Saturday, August 25, 2018

Mokkumbu Melanai

கடந்த இரண்டு நாட்களாக மனம் அமைதிகொள்ள மறுக்கிறது..பிக்காசோ வரைந்த செவ்வியல் அமைதி ஓவியமொன்றை யாரோ சேதப்படுத்திவிட்டால் வரும் அமைதியின்மையைப் போன்றதது.....வார்த்தைகளில்லை என்னிடம் ...எனினும் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட முக்கொம்புவின் மேலணை இடிந்து கிடக்கையில் அவரின் அணைகட்ட பயன் படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் [இன்னமும் தவ்லேஸ்வரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது]...வேலையாட்கள்..பிரிடிஷ் அரசாங்கத்தின் பாராமுகம்..ஒத்துழைப்பின்மை போன்று ஒரு நெடிய வரலாறு காவிரியின் அலைகளில் ஒரு பிளாஸ்டிக் குடுவையைப்போல் என் மனமெங்கும் அலைகழிக்கப்படுகிறது..எலமனூரிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தான் திருப்பறாய்த்துறை...அங்கிருக்கும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளியில் 1969 ல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...பரிசிலில் காவிரியைக் கடந்து முக்கொம்பு செல்வோம்...அங்கிருந்துதான் கொள்ளிடத்தின் மேல் அப்போது அணைப்பாலம்[ காட்டன் அவர்களால் கட்டப்பட்டது..] இருந்தது...அதன் மேல் எத்தனையோ முறை நடந்திருக்கிறோம்...பழியாய்க்கிடந்திருக்கிறோம்...பாலத்தின் அடியில் மெல்ல கதவுமீறி சில்லென்று விழும் காவிரியில் வெகு நேரம் மகிழ்வின் உச்சங்களில் இருந்திருக்கிறோம்...
சர்.ஆர்தர் காட்டன் 96 வயது வரை வாழ்ந்தவர்...இந்தியர்களின் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்...அதனாலேயே பிரிடிஷ் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானார்..மணல் மீது செங்கற்களை அடுக்கி அணை கட்டுவதென்பது ஒரு பொறியாளரான காட்டன் அவர்களுக்கு வியப்பாய் இருந்தது...கல்லணையை முழுதும் ஆராய்ந்தார்..அதன் வடிவமைப்பையும் நீடித்த செயல் திறனையும் வியந்து பிரிடிஷ் ராணிக்கும் வைஸ்ராய்க்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்..
ஆந்திராவின் பிரகாசம் பேராஜ்..மற்றும் தவ்லேஸ்வரம் பேராஜ் போன்றவை அவரின் இந்தியர்களுக்கான கொடை ..
திருப்பறாய்த்துறையின் அகண்ட காவிரியின் எதிர்கரை குணசீலம்...வேணிற்காலங்களில் பொடிமணல் சூடு தாங்க அங்கங்கே ஊற்றுகள் தோண்டி அதில் துண்டை நணைத்து காலின் அடியில் போட்டுக்கொண்டு சூடு தணியும் வரை நிற்போம்..பிறகு கொதிக்கும் சுடுமணல் ஓட்டம்...அடுத்திருக்கும் ஐயன் வாய்க்காலில் குளித்து குணசீலப்பெருமானை வணங்கி திரும்பி வரும் போது வாத்தலை வழியாக மேலணையில் நடந்து பரிசல் பயணம் செய்ததெல்லாம் என் மன அணையிலிருந்து ஒவ்வொன்றாக உடைந்து விழுந்த படியிருக்கிறது...
சர் ஆர்தர் காட்டன் அவர்கள் மேலணைக்கான பென்சில் ஓவியமொன்றை வரைந்து அது முதலில் தொலைந்துவிட்டதாகவும்..பிறகு வேறொன்றை அவர் தயாரித்ததாகவும் படித்தபோது ...என் கண்ணீர்த் துளியொன்று உடைந்த மதகுவழி எகிறிச் செல்லும் காவிரியில் விழுவதை உங்களால் பார்க்க முடியும்...
ராகவபிரியன்


Wednesday, August 22, 2018

Pseudo secularism

இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகளால் புண்படுவதென்பது இந்து மதத்திற்கு வாடிக்கையான ஒன்றுதான்...அதனால்தான் அது இன்னமும் அசைக்க முடியாமல் கெட்டிப்பட்டுக்கொண்டே இருக்கிறது...வேற்று மதங்களில் இதுபோன்ற சகிப்புத் தன்மையைப் பார்ப்பது கடினம்...இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ஒரு கவிஞரோ எழுத்தாளரோ பிரபலமாக வேண்டுமென்றால் மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தி எழுதினால் பணமும் புகழும் எளிதில் கிடைத்துவிடுகிறது..சாலமன் ருஸ்டியும் தஸ்லிமா நஸ்‌ரீனும்...ஒரு மதத்தை அதன் மூடநம்பிக்கைகளை எழுத்தில் வடித்துவிட்டு பட்ட பாடுகள் நாமறிவோம்...ஆனால் இந்து மதத்தைப்பற்றி அதன் மூட நம்பிக்கைகளைப்பற்றி அதிகமாக கவலைப்படும் எழுத்தாளர்களோ கவிகளோ...அதே நிலைப்பாட்டை மற்ற மதங்களின் மூட நம்பிக்கைக்களில் மீதும் சடங்குகளின் மீதும் எடுக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில் ஒரு கேலியான புன்சிரிப்பை அவர்களின் இதழ்களிலேயே கொணரும் என்பதுதான் நிஜம்..பெண் எனும் படைப்பின் ரகசியங்கள் அந்த பிரம்மனுக்கே புதிராகும்...பெண்ணிய எழுத்தாளர்கள் கூட அவர்களின் உடற்கூறுகளை பட்டவர்த்தனமாக பொதுவெளியில் எழுதத் தயங்கும் கருத்தியல்களை இந்துப் பெண் தெய்வங்களின் மேல் திணிப்பதென்பது ஒரு மதத்தின் மேல் நம்பிக்கைவைத்திருப்பவர்களின் மனங்களை காயப்படுத்தும் செயல்தானே தவிர...விளம்பர யுக்திதானே தவிர வேறொன்றுமில்லை எனப் புறந்தள்ளிவிட முடியாது...ஒரு கவி இதே போல் வேறு மதங்களின் பெண்தெய்வங்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டு பிறகு அவருக்கான பின் தொடர்வோர் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டிருக்கவும் முடியாது...அது தான் நிஜம்...ஒரு குறிப்பிட்ட கவி தன் மீதான விமர்சனத்திற்கே சகிப்புத் தன்மை காட்டமுடியாதவர் எப்படி ஒரு மதத்தின் நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் உரிமைகோரமுடியும்..கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவரின் படுக்கையறை ரகசியங்களை எட்டிப்பார்த்து அதை விமர்சிப்பதல்ல...அதற்காக அது போல் ஒரு படைப்பை வைத்து படைப்பாளியை மிரட்டுவதற்கும் யாருக்கும் உரிமையில்லை...போகட்டும்..நமது ராமானுஜர் போல 120 ஆண்டுகள் வாழ்ந்த கபீர் [1398-1518] காசி மா நகரில் ஒரு பிராமணவிதவைத் தாயின் புதல்வனாகப்பிறந்து இஸ்லாமியர்களால் வளர்க்கப்பட்டவர்...இன்னமும் அவருடைய தத்துவங்கள் உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறது...அவரது "நுட்பமாக நெய்யப்பட்ட போர்வை" என்ற கவிதை காலம் கடந்தும் சகிப்புத் தன்மையை மக்களிடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எடுத்துச்சென்று சேவையாற்றி...புகழ்பெற்றிருக்கிறது...அவரின் இன்னொரு இந்தியில் எழுதப்பட்ட ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதையை தமிழில் என்னளவில் தருகிறேன்...
என்னுள் சூரியனும் சந்திரனும்
தினமும் சுற்றுகிறார்கள்..
என்னால் அவர்களை
உங்களுக்குக் காட்ட முடியாது...
உங்களுள்ளும் தான்...
சுற்றுகிறார்கள்..
அவர்களை நான் பார்க்கிறேன்..
காய்ப்பதற்காகப் பூக்கும் செடி
காய்த்த பின்
அந்த அழகிய பூவை
உதிர்க்கும் விலையைத் தருகிறது..
உன் வாழ்வில்
பூரிப்பின் பூ பூக்கும்..
நீ விளைந்தவன் எனில்
அப்பூவை
விலையாகத் தரவேண்டும்..
அனுபவங்களின்
திண்ணைப்பள்ளிக்கூடம்தான் மதம்...
முழுதாகக் கற்றவன்
குருவாகிறான்..
அவனின் மொழி மெளனம்..
அரைகுறையாகக் கற்றவன்
ஆசிரியராகி
தினமும்
எதையாவது யாருக்காகவாவது
போதித்துக்கொண்டேயிருக்கிறான்..
ராகவபிரியன்

Saturday, August 18, 2018

Reader Doctor

வாசக மருத்துவனின்
அனுமதிச் சீட்டுடன் அமர்ந்திருக்கிறேன்..
நீ வருகிறாய்...
உன் நீண்ட கழுத்தின் நீளநீலம் வளைத்து
எதையோ கொத்துகிறாய்..
மேலெழும்பி இடதில் பார்க்கிறாய்..
பிறகு வலது பக்கம்..
கழுத்து வளைத்து மேல் நோக்க
உன் கர்வக் கொண்டை சற்று தாழ்கிறது..
இடதில் ஒரு பலகையில்
வரிசையில் வரவும் என்றிருக்கிறது...
வலதிலோ ஒரு குழந்தைப்படம்
வாய்பொத்தி பேசாதே என்றெழுதிய எழுத்தின் மேல்
நிர்வாணமாய் அமர்ந்திருக்கிறது..
உன் மேல் நோக்கிய பார்வையில்
நான் தெரிந்திருக்கலாம்...
கடைசீயில் சென்றமர உனக்கு மனதில்லை..
நீ உந்தியேறக்கூடிய உயரமான
எழுபத்தைந்தடியை
சிலிர்ப்பிய சிறகடித்து அடைகிறாய்..
உயரமான நிறையவர்கள்
ஏற்கனவே வரிசையில் இருக்கிறார்கள்.
அமைதியின்மையால் உன் தோகையில்
உன் காலே சிக்க..
ஒரு காலால் சிறகு கோதுகிறாய்..
அதை மயிலாட்டம் என்று
மருத்துவப் பதிவேட்டில் எதற்கு
பதிவிடச் சொல்கிறாய்..
உன் பறக்கும் தூரமான முன்னூறு அடிகளை
தத்தித் தத்தி
முன்னூறு தடவை எடுத்து வைக்கிறாய்..
கோபங்களுக்கு ஒருபோதும் முன்னுரிமையில்லை..
அனுமதிச் சீட்டு
தீர்ந்து போனதால்
வாய்விட்டு அகவுகிறாய்...
எனக்கு முன்னான நோயாளியை
நன்கறிந்த மருத்துவன்
முழுவதும் வாசித்துவிட்டே
என்னைத் தொடுவான்...
நேரம் காலம் கடந்தாலும்
முற்றும் வாசித்து முடித்தே கதவு திறப்பான்..
மருத்துவன் என்னையும்
நன்கறிந்தவன்...
இன்றுனக்கு வாய்ப்பில்லை..
அகவலை நிறுத்து..
மருத்துவன் கோபமுற்றால்
உன் கொண்டைகளையும்
தோகைகளையும்
அறுவைச் சிகிச்சையால்
அகற்றிவிடுவான்..
கவச குண்டலங்களை இழந்த
கர்ண மயில்
கர்னக்கொடூரமாயிருக்கும்...
ராகவபிரியன்

Wednesday, August 15, 2018

star and ear studs ...

RAGAVAPRIYAN THEJASWI’s poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
It was the sleep of a little girl
dwelling in the hut upon the banks of Kaveri
salvaged from the sandy muddy earth
In wakeful nights
with her star-friend
upon the sand
and rarely in the river water
She would play, sleeping.
Caution: River Cauvery is
Flooding
Tonight
in the classroom of the nearby government school
She would read lessons with her friend
But
heer sleep
and hut
might be going round and round
in the all too massive current
of the river.
Ammaayee…
While feeding the motherless little girl
and her star-friend
the smell of the wet field
mixed with the Kaveri water
would taste so delicious.
Today’s wage for planting crops
Ammaayee
would receive tomorrow.
For buying star-studs
tonight itself
the child was walking along Sky, the bazaar street
with her dear friend.
He who was fixing the ears with studs
in the thin square-cardboards
to the stars
saying ‘thirty rupees,
The little star wiped the twinkling drops of sweat.
The vendor speaking in Hindi…
will my grandma understand it
blabbered she in her sleep.
For fulfilling the child’s wish
her grandma turned thirty rupees –
all that she had _
into earrings.
With her friend swinging
in her ears
Tea boiled
in Ammaayee’s lament.
For he who spoke in Hindi
the language of hunger appeared to be all too familiar.
Not only for the grandma but also for her grand-daughter he bought Tea
and despite losing twenty rupees
laughed heartily…..
When in the morning everybody
evincing surprise
told Ammaayyee that
Mother Kaveri
paid her obeisance to the little girl’s hut
touching its feet
sulking that none had noticed
her friend
swinging in her ears
the little girl
is sleeping
மணற்தரையினின்று மீண்ட
கரைமீதான குடிசைமகளின்
தூக்கம் அது..
விழித்த இரவுகளில்
நட்சத்திரத் தோழியுடன்
மணலிலும் எப்போதாவது
ஆற்று நீரிலும்
விளையாடுவாள் உறங்கியபடியே..
காவிரியின் வெள்ள எச்சரிக்கை...
இன்றிரவு
அருகிருக்கும் அரசுப்பள்ளியின்
வகுப்பறையில்
தோழியுடன் பாடம்படிக்கலாம்..
ஆனால்
அவளின் உறக்கமும்
குடிசையும்
வெள்ளத்தின் ஆகப்பெரிய
சுழலுக்குள்
சுற்றிக் கொண்டிருக்கக்கூடும்..
அம்மாயி..
அம்மாயில்லாத அவளுக்கும்
நட்சத்திரத் தோழிக்கும்
சோறூட்டிக் கொண்டிருக்கையில்
அவள் கையின்
வயற்சேற்று வாசம்
காவிரியின் நீர்கலந்து
அத்தனை ருசியாயிருக்கும்..
இன்றைய நடவுக்காசு
அம்மாயிக்கு
நாளை கிடைக்கும்..
இன்றிரவே..
நட்சத்திரக் கம்மல்
வாங்க கடைவீதிவானில்
தோழியுடன் நடந்துகொண்டிருந்தாள்
குழந்தை..
கம்மல் அட்டைகளில்
தோடுடைய செவிகளை
நட்சத்திரங்களுக்குப்
பொருத்திக்கொண்டிருந்தவன்
முப்பது உரூபாயெனச் சொல்ல...
சின்ன நட்சத்திரம்
சோபைவியர்வையைத்
துடைத்துக்கொண்டது..
விற்பவன் இந்தியில் பேச..
பாட்டிக்குப் புரியுமா
என உறக்கத்தில் பிதற்றினாள்..
குழந்தையின் ஆசைக்கு
இருந்த முப்பது உரூபாவை
கம்மலாய் மாற்றினாள் பாட்டி..
அவளின் காதுகளில்
தோழி ஊஞ்சலாட..
அம்மாயி புலம்பலில்
தேனீர் கொதித்தது..
இந்தியில் பேசியவனுக்கு
பட்டினி மொழியும்
பரிச்சயம் போலும்...
பாட்டிக்கு மட்டுமல்ல
பேத்திக்கும் தேனீர்வாங்கி
இருபது உரூபா
இழந்தும் சிரித்தான்...
குழந்தையின் குடிசை வாசலை
காவிரி தொட்டுக் கும்பிட்டதாய்
அம்மாயியிடம்
அத்தனை பேரும்
காலையில் ஆச்சரியம் காட்ட...
அவளின் காதில் ஆடிக்கொண்டிருக்கும்
தோழியை
யாரும் கண்டுகொள்ளாத கோபத்தில்
குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறாள்...
ராகவபிரியன்

floating as hippopotamus

RAGAVAPRIYAN THEJASWI’s poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Can’t contain the floods of Vayanaadu
in the dry and parched agricultural fields of ours.
Wandering atop the mountain peaks
as elephants
all over God’s Land
The Rain.
Caught in the elephant-trunks of rain
the areca-trees and all vegetation
go scattering.
The highways paved along its trail
and the hutments
are stamped and crushed
by the battalion of rain-tusker
Unable to preserve the heavy imprints of rain-tusker
We are going to leave it into the sea
To float as hippopotamus
The Kerala elephants
are always giants
Of them while bringing some
with the help of Kumki
Losing them in Kabini or Krishnarajasagar
asking for their little ones
We have been begging our
neighbouring States
for the past several years.
That screams for alms
go on reverberating all over the firmament of Tamil Nadu
as summer-thunder unbearable.
Alas _
A post-modern tusker
losing its way
keeps wandering all over facebook these days.
Don’t take it to be a soon to die cloud
and build modern resorts in its trail .
Ragavapriyan Thejeswi
வய நாட்டின் வெள்ளத்தை
எங்களின் காய்ந்த கடைமடை
வயற்காடுகளில்
கட்டிவைக்க முடியவில்லை..
ஒரு யானையென மலைமுகடுகளில்
அலைந்து திரிகிறது
கடவுளின் சொந்த பூமியெங்கும்
மழை..
மழையின் தும்பிக்கைகளில்
சிக்குண்டு சிதறிப்போகின்றன
பாக்குமரங்களும் பச்சையங்களும்..
அதன் வழித்தடத்தில்
வேயப்பட்ட நெடுஞ்சாலைகளை
கூரை வேய்ந்த குடிசைகளை
மிதித்தே உடைத்தெடுக்கின்றன
யானைமழைக் கூட்டம்..
பாய்ந்து வரும் யானைக்கனஅடிகளைத்
தேக்கி வைக்க முடியாமல்
மழையானையை
கடலுக்குள் நீர்யானையாய்
மிதக்கவிடப்போகிறோம்..
கேரளத்தின் யானைகள்
எப்போதுமே பிரமாண்டங்கள்...
அவற்றில் சிலவற்றை
கும்கி உதவியுடன்
கூட்டிவருகையில்
கபினியிலோ கிருஷ்ணராஜ சாகரிலோ
தொலைத்துவிட்டு..
அதன் குட்டிகளைக்கேட்டு
அண்டை மாநிலத்திடம்
சில ஆண்டுகள்
பிச்சையெடுக்கிறோம்..
அந்தப் பிச்சைப் பிளிறல்கள்
சகிக்க முடியாத
கோடையிடிகளாய்
தமிழக வானமெங்கும்
இடித்துக்கொண்டே இருக்கின்றன...
போகட்டும்
ஒரு பின் நவீன கவிதையானை
தன் வழிதவறி
முக நூலெங்கும் அலைந்துகொண்டிருக்கிறது..
அதை மரிக்கப்போகும்
மேகமென நினைத்து
அதன் வழித்தடத்தில்
நவீன விடுதிகளைக் கட்டிவிடாதீர்கள்..
ராகவபிரியன்

The time and shadow

யாருடைய காலச்சுடுசொல்லும்
மத்தகமேறாதபடி
முறக் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது ஆனை..
பிணைத்தப் பாராட்டின் சங்கிலிகளை
இழுத்திழுத்து அசைத்தபடி
ஓசையெழுப்பி
அலட்சியமாய்
கால்மாற்றி கால் ஊன்றி
பாராட்டடிமையில்லையென
அவ்வப்போது
மண்டியிட்டும்
அற்ப மனிதனைவிட
உயரெமென அசைச்சொல்லில்
ஆடியபடி
நான்கு அடி வெண்பாவாய்
திகைப்பூட்டுகிறது ஆனை..
முகப்பட்டாமோ
முதுகுப்பட்டோ
தானே இறைத்துக்கொண்ட
புழுதி மண்ணோ
அதற்குச் சொந்தமில்லையென்பதை
வாய் திறந்து வாங்கும்
சோற்றுக் கவளங்களுக்காக
குருடர்கள் தடவும்
ஸ்பரிசங்களை பொருட்படுத்தாத
நின்று தூங்கும்
சாகசம் காட்டும் ஆனை..
ஆணைகளுக்குக் கட்டுப்படும் ஆனை
ஆணையிடுவதாயிருந்தால்
முதலையின் வாயில்
கால் மாட்டிக் கதறியிருந்திருக்க
வாய்ப்பேதுமில்லை...
அகப்பட்டுவிட்ட ஆனை
ஒரு சொல்லொணாத்துயரின் காலப்பிம்பம்..
ராகவபிரியன்

Friday, August 10, 2018

i remain

The rain elephant wades through our God's own country..
with its fullest strength breaking all 26 dam's elementary..
The elephant is so angry and waving the trunk in frown.
the disaster is true and the elephant is growing on and on..
what a neo-modernist poet could do except to faint
on seeing the elephant growing as big as a giant
Before he drench his words huts and poetic roads in rain
Taken a selfie and posted it in smile in the facebook..i remain...
Ragavapriyan

Saturday, August 4, 2018

கு[எ]றும்புகள்

எங்கள் கொல்லைப்புறத்தின்
துளசி மண்டிக்கிடந்த
கிணற்றடியைத்தான்
தளமாக்கினோம்...
அது ஈரமாகவே இருக்கும்...
பல்துலக்கிய எச்சில்கள்
குளித்துக் காய்ந்த சோப்பு நுரைகள்..
கொடித் துணிகளின் ஈரச் சொட்டுக்கள்..
சேந்துவாளியின் தாம்புக் கயிறு..
கன்னத்தில் கைவைத்து யோசித்தபடியிருக்கும்
எங்கள் வீட்டுப்பூனை..
மைபூச பயன்பட்ட தூரிகை..
இத்தனையும் இன்று மதியம் காணோம்..
காவிரிக்காண வழிபாட்டில்
அனைவரும் சென்றுவிட...
கொல்லை காய்ந்து கிடந்தது...
நிலவின் தரை காட்டும் புகைப்படமாய்..
நான்கு கட்டெறும்புகள்
ஒன்றன்பின் ஒன்றாய்..
வளைந்தும் கலைந்தும் சேர்ந்தும்
தளம் முழுவதும் அலைந்துகொண்டிருந்தன..
கண்டிப்பாக எதையோ தேடியலைகின்றன...
நொடிப்போதும் தாமதிக்காமல்
நேற்றிரவு நான் எழுதியிருந்த
பின் நவீன கவிதைக் காகிதத்தை
ஓடிச் சென்று
அவைகளின் வழியில் வைத்தேன்..
சட் டென்று திரும்பிய எறும்புகள்
காணாமல் போயிருந்தன...
ராகவபிரியன்

Thursday, August 2, 2018

post modernism..2

பின் நவீனம் என்றொரு
------------------------------------
பைசாசம்..
------------------
எவ்வளவு தான் அறிவார்ந்த பிரபலமான காத்திரமான படைப்பெனினும் அதை பலமுறை படித்தாலோ மீண்டும் மீண்டும் படிக்க நேர்ந்தாலோ ஒருவிதமான அலுப்பை இலக்கிய நுகர்வோர்களால் தவிர்க்கமுடியாது...புதுக் கவிதையிலிருந்து நவீனக் கவிதைக்கு இயற்றமிழ் தாவியபோது எழுந்த அதிர்வின் கணங்கள் இன்னமும் உணரப்படுகின்றன...நவீனம் என்றால் இக்கணமென்றும் சொல்லலாம்...பின் நவீனமெனில் இக்கணத்தின் விளிம்புகளில் அமர்ந்து ஆழமறியா வெளியொன்றில் குதிக்கத் தயாராவதெனவும் கொள்ளலாம்...புதுக் கவிதையிலிருந்து நவீனத்தை வேறுபடுத்தும் காரணிகளின் அடுக்குகளில் அழுக்குகள் தேங்கிக்கிடப்பதால்...புத்தம் புதியதொரு வடிவமைப்பை இயற்றமிழ் அணிய வேண்டிய காலம் இதென அறியக்கூடலாம்...அதன் பொருட்டு ஆழமறியாமல் கண்மூடித்தனமான குதித்தல் பைசாசத்தின் குணமாகும்...காரணிகளின் அழுக்குகளைக் களைய மயிற்பீலிகளைக்கொண்டு வருடிக்கொண்டிருத்தல் நவீனக் கவிதையை வருத்துவதாகவே முடியும்...
இந்த முன்னெடுத்தலின் கிறுக்கல்களில் நுழைந்து வெளிவந்த பைசாசத்தின் தனித்துவ தத்துவ வெளியின் நடனமொன்றை உங்கள் பார்வை மேடைகளில் இப்போது நிகழ்த்தும் இக்கவிதை....
நாற்றங்கால் பத்தைகளை
சேற்றில் சுமந்து
வரப்பு நோக்கி வீசுகிறாய்..
பத்தை விழுந்த இடமெங்கும்
இந்திரனின் வெள்ளையானையின்
மிதவைக்கூழுக்கான
பிளிறல் சப்தம்..
அந்தச் சந்தடியில்
இரு சக்கர வாகனத்தில்
மாட்டியிருந்த
தலைகவசமென
உன் செருக்கு
என் உடையெங்கும்
சேறாய் மாட்டிக்கிடக்கும்..
பிருதிவிராஜன் நீ..
இந்த நாற்றங்காலை
உன் வாழ்வில் நடுவதற்காக
தலைகவசம்
கட்டிக் கிடக்கும்
பின்னிருக்கையில்
அமரச் சொல்கிறாய்..
காயக் கிளர்துனர் வடித்தப் புளிப்பாய்
உன் புரவியின் கால்கள்
காற்றிழக்கையில்
கடத்தல் அரிது...
வாழ்வின் வெளி கடத்தல்
அரிதினும் அரிது...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...