அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அனுபவங்களை விரைவில் பதிகிறேன்..முன் கூட்டியே முன்பதிவு செய்த இருக்கையில் பயணித்ததால் என்னுடன் மூன்றாவது முறையாக டெரிடாவும் வந்தார்..அவர் சொல்கிறார்...பின் நவீனம் என்பது நம்பவைக்கும் புனைவெழுத்தாம்..மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் முதல் நாவலை அத்தனை வாசகர்களும் உண்மையான நிகழ்வின் பிரதியென்றே எண்ணியிருந்ததாகப் படித்திருக்கிறேன்..ஆனால் நவீனத்தில் அது புனைவென்று சொல்லி உண்மையை சாதுர்யமாக மறைத்துவிட முடிகிறது...பின் நவீன கவிதைகள் புனைவின் பெயரால் ஒரு கவிஞனோ எழுத்தாளுமையோ தன் அதிகாரத்தை வாசகன் மேல் செலுத்துவதென்பது அந்த வாசகனை அந்தப் பிரதியிலிருந்து விலகி நிற்க வைத்துவிடுகிறதென்பதே என் அனுபவ நிஜம்...இருந்தாலும் வலிமைமிக்க பின் நவீனக் கவிதையால் ஒரு கவிஞனால் வாசகனிடம் நெருங்கிவிட முடியுமென்று நான் நம்புவதால் இந்தப் பின் நவீன கவிதையை இங்கே பதிவிடுகிறேன்..பின்னூட்டங்களோ விருப்பங்களோ எதுவுமற்றிருப்பின் இதன் வெற்றி ஊர்வலம் தொடங்கிவிட்டதென்றே அறிக...வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன்
மலையேறி வந்து முடியிறக்கியானது..
மீந்தச் சிறு உச்சிக் கற்றைகளில்
பற்றை முடிந்த ராசகுமாரன்
தொப்பி மகுடமணிந்து
சவரக் காயங்களின் பிசிறுரத்தம் தடவுகிறான்...
பற்றை முடிந்த ராசகுமாரன்
தொப்பி மகுடமணிந்து
சவரக் காயங்களின் பிசிறுரத்தம் தடவுகிறான்...
கோவிலருகிலுள்ள
சோபாணக் கடையின் வரைபடமொன்றை
மனதில் சுருட்டிக் கொள்கிறான்..
சோபாணக் கடையின் வரைபடமொன்றை
மனதில் சுருட்டிக் கொள்கிறான்..
பக்திக் கடலில் மிதக்கும்
பாறைகளொன்றில்தான்
கடையிருக்கிறது..
பாறைகளொன்றில்தான்
கடையிருக்கிறது..
தொப்பி கழற்றி
கடலுக்குள் வீசிவிட்டு
கையளவு கடல் நீரெடுத்து
முகம் கழுவ
காய்ந்த ரத்தப்பிசிறுகள்
நெற்றியில் ஒட்டிக்கொள்கின்றன..
கடலுக்குள் வீசிவிட்டு
கையளவு கடல் நீரெடுத்து
முகம் கழுவ
காய்ந்த ரத்தப்பிசிறுகள்
நெற்றியில் ஒட்டிக்கொள்கின்றன..
தொப்பிமிதக்கும் தீவொன்றில்
கடவுளிடம்
நேரில் வேண்டுதல்களை வைத்தபடி
உறங்கிப்போக..
கடவுளிடம்
நேரில் வேண்டுதல்களை வைத்தபடி
உறங்கிப்போக..
அவனைச் சுற்றி
சப்ளாக் கட்டைகளில் சப்தமிட்டபடி
பக்திமிஞ்சிய சுறாமீன்கள் சுற்றிச் சுற்றி
மீந்த போத்தலின்
கடல் நீர்ச்சுவையினும் இனிதான
சொட்டு நீருக்காக
நடனப்பெருமூச்சு விட
அதில் அவனின்உச்சி முடிகள்
ஒவ்வொன்றாய் உருவப்பட்டுக்கொண்டிருந்தது...
சப்ளாக் கட்டைகளில் சப்தமிட்டபடி
பக்திமிஞ்சிய சுறாமீன்கள் சுற்றிச் சுற்றி
மீந்த போத்தலின்
கடல் நீர்ச்சுவையினும் இனிதான
சொட்டு நீருக்காக
நடனப்பெருமூச்சு விட
அதில் அவனின்உச்சி முடிகள்
ஒவ்வொன்றாய் உருவப்பட்டுக்கொண்டிருந்தது...
அவனின்
மொட்டைத் தலையில்
எப்போதுமே
மகுடம் சரியாகப் பொருந்துவதில்லை..
ராகவபிரியன்
மொட்டைத் தலையில்
எப்போதுமே
மகுடம் சரியாகப் பொருந்துவதில்லை..
ராகவபிரியன்

No comments:
Post a Comment