும்...அரங்கன் தந்ததால் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்...பிறகு நிறைய ஊதிய உயர்வுகளும் இன்னபிற சலுகைகளும் அரங்கன் தந்துவிட்டான்...திருவரங்க நாயகியின் மகனுக்குக் குறைவேது...
இதையெல்லாம் நினைவில் கொணர்ந்த படியே அரங்கன் முன் ...நின்ற திருக்கோலத்தின் முன்...தலைகவிழ்ந்து மொட்டைத் தலையுடன் ஆணவம் அழித்த இறுமாப்பில்.... நின்று இருக்க..பட்டர்..சட்டென்று சடாரியை தலையில்வைத்தார்..அரங்கன் என்னை ஏற்றுக்கொண்டு விட்டான்...பிரசாத தட்டைச் சுமந்த படியே வெளியில் வர மனைவி உங்க குடுமியக் கொஞ்சம் குறைச்சிருக்கலாமே என்றாள்..கையால் குடுமியைத் தடவியபடியே வெளியில் வந்தால் எதிரில் ஒரு பசு என்னை நோக்கி வர ஒரு வாழைப்பழத்தை அழகாக என்னிடமிருந்து வாங்கிக்கொண்டது....திட்டத் தெரிந்த என் மனையாளுக்கு கைபேசியில் படமெடுக்கத் தெரியாதென்பது அரங்கனுக்கும் தெரியும்...இப்போது அனைவருக்கும் தெரியும்...
திருவங்கன் திருவடிகளே சரணம்...
பிரசன்ன வெங்கடேச எம்பெருமான் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
வாசகர்களின் அன்பிற்கும் அடியேனின் சரணம்...
அன்பன்...ராகவபிரியன்
பிரசன்ன வெங்கடேச எம்பெருமான் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
வாசகர்களின் அன்பிற்கும் அடியேனின் சரணம்...
அன்பன்...ராகவபிரியன்


No comments:
Post a Comment