ஆன்மீக நிகழ்வொன்றால் உலகையே மாற்றிவிட முடியுமெனும் நம்பிக்கை பொ ஆ மு சுமார் பத்தாயிரவருடங்களுக்கு முன்னால் பிறந்ததாக சைவ சமயம நூல்கள் சொல்கின்றன..சைவதாஸ உப நிஷத்தில் சிவனுக்கும் ருத்ரனுக்கும் உள்ள வேறுபாடுகள் பொ ஆ மு இருபதாயிர வருடங்கள் முந்தைய இலக்கிய அதிசய வரையறைகள்...இத்தனைப் பழமையான ஆன்மீக வரலாற்றில் இந்தியக் கோவில்களும் அதன் வழிபாட்டு முறைமைகளும் உத்சவங்களும் வாழ்வியலின் புரியமுடியா தத்துவ விளக்கங்களின் நிதர்சனங்கள் எனில் உங்களால் மறுக்க முடியாதென்பது நிஜம்..
சித்திரை வைகாசி மாதங்களின் பிரம்மோத்சவங்களின் ஆதிமுதல் பிரம்மோத்சவ நாளை அதன் நிகழ்விடத்தைத் தேடிக் கண்டடைய முயன்ற என் பிரயத்தனங்களை நீங்கள் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குவீர்கள் என அறிவேன்..இருந்தும் எனது ஆன்மீகத் தேடலின் நீள் பயணத்தில் சற்று இளைப்பாறுகையில் திருப்பறாய்த்துறையின் என் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்த விவேகானந்தா ஆரம்ப மற்றும் உயர் நிலைப் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன...வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான அந்தச் சிவன் கோவில் வளாகத்தில் இருந்த இந்தச் சிறுவனின் பள்ளிக்கூட நேரங்கள் ..அவன் சுவாசித்த ஆன்மீகப் பாடங்கள்..சித்பவானந்தரின் ஆன்மீக உரைகள் இன்றும் மனதிலிருந்து அகலாதது வரம் தானே...
ஐந்தாம் வகுப்பின் கடைசீ பரீட்சையின் தர அட்டையில்...அதுவரை நடந்த அத்துனை பரீட்சைகளிலும் முதல் இடம் பிடித்தும்..கடைசீ தேர்விலும் முதலிடமெனினும் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவனின் தந்தை கையெழுத்திட மறுத்ததும் அன்றி பிறந்து பத்து நாட்களே ஆன தன் ஆறாவது குழந்தைக்கான அவனின் மூன்றாவது தங்கைக்கான ஆழாக்குப் பால் கடனாக அடுத்த வீட்டில் வாங்கி வரும்படி ஆணையிட அந்தச் சிறுவன் தயங்க அவன் வாங்கிய அடியால் கன்னத்தில் அதனால் பதிந்த தகப்பனின் விரல் கோடுகள் இன்னமும் அவன் முகத்தில் அழியாமல் இருப்பதை அவன் தடவிப் பார்த்துக்கொண்டிருக்கும் அணிச்சை நிகழ்வும் மேனரிஸமென நீங்கள் நினைத்தால் அவன் என்ன செய்வான்...?
அன்று அச்சிறுவனின் அண்ணன் ஏழாம் வகுப்புப் படிக்கும் சிவபக்தன் அவனையும் அழைத்துக்கொண்டு பறாய்த்துறைக் கோவிலை நாற்பத்தெட்டுச் சுற்றுகள் சுற்றுகிறான்...ஒவ்வொரு சுற்றிலும் வேதங்களும் ஆகமங்களும் அவர்களுடன் சுற்றி வந்திருக்க வேண்டும்..வேதம் பசுவென்றால் ஆகமம் அது தரும் பசும்பால் என்றெல்லாம் ஒருமுறை சித்பவானந்தர் சொன்னது அவனுக்குப் புரிந்திருக்க அன்று எந்த நியாயமும் இல்லை...
அந்தப் பராய்த்துறை பெருமானுக்கு நடந்த பிரம்மோத்சவம் அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது..தன் கன்னத்தைத் தடவிக்கொண்டிருக்கும் அவன் கண் முன்னே அந்தக் காட்சிகள் மெல்ல உருக்கொள்கின்றன...இதோ இந்த வருடமும் சென்ற வருடமும் அல்லூர் பஞ்ச நதீஸ்வரருக்கு நடக்கும் பிரம்மோத்சவம் சிவனுக்கும் ருத்ரனுக்குமான வேற்றுமைகளைக் கடந்து பக்தியை இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது...பிரம்மோத்சவ காலங்களில் கோவிலுக்கு வரமுடியாத நோயாளிகளையும் வயது மூப்பினால் நடமாட்டமற்ற முதியோர்களையும் இன்னபிற பக்தர்களையும் நாடி அந்த ஆதிசிவன் அவர்கள் இல்லத்திற்கே வருவதற்காக நடத்தப்படும் பொருள் நிறை தத்துவார்த்த நிகழ்வுகள்..அதன் ஆன்மீக மற்றும் ஆகம விதிகளை நியமமாகக் கடைபிடித்து உத்சவத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆன்மீக அல்லூர் பெரியவர்களுக்கு அந்தச் சிறுவன் தன் நன்றிகளையும் நமஸ்காரங்களையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் சிலர் சில சந்தேகங்களையும் அவனிடம் எழுப்புகிறார்கள்...
விச்சைக் கேடுபொய்க்கு ஆகாது என்றிங்கு எனைவைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார்..
அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே...
[திரு வாசகம்]
அனைவரின் சந்தேகத்திற்கும் மாணிக்க வாசகரின் இந்தப் பாடல் தான் பதிலாக இருக்கும்...
அருகிலிருக்கும் பஞ்ச நதீஸ்வரருக்கு முதல் நாள் கொடியேற்றமும் சிறப்பாக நடைபெற்றபோது ..பராய்த்துறை நாதருக்கு ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பிரம்மோத்சவம் அவன் கண் முன்னே மீண்டும் நிகழ்வது பிரமையல்ல என்று அவனால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்...
கொடியேறிய அதே நாள் மாலை சிம்மவாகனம்...இரண்டாம் நாள் சூரிய பிரபை..சந்திர பிரபை...மூன்றாம் நாள் பூத வாகனம் புருஷாமிருக வாகனம்..நான்காம் நாள் நாக வாகனம் ரிஷப வாகனம்..ஐந்தாம் நாள் அதிகார நந்தி மற்றும் கைலாச நாதர் வாகனம்..ஆறாம் நாள் சூர்ணோத்சவ பல்லக்கு மற்றும் யானை வாகனம்...ஏழாம் நாள் ரதம் மற்றும் இரவு தொட்டியுத்சவம். எட்டாம் நாள் இறைவிமானம் இரவு அறுபத்து மூவர் உத்சவம்..ஒன்பதாம் நாள் நூதன பல்லக்கும் இரவு முத்துச் சிவிகையில் பிக்ஷாடணர் புறப்பாடும்...பத்தாம் நாளில் மாவடிச் சேவையும்...[தலமகிமை] மற்றும்..நடராஜரின் நர்த்தன ருத்ர தாண்டவக் காட்சியும் கண்முன்னே நிகழ்வது கண்டிப்பாக பிரமையல்ல என்பதில் உறுதியாக நிற்கும் அச்சிறுவனை தொடர் வேட்டுக்கள் நினைவுலகிற்கு அழைத்து வருகின்றன..
ரிஷபம் என்பது நிர்மலமான பக்தி நிலையின் பிரதிமையென்றும் சைவ சித்தாந்தங்கள் சொல்கின்றன..மனம் சஞ்சலமற்று இறைவனைக் காண விழைகையில் தடையெனும் நந்தி தலைசாய்த்து இறைகாட்சியின் நிஜம் காட்டும் ஆன்மீக அதிசயம்.....தடை நந்தி திரிந்து கொண்டிருக்கும் மனச் சாலைகளின் ஆரவாரம் முடிந்து நடுச்சாலையில் நந்தியமர்ந்து அசைபோட்டபடி தலை சாய்க்கும் தெய்வீகக் காட்சியைக் காணும் ஒவ்வொரு இதயமும் சிவனையும் நிச்சயமாய்க் காணமுடியும்..அவ்வாறான அமைதியான இதயத்தை சிவனைக் காண இதோ வாசல் நோக்கி நகர்கிறான் அச்சிறுவன்..அவனுக்கு இப்போது அறுபது வயதுதான் முடிந்திருக்கிறது.
ராகவபிரியன்
சித்திரை வைகாசி மாதங்களின் பிரம்மோத்சவங்களின் ஆதிமுதல் பிரம்மோத்சவ நாளை அதன் நிகழ்விடத்தைத் தேடிக் கண்டடைய முயன்ற என் பிரயத்தனங்களை நீங்கள் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குவீர்கள் என அறிவேன்..இருந்தும் எனது ஆன்மீகத் தேடலின் நீள் பயணத்தில் சற்று இளைப்பாறுகையில் திருப்பறாய்த்துறையின் என் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்த விவேகானந்தா ஆரம்ப மற்றும் உயர் நிலைப் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன...வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான அந்தச் சிவன் கோவில் வளாகத்தில் இருந்த இந்தச் சிறுவனின் பள்ளிக்கூட நேரங்கள் ..அவன் சுவாசித்த ஆன்மீகப் பாடங்கள்..சித்பவானந்தரின் ஆன்மீக உரைகள் இன்றும் மனதிலிருந்து அகலாதது வரம் தானே...
ஐந்தாம் வகுப்பின் கடைசீ பரீட்சையின் தர அட்டையில்...அதுவரை நடந்த அத்துனை பரீட்சைகளிலும் முதல் இடம் பிடித்தும்..கடைசீ தேர்விலும் முதலிடமெனினும் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவனின் தந்தை கையெழுத்திட மறுத்ததும் அன்றி பிறந்து பத்து நாட்களே ஆன தன் ஆறாவது குழந்தைக்கான அவனின் மூன்றாவது தங்கைக்கான ஆழாக்குப் பால் கடனாக அடுத்த வீட்டில் வாங்கி வரும்படி ஆணையிட அந்தச் சிறுவன் தயங்க அவன் வாங்கிய அடியால் கன்னத்தில் அதனால் பதிந்த தகப்பனின் விரல் கோடுகள் இன்னமும் அவன் முகத்தில் அழியாமல் இருப்பதை அவன் தடவிப் பார்த்துக்கொண்டிருக்கும் அணிச்சை நிகழ்வும் மேனரிஸமென நீங்கள் நினைத்தால் அவன் என்ன செய்வான்...?
அன்று அச்சிறுவனின் அண்ணன் ஏழாம் வகுப்புப் படிக்கும் சிவபக்தன் அவனையும் அழைத்துக்கொண்டு பறாய்த்துறைக் கோவிலை நாற்பத்தெட்டுச் சுற்றுகள் சுற்றுகிறான்...ஒவ்வொரு சுற்றிலும் வேதங்களும் ஆகமங்களும் அவர்களுடன் சுற்றி வந்திருக்க வேண்டும்..வேதம் பசுவென்றால் ஆகமம் அது தரும் பசும்பால் என்றெல்லாம் ஒருமுறை சித்பவானந்தர் சொன்னது அவனுக்குப் புரிந்திருக்க அன்று எந்த நியாயமும் இல்லை...
அந்தப் பராய்த்துறை பெருமானுக்கு நடந்த பிரம்மோத்சவம் அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது..தன் கன்னத்தைத் தடவிக்கொண்டிருக்கும் அவன் கண் முன்னே அந்தக் காட்சிகள் மெல்ல உருக்கொள்கின்றன...இதோ இந்த வருடமும் சென்ற வருடமும் அல்லூர் பஞ்ச நதீஸ்வரருக்கு நடக்கும் பிரம்மோத்சவம் சிவனுக்கும் ருத்ரனுக்குமான வேற்றுமைகளைக் கடந்து பக்தியை இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது...பிரம்மோத்சவ காலங்களில் கோவிலுக்கு வரமுடியாத நோயாளிகளையும் வயது மூப்பினால் நடமாட்டமற்ற முதியோர்களையும் இன்னபிற பக்தர்களையும் நாடி அந்த ஆதிசிவன் அவர்கள் இல்லத்திற்கே வருவதற்காக நடத்தப்படும் பொருள் நிறை தத்துவார்த்த நிகழ்வுகள்..அதன் ஆன்மீக மற்றும் ஆகம விதிகளை நியமமாகக் கடைபிடித்து உத்சவத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆன்மீக அல்லூர் பெரியவர்களுக்கு அந்தச் சிறுவன் தன் நன்றிகளையும் நமஸ்காரங்களையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் சிலர் சில சந்தேகங்களையும் அவனிடம் எழுப்புகிறார்கள்...
விச்சைக் கேடுபொய்க்கு ஆகாது என்றிங்கு எனைவைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார்..
அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே...
[திரு வாசகம்]
அனைவரின் சந்தேகத்திற்கும் மாணிக்க வாசகரின் இந்தப் பாடல் தான் பதிலாக இருக்கும்...
அருகிலிருக்கும் பஞ்ச நதீஸ்வரருக்கு முதல் நாள் கொடியேற்றமும் சிறப்பாக நடைபெற்றபோது ..பராய்த்துறை நாதருக்கு ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பிரம்மோத்சவம் அவன் கண் முன்னே மீண்டும் நிகழ்வது பிரமையல்ல என்று அவனால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்...
கொடியேறிய அதே நாள் மாலை சிம்மவாகனம்...இரண்டாம் நாள் சூரிய பிரபை..சந்திர பிரபை...மூன்றாம் நாள் பூத வாகனம் புருஷாமிருக வாகனம்..நான்காம் நாள் நாக வாகனம் ரிஷப வாகனம்..ஐந்தாம் நாள் அதிகார நந்தி மற்றும் கைலாச நாதர் வாகனம்..ஆறாம் நாள் சூர்ணோத்சவ பல்லக்கு மற்றும் யானை வாகனம்...ஏழாம் நாள் ரதம் மற்றும் இரவு தொட்டியுத்சவம். எட்டாம் நாள் இறைவிமானம் இரவு அறுபத்து மூவர் உத்சவம்..ஒன்பதாம் நாள் நூதன பல்லக்கும் இரவு முத்துச் சிவிகையில் பிக்ஷாடணர் புறப்பாடும்...பத்தாம் நாளில் மாவடிச் சேவையும்...[தலமகிமை] மற்றும்..நடராஜரின் நர்த்தன ருத்ர தாண்டவக் காட்சியும் கண்முன்னே நிகழ்வது கண்டிப்பாக பிரமையல்ல என்பதில் உறுதியாக நிற்கும் அச்சிறுவனை தொடர் வேட்டுக்கள் நினைவுலகிற்கு அழைத்து வருகின்றன..
ரிஷபம் என்பது நிர்மலமான பக்தி நிலையின் பிரதிமையென்றும் சைவ சித்தாந்தங்கள் சொல்கின்றன..மனம் சஞ்சலமற்று இறைவனைக் காண விழைகையில் தடையெனும் நந்தி தலைசாய்த்து இறைகாட்சியின் நிஜம் காட்டும் ஆன்மீக அதிசயம்.....தடை நந்தி திரிந்து கொண்டிருக்கும் மனச் சாலைகளின் ஆரவாரம் முடிந்து நடுச்சாலையில் நந்தியமர்ந்து அசைபோட்டபடி தலை சாய்க்கும் தெய்வீகக் காட்சியைக் காணும் ஒவ்வொரு இதயமும் சிவனையும் நிச்சயமாய்க் காணமுடியும்..அவ்வாறான அமைதியான இதயத்தை சிவனைக் காண இதோ வாசல் நோக்கி நகர்கிறான் அச்சிறுவன்..அவனுக்கு இப்போது அறுபது வயதுதான் முடிந்திருக்கிறது.
ராகவபிரியன்

No comments:
Post a Comment