அரங்கனின் சித்திரைத் தேர் இன்று..எங்கள் ஊரின் கிராம தேவதையின் குதிரை வாகனம் வேறு இன்று நடக்க இருக்கிறது...வெயில் வேறு கொளுத்துகிறது...இன்று காலையில் எழுந்தவுடன் மனம் கனமாகிப்போயிருந்தது...எதோ ஒரு உள்ளுணர்வு இன்று என்னை இயக்கத் தொடங்கியது..அதன் உருவத்தை உற்று நோக்கிப் பார்த்தேன் புலப்படவில்லை....ஆனாலும் அந்த உருவம் உணர்வாய் என்னை குளிக்கச்சொன்னது..குளித்து நித்ய கர்மாக்களைச் செய்து விட்டு வழமைபோல் திவ்ய பிரபந்தங்களை உரத்துப் படிக்கத் தொடங்கினேன்..எதிரே இருக்கும் அரங்கன் மெல்ல என் எதிரே இருக்கும் காலித் திண்ணையில் அமர்ந்து கொண்டான்...
அரங்கா உன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் குறையிருந்தால் பூஜை செய்பவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடு..அவர்கள் என் செய்கைகளை விரோதமாக மட்டுமல்ல வி நோதமாகவும் பார்க்கிறார்கள்..பகை கொண்ட பார்வையால் என்னை எரித்துவிடுகிறார்கள்...எதையும் திருத்திச் செய்யச் சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை நீ அறிவாய் அரங்கா என்றேன்...
அரங்கன் சிறு குழந்தையாக கையில் சின்ன வில்லுடன் திண்ணையெங்கும் தவழத் தொடங்குகிறன்...ஒரு காகம் வந்தமர..நான் அதை விரட்டத் தொடங்கினேன்..காகம் ..காகபுகண்டி முனிவாராய் சிறகுகளை விரித்துக்காட்டி அரங்கக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த அரிய காட்சியைக் கண்டேன்..நான் பத்மாசனத்தில் இருந்ததால் உடனே கால்களை விடுவித்துக்கொண்டு காகத்தை விரட்ட முடியவில்லை...
ஸீய ராமாய ஸப் ஜக ஜானீ
கரௌம் ப்ர நாம் ஜோரி ஜூக பானீ..
கரௌம் ப்ர நாம் ஜோரி ஜூக பானீ..
அரங்கன் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் இன்ன பிற அவதாரங்களாகவும் காட்சி தருகையில் முனிவர்கள் தங்கள் உருக்களில் அவரை பூஜிக்க வந்துவிடுவார்கள் என்பதை கீதையில் அரங்கன் சொன்னது நினைவிற்கு வர திடுக்கிட்டு எதிரே பார்த்தால் கோவில் பட்டாச்சாரியார் வேட்டியை மடித்துக் கட்ட தன் வலது காலை பின் பக்கம் உயர்த்தி வேட்டியின் முனையைப் பிடிக்கிறார்...காலை பின் பக்கம் உயர்த்தும் போது அனுமன் முகம் சுளிப்பதைப் பார்த்தேன்..என் கண்களுக்கு மட்டும்தானா இக் காட்சி என்று கண்களைக் கசக்கினால்..காகபுகண்டி முனிவர்...ராமர் குழந்தையாய் தன்னைக் காகமென நினைத்துப் பிடிக்க முற்பட தான் ஈரேழு பதினாங்கு உலகங்களில் பறந்து திரிந்தாலும் ராமரின் அந்தக் கை தன்னைத் தொடர்ந்ததை உத்தர காண்டத்தில் பதிவு செய்திருப்பதாகச் சொல்லி பறந்து செல்ல...அனுமனின் உக்ர உருவம் எனக்கு நாமக்கல்லில் ஒரு பட்டாச்சாரியார் பீடத்திலிருந்து விழுந்து உயிர் துறந்த காட்சியைக் காட்ட....இதயத்தில்.... சுரீர் எனத் தைத்தது....
என்ன செய்வது....அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டாது...அதில் ஆணவத்தால் அனுமன் இருப்பதை மறந்து அபிழேக தீர்த்தம் வேட்டியை நனைத்துவிடும் என்பதற்காக அனுமன் முன்பே கையை அல்ல காலை உயர்த்தும் அடாத செயலை எப்படிச் சொல்வது எனப் புரியாமல் ...இந்தப் பதிவை எழுதினால்...அதனால் வரும் கொடிய பகைவேறு என்னை பயமுறுத்த அரங்கன் முன் கண்மூடி அமர்ந்தேன்....
அவ்யக்தம் வ்யக்திமாபந் நம்மந் யந்தே மாமபுத்தய:
பரம் பாவ ஜாநந்தோ மமாவ்யயம நுத்தமம்...
பரம் பாவ ஜாநந்தோ மமாவ்யயம நுத்தமம்...
என்ற ஸ்லோகம் மனக் கண் முன் பேருந்துகளில் ஊர் பெயர்கள் மின் எழுத்துக்களில் ஓடுவது போல் ஓடுகிறது...
அரங்கன் சொல்கிறார்...எனக்குப் புரிவது போல...மனிதர்கள்...அப்புத்ய என்றால் அறிவற்ற மனிதர்கள்..பரமாத்மாவான என்னையும் சாதாரண மனிதர்கள் போல் பிறப்பிற்கு முன் எதுவுமில்லாதவன் என நினைக்கிறார்கள்..எனக்கு ஒரு உருவம் கொடுத்து நானும் அவர்களைப்போல என எண்ணுகிறார்கள்..நான் எங்கும் எதிலும் நிறைந்திருப்பதை அறியாமல் அவர்களின் அறியாமையால் எனக்குச் செய்யும் நித்ய ஆராதனைகளை அலட்சியமாய் செய்கிறார்கள்..காரணம் நானும் சத் சித் குணங்கள் கொண்டவன் என எண்ணுவதே யாகும்...என் பக்தன் என்னை தான் விரும்பும் வடிவில் காணமுடியும்..ஆனால் எனக்கான பூஜைகள் செய்பவர்கள் என் விக்ரஹத்தையும் படங்களையும் பார்த்து ஒரு உருவத்தைக் கற்பனை செய்து அதை தங்கள் உருவத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்...அந்த உரிமையில் அவர்கள் ஆணவம் கொள்கிறார்கள்..அதனால் அவர்கள் தாங்கள் கடை பிடிக்கும் நியமங்களில் தவறுகிறார்கள்...அவர்களுக்கு நான் இருவகையான பிருகிருதிகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது புரியாமல் காம க்ரோத மத மாச்சர்யங்களுக்கு ஆட்பட்டு தாங்கள் செய்வது தவறு என்பதைக்கூட உணராமல் என்னை நிந்தித்து விடுகிறார்கள்...
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது...என்னை உணர்வதென்பது அவ்வளவு எளிதல்ல...அதனால் தெரிந்து செய்யும் தவறுகளிலிருந்து தப்பிப்பதும் எளிதல்ல...தொடர் முயற்சிகளினால் ...நியமமான பூஜா பலத்தினால்..நல்ல எண்ணங்களினால்...தவறெனத் தெரிந்தால் அதை விடுத்து கவனமுடனிருந்தால்...என் பிருகிருதிகளுக்கு அப்பாற்பட்ட என்னை உள் உணர்வால் பார்க்கமுடியும் என்பதாக உணர்த்தினார்..
ஒரு நிமிடம் வைகுண்டம் வரை சென்று வந்த அயர்வு ஏற்பட ஒரு இனம் புரியாத நிம்மதி என்னுள் மெல்ல உருக்கொள்ளத் தொடங்கியது...நான் இனி மீண்டு இயல்பிற்கு வர சில மணி நேரங்கள் ஆகலாம்....
அரங்கன் திருவடிகளே சரணம்...
அன்பன்...ராகவபிரியன்
அன்பன்...ராகவபிரியன்

No comments:
Post a Comment