ஒரு மகத்தான மனித செயல் எதுவெனில் அரங்கனுக்கான பூஜைகளை நியமமாகச் செய்வதுதான் என்று பார்த்தனின் சாரதியாய் கீழிறங்கி வந்து உபதேசிக்கிறான் கண்ணன்.ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகப் படைக்கப்பட்டவையென அறுதியிட்டுக் கூறும் எம்பெருமான் கலியுகத்தில் மனித வாழ்வின் அவசியங்களுக்காகவும் அவனின் அவதைகளைக் களைவதற்காகவுமே பூஜைமுறைகளை வகுத்தளிக்கிறான்..அதற்காக ஒரு கணப்பொழுதில் வைகானஸரை தன் இமையிலிருந்து படைத்துவிடுகிறான்..குழுமியிருந்த முனிசிரேஷ்டர்கள் திகைத்துப்போகிறார்கள்..பகவான் அவர்கள் யாரும் பூஜைமுறைகளை சரியாக வகுத்தளிக்கத் தயங்கியதால் தான் வைகானஸர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறான்...பதறிப்போன முனிவர்கள்...அரங்கனிடம் அவர்கள் அரங்கனுக்கான பூஜையில் தவறிழைத்துவிட்டால் ..அதனால் உருவாகும் அரங்கக்கோபாக்னி ஈரேழு பதினாங்கு உலகங்களையும் பொசுக்கிவிடும் என்பதால் தான் தயங்கியதாகக் கூறுகிறார்கள்..
கலியுகமல்லவா...தற்போது அரங்கனுக்கான பூஜைகளைச் செய்வோர் பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்..அரங்க பூஜைக்கான அடிப்படை வேத அறிவோ பயிற்சியோ இன்றி...அரங்க பூஜைக்கான நியமங்களைக் கடைபிடிக்காமல் துச்சமென மனிதர்களையும் அரங்க பக்தர்களையும் மனதில் நினைத்துக்கொண்டு எதோ கடமையாய் செய்ய வேண்டியிருக்கிறதேயென அரங்க பூஜைகளைக் கேவலப்படுத்துகிறார்கள்...
அரங்கன் காடு வடிவில் கிடக்கும் நைமிஸாரன்யம் வருகிறார் வைகானஸர்..அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிஷ்யர்கள் வருகிறார்கள்..அத்ரி பிருகு காஸ்யபர் வசிஷ்டர்...அவர்களுடன் வைகானஸர்...சுமார் நான்கு லட்சம் கிரந்தங்களை..[ஒரு ஒன்றரை கோடி ப்ராம்ணங்களை கிரந்தங்களாகச் சுருக்கியவை] அரங்கனின் பூஜைக்கான விதிமுறைகளாய்...ஆன்மீக பொக்கிஷங்களாய் கலியுகத்தில் மனித குலம் உய்வதற்கான ஒரே ஒரு உபாயமாய் அரங்கனின் ஆணையாய் வகுத்துத் தருகிறார்கள்...
அரங்க பூஜையொன்றே கலியுகத்தின் ஒரே செயலாக இருக்கவேண்டும்..அதை நோக்கியே மற்ற உயிரினங்கள் தங்கள் வாழ்வை நகர்த்தும்...அதை உணர்வு பூர்வமாக மனிதன் உணர்ந்தால்...அவன் உணர்வுகளில் நான் என் பைநாகப் பாய்விரித்துப் படுத்துக்கொள்வேன்...என்கிறு தொடர்கிறான் பார்த்தனின் ரதக் குதிரைகளின் லகானை இழுத்து வேகத்தைக் கட்டுப்படுத்தியபடியே...
பார்த்தசாரதியின் இந்த உபதேசத்தைக் கேட்டு அதிர்ந்த பார்த்தன்...அரங்கனிடம் கேட்கிறான்...
இஷ்டாந்த்போகாந்திஹிவோ தேவா தாஸ்யந்த்தே யஜ்ஞபாவிதா..:
தைர்தத்தா நப்ரதாயைப்யோ யோபுங்க்தேஸ்தே ந ஏவஸ:
தைர்தத்தா நப்ரதாயைப்யோ யோபுங்க்தேஸ்தே ந ஏவஸ:
பார்த்தனின் சம்ஸ்கிருத கேள்விக்கான என்னளவிலான பொருள்...பூஜைகளாலும் வேள்விகளாலும் தங்கள் விருப்பமான போகங்களை அனுபவிக்கவே தேவதைகளை அழைக்கிறார்கள் மானுடர்கள்...அரங்கனை மறந்து விடுகிறார்கள்..அதுபோன்ற பூஜைகளிலும் வேள்விகளிலும் அரங்கனுக்கான அவிர்பாகம் கொடுக்கப்படாமல் பெறப்படுகின்ற...அதாவது தேவதைகளால் தரப்படுகின்ற இன்பம் அல்லது சுகம் அல்லது நன்மைகள் திருடப்படதற்குச் சமமாகாதா....
அற்புதமான கேள்வியொன்றைக் கேட்டதாக பார்த்தன் இறுமாந்து போகிறான்..
அற்புதமான கேள்வியொன்றைக் கேட்டதாக பார்த்தன் இறுமாந்து போகிறான்..
அரங்கன் மெல்ல தனக்குள் சிரித்துக் கொள்கிறான்...அரங்கனின் கண்முன்னே ஒரு சிறிய பெருமாள் கோவிலின் பூஜைமணி ஒலிக்கிறது..பூஜைமணியோசை கேட்டு பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்...அரங்கனுக்கான பூஜை செய்யும் வைகானஸருக்கு வேறு ஒரு முக்கிய வேலையிருக்கிறது...நான்கு லட்சம் கிரந்தங்களை மறந்து அரங்கனின் நாமாவையும் மறந்து பக்தர்கள் வரிசையில் வராமல் முண்டியடித்து தீர்த்தம் வாங்க கை நீட்டுவதால் வந்தக் கோபத்தால் அவர்களின் கைகளில் தீர்த்தப் பாத்திரத்தைக் கவிழ்த்துவிடுகிறார்...அந்தக் காட்சியை அதன் சாரத்தை ஒரு ஸ்லோகமாக பார்த்தனுக்குச் சொல்கிறான் அரங்கன்....பால் உள்ளிட்ட திரவியங்களை அரங்க விக்ரஹத்தின் மேல் அபிஷேகம் செய்வதற்கும் அப்படியே கவிழ்பதற்குமான வித்தியாசங்களை...ஆன்மீக வாழ்விற்கும் அலட்சிய வாழ்விற்குமான முரண்களை வெகு அழகாச் சொல்லும் இந்த ஸ்லோகம்...
யஜ்ஞசிஷ்டாஸி ந: ஸந்தோ முஸ்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தேதவகம் பாபாயே பசந்த்யாத்மகாரணாத்..
புஞ்ஜதே தேதவகம் பாபாயே பசந்த்யாத்மகாரணாத்..
பூஜைகளிலும் வேள்வியிலும் நியமங்களைக் கடைப்பிடிக்காமலும் நைவேத்யத்திற்குப்பின்னான...ஆகுதியின் மிச்சமான.... உணவை அலட்சியப்படுதுபவன்...அதைத் தவிர்ப்பவன் தன் நாவின் ருசிக்காவும் தனக்கான ஆகச்சிறந்த பண்டங்களைச் சமைத்து வைத்து உண்பவன்..எனக்கான பூஜைகளையோ வேள்விகளையோ செய்யத் தகுதியற்றவன்..அவன் பாவங்களைத்தான் உண்கிறான்..அப்படிப்பட்டவன் வைகானஸ பூஜைமுறைகளை கற்றிருந்தும் அறிவிழந்தவனாகிறான்...அவனின் பூஜைகளை நான் ஏற்பதில்லை...[என்று என்னளவில் பொருள் கொள்ளத்தக்கதாகும்...]
எந்த ஒரு பூஜைமுறையையும் எளிதில் குறைகொண்ட கண்ணால் பார்த்துவிடமுடியும்..ஆனால் வைகானஸ பூஜைமுறைகள் ஒரு சிறிய குறைகூட யாராலும்...பகவானாலும் கூட கண்டுபிடிக்க முடியாத வண்ணம் வகுத்தளிக்கப்பட்டிருப்பது நிஜம்...அப்படியான பூஜை முறைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தவர்கள்...அதைப் பகுதி நேரத் தொழிலாகவோ...லாபமீட்டும் செயலாகவோ..தன்னலம் காக்கச் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத கடமையாகவோ செய்தால் அவர்களை அரங்கன் மன்னிக்க மாட்டான்...நியமமாகச் செய்யமுடியாவிட்டல்...தனது பொறுப்புகளை நியமமாகச் செய்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டால் அரங்கனின் கோபத்திலிருந்து தப்பமுடியும்...அரங்கனே சொன்ன அதற்கான சான்றுகள் நிறைய திருமங்கயாழ்வாரின் பாசுரங்களில் காணக்கிடைக்கின்றன...அவரின் ஒரு வரி...தொண்டே செய்து என்றும் தொழுது வாழி...ஒழுகா..பண்டே பரமன் பணித்த பணி...
திருமங்கையாழ்வார் ஒரு வரியில் ஒரு பிரம்மாண்டத்தைப் படைத்து விடுகிறார்...
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்







